என் நண்பன் ஒருவனை எதேர்ச்சியாக சந்தித்தபோது, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை பற்றி அவன் கூறியது சற்றும் நம்பும்படியாகவே இல்லை. ஆனால்  இந்த உரையாடல் நடந்து ஒரு சில மாதங்களுக்குள் அந்த நண்பனின் இசைக் குழு மிக பிரசித்தம் பெற்றது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அவனுடைய புகழ் பிரம்மாண்டம் அடைந்தது.

நாமும் கூட  பெரிய, வியத்தகு, குறுகிய நேரத்தில் பிரம்மாண்டமாக இருக்கும்  முக்கியத்துவத்தையும்  வெற்றியையும் குறி வைக்கலாம். ஆனால், கடுகையும் புளித்த மாவையும்  பற்றிய உவமைகள், ராஜ்ஜியத்தின்வழியை (பூமியில் தேவனுடைய ஆளுகை) ஒரு சிறிய மறைந்திருக்கும் முக்கியமற்று மெதுவாய் படிப்படியாய் வளரும் பொருட்களுடன் ஒப்பிடுகிறது.

ராஜ்ஜியம் அதன் அரசனை போன்றது. கிறிஸ்துவின் பணி  பூமிக்குள் புதைக்கப்படும்  ஒரு விதை போன்று அவ்ருடைய வாழ்க்கையில் உச்சநிலையை அடைந்தது;  ஒளிந்திருக்கும் புள்ளிப்புத் தன்மையை போன்று. ஆனாலும் அவர் எழுந்தார். புழுதியை உடைத்துக்கொண்டு எழும்பும் ஒரு  மரத்தை போல, சூடு அதிகமாகும்போது  மாவு எழுப்புவதை போல. அவர் எழுந்தார்.

நாமும் அவரைப் போல தொடர்ந்து ஊடுருவும் வாழ்வை  வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். முடிவெடுக்கும் காரியங்களை நம் கைகளிலேயே எடுத்துக் கொள்ளவும், அதிகாரத்தை பிடித்துக்கொள்ளவும், உலகத்தில்  நாம் செய்யும் செயல்களின் பலன்களை நியாயப்படுத்துவதற்கும் எலும்பும் சோதனைகளை எதிர்ப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். அதன் பலன் “ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாவதும்” (மத்தேயு 13:32), புளித்த மாவு ரொட்டி ஆகி அனேகரை போஷிப்பதும், கிறிஸ்துவின் வேலை; நமதல்ல.