நேர் வரிசையில் டிராக்டரைச் செலுத்துவதற்கு, விவசாயியின் நிலையான கண்களும் உறுதியான கரங்களும் தேவை. ஆனாலும்,  ஒரு நாளின் இறுதி வேளையில், திறமையான கண்களும், உறுதியான கரங்களும் கூட சோர்வடையும் போது, வரிசைகள் மேற்பொருந்துமாறு டிராக்டரைச் செலுத்திவிட நேரிடும். ஆனால், தற்சமயம் தானியங்கி கியர் மற்றும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் மூலம் உழுதல், செடி நடுதல், தெளித்தல் போன்றவற்றை ஓர் அங்குலம் வரை துல்லியமாக செய்ய முடிகின்றது. இது வியத்தகு திறமையை கொண்டுள்ளது, நம்முடைய கரங்களுக்கு வேலையை குறைக்கின்றது. ஒரு பெரிய யானை அளவு மிகப் பெரிய டிராக்டரில் அமர்ந்து கொண்டு, அதன் திசைதிருப்பி சக்கரத்தை கரத்தில் பிடித்திருப்பதற்குப் பதிலாக, ஒரு சிக்கன் 65 ஐ கையில் பிடித்து உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்துபார். இது  நம்மை நேராக முன்னோக்கிக் கொண்டு செல்லும் ஒரு வியத்தகு சாதனம்.

யோசியா என்ற பெயரை நினைவிருக்கலாம். அவன் ராஜாவாக முடிசூட்டப்பட்ட போது, அவனுக்கு வயது எட்டு (2 இரா.22:1). அநேக ஆண்டுகளுக்குப் பின்பு, கிட்டத்தட்ட இருபத்தைந்து வயதாகிறபோது, பிரதான ஆசாரியனான இல்க்கியா கர்த்தரின் ஆலயத்திலே “நியாயப்பிரமாணப் புத்தகத்தைக்” கண்டுபிடித்து (வ.8), அதை இந்த இளம் அரசனுக்கு முன்பாக வாசித்தான். தன்னுடைய முன்னோர்கள் தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கவில்லை என்பதை  அறிந்த யோசியா, வருத்தத்தில் தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டான். பின்னர் அவன் “கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்ய” (வ.2) முற்பட்டான். ஜனங்களை இடது புறம், வலது புறம் சாயாமல், நேரான பாதையில் கொண்டு செல்ல வழிகாட்டும் கருவியாக இந்த புத்தகம் செயல் பட்டது.  காரியங்களைச் சரிசெய்ய தேவனுடைய வார்த்தை இருந்தது.

நம் வாழ்வில், தேவனுடைய சித்தத்தை அறிந்து, அதற்கு நேராக நம்மை வழி நடத்தும்படி, வியத்தகு கருவியான வேத வார்த்தைகளைக் கைக்கொள்ளுவோமாயின், நாம் நேராக முன்னோக்கிச் செல்ல முடியும்.