அது எப்படி இருக்கும் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஓர் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், கட்டணத்தொகை பில்கள் வந்த வண்ணம் இருந்தன – மயக்க மருந்து மருத்துவர், அறுவைசிகிச்சை மருத்துவர், ஆய்வு கூடம், மற்றும் தங்கும் வசதி என பில்கள் வந்தன. அவசர அறுவை சிகிச்சை முடித்துக் கொண்ட ரோகனின் அநுபவம் இது. “நாங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை இன்சுரன்ஸ் கம்பெனிக்கு கட்ட வேண்டியிருந்தது. இந்த பில்களையெல்லாம் கட்டிய பின்னர் தான், எங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க முடியும், எனக்கும் திருப்தியாக இருக்கும். சில வேளைகளில், நான், என்னைத் தாக்கும் அநேக கிரிக்கெட் பந்துகளையெல்லாம் அடித்து வெளியே தள்ளுவதைப் போன்று உணர்கின்றேன்” என்று கூறினான். 

சில வேளைகளில், நம் வாழ்க்கையும் இதேப் போன்று உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் இதைக் குறித்து விளக்குகின்றார். அவர், தேவையிலிருப்பது என்ன என்பதை நான் அறிவேன், “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்” (பிலி. 4”11) என்கின்றார். அதன் ரகசியம் என்ன? “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13) என்பதே. நான் ஒரு திருப்தியற்ற வேளையைக் கடந்து சென்ற போது, “அது இங்கே இல்லையென்றால், அது எங்கேயிருக்கிறது?” என்ற வாசகத்தை ஒரு வாழ்த்து அட்டையில் படித்தேன். இந்த வாசகம் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. நான் இங்கே, இப்பொழுது திருப்பதியாக வாழவில்லையெனின், வேறெந்த சூழலில் நான் திருப்தியாக வாழ முடியும் என நினைக்கிறேன்?

இயேசுவைச் சார்ந்து வாழ நாம் எப்படி கற்றுக் கொள்வது? நம்முடைய கவனத்தை அவர் மீது வைப்பதன் மூலமாக. நன்மையானவற்றை அநுபவிப்பதோடு, நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். உண்மையுள்ள பரமத் தந்தையைப் பற்றி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும், நம்பிக்கையிலும் பொறுமையிலும் இன்னும் வளர வேண்டும். நம்மைக் குறித்து அல்ல, தேவனைக் குறித்து அறிந்து கொள்வதே வாழ்க்கை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும், கிறிஸ்துவுக்குள் திருப்தியோடு வாழ கற்றுத் தரும்படி அவரிடம் கேட்க வேண்டும்.