பழங்காலத்தில் வந்த உலகப் படங்களின் எல்லைகளில், “இங்கே இராட்சத விலங்கினங்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டிருப்பார்கள். உலகப் படங்களை உருவாக்கியவர்கள் அவ்வாறு நினைத்திருந்தனர். அநேகமான உலகப் படங்களின் எல்லைகளில், பயங்கரமான இராட்சத விலங்குகள் மறைந்திருப்பது போன்ற படங்கள் காணப்படும். இது பழங்கால கதைகள் தரும் செய்தி.

இடைக்காலத்தில், உலகப் படங்களை வரைந்தவர்கள், இந்த வார்த்தைகளை எழுதினார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லையெனினும், அவர்கள் எழுதியிருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன். ஒருவேளை அது நல்லதல்ல என்று கருதினாலும், நாம் அறியாத ஓர் இடத்திற்கு தைரியமாகச் செல்ல துணியும் போது, அங்கு என்ன நடக்கும் என்பதை நாம் அறியாதபடியால், “இங்கே இராட்சத விலங்குகள் உள்ளன” என்ற எச்சரிக்கை கொடுப்பது சரியானதாகவே படுகின்றது. 

நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆபத்துக்களைத் தவிர்க்கவும் ஏற்றதாக நான் கருதும் இந்தக் கொள்கையிலும் ஒரு பிரச்சனை உள்ளது. அது, இயேசுவின் விசுவாசியான நான் தைரியமாகச் செயல்பட வேண்டும் என்பதை மறுப்பதாக உள்ளது. (2 தீமோ 1:7)

உண்மையிலேயே ஆபத்தானது, என்ன என்பதை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நீங்கள் கருதலாம். பவுல் கூறுவதைப் போன்று, இந்த உடைந்த உலகத்தில், தைரியமாக கிறிஸ்துவைப் பின் பற்றுவது என்பது சில வேளைகளில் வேதனை தருவதாக இருக்கலாம் (வ.8). சாவிலிருந்து ஜீவனுக்குள் கொண்டுவரப்பட்ட நாம், நம்மை ஆவியானவரின் வழி நடத்தலுக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கும் போது, ஏன் நம்மால் தைரியமாக வாழ முடியாது? (வ.9-10,14)

தேவன் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய ஈவு என்னவெனின், அவர் நமக்கு முன் சென்று நம்மை வழி நடத்துகின்றார். நாம் இதுவரை செல்லாத பாதைகளின் வழியே செல்ல நேர்ந்தாலும், நாம் அவரைப் பின் தொடர்வோம். மாறாக, பயத்தினால், தடுமாறி, நாம் பின்வாங்கிப் போவோமேயானால் அதையும் விட சோகமான வாழ்வு வேறொன்றுமில்லை (வ.6-8,12). நம் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிப்போம், நம் எதிர் காலத்தை அவர் பார்த்துக்கொள்வார் (வ.12).