தூண்டி விட்டு திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே. ஏனெனில் “ட்ரோல்” (TROLL)  என்றழைக்கப்படும் யுக்தி வலைதளங்களில் பரவி வருகின்றது. வேண்டுமென்றே பிறரை கோபமடையச் செய்யும், காயப்படுத்தும் கருத்துக்களை செய்திகளில் அல்லது சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிக்கின்றார்கள். ஆனால் இத்தகைய செய்திகளுக்கு செவி சாய்க்கவில்லையெனில் அவர்களால் உரையாடல்களைத் திசை திருப்புவது கடினமாகி விடுகின்றது.

ஆக்கபூர்வமான உரையாடல்களுக்குச் சற்றும் ஆர்வம் காட்டாத மக்களைச் சந்திப்பது என்பது ஒரு புதிய காரியமல்ல. “தூண்டி விட்டு திசை திருப்பும் செய்திக்குச் செவி சாய்க்காதே” என்பதற்குச் சமமான வேதவாக்கியம் நீதிமொழிகள் 26:4ல்  கொடுக்கப் பட்டுள்ளது. “மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறு உத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்” என்பது.

ஆனால் மிகவும் பிடிவாதமான குணமுடைய மனிதனும் விலையேறப்பெற்ற தேவனுடைய சாயலைப் பெற்றவன். நாம் ஒரு  வேளை பிறரோடு அதிகம் பேசுபவராக இல்லையெனில்  நாம் நம்மைக் குறித்து உயர்வாக மதிப்பிடுபவராகவும், பிறரை மதியாதவராகவும், தேவனுடைய கிருபைக்குத் தூரமானவர்களாகவும் கருதப்படக் கூடும் (மத். 5:22)

எனவே தான் நீதிமொழிகள் 26:5 இதற்கு மாறான ஓர் ஆலோசனையைத் தருகின்றது. நாம் தாழ்மையோடு ஜெபத்தில்தேவனைச் சார்ந்து கொண்டால்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அன்பை வெளிப் படுத்த முடியும். (கொலோசேயர் 4:5-6) சில வேளைகளில் நாம் பேச வேண்டும், வேறு சில வேளைகளில் அமைதியாயிருப்பதே மேலானது.

நாம் தேவனுக்குச் சத்துருவாக இருந்த போதும்  நம்மை அவரண்டை இழுத்துக் கொண்ட அதே தேவன் இன்றும் ஒவ்வொரு மனிதனின்  இருதயத்திலும் வல்லமையாகக் கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை எல்லா சூழ்நிலைகளிலும் தெரிந்து கொண்டால் நாம் சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம்.  (ரோம. 5:10). கிறிஸ்துவின் அன்பை நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர் தரும் ஞானத்தைச் சார்ந்து கொள்வோம்.