நான் அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் உள்ளேயிருக்க, அதன் கதவை மூடவிருந்தனர். வாகனத்தின் வெளியே என்னுடைய மகன் என் மனைவியிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். என்னுடைய நினைவு தளர்ந்த நிலையில், நான் அவனை பெயர் சொல்லி அழைத்தேன். அவன் அதனைப் புரிந்த கொண்டபோது, நான் மெதுவாக அவனிடம், “நான் அவளை மிகவும் நேசிப்பதாக உன் அம்மாவிடம் சொல்லு” என்றேன்.

நான் அதனை என்னுடைய பிரியாவிடை என்று எண்ணினேன். இந்த வார்த்தைகளை என்னுடைய கடைசி வார்த்தைகளெனவும் நினைத்தேன். அந்த வேளையில் அது ஒன்றே எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது.

இயேசுவும் தனது கடைசி இருண்ட நேரத்தைச் சகித்தபோது அவர் நம்மிடம் வெறுமனே நம்மை நேசிப்பதாக மட்டும் கூறவில்லை. அவர் தம் அன்பினைத் தெளிவாகக் காட்டினார். தன்னை இழிவுபடுத்தி, சிலுவையிலறைந்த சேவகர்களிடம் தமது அன்பைக் காட்டினார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கின்றார்களே” என்றார் (லூக். 23:34) தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட மற்றொரு கள்ளனுக்கு அவர் “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்” (வச. 43) என்று நம்பிக்கையளித்தார் இறக்கும் தருவாயில் தன்னுடைய தாயைப் பார்த்து, “ஸ்திரீயே. அதோ, உன் மகன்” என்றார். தனக்கன்பான சீஷன் யோவானைப் பார்துது, “அதோ உன் தாய்” என்றார் (யோவா. 19:26-27) கடைசியாக இவ்வுலக வாழ்வை அவர் முடித்துக் கொண்ட போது, தந்தையிடம் தனக்குள்ள நம்பிக்கையை கடைசி அன்பின் செயலாக “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார் (லூக். 23:46).

இயேசு ஒரு நோக்கத்தோடு பிதாவுக்குச் கீழ்ப்படிந்து பிதாவினிடம் தான் வைத்துள்ள அன்பின் ஆழத்தைக் காட்டும்படியாகவும், நம்மீது அவர் வைத்துள்ள ஆழமான அன்பைக் காட்டவும் சிலுவையைச் சகித்தார். முடிவுவரை நம்மீது வைத்துள்ள உண்மையான அன்பினைக் காட்டினார்.