“செல்லோ” என்ற இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென அநேக நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால், எனக்கு அதற்கான நேரம் ஒதுக்கமுடியவில்லை. நான் பரலோகத்தில், ஒருவேளை இந்தக் கருவியை நேர்த்தியாக வாசிக்கக் கூடும். தேவன் என்னுடைய நேரத்தை, அவருக்கு ஊழியம் செய்யும்படி எப்படியெல்லாம் செலவிட திட்டமிட்டிருக்கின்றாரோ அதற்கே அதிக கவனம் செலுத்தும்படி விரும்புகிறேன்.

நம்முடைய வாழ்வு மிகவும் குறுகியது. அந்த நாட்கள் முடிவதற்குள், இப்புவியில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை மிக அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியானால் அதன் அர்த்தமென்ன?

சாலமோன் ராஜா வாழ்வின் நோக்கத்தை விளக்க முன்வரும்போது, இரு காரியங்களைக் குறித்து விளக்குகின்றார். முதலாவது நாம் நம் வாழ்வை நம்மால் முடிந்தவரை பயனுள்ள வகையில் வாழவேண்டும். அதாவது தேவன் நாம் அனுபவிக்கும்படி கொடுத்துள்ள உணவு, தண்ணீர் (பிர. 9:7) உடை, வாசனை திரவியங்கள் (வச. 8) திருமணம் (வச. 9) போன்ற தேவன் தரும் நன்மையான ஈவுகள் அனைத்தையும் அனுபவி. சேல்லோவை இசைக்கக் கற்றுக் கொள்வதும் இதில் அடங்கும்.

அவருடைய இரண்டாவது பரிந்துரை என்னவெனின், கடின உழைப்பு (வச. 10). வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இங்கு அதிக வேலைகள் நிறைவேற்றப்படும்படி கிடக்கின்றன. தேவன் தரும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி, அவருடைய ஞானத்தைத் தேடி கண்டுபடித்து, அவருடைய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்முடைய தாலந்துகளை தேவனுக்குப் பணிசெய்யும்படி பயன்படுத்த வேண்டும்.

வாழ்வு என்பது தேவன் தரும் அற்புத ஈவு. அவர் அனுதினமும் நமக்குத் தருகின்ற ஆசீர்வாதங்களிலும், நம்முடைய அர்த்தமுள்ள ஊழியங்களிலும் நாம் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடையும் போது, நாம் தேவனைக் கனப்படுத்துகின்றோம்.