ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் என்னுடைய நண்பனொருவன், அந்த ஆண்டில் நடந்த எல்லாக் காரியங்களைக் குறித்தும், எதிர்கால கனவுகளைப்பற்றியும் தன் மனைவிக்கு நீண்ட கடிதம் எழுதுவான். தான் அவளை மிகவும் நேசிப்பதாகவும் அதற்கான காரணம் என்னவென்றும் எழுதுவான். தன்னுடைய ஒவ்வொரு மகளுக்கும் இதேப்போன்று கடிதம் எழுதுவான். அவனுடைய அன்பின் வார்த்தைகள் மறக்கமுடியாத கிறிஸ்மல் பரிசாக அமையும்.

உண்மையான கிறிஸ்மஸ் அன்பின் கடிதம் எதுவெனில், ‘வார்த்தை மாம்சமானார்’ என்பதே. யோவான் இந்த உண்மையை சுவிசேஷத்தில் முக்கியப்படுத்திக் காட்டியுள்ளார். “ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவா. 1:1) பழங்கால கிரேக்கத் தத்துவங்கள் வார்த்தையை ஓர் உன்னத மனம் அல்லது உண்மையோடு இணைக்கப்படல் எனக் குறிப்பிடுகின்றன. ஆனால், யோவான் வார்த்தையை ஒரு மனிதனாக வெளிப்படுத்துகின்றார். தேவக் குமாரனாகிய இயேசு ஆதியில் தேவனோடு இருந்தார் (வச. 2). இந்த வார்த்தை பிதாவினுடைய “ஒரே பேரானக் குமாரன்” மாம்சமாகி, நம்மிடையே வாசம்பண்ணினார் (வச. 14) வார்த்தையாகிய இயேசுவின் மூலம் தேவன் தம்மை முழுமையாக வெளிப்படுத்தினார்.

வேத அறிஞர்கள் இந்த அழகிய மர்மத்தோடு பல நூற்றாண்டுகளாகப் போராடிக் கொண்டிருந்தனர். நாம் முழுமையாக புரிந்து கொள்ளாவிடினும் வார்த்தையாகிய இயேசு நம்முடைய உலகின் இருளை நீக்க வந்த மெய்யான ஒளி (வச. 9). நாம் அவரை நம்புவோமேயாகில் நாம் தேவனுடைய அன்புப் பிள்ளைகள் என்கின்ற பரிசைப் பெற்று அநுபவிக்கலாம்.

இயேசுவே நமக்குத் தரப்பட்ட அன்பின் கடிதம் அவர் வந்து நம்மிடையே வாசம் பண்ணுகின்றார். இது ஓர் ஆச்சரியமான கிறிஸ்மஸ் பரிசு.