எங்கள் வீட்டில் “அழைக்கப்பட்டாரோ அழைக்கப்படவில்லையோ, தேவன் இங்கே இருக்கிறார்” என்ற வாசகப் பலகை உண்டு. “ஏற்றுக்கொள்கிறீர்களோ, ஏற்றுக்கொள்ளவில்லையோ தேவன் இங்கே இருக்கிறார்” என்பது அதன் புது வாசகமாக இருக்கலாம்.

எட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியில் (கி.மு. 755-715) வாழ்ந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா இதை ஒத்த வார்த்தைகளை எபிரேய ஜனங்களுக்கு எழுதினார். அவர்கள் தேவனை மறந்துவிட்டதால் (ஓசியா 4;1), தேவனை “தொடர்ந்து” அறியும்படி அவர் இஸ்ரவேலர்களை ஊக்கப்படுத்தினார் (ஓசியா 6:3). தேவனின் பிரசன்னத்தை ஜனங்கள் மறந்ததால், அவர்கள் அவரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர் (6:12). அதன்பின் அவர்களுடைய சிந்தனைகளில் தேவனுக்கு இடமே இல்லாமல் போயிற்று (சங். 10:4).

நம்முடைய சந்தோஷத்திலும், நம்முடைய பாடுகளிலும் தேவன் நம் அருகே இருக்கிறார், நம்மில் கிரியை செய்கிறார் என்பதை “கர்த்தரை அறியுங்கள்” என்ற ஓசியாவின் எளிய ஆனால் ஆக்கபூர்வ வார்த்தைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

தேவனை அங்கீகரிப்பது என்பது அலுவலகத்தில் பணி உயர்வு கிடைக்கும்போது தேவன் நமக்கு ஞானத்தைத் தந்து, நம் வேலையை குறித்த பண ஒதுக்கீட்டில், குறித்த நேரத்தில் முடிக்க உதவினார் என்று நினைப்பதாகும். நாம் விரும்பிய வீடு கிடைக்காதபோதும் தேவனை அங்கீகரிப்பது அந்த சூழ்நிலையை நமக்கு நன்மையானதாக மாற்றித் தருவார் என்று நம்புவதாகும்.

நாம் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காதபோதும், நம்முடைய ஏமாற்றத்திலும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அங்கீகரிப்பது, அவருடைய பிரசன்னத்தில் ஆறுதல் பெற உதவும். நாம் உணவை ரசித்து சாப்பிடும்போது, தேவனை அங்கீகரிப்பது, தேவன் நமக்கு சமைப்பதற்குத் தேவையான பொருள்களைக் கொடுத்ததோடு, சமைப்பதற்கு இடத்தையும் கொடுத்திருக்கிறார் என்று நினைவுகூர உதவும்.

தேவனை நாம் அங்கீகரிப்பது, நம் வாழ்க்கையில் சிறிய விஷயத்திலும், பெரிய விஷயத்திலும், வெற்றியிலும், துக்கத்திலும் தேவனின் பிரசன்னத்தை நினைவுகூருவதாகும்.