கானா தேசத்தில், டெக்கிமான் என்ற இடத்திற்குச் செல்ல போடப்படிருந்த பாலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. டானோ ஆற்றின் மறு கரையில் உள்ள நியூ க்ரோபோ பகுதி வேறு சாலை வசதி இல்லாமல் துண்டிக்கப்பட்டது. போதகர் சாமுவேல் அப்பையாவின் ஆலயத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. ஏனென்றால் அவரது சபையின் அனேக அங்கத்தினர்கள் நியூ க்ரோபோவில் – ஆற்றின் “மறுபக்கம்” வசித்தார்கள்.

இந்தப் பிரச்சனையின் நடுவில், ஆலயத்தின்கீழ் இயங்கும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இன்னும் பல ஆதரவற்ற குழந்தைகளை சேர்க்க போதகர் சாமுவேல் முயன்று கொண்டிருந்தார். எனவே அவர் ஜெபித்தார். அவரது ஆலயம் ஆற்றின் மறு பக்கத்தில் உள்ள நியூ க்ரோபோவில் திறந்தவெளிக் கூட்டங்களை ஏற்பாடு செய்தது. சிறிது காலத்திலேயே அவர்கள் புது விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஒரு புதிய சபை ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நியூ க்ரோபோவில் இடம் ஒதுக்கப்பட்டது. பிரச்சனையினூடே தேவன் தம்முடைய மீட்புப் பணியை ஒருங்கிணைத்தார்.

சுதந்தரத்தின் “மறுபக்கத்தில்” பவுல் இருந்தபோது, (சிறையிலடைக்கப்பட்ட போது) தன்னுடைய நிலையைக் குறித்து அவர் புலம்பவில்லை. பிலிப்புவில் உள்ள சபைக்கு, “சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று” என்று கடிதம் எழுதினார் (பிலிப்பியர் 1:12). அவரது கட்டுகள் “அரமனையெங்கும் உள்ளவர்கள்” கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ள உதவியதாகக் கூறுகிறார் (வச. 13). அதனால் இயேசுவைக் குறித்த நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள மற்றவர்களும் துணிவு பெற்றார்கள்
(வச. 14).

தடங்கல்கள் வந்தபோதும், போதகர் சாமுவேலும், பவுல் அப்போஸ்தலரும், தங்கள் பிரச்சனைகளினூடே பணிசெய்ய புது வழியை தேவன் காட்டியதை உணர்ந்தார்கள். நாம் இன்று எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலைகளில் தேவன் எப்படி இடைபடுகிறார்?