எங்களுடைய ஆலயச் சரித்திரத்தில், தேவன் தந்துள்ளவற்றையெல்லாம் திருப்பிப் பார்த்து, எங்கள் சபைத் தலைவர், ஒரு புது தேவையை முன்வைத்தார். அது ஓர் உடற்பயிற்சிக் கூடம். எங்களுடைய சமுதாயத்தினருக்கு இன்னும் அதிகமாகச் சேவைசெய்ய, அது உதவியாக இருக்கும் என்றார். அந்தக் கட்டுமானத் தொகைக்காக, தலைவர்களின் அணி தங்கள் வாக்குறுதித் தொகையை முதலாவது எழுதினர். தன்னலம் என் இருதயத்தை நெருட, நான் ஏற்கனவே கொடுக்க நினைத்ததைத் தவிர அதிகமாக கொடுக்கப்போவதில்லை என சொல்லிக் கொண்டு ஜெபித்தேன். ஆனால், நானும் என் கணவனும் இத்திட்டத்திற்காக ஜெபிப்பதாக ஒத்துக் கொண்டோம். ஆனால், தேவன் எங்களுக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதை நினைத்து, நாங்கள் மாதந்தோறும் ஒரு தொகையை இத்திட்டத்திற்குக் கொடுக்கத் தீர்மானித்தோம். எங்கள் சபையிலுள்ள குடும்பத்தினரின் கொடைகளால், அந்த முழுகட்டடமும் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவின்போது, கர்த்தருடைய ஊழியத்திற்கென்றே திறந்த போதிலும் அதனை பல்வேறு சமுதாய நிகழ்வுகளுக்கும் தேவன் பயன்படுத்தி வருவதைக் குறித்து நன்றியோடிருக்கிறோம். மற்றொரு தாராளமான கொடையாளர், தாவீது அரசனைக் குறித்து நினைவுகூருகின்றேன். தேவன் அவரைத் தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படித் தெரிந்து கொள்ளவில்லையெனினும், தாவீது தன்னுடைய வருமானம் அனைத்தையும் அத்திட்டத்திற்கென சேமித்தான் (1 நாளா. 29:1-5) அவனோடு பணிபுரிந்த பிரபுக்களும், ஜனங்களும் மனப்பூர்வமாய் கொடுத்தனர் (வச. 6-9). நம்மைப் படைத்தவரும், தாங்கி வழி நடத்துபவரும், எல்லாவற்றிற்கும் சொந்தக்காரருமான தேவன், முன்பு தங்களுக்குக் கொடுத்ததிலிருந்து, மனப்பூர்வமாய் கொடுத்ததை ராஜா சேகரித்தான் (வச. 10-16).

நமக்குள்ளதெல்லாம் தேவனுக்கே சொந்தமானதென நாம் உணரும் போது, நன்றியோடும், தாராளமாயும், உண்மையாயும் மற்றவர் நலனுக்காகக் கொடுக்க முன்வருவோம். தேவன் மீண்டும் தருவார் என நம்புவோம். இந்த மனப்பூர்வமான கொடையால், நம்முடைய தேவைகளையும் பிறர் தாங்குவார்கள் என்பதையும் நம்புவோம்.