மனம் பொருந்துதல் பற்றி ஒரு வட்ட மேசை விவாதத்தை ஆரம்பித்தபோது, ஒரு பங்காளர், “மக்கள் குற்றங்களை காலத்தில் உறையச் செய்யாதீர்கள்” என ஞானமாய் கூறினார். நாம் மக்கள் செய்யும் தவறுகளை நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் மாற்றமடைய வாய்ப்பு கொடுப்பதில்லை என அவர் கூறினார்.

பேதுருவின் வாழ்க்கையில் எத்தனையோ வேளைகளில் தேவன் அவரைப் “புறக்கணித்திருக்கலாம்.” ஆனால், தேவன் அவ்வாறு செய்யவில்லை. துடிப்பான சீடனான பேதுரு இயேசுவைத் “திருத்துகின்றான்”, விளைவாக இயேசுவிடமிருந்து வன்மையான கடிந்து கொள்ளலைச் சந்திக்கின்றான். (மத். 16:21-23). அவன் யாவருமறிய இயேசுவை மறுதலிக்கின்றான் (யோவா. 18:25-27). பின்னர், மனம்வருந்தி மீண்டெழுகிறான் (21:15-19). ஒரு முறை சபையில் ஜாதிபிரிவினைக்குக் காரணமாகிறான்.

கேபா என்றழைக்கப்படும் பேதுரு தன்னை புறஜாதியாரிடமிருந்து பிரித்து, விலக்கிக் கொண்டபோது இந்தக் காரியம் நிகழ்ந்தது (கலா. 2:11-12). சமீபத்தில் அவன் புறஜாதியாரோடே தன்னை ஐக்கியப்படுத்தியிருந்தான். ஆனால், சில யூதர்கள் வந்து, கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசிகளுக்கும் விருத்தசேதனம் அவசியம் என்று போதித்த போது, விருத்தசேதனமில்லாத புறஜாதியாரை பேதுரு தவிர்த்தான். இது மோசேயின் நியாயப்பிரமாணத்தை நோக்கி, அவரது அபாயகரமானத் திரும்புதலைக் குறிக்கிறது. போதுருவின் இந்த நிலையை “மாய்மாலம்” என பவுல் குறிப்பிடுகின்றார் (வச. 13). பவுல் தைரியமாக எதிர்த்ததால், இந்தக் காரியம் தீர்க்கப்பட்டது. தேவன் நமக்களித்துள்ள அழகிய ஒரு மனதின் ஆவியைக் பெற்றவனாகப் பேதுரு தேவப் பணியைத் தொடர்ந்தான்.

ஒருவரும் தங்களுடைய மோசமான நேரங்களால் புறக்கணிக்கப்படுவதில்லை. தேவ கிருபையால் நாம் ஒருவரையொருவர் தழுவி, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொண்டு, தேவைப்படும் இடங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து தேவ அன்பில் இணைந்து வளர்வோம்.