எங்களுடைய திருமண நாளில் என்னுடைய கணவன் ஆலன் பெரிய மலர்கொத்து ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அவர் வேலை செய்த கூட்டுறவின் சீர்திருத்தத்தின் போது தன் வேலையை இழந்ததால், நான் இந்த அவசியமற்ற வீணான அன்பின் வெளிப்பாடு தொடர்வதை விரும்பவில்லை. ஆனால், எங்களது பத்தொன்பதாவது திருமணநாளில் வண்ண மலர்கள் எங்களது சாப்பாட்டு மேசையிலிருந்து ஜொலித்து என்னை வரவேற்றுக் கொண்டிருந்தன. இந்த வருடாந்திர வழக்கத்தைத் தொடர்வதற்கு அவர் விரும்பியதால், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து தன்னுடைய தனிப்பட்ட அன்பை வெளிப்படுத்த போதுமானதாக வைத்திருப்பார்.

என்னுடைய கணவனின் கரிசனையான திட்டமிடல் அவருடைய தாராள குணத்தை வெளிப்படுத்தியது. இது பவுல் கொரிந்து சபையினரை ஊக்கப்படுத்தியதைப் போன்றிருந்தது. இங்கு பவுல் அப்போஸ்தலன் அந்த சபையினரின் உதாரத்துவமான காணிக்கையைக் குறித்துப் புகழ்ந்துள்ளார் (2 கொரி. 9:2,5). உற்சாகமாய் கொடுக்கிறவர்கள் பேரில் தேவன் பிரியமாயிருக்கிறார் என அவர்களுக்குச் சொல்கின்றார் (வச. 6-7). ஆனால், ஒருவரும் நம்முடைய அன்புத் தந்தையைவிட அதிகமாகக் கொடுப்பதில்லை, அவரே நம்முடைய தேவையனைத்திற்கும் தருவதற்கு எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறவர் (வச. 8-10).

நாம் எல்லாவித கொடையிலும், ஒருவரையொருவர் தாங்குவதிலும் உதாரத்துவமாய் இருக்க வேண்டும், ஏனெனில், தேவன் நம்முடைய உலகத் தேவைகள், உணர்வு சார்ந்தவை மற்றும் ஆவிக்குரிய தேவைகள் யாவையும் சந்திக்கின்றார் (வச. 11). நாம் கொடுப்பதன் மூலம் நம்முடைய தேவன் நமக்குத் தந்துள்ளவற்றிற்கு நன்றியை வெளிப்படுத்துகின்றோம். நாம் பிறரையும் கொடுக்கும்படி ஊக்கப்படுத்தி, தேவன் தந்துள்ளவற்றிலிருந்து அவருக்கு கொடுத்து அவரைத் துதிக்கலாம் (வச. 12-13). அன்பையும் நன்றியையும் அதிகமாக வெளிப்படுத்துவதே நம்முடைய உதாரத்துவமான கொடை. அது தேவன் அவருடைய பிள்ளைகளின் தேவைகளையெல்லாம் சந்திக்கின்றார் என்ற நம்பிக்கையின் வெளிப்படுதலேயாகும்.