லீ என்பவர் விடாமுயற்சியும் நம்பிக்கைக்குரியவருமான ஒரு வங்கி ஊழியர். அவர் தன் நம்பிக்கையில் வாழ்வதற்குத் தடுமாறிக் கொண்டிருந்தார் என்பதை நடைமுறையில் வெளிப்படுத்தினார். எடுத்துக்காட்டாக தன்னுடைய கருத்துக்களுக்கு பொருத்தமில்லாத உரையாடல் நடந்து கொண்டிருந்தால் அந்த அறையை விட்டு வெளியேறிவிடுவார். ஒரு வேத ஆராய்ச்சிக் கூட்டத்தில் ஒரு நாள் தன்னுடைய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார், நான் எனது பதவி உயர்வு வாய்ப்புகளை இழக்க நேரிடுமோ என பயப்படுகிறேன், ஏனெனில் நான் இன்னமும் சரியாகப் பொருந்தி வரவில்லை என்றார்.

தீர்க்கன் மல்கியா காலத்து விசுவாசிகள் இத்தகைய சவாலைச் சந்தித்தனர். அவர்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தனர், தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது. ஆனாலும் அவர்களுக்குள்ளே தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து சந்தேகம் இருந்துகொண்டேயிருந்தது. சில இஸ்ரவேலர், “தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினால்… என்ன பிரயோஜனம்? இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம். தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள். அவர்கள் தேவனைப் பரிட்சை பார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே” (மல். 3:14-15). என்று சொன்னார்கள்.

உலகக் காரியங்களோடு நாம் சரியாகப் கலவாவிடில் நாம் அதனை இழந்துவிடுவோம் என்று சொல்லப்படுகின்ற கலாச்சாரத்தில், நாம் எப்படி தேவனுக்காக உறுதியாக நிற்கப் போகின்றோம்? மல்கியா காலத்திலிருந்த உண்மையுள்ளவர்கள் இத்தகைய சவால்களைக் சந்திக்கும் போது, தங்களைப் போன்ற மனதுடைய விசுவாசிகளைச் சந்தித்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினர். இந்த முக்கியமான செய்தியை மல்கியா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். “கர்த்தர் கவனித்துக் கேட்பார்” (வச. 16).

தேவன் தமக்கு பயந்து தம்மை கனம்பண்ணுகிறவர்களை கவனித்து பாதுகாக்கிறார். நம்மை “பொருந்தி வாழ்வதற்கு அவர் அழைக்கவில்லை. ஆனால், நாம் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதன் மூலம் அவரோடு நெருங்கி வாழ்வதற்காகவே அழைத்தார். நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாயிருப்போம்.