“மாற்றம்: உள்ளிருந்து வெளியேயா? அல்லது வெளியிலிருந்து உள்ளேயா?” என்பது இன்றைக்கு மேலோங்கிங்கி நிற்கும் ஒரு போக்கினைக் குறித்து சிந்திக்கும் பகுதியின் தலையங்கம், வெளிப்புற மாற்றமாகிய ஒரு அலங்காரம் அல்லது ஒரு பாவனை போன்ற எளிய வழிகள் அக மாற்றத்தை உணர வழிசெய்கிறது. இது வாழ்விலும் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

இது ஒரு கவர்ச்சியுள்ள கொள்கை, நம் வாழ்வை உயர்த்தி ஒரு புதிய தோற்றத்தை காட்டிக் கொள்ள யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால், ஒருவருக்குள் ஆழமாகப் பதிந்துவிட்ட குணாதிசயங்களை மாற்றுவது இயலாத காரியம் என்பது நம்மில் அநேகருக்குத் தெரியும்.

வெளிப்புற எளிய மாற்றங்களில் கவனம் செலுத்துவது நம் வாழ்வை உயர்த்திக் காட்டிக் கொள்ள நம்பிக்கையூட்டும் சிறந்த வழி.

ஆனால், இத்தகைய மாற்றம் நம் வாழ்வை முன்னேற்றமடையச் செய்தாலும், வேதாகமம் உள்ளான ஒரு ஆழமான மாற்றத்தைத் தேட நம்மை அழைக்கிறது. ஆனால், அது நம் சொந்த பிரயாசத்தால் முடியாது. உண்மையில் கலாத்தியர் 3ல் பவுல் இவ்வாறு கூறுகிறார். தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துகின்ற விலையேறப்பெற்ற பொக்கிஷமாகிய நியாயப்பிரமாணம் உடைந்துபோன ஒரு தேவமனிதனை சுகப்படுத்த முடியாது (வச. 19-22). ஆவியைக் கொண்டு விசுவாசத்தினால் (5:5) கிறிஸ்துவை தரித்துக் கொண்டால் தான் உண்மையான சுகத்தையும், விடுதலையையும் பெற்றுக் கொள்ளலாம் (வச. 27). எல்லாவற்றையும் தள்ளிவிட்டு கிறிஸ்துவுக்குள் உருவாக்கப்படும் போது, எல்லாரும் உண்மையான தகுதியையும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு சுதந்திரராயும் இருக்கிறீர்கள் (3:28-29).

சுயமாக முன்னேறுவதற்கான வழிமுறைகளை அடைய நாம் அர்ப்பணிப்புடன் அதிக ஆற்றலை செலவிடுவோம். ஆனால், ஆழமான நிறைவானதாக உள்ளத்தில ஏற்படும் மாற்றம், அறிவுக்கெட்டாத அந்த அன்பை நாம் அறிந்து கொள்ளும்போது ஏற்படும் (எபே. 3:17-19). அன்பு சகலத்தையும் மாற்றும்.