கிராண்ட் கேன்யன் என்ற உலகப் புகழ்பெற்ற மலைப் பள்ளத்தாக்கை பார்ப்பதை நான் அதிகம் விரும்புகிறேன். பள்ளத்தாக்கின் ஓரத்தில் நிற்கும் பொழுதெல்லாம், தேவனுடைய சிருஷ்டிப்பின் புதுமையைக் கண்டு ஆச்சரியத்தால் எனது மூச்சு நின்று போகும்.

கிராண்ட் கேன்யன் என்பது பூமியிலுள்ள மிக ஆழமான குழியாக இருந்தாலும், அது என்னை பரலோகத்தைக் குறித்து சிந்திக்க தூண்டுகிறது. 12 வயதுடைய ஒரு சிறுவன் “பரலோகம் சிலிப்பை உண்டாக்கும் இடமாக இருக்காதா? எந்த நேரமும் தேவனை துதித்துக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைந்துவிடமாட்டோமா?” என்று உண்மையான இருதயத்துடன் என்னிடம் கேட்டான். பூமியிலுள்ள ஒரு அழமான பள்ளம் நம் மனதைத் தொடக்கூடிய அளவிற்கு மிக அழகாக இருப்பதால், அதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க செய்யுமானால், அழகிற்கே ஊற்று காரணமுமான, ஆச்சரியமான புத்தம் பதிய சிருஷ்டிகளின் சிருஷ்டி கர்த்தாவாகிய நமது அன்பின் தேவனை நாம் காணும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க இயலும்.

தாவீது “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன். அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும் படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங். 27:4) என்று எழுதினபொழுது அவனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். நாம் விசுவாசத்துடன் தேடும்பொழுது இந்த உலகில் நம்மை நெருங்கி வரும் அவரது பிரசன்னத்தைப் போலவும், அவரை முகமுகமாகத் தரிசிப்பதை எதிர் நோக்கி இருப்பதைப் போலவும் அழகானவைகள் வேறு ஒன்றுமில்லை.

அந்த நாளில் அற்புதமான நமது கர்த்தரை துதித்துக்கொண்டே இருப்பதில் நாம் களைத்துப் போகவே மாட்டோம். ஏனென்றால் அளவிடப்படமுடியாத அவரது உன்னைத் தன்மையையும், அவரது கரத்தின் கிரியைகளின் ஆச்சரியத்தையம் அறிந்து கொள்வதற்கு முடிவே கிடையாது. அவருடைய பிரசன்னத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய அன்பு அவருடைய அழகு ஆகியவைகள் ஆச்சரியப்படத்தக்க முறையில் வெளிப்படுத்தப்படுகின்றன.