தாமஸ் பர்னாடோ கி.பி. 1865ல் லண்டன் மருத்துவமனை மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார். சீனாவுக்கு மருத்துவ அருட்பணியாளராக செல்ல வேண்டுமென்பது அவரது கனவு மிக விரைவில் தான் இருக்கும் பகுதியிலேயே பெரிய தேவையிருப்பதை அவர் உணர்ந்தார். வீடற்று அநேக சிறு பிள்ளைகள் லண்டன் தெருக்களில் வசித்தனர், சிலர் மரித்துவிட்டனர். இந்த அபாயகரமான சூழ்நிலையை மாற்ற தாம் ஏதாவது செய்ய வேண்டுமென பர்னாடோ முடிவு செய்தார். லண்டனின் கிழக்கு எல்லையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லங்களை உருவாக்கி சுமார் 60,000 சிறுவ சிறுமியரை வறுமையிலிருந்தும் மரண அபாயத்திலிருந்தும் தப்புவித்தார். போதகரும் இறையில் அறிஞருமான ஜான் ஸ்டாட் “இன்று பர்னாடோவை தெரு பிள்ளைகளின் பாதுகாவலன் பரிசுத்த பர்னாடோ என அழைக்கலாம்!”

இயேசு கூறினார், “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களை இந்தக் குழந்தைகளைப் போல இருப்பவர்களுக்குத்தான் பரலோக ராஜ்யம் சொந்தமாகும்” (மத். 19:14). இவ்வாறு இயேசுவானவர் முழங்கியபோது இயேசுவின் சீஷர்களும் அங்கிருந்த திரள் கூட்டத்தாரும் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பார்கள் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். பண்டைய உலகில், பிள்ளைகளுக்கு குறைந்த மதிப்பே வழங்கப்பட்டது. வாழ்வின் ஓரப் பகுதிகளுக்கு பிள்ளைகள் தள்ளப்பட்டார்கள். ஆயினும், இயேசுவானவர் பிள்ளைகளை வரவேற்றார். ஆசீர்வதித்தார், மதித்தார்.

புதிய ஏற்பாட்டில் யாக்கோபு கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கு அறைகூவல் விடுக்கிறார், “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது… பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” (யாக். 1:27). இந்நாட்களில், அந்த முதல் நூற்றாண்டுக் குழந்தைகளைப் போலவே, அலட்சியப் போக்காலும், மனிதர்களைக் கடத்துவதாலும், தவறான பயன்பாட்டாலும், போதை மருந்துகளினாலும் பல்வேறு இனத்தைச் சேர்ந்த அனைத்து நாட்டுப் பிள்ளைகளும் ஆபத்தான சூழ்நிலையில் வசிக்கின்றனர். நம்மை நேசிக்கின்ற நமது பிதாவானவரை நாம் எவ்வாறு கனப்படுத்தக்கூடும்? இயேசுவானவர் வரவேற்கிற சிறுவர் சிறுமியரின் மீது நமது அக்கறையை செலுத்துவதன் மூலமே!