இன்றைய நட்சத்திர மோக கலாச்சாரத்தில், தொழில் முனைவோர் பிரபல நட்சத்திரங்களை தயாரிப்புகளாகச் சந்தைப்படுத்துவது வியப்பளிக்கவில்லை. நட்சத்திரங்கள் தங்களது தனிப்பட்ட நேரத்தையும் தம் மீதான மக்களது ஆர்வத்தையும் விற்கத் துவங்கிவிட்டனர். 15,000 அமெரிக்க டாலர் கொடுத்தால் நீங்கள் தனியாக பாடகர் ஷகிராவைச் சந்தித்து உரையாடலாமென “வாஹினி வரா” நீயூயார்க் பத்திரிக்கையில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்; 12,000 டாலர்கள் கொடுத்தால் 11 பேர் சமையல்களை நிபுணர் மைக்கல் சியாலெர்லோவுடன் அவரது பண்ணை வீட்டில் மதிய உணவு சாப்பிட முடியும்.

இயேசுவானவரைப் பின்தொடர்ந்து, அவரது போதனைகளைக் கேட்டு, அவரது அற்புதங்களைக் கண்டு அவரது குணமாக்கும் தொடுதலை நாடிய அநேக மக்கள் அவரை ஒரு முக்கிய நட்சத்திர நபராக நடத்தினார். ஆயினும், இயேசுவானவர் ஒருபோதும் தன்னை முக்கியப்படுத்தவில்லை அல்லது தனிமைப்படுத்திக்கொள்ளவுமில்லை. அவர் எல்லோராலும் அணுகக்கூடியவராய் இருந்தார். அவரது சீஷர்களான யாக்கோபும் யோவானும் அவரது வரப்போகும் இராஜ்யத்தில் உயரிய இடத்தை, அவரிடத்தில் தனிமையில் கேட்டபோது, “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக் காரணாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரணாயிருக்கக்கடவன்” (மாற். 10:43-44) என்று பதிலளித்தார்.

இவ்வார்த்தைகளைக் கூறியவுடன் ஓரிடத்தில் அவர் நின்றார், அவரைப் பின்தொடர்ந்தவர்களும் நின்றனர். அங்கிருந்த குருடனொருவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என இயேசு வினவினார். ஆண்டவரே “நான் பார்வை அடைய வேண்டும்” என்றான். உடனடியாகப் பார்வையடைந்து, இயேசுவுக்குப் பின் சென்றான் (வச. 51, 52).

நமது ஆண்டவர் “ஊழியங் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (வச. 4-5). அவரைப் போல நாமும் இரக்க சிந்தை உள்ளவர்களாகவும் பிறரால் எளிதில் அணுகக்கூடியவர்களாகவும் வாழ இன்றே முடிவு செய்வோம்.