“நமது வீட்டைப் போல் வேறெந்த இடமும் இல்லை”. நிலையான ஓரிடத்தில் உறவுகளுடன் இருந்து, வசித்து, ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆழ்மனதில் வேரூன்றியிருக்கும் ஏக்கத்தை தான் இந்த வாக்கியம் வெளிப்படுத்துகிறது. கடைசி இராப்போஜனத்தின்போது, தமக்கு நிகழப்போகும் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி பேசுகையில், அவரது நண்பர்களிடத்தில் வேரூன்றியிருக்கும் அந்த ஏக்கத்தை குறித்து இயேசு பேசினார். அவர்களை விட்டுச்சென்றுவிட்டாலும், நிச்சயமாக திரும்பி வருவாரென்ற வாக்குறுதியை அளித்தார். அவர்களுக்காக ஓரு இடத்தை ஆயத்தம் பண்ணப்போவதாகவும் அது அழகிய வாசஸ்தலமாகவும், இல்லறமாகவும் விளங்கும் என்று சொன்னார். 

பாவமற்ற மனிதனாக வாழ்ந்து தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் தேவைகள் அனைத்தையும் சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றி, அவர்களுக்காகவும் நமக்காகவும் அந்த இடத்தை ஆயத்தப்படுத்தினார். பாடுகளைப் பொருட்படுத்தாமல் இந்த இல்லத்தை அவர் கட்டியத்தின் வாயிலாக, நிச்சயமாகவே திரும்பி வருவார் எனவும், அவர்களை திக்கற்றவர்களாக விட்டுவிடமாட்டார் என்ற உத்திரவாதத்தையும் அவரது சீஷர்களுக்கு தந்தார். ஆகவே பரலோகத்தில் இருந்தாலும் சரி, பூலோகத்தில் இருந்தாலும் சரி அவர்கள் வாழ்க்கையைக் குறித்து பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை

இயேசு நமக்காக ஓர் இல்லத்தை ஆயத்தம்பண்ணுகிறார் என்ற வார்த்தையை விசுவாசிக்கிறோம். மேலும் அவர் நமக்குள் வாசமாயிருக்கிறார் (யோவா. 14:23) என்று அவர் தந்த உத்திர வாதத்தை நாம் விசுவாசிக்கும்பொழுது மிகுந்த ஆறுதல் அடைகிறோம். அது மாத்திரமல்ல, நமக்கு முன்பாகச் சென்று நம்முடைய பரலோக வீட்டையும் கட்டியிருக்கிறார். 

நாம் எப்படிப்பட்ட இடத்தில் வசித்து வந்தாலும் இயேசுவின் அன்பினாலும், சமாதானத்தினாலும் சூழப்பட்டிருக்கிறோம். அவர் நம்மோடு இருக்கும் பொழுது, நம்வீட்டை போன்ற சிறந்த இடம் வேறெங்கேயும் கிடையாது.