என் மகள் தன்னுடைய கேள்விக்கு விரிவானதொரு பதிலை எதிர்பார்த்து அவளுடைய தோழிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள். அதை அவள் தோழி வாசித்துவிட்டாள் என்பதை குறுஞ்செய்தி சேவை மூலம் அறிந்துகொண்டு எதிர்பார்ப்போடு பதிலுக்காக காத்திருந்தாள். சில நிமிடம்தான் கடந்திருக்கும், ஆனால் அதற்குள் பொறுமையிழந்து அத்தாமதத்தை எண்ணி எரிச்சலோடு புலம்ப ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்தில் எரிச்சல் கவலையாக மாறியது. இன்னும் பதில் வராததால் ஒருவேளை தங்களுக்கிடையில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என எண்ண ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வழியாக பதில் வந்ததும், அவர்களுடைய நட்பில் எப்பிரச்சனையும் இல்லை என்பதை உணர்ந்து என் மகள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அவ்வளவு நேரம் அவளுடைய தோழி அக்கேள்விக்கு வேண்டிய பதிலை அனுப்புவதில்தான் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தாள்.

பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான தானியேலும் கூட ஓர் பதிலை எதிர்பார்த்து கவலையோடு காத்திருந்தான். ஒரு மகா பெரிய யுத்தத்தை குறித்து பயங்கரமான தரிசனத்தை கண்டதும் தேவனைத் தாழ்மையோடு நோக்கி, உபவாசித்து ஜெபத்தில் தரித்திருந்தான் (வச. 10:3,12). மூன்று வாரங்களாக ஒரு பதிலையும் அவன் பெறவில்லை (வச. 2,13). இறுதியாக ஒரு தேவதூதன் வந்து, “முதல் நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது,” என தானியேலுடைய ஜெபத்தை குறித்து உறுதியளித்தான் (வச. 12). அதாவது 21 நாட்களும் தானியேலுடைய ஜெபத்தின் சார்பில் அத்தேவதூதன் போராடிக்கொண்டிருந்தான். இதைக் குறித்து ஒன்றையும் தானியேல் அறியாதிருந்தபோதிலும், முதல் நாள் தான் ஏறெடுத்த ஜெபம் துவங்கி தேவதூதன் பதில் கொண்டு வந்த 21வது நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் தேவன் கிரியை செய்து கொண்டுதான் இருந்தார்.

தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்கிற நிச்சயம், நாம் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது, பதில் வரவில்லை என்றால் மிகுந்த கவலைக்குள்ளாவோம். ஆனால் நாம் அறியாதபொழுதும் தேவன் தாம் அன்புகூருகிறவர்களுக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை தானியேலின் அனுபவம் நமக்கு நினைவூட்டுகிறது.