1932ஆம் ஆண்டு ஆக்ஸகாவில் (Oaxaca) உள்ள மான்டே ஆல்பன் (Monte Alban) என்னும் இடத்திலுள்ள ஏழாம் கல்லறையை மெக்ஸிகன் நாட்டு தொல்பொருள் ஆய்வாளர் அல்போன்சோ காசோ (Alfonso Caso) கண்டு பிடித்தார். “மான்டே ஆல்பனின் பொக்கிஷம்” என்று அவர் பெயர் சூட்டிய நூற்றுக்கும் அதிகமான ஸ்பானிய காலத்திற்கும் முந்தைய ஆபரணங்கள் உட்பட நானூறுக்கும் அதிகமான தொல்பொருள்களை கண்டுபிடித்தார். இது மெக்ஸிகன் நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிக சுத்தமான பச்சை மாணிக்க கல்லினால் செய்யப்பட்ட குவளையை கையில் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, காசோவிற்கு எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை தான் செய்து பார்க்க முடியும்.

தங்கத்தையும், படிகக்கல்லையும் காட்டிலும் மிகவும் விலையேறப்பெற்ற பொக்கிஷத்தைக் குறித்து சங்கீதக்காரன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளான். “மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறது போல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்” (சங். 119:162) என்று கூறியுள்ளான். தேவனுடைய கட்டளைகளும், வாக்குத்தத்தங்களும் எவ்வளவு விலையேறப்பெற்றவை என்பதை அவன் அறிந்திருந்த படியினால், ஒரு மாவீரனின் வெற்றிக்கரங்களில் வந்து சேரும் மகத்தான பொக்கிஷத்தோடு அதை ஒப்பிட்டு கூறுகிறான்.

ஏழாம் கல்லறையில் தான் கண்டுபிடித்த பொக்கிஷங்களுக்காக இன்றும் நாம் காசோவை நினைவுகூருகிறோம். ஆக்ஸகாவிலுள்ள அருங்காட்சியத்திற்கு சென்றால், அவற்றை கண்டுகளிக்கலாம். ஆனால், சங்கீதக்காரனின் பொக்கிஷமோ நமது விரல் நுனிகளில் உள்ளது. தினந்தோறும் வேதத்திலிருந்து வாக்குத்தத்தங்கள் என்னும் வைரங்களையும், நம்பிக்கை என்னும் மாணிக்கக் கற்களையும், ஞானம் என்னும் மரகதக் கற்களையும், நாம் கண்டடையதக்க மிக பெரிய பொக்கிஷம், இவ்வேதத்தின் ஆசிரியராகிய இயேசுவே.

நம்மை வளப்படுத்தக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் இதுவே, என்கிற நம்பிக்கையுடன் நாம் கருத்தாய் தேடக்கடவோம். ஏனெனில், சங்கீதக்காரன் சொன்னது போல, “உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி” (வச. 111).