
நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே
என்னுடைய நண்பன் ராபர்ட் மற்றும் அவனுடைய மனைவி காலின் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக ஒரு மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வை நடத்தி வருகின்றனர். அவர்களின் பரிமாற்றங்களை கவனிப்பது, எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கும். உணவு வேளையின் போது, ஒருவர் மற்றவருக்கு வெண்ணையை கொடுப்பார், அடுத்தவர் சரியானவேளையில் டம்ளரில் தண்ணீரை நிரப்புவார், ஒருவர், ஒரு கதையையின் வாக்கியத்தை ஆரம்பிப்பார், மற்றவர் அதனை முடிப்பார். சில வேளைகளில், ஒருவர் மற்றவரின் மனதை வாசிப்பதைபோலக் காணப்படும்.
நாம் நேசிக்கும் எந்த நபரைக் காட்டிலும் தேவன் நம்மை அறிந்துள்ளார், நம்மைப் பாதுகாக்கிறார் என்பது எத்தனை ஆறுதலளிப்பதாக உள்ளது. தேவனுடைய ராஜ்யத்தில், தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள மென்மையான, ஆழ்ந்த உறவினைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு விளக்குகின்றார். “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்” (ஏசா. 65:24). என்கின்றார்.
ஆனால் இது எப்படி உண்மையாக முடியும்? நான் அநேகக் காரியங்களைக் குறித்து வருடக்கணக்காக ஜெபித்தும் பதிலைப் பெறவில்லையே என்று நாம் நினைக்கலாம். நாம் தேவனோடு நெருங்கி வாழும் போது, நம்முடைய இருதயத்தை அவருடைய இருதயத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் போது, அவருடைய நேரத்தையும், பாதுகாப்பையும் நம்பி வாழக் கற்றுக் கொள்வோம். தேவனுடைய விருப்பதிற்கேற்ப கேட்க நாம் கற்றுக் கொள்வோம். ஜெபிக்கும் போது, நாம் கேட்கும் அநேகக் காரியங்களோடு, ஏசாயா 65ல் குறிப்பிட்டுள்ள படி, தேவனுடைய ராஜ்யத்திற்கு ஏற்றவைகளைக் கேட்க கற்றுக் கொள்வோம்; நம்முடைய துயரம் முடிந்து போகும்படியும் (வ.19), பாதுகாப்பான வீடுகள் அமையும்படியும், திருப்தியான உணவும், அனைவருக்கும் மன திருப்தியளிக்கும் வேலையும் கிடைக்கவும் (வச. 21-23), இவ்வுலகத்திற்குச் சமாதானம் (வச. 25) கிடைக்கும் படியாகவும் கேட்க கற்றுக் கொள்வோம். தேவனுடைய ராஜ்யம் பூரணமாகும் போது, தேவன் இத்தகைய ஜெபத்திற்கு முற்றிலும் பதிலளிப்பார்.

வியத்தகு திறமை
எங்கள் கல்லூரி பாடகர் குழுத் தலைவர், குழுவை வழிநடத்துவதோடு, எங்களோடு இணைந்து பியானோவிலும் வாசிப்பார், அற்புதமாக இவ்விரு பொறுப்பையும் ஒரே நேரத்தில் கையாளுவார். ஓர் இசை நிகழ்ச்சி முடிவுற்ற போது, அவர் மிகவும் சோர்வுற்றுக் காணப்பட்டார், எனவே நான் அவரை விசாரித்தேன், “இதற்கு முன்பு, இவ்வாறு செய்வதற்கு நேர்ந்ததேயில்லை” என்றார். மேலும், “இந்த பியானோவின் சுருதி இசையோடு பொருந்திவரவில்லை, ஆதலால் நான் இந்த முழு நிகழ்ச்சியிலும் இரண்டு பியானோக்களை பயன்படுத்தவேண்டியதாயிற்று, என்னுடைய இடது கை ஒரு பியானோவிலும், வலது கை மற்றொரு பியானோவிலும் வாசித்தன!” என்றார். அவரின் வியத்தகு திறமையை நினைத்து அதிசயித்தேன், மனிதனுக்குள் இத்தகைய திறமைகளைத் தந்த தேவனின் அற்புத வல்லமையை நினைத்து வியந்தேன்.
“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப் பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” (சங். 139:14) என இச்சங்கீதத்தை எழுதின தாவீது அரசன் தன்னுடைய வியப்பை வெளிப்படுத்துகின்றார். மனிதனின் திறமைகளையும், இயற்கையின் அற்புதங்களையும் நான் பார்க்கும் போது, படைப்புகளின் அதிசயம், என்னை படைப்பாளியின் மகத்துவத்தை நினைத்து வியக்கச் செய்கின்றது.
ஒரு நாள் நாம் தேவனுடைய சமுகத்தில் நிற்கும் போது, வெவ்வேறு தலைமுறையிலிருந்தும் வந்த ஜனங்கள், “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாய் இருக்கிறது” (வெளி.4:11) என்பார்கள். அவர் நமக்குத் தந்துள்ள வியத்தகு திறமைகளும், அவர் படைத்த அழகிய உலகமும், அவரே ஆராதிக்கத் தகுந்தவர் எனக் காட்டுகின்றன.

பில்லுக்கான பணம் செலுத்தப்பட்டுவிட்டது
“உனக்கு என்னவாயிற்று?” என்று கேட்டார், நைஜீரியாவைச் சேர்ந்த பீட்டர் என்ற தொழிலதிபர். அவர் லோகாஸ் என்ற இடத்திலுள்ள ஒரு மருத்துவ மனையில், ஒரு படுக்கையில் படுத்திருப்பவரைக் குனிந்து பார்த்தவண்ணம் இவ்வாறு கேட்டார். “யாரோ ஒருவர் என்னைச் சுட்டு விட்டார்” என்றான் அந்த இளைஞன். அவனுடைய தொடையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. அந்த இளைஞன் வீட்டிற்கு திரும்பக் கூடிய அளவுக்கு சுகமாகியிருந்தாலும், அவனுடைய பில் தொகையைக் கட்டினால் தான் அவன் அங்கிருந்து விடுவிக்கப் படுவான். அவ்விடத்திலுள்ள அரசு மருத்துவ மனைகள் இத்தகைய ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தன. ஒரு சமுக சேவை செய்பவரைக் கலந்தாலோசித்தபின், பீட்டர் தன் பெயரைத் தெரிவிக்காமல், தன்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில், தான் ஏற்கனவே ஆரம்பித்து வைத்திருந்த தரும நிதியிலிருந்து, அந்த பில்லுக்கான தொகை முழுவதையும் செலுத்திவிட்டார். இந்த ஈவைப் பெற்றவர்கள் ஒரு நாள் தாங்களும் மற்றவர்களுக்கு இத்தகைய ஈவைக் கொடுப்பார்கள் என்று நம்பினார்.
தேவன் நமக்குத் தரும் செல்வத்திலிருந்து கொடுப்பதைக் குறித்து வேதாகமத்தில் அநேக இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் எப்படி வாழ வேண்டுமென மோசே கூறும்போது, முதலாவது தேவனுக்குக் கொடுக்க வேண்டும் என்கின்றார் (உபா. 26:1-3), பின்னர், தேவையிலிருப்போரைக் கவனிக்குமாறு அறிவுறுத்துகிறார், அந்நியருக்கும், திக்கற்ற பிள்ளைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுக்குமாறு கூறுகின்றார் (வ.12). அவர்கள் “பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்” (வச. 15) வாழ்வதால், தேவனுடைய அன்பை தேவையிலிருப்போருக்குக் காட்டுமாறு சொல்கின்றார்.
நாமும் நம்மிடமுள்ள பொருட்களை, சிறிதோ பெரிதோ, பிறரோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் தேவனுடைய அன்பை பிறருக்குக் காட்டுவோம். பீட்டர் கொடுத்தது போல நம்மால் நேரடியாக கொடுக்கச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், நாம் தேவனிடம் கேட்போம், நாம் உதவி செய்யத் தேவையானவர்களையும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் தேவன் காட்டும் படி அவரிடம் கேட்போம்.

ஜீவனைப் பார்க்கிலும் நல்லது
மேரி இயேசு கிறிஸ்துவை நேசித்த போதிலும், அவளுடைய வாழ்வு மிகவும் கடினமாக இருந்தது. அவளுடைய இரண்டு மகன்கள் மரித்து விட்டனர், இரண்டு பேரன்களும் மரித்துப் போயினர், அவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர். மேரியும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாள். ஆயினும், ஆலய ஆராதனைக்குச் செல்ல முடிந்த போது, அவள் தவறாமல் ஆராதனையில் கலந்து கொண்டு, திக்கு வாயோடு, தேவனைத் துதித்தாள், “என்னுடைய ஆன்மா தேவனை நேசிக்கிறது, அவருடைய நாமம் துதிக்கப் படுவதாக!” என்று ஆராதித்தாள்.
மேரி தேவனை ஆராதிப்பதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே, தாவீது சங்கீதம் 63ஐ எழுதினார். இச்சங்கீதத்தினை அவர் யூதாவின் வனாந்தரங்களிலிருந்து எழுதினார் என்பதை அதன் தலைப்பிலிருந்து அறிகிறோம். அவர் விரும்பத்தகாத இடத்தில் இருந்த போதும், தனித்து விடப்பட்ட போதும் விரக்தியடையவில்லை, ஏனெனில் அவர் நம் தேவனை நம்பிக்கையாகக் கொண்டிருந்தார். “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும், தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது” (வச. 1) என்கின்றார்.
ஒரு வேளை நீயும் கஷ்டமான சூழ்நிலைகளில், வழிதெரியாமல், வசதியற்ற இடங்களில் இருக்கலாம். வசதியற்ற சூழல் நம்மைக் குழம்பச் செய்யலாம், ஆனாலும் நம்மை மிகவும் நேசிப்பவரை பற்றிக்கொண்டோமேயானால், நாம் தடுமாறத் தேவையில்லை (வ.3), அவர் நம்மை திருப்தியாக்குபவர் (வ.5), துணையாயிருப்பவர் (வச. 7), அவருடைய வலது கரம் நம்மைத் தாங்குகிறது (வ.8). நமது ஜீவனைப் பார்க்கிலும் அவரது அன்பு பெரிதாகையால், மேரியையும், தாவீதையும் போன்று நாமும், என் ஆத்துமா திருப்தியாகும், என் வாய் ஆனந்தக் களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும் என்று அவரைக் கனப் படுத்துவோமாக (வச. 3-5).
