வகை  |  odb

மன்னிப்பதில் வெற்றி காண்பது

ராஜன், போதைப்பொருள்கள் மற்றும் பாலியல் பாவத்துடன் போராடியதால், வாழ்க்கையில் நம்பிக்கையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். தன் நெருங்கிய உறவுகளும் சீர்குலைந்ததால் அவர் மனசாட்சி அவரை கஷ்டப்படுத்திக்கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட கஷ்டங்கள் மத்தியில் தன்னை அறியாமலே ஒரு போதகரிடம் இவைகளை குறித்து பகிர்ந்தார். அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. தேவ இரக்கத்தையும், மன்னிப்பையும் அந்த போதகர் சொல்ல கேட்கும்போது அவர் துயரமெல்லாம் நீங்கிற்று.

தாவீது தன் மோசமான தந்திரத்தின் மூலமாக ஒரு பெண்ணின் கணவனை கொன்று தன்  பாவத்தை அதிகரித்தான் (2 சாமு. 11-12). அதை உணர்ந்தபோது சங்கீதம் 32 எழுதினான் என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவங்களினால் அவனுடைய பாவங்கள் அவன் மனசாட்சியை வருத்தியது (சங். 32:3,4). அவன் செய்த பாவத்தின் அசிங்கத்தையும் அதினால் அவன் அனுபவித்த ஆழ்ந்த போராட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் மூடப்பட்ட பாவத்தினால் நமக்கு விடுதலை இல்லை என்பதே. மெய்யான விடுதலை தேவனிடம் அறிக்கையிட்டு அவர்  மன்னிப்பை ஏற்றுக்கொள்வது (வச. 5)

நம் மற்றவர்களுக்கோ, அல்லது நமக்கோ பாவம் செய்வோமானால் தேவனுடைய இரக்கமே நம் விடுதலைக்கு ஆரம்பம். நம் பாவ உணர்ச்சி நமக்கு அவர் மூலமாய் நிரந்தரமல்ல. அதனால் நாமும் சங்கீதக்காரனோடு இப்பாடலை சேர்ந்து பாடுவோம் "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்" (வச. 1)  நம் பாவத்தை உணர்ந்தவுடன் அரவணைக்கும் கரங்களுடன் நம்மை எதிர்பார்க்கும் தேவனிடம் செல்வோம்.

நம் பங்கை செய்வது

என்னுடைய பேத்திகள் இருவரும் தங்கள் பள்ளியில் "ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்" என்கிற நாடகத்தில் நடிப்பதின் நிமித்தம் மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள். இருவரின் நோக்கமெல்லாம் அதின் கதாநாயகியான ஆலிஸாக நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் நாடகத்தில் ஓரமாக பூக்களாக நிற்கும்படியாக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இருப்பினும் இருவரும் தங்கள் தோழிக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர்களுடைய நண்பர்களுக்காக சந்தோஷப்படுவதிலும் அதில் மற்றவர்களிடம் பகிருவதிலும் மிகவும் ஆனந்தமடைந்தார்கள்.

சபையான சரீரத்தில் நாம் மற்றவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. ஒவ்வொரு சபையிலும் முக்கிய அங்கத்தினராக நியமிக்கப்பட்ட சிலர் உண்டு. ஆனால் அந்த சபைக்கும் பூக்களாய் சிறிய மற்றும் முக்கியமான பங்கை செய்பவர்கள் மிகவும் அவசியமாக தேவை. நமக்கு பிடித்த பங்கு மற்றவர்களுக்கு கிடைத்தால் அவர்களை ஊக்குவித்து, நமக்கு தேவன் தந்த பங்கை ஆர்வத்துடன் நிறைவேற்றுவோம்.

மற்றவர்களை ஊக்குவித்து உதவிசெய்வதும் தேவன் மேல் அன்பு செலுத்தும்  ஒரு வழி. எபிரெயர் 6:10ல் சொல்வது போல் "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே". தேவன் தந்த எந்த பரிசும் மிகவும் முக்கியமானது: "அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்" (1 பேது. 4:10).

சபையாக மற்றவர்களை ஊக்குவிப்பதிலும், தேவன் அருளிய வரத்தின்படி அவரவர் தன் வேலையை விடாமுயற்சியுடன் செய்யும் ஒரு சபையை சற்று நினைத்துப் பாருங்கள். அதுவே மிகவும் சந்தோஷம் நிறைந்ததாகவும், உற்சாகமூட்டும் சபையாக இருக்கும்.

மக்கள் மறந்துவிடுவார்கள்

ஒரு பெண்  தன் போதகரிடம் சென்று "ஏன் எப்போதும் ஒரே காரியத்தை குறித்து உபதேசம் செய்து வருகிறார்?" என்று கேட்டாள். அதற்க்கு அவர் "மக்கள் மறந்துவிடுவார்கள்" என்று பதிலளித்தார் .

நாம் மறப்பதற்கு அநேக காரணங்கள் உண்டு - காலம் கடந்துபோவதினால், வயதாகுவதினால், அல்லது அதிக வேலைநிமித்தமாக கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக மற்றவர்களின் பெயர், தேதிகள், முக்கியமான சில தகவல்கள் என்று பல உண்டு. எனது கணவர் அடிக்கடி சொல்வதுண்டு "புதிதாக ஒன்றை நியாபகம் வைத்துகொள்ள வேண்டுமானால், பழையதை ஒன்றை மனதிலிருந்து எடுத்துப்போட வேண்டியதாய் இருக்கிறது".

அந்த போதகர் சொன்னது சரிதான் "ஜனங்கள் மறந்துவிடுவார்கள்". முக்கியமாக தேவன் நமக்கு செய்த காரியங்களை இஸ்ரவேல் மக்களை போல நாமும் மறந்து விடுகிறோம். தேவன் அவர்களுக்கு செய்த பல அற்புதங்களை கண்டும், காலப்போக்கில் தேவன் அவர்களுக்கு அதை நினைவுபடுத்த வேண்டியதாய் இருந்தது. உபாகமம் 8ல் தேவன் அவர்களை தனிமைப்படுத்தி தங்களை பாதுகாத்து வந்ததினால் முழுமையாய் அவரில் சார்ந்திருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. வனாந்தரத்தில் அவர்களை பசியினால் சோதித்து மன்னாவை தந்து, அவர்களின் வஸ்திரங்கள் பழையதாய் போகாதபடிக்கு, சர்பங்களுக்கும் தேள்களுக்கும் தப்புவித்து, பாறையிலிருந்து தண்ணீர் தந்தது என அவர் செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த அதிகாரத்தில் அவர் நினைவுபடுத்தினார்.

தேவனுடைய "உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது" (சங். 100:5) . நம் இனி மறக்கும் சூழ்நிலையில் காணப்பட்டால் இதுவரை அவர் நம் ஜெபங்களுக்கு பதிலளித்ததை நினைவு கூறுவோம். அது  முழுமையாக அவர் நமக்களித்த நன்மைகளையும், வாக்குத்தத்தங்களையும் நினைவுபடுத்தும். 

முடிவுகளை தேவனிடம் விட்டு விடுங்கள்

சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கல்லூரியின் கால்பந்து வீரர்களுக்கு இயேசுவைபற்றி பிரசங்கிக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் பொதுவாக கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவர்கள் என்று அனைவரும் அறிவார்கள்.  அதின் நிமித்தமாக கூட எனது நண்பரையும் அழைத்து சென்றேன். நான் அங்கு அழைக்கப்பட்ட நாளிலே அவர்கள் தங்கள் கோப்பையை வென்ற நாளாக இருந்தது. அதினால் நாங்கள் கூடியிருந்த அறை முழுவதும் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்திருந்தது. இதன் நடுவில் மாணவ தலைவன் எழுந்து " கடவுளைக்குறித்து இருவர் உங்களிடம் பகிரும்படி வந்திருக்கிறார்கள்" என்று அறிமுகப்படுத்தினார்.

நடுக்கத்துடன் எழுந்துபோய் தேவ அன்பை குறித்து பகிர துடங்கினேன். மெய்மறந்த ஆர்வத்துடன் அனைவரும் கவனித்தார்கள். முடிவில் சில வெளிப்படையான நேரடி கேள்விகள் என்னிடம் கேட்டார்கள்.நாளடைவில் அங்கு வேதபாடம் நடத்தும்படி தேவன் எங்களை வழிநடத்தினார். அதினிமாதமாக பலர் அங்கு இரட்சிக்கப்பட்டார்கள்.

இதைக்குறித்து நினைக்கும்போது "சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்" (லூக். 10:18) என்கிற வசனம் நினைவுக்கு வந்தது. சமயங்களில் நான் முகம் குப்புற விழுந்து தேவனை அவ்வாறு பணிந்து கொண்டேன்.

லூக்கா 10-ஆம் அதிகாரத்தில், சீஷர்கள் தங்கள் ஊழிய பனியின் சாதனைகளை குறித்து இயேசுவிடம் வந்து அறிக்கையிட்டார்கள். அவர்கள் முழுமையாக பல ஆத்துமாக்கள் ராஜ்யத்தின் ரகசியத்தை  அறிந்தார்கள், பல அசுத்த ஆவிகள் துரத்தப்பட்டது, நோய்கள் குணமாக்கப்பட்டது. ஆனால் இவைகளை இயேசுவிடம் அவர்கள் சொல்லும்போது இதற்கு மாறாக பதிலளித்தார் "ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்" (வச. 20).

நாமும் சமயத்தில் வெற்றியினால் சந்தோஷப்பட்டு தோல்வியினால் மனங்கசந்து போகிறோம். தேவன் நமக்கென்று நியமித்த பணியை தொடர்ந்து செய்து அதன் முடிவை அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். உங்கள் பெயர் அவர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.