வகை  |  odb

சிற்றலை விளைவு

ஆப்பிரிக்காவின் கானாவில் உள்ள சிறிய வேதாகம பள்ளி ஒன்று மிகவும் சாதாரணமான ஒரு சிறிய கட்டிடத்தில் மிகவும் குறைந்த மாணவர்களுடன் இயங்கி வந்தது. இருப்பினும் பாப் ஹேய்ஸ் அந்த மாணவர்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார்.அந்த மாணவர்கள் தயங்கினாலும் அவர்களுக்கு தலைமைத்துவ பணிகளும் பிரசங்கித்து கற்றுத்தரும் பணிகளையும் ஆர்களிடத்தில் ஒப்புவித்து ஊக்கப்படுத்தினார். பாப் இறந்து பல வருடங்களுக்கு பிறகு கானா முழுவதும் ஆங்காங்கே டஜன் கணக்குகளில் திருச்சபைகளும் பள்ளிக்கூடங்களும் இன்னும் கூடுதலாக இரண்டு வேதாகம நிறுவனங்களும் எழும்பின- அனைத்தும் அந்த சிறிய வேதாகம பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் துவங்கியவை.

அர்தசஷ்டா ராஜா (கி மு 465 -424) அரசாண்ட சமயத்தில் எழுத்தாளரான எஸ்ரா நாடுகடத்தப்பட்ட யூதர்களை மறுபடியும் எருசலேமுக்கு திரும்பி செல்ல ஒன்றிணைத்தார். தேவாலயத்தில் ஆசிரியர்களாக பணியாற்ற லேவியர்களை தேடினார் ஆனால் அங்கு ஒருவரும் காணப்படவில்லை (எஸ்ரா 8:15). உடனடியாக அங்கிருந்த தலைவர்களை வரவழைத்து தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை அழைத்துவரும்படி அவர்களை நியமித்து (வச 17) அவர்களை உபவாசத்திலும் ஜெபத்திலும் வழிநடத்தினார் (வச 21)

எஸ்ரா என்பதற்கு “உதவியாளன்” என்று அர்த்தம்- நல்ல தலைமைத்துவத்தில் இருக்கும் ஒரு குணநலன் அது. எஸ்ராவின் ஜெபத்துடன் கூடிய வழிநடத்துதலினால் அவரும் அவரோடு இருந்தவர்களும் எருசலேமை ஆவிக்குரிய விழிப்புணர்வுக்குள் வழி நடத்தினார்கள் (எஸ்ரா9-10). புத்தியுள்ள வழி நடத்துதலும் சிறிய அளவு உற்சாகமும் மட்டுமே அவர்களுக்கு தேவைப்பட்டது.

இப்படித்தான் தேவ சபையும் இயங்குகிறது. நம்மை உற்சாகப்படுத்தி கட்டியெழுப்ப உதவிய நல்ல வழிகாட்டிகளை போல நாமும் மற்றவர்களுக்கு செய்ய கற்றுக் கொள்கிறோம். நம் வாழ்நாள் முடிந்த பின்னும் அவை நிலைத்திருக்கும். பயபக்தியோடு தேவனுக்கு செய்யும் வேலை நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

அனைத்தையும் அர்ப்பணித்தல்

கலைத் துறையில் பிரசித்தி பெற்ற இரண்டு நபர்கள் தேவன் தங்களை அழைத்தார் என்று விசுவாசித்து தங்கள் தொழில்களை விட்டு விட்டு இயேசுவுக்கு சேவை செய்ய தங்களை அர்ப்பணித்தார்கள். சீனாவின் லிசு இன மக்களுக்கு சேவை செய்ய இங்கிலாந்தில் நடக்கும் கச்சேரிகளில் பியானோ வாசிப்பதை ஜேம்ஸ் ஓ ஃபிரசர்-ம் (1886-1938), சுவிசேஷகராக கலைத்துறையில் கிடைத்த வாய்ப்பை அமெரிக்கரான ஜட்சன் வான் டெவெண்டேர்-ம் துறந்தனர். பின்னர் மிகவும் பிரபலமான “இயேசுவுக்கே ஒப்புவித்தேன்” என்ற பாமாலையை எழுதினார்.

கலைத் துறையில் இருக்கும் அநேகரை தேவன் அழைத்துக் கொண்டிருக்கும் போது இந்த இரு மனிதர்களும் கீழ்ப்படிந்து ஒன்றை பின்பற்றும்படி மற்ற ஒன்றைக் கைவிட்டார்கள். ஒரு வேளை இயேசு, மாற்கு 10:17-25ல் இருக்கும் வாலிப ஐஸ்வரியவானுக்கு கொடுக்கும் அறிவுரையை பார்த்து இவர்களும் ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம். அந்த பரிமாற்றத்தை பார்த்த பேதுரு “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே!” என்று கூறினார் (வச 8). தேவனை பின்பற்றுகிறவர்களுக்கு நித்தியத்தில் இதைவிட “நூறத்தனையாக”வும் நித்திய ஜீவனும் உண்டு என்று இயேசு உறுதியளிக்கிறார். ஆனால் அவருடைய ஞானத்தின் படி “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச 31)

தேவன் நம்மை எங்கே வைத்திருந்தாலும் அனுதினமும் நம் வாழ்வை அவருக்கென்று அர்ப்பணிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். நமது வேலை பார்க்கும் அலுவலகமாக இருந்தாலும் அல்லது வீட்டில் இருந்து வெகு தூரமாக இருந்தாலும் அவருடைய கனிவான அழைப்பிற்கு கீழ்ப்படிந்து நமக்கு தந்த தாலந்துகளையும் வளங்களையும் வைத்து அவரை பின்பற்றும் போது நாம் மற்றவர்களை நேசிக்கவும் அவர்களின் தேவைகளையும் அறியவும் தேவன் நமக்கு உதவுவார்.

ஆழமான இடங்கள்

19-ஆம் நூற்றாண்டில் நடந்த அரசியல் மற்றும் சமூக எழுச்சியின் காலத்தில் வாழ்ந்த கவிஞரும் நாவலாசிரியருமான விக்டர் ஹியூகோ (1802-1885) அவர் எழுதிய “லே மிசரபிள்ஸ்” (Les Miserables) என்ற புத்தகத்திற்கு பிரசித்தி பெற்றவர். ஒரு நூற்றாண்டு கழித்து இசை தழுவிய படமாக எடுக்கப்பட்டு மிகவும் பிரபலமான திரைப்படமாக கருதப்படுகின்றது. அனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. ஹியூகோ கூறின படி “சொற்களால் விவரிக்க முடியாததை இசை வெளிப்படுத்துகிறது மற்றும் அதை குறித்து சொல்லாமலும் இருக்க முடியாது”.
சங்கீதக்காரர்களும் அதை ஒப்புக்கொள்வார்கள். சங்கேத புத்தகத்தில் உள்ள அணைத்து பாடல்களும் ஜெபங்களும் நம் வாழ்வில் தவிர்க்க முடியடா வலிகளையும் கஷ்டங்களையும் பிரதிபலிக்கின்றது. அதன் வார்த்தைகள் நம்மால் அணுக முடியாத இடங்களுக்குள் சென்று நம்கி ஆறுதல் அளிக்கின்றது. எடுத்துக்காட்டாக சங்கீதம் 6:6ல் தாவீது “என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்” என்றுஅழுகிறார்.

வசனமாகிய சங்கீத பாடல்களில் அத்தகைய ஆழமான நேர்மையை கவர்ந்திருப்பது நம்மை நன்றாக ஊக்குவிப்பதாக இருக்கிறது. நமக்கு உதவும் படியும் ஆறுதல் அளிக்கும்படியும் அவர் ப்ரசன்னத்திற்குள்ளாக அழைக்கும் தேவனிடம் நம் பயன்களை கொண்டு வரும்படி அழைக்கிறது.

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை இசை வெளிப்படுத்தக்கூடும். அந்த உணர்ச்சியை நாம் பாடலாகவோ ஜெபமாகவோ அல்லது அழுகையாகவோ வெளிப்படுத்தும் போது நம்மால் அடைய முடியாத ஆழமான இடங்களில் தேவன் தம் வார்த்தைகளால் நம் இருதயத்தில் சமாதானம் தருகிறார்.

சொல்லுவதற்கு ஓடுதல்

நவீன கால மாரத்தான் ஓட்டப்பந்தயமானது பூர்வ கால கிரேக்க ராஜ்ஜியத்தில் தூது செய்தி கொண்டு சென்ற ஃபிடிப்பைடஸ்-ன் அடிப்படையாக கொண்டது. புராண வரலாற்றின்படி, கி மு 490-ஆம் வருடம், படையெடுத்து வந்த பெர்சியர்களை எதிர்த்து வென்ற கிரேக்கர்களின் வெற்றியை அறிவிப்பதற்கு மாரத்தானில் இருந்து ஏதென்ஸ் வரை ஃபிடிப்பைடஸ் சுமார் 40 கி மீ ஓடினார். இன்றைய மாரத்தான் போட்டிகள் ஒரு தடகள பொடியாக தனிப்பட்ட திருப்திக்கு ஓடப்படுகிறது. ஆனால் ஃபிடிப்பைடஸ்-க்கு ஒரு பெரிதான நோக்கம் இருந்தது. அவரு எடுத்து வாய்த்த ஒவ்வொரு அடியும் தன தேசத்தினருக்கு சந்தோஷமளிக்கும் நற்செய்தியை தருவதாக இருந்தது .

அதே போல் 500 வருடங்களுக்கு பிறகு, இரு பெண்களும் நற்செய்தியை அறிவிக்க ஓடினார்கள்- வரலாற்றின் மிக முக்கியமான செய்தி. மரியாளும் மகதலேனா மரியாளும் இயேசுவை அடக்கம் பண்ண கல்லறை வெறுமையாக இருந்ததை பார்த்த போது தேவதூதர் ஒருவர் வந்து அவர்களிடம் இயேசுவை பற்றி “சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்” என்று கூறினான். “அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும்” வேகமாக ஓடிச்சென்று சீஷர்களிடம் கூறினார்கள்.

நாமும் அதே ஆனந்த சந்தோஷத்துடன் உயிர்த்தெழுந்த இயேசுவை குறித்து மற்றவர்களிடம் பகிர ஊக்குவிக்கப் படுவோமாக. அதை பகிர நாம் தூரம் ஓட வேண்டும் என்று அவசியம் இல்லை. நம்மருகே வசிக்கும் நண்பர்களிடம் இதை நற்சிதேஹியை பகிர்ந்தாலே போதும் மரணத்தை வென்ற ஆருடன் நாமும் வெற்றியுடன் வாழ மற்றவர்களுடன் பகிர்வோம்.

சிறிய மீன்

சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த ஒரு தம்பதியினருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தங்கள் ஊரிலே வசித்து வந்தார். அநேக முறை இயேசுவின் அன்பைக் குறித்து அவருக்கு பகிர்ந்து வந்தனர். அவரின் இரட்சிப்பையும் குறித்து அவருக்கு அறிவித்து வந்தனர். இப்படிப்பட்ட மிகப் பெரிய உண்மையை உணர்ந்தும் தம் வாழ்க்கையை வேறொரு மதத்தின் நிமித்தம் விசுவாசத்திற்கு தம்மை ஒப்புக்கொடுக்க தயங்கினார். சிறிதளவு அவர் பண ரீதியாகவும் யோசித்தார். தாம் வழிபடும் மதத்தின் ஒரு தலைவராக இருந்தபடியால் பணப்பற்றாக்குறை தயக்கமும் அவர் மத சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் மரியாதை விடும் என்ற பயமும் இருந்தது.

வருத்தத்துடன் அந்த தம்பதியினிரடம் “ஓடுகிற நதியில் கைகளைக் கொண்டு மீன் பிடிப்பவனைப் போல் இருக்கிறேன். சிறிய மீன் ஒன்றை பிடித்து விட்டிட்டேன், ஆனால் பெரிய மீன் ஒன்று போவதைப் பார்க்கிறேன். அந்த பெரிய மீனை பிடிப்பதற்கு இந்த சிறிய மீனை நான் விட வேண்டியதாய் இருக்கிறது.!”

மத்தேயு 19-ல் இருக்கும் அந்த பணக்கார வாலிபனும் இதே போல் ஒரு சூழ்நிலையில் தான் காணப்பட்டான். இயேசுவிடம் வந்து “நித்திய ஜீவனை பெற நான் என்ன செய்ய வேண்டும்?” (வச 16) என்று கேட்க்கும்போது ஆர்வத்துடன் கேட்பது போல் இருந்தாலும் தன ஜீவனை முழுமையாக இயேசுவிடம் ஒப்படைக்க மனதில்லை. அவன் பணத்தில் மாத்திரம் ஐஸ்வர்யாவானாக இருக்கவில்லை, தம் வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் மிகவும் பெருமை உடையவனாய் இருந்தான்.நித்திய ஜீவனை அடைய வாஞ்சித்தாலும், இயேசுவை வெறுத்து மற்றவைகளை நேசித்தவனாக காணப்பட்டான்.

தாழ்மையுடன் நம் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்து, அவர் நமக்களித்த இலவச இரட்சிப்பை ஏற்றுக்கொண்டால், “என்னை பின்பற்றி வா” என்று அழைக்கிறார்.