ஒரு பலமான இதயம்
பிலிப் யான்சியுடன் இணைந்து எழுதியுள்ள தனது பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டு புத்தகத்தில் டாக்டர் பால் பிராண்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ஓசனிச்சிட்டின் இதயம் இரத்தாலின் (அவுன்ஸ்) எடையைக் கொண்டு ஒரு நிமிடத்திற்கு எண்ணூறு முறை துடிக்கிறது; ஒரு நீல திமிங்கலத்தின் இதயம் அரை டன் எடையுடையது, நிமிடத்திற்கு பத்து முறை மட்டுமே துடிக்கிறது, அதை இரண்டு மைல் தொலைவிலேயே கேட்க முடியும். இவ்விரண்டிற்கும் மாறாக, மனித இதயமானது மந்தமாக செயல்படுவதுபோல தோன்றுகிறது, ஆனாலும் அது தனது வேலையைச் சரியாகச் செய்கிறது ஒரு நாளைக்கு 1,00,000 முறை [ஒரு நிமிடத்திற்கு 65-70 முறை] ஓய்வெடுக்க நேரமில்லாமல் துடித்து, நம்மில் பெரும்பாலோரைப் எழுபது ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் வரை கொண்டு செல்கிறது.
ஆச்சரியமான இந்த இதயம் வாழ்க்கையின் ஊடே நிறைவுக்கு நம்மை பெலப்படுத்தி கொண்டுசேர்க்கிறது. இது நமது ஒட்டுமொத்த உள்ளான நல்வாழ்விற்கு ஒரு உருவகமாக மாறியுள்ளது. ஆனாலும், நம்முடைய உண்மையான இருதயமும் சரி உருவக இருதயமும் சரி இரண்டுமே தோல்விக்கு ஆளாகின்றன. நம்மால் என்ன செய்ய முடியும்?
இஸ்ரவேலின் ஆராதனைத் தலைவரான சங்கீதக்காரனாகிய ஆசாப் 73-ஆம் சங்கீதத்தில் உண்மையான வலிமை வேறெங்கிருந்தோ - வேறுயாரிடம் இருந்தோ - வழிகளிலோ வருகிறது என்பதை ஒப்புக் கொண்டார். “என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” (வ. 26) என்று எழுதுகிறார். ஆசாப் சொன்னது சரிதான். ஜீவனுள்ள தேவன் நம்முடைய இறுதி மற்றும் நித்திய பெலனானவர். வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்ற முறையில் தேவனுடைய பரிபூரண வல்லமைகளுக்கு அத்தகைய வரம்புகள் எதுவும் கிடையாது என்று அவருக்குத் தெரியாது.
நம்முடைய கடினமான மற்றும் சவாலான காலங்களில் ஆசாப் தனது சொந்த போராட்டங்களின் மூலம் கற்றுக்கொண்டதைக் கண்டறிவோம். தேவனே நம் இருதயங்களின் உண்மையான பெலன். நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய பெலனில் ஓய்வெடுக்க முடியும்.

அக்கறையான கடிதங்கள்
பல தசாப்தங்களுக்கு முன்னர் டாக்டர் ஜெர்ரி மோட்டோ அக்கறையான கடிதங்களின் வல்லமையைக் கண்டறிந்தார். முன்னர் தற்கொலைக்கு முயன்று மீண்ட நோயாளிகளுக்கு அக்கறையை வெளிப்படுத்தும் கடிதத்தை அனுப்புவது மீண்டும் அவர்கள் தற்கொலையில் ஈடுபடும் வீதத்தை பாதியாகக் குறைத்துள்ளது என்று அவரது ஆராய்ச்சி கண்டறிந்தது. சமீபத்தில், கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு, தொடர் சிகிச்சையாக “அக்கறையுள்ள” உரைகள், அஞ்சல் அட்டைகள் மற்றும் சமூகஊடக மீம்களை, மருத்துவ சேவை அளிப்போர் அனுப்பும்போது, இந்த வல்லமையை மீண்டும் கண்டறிந்தனர்.
வேதத்தில் இருபத்தொரு “புத்தகங்கள்” உண்மையில் கடிதங்கள்-நிருபங்கள்-பல்வேறு காரணங்களால் பாடநுபவித்த முதல் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு அக்கறையுடன் எழுதப்பட்டவை. பவுல், யாக்கோபு மற்றும் யோவான் விசுவாசம் மற்றும் ஆராதனையின் அடிப்படைகளை விளக்கவும், எவ்வாறு பேதங்களைக் களைவது மற்றும் ஒற்றுமையைக் கட்டமைப்பது என்பதையும் விளக்கவும் கடிதங்களை எழுதினர்.
ஆயினும், அப்போஸ்தலனாகிய பேதுரு இவைகளை குறிப்பாக ரோமானிய பேரரசரான நீரோவால் துன்புறுத்தப்பட்ட விசுவாசிகளுக்கு எழுதினார். தேவன் அவர்கள் மேல்கொண்டிருந்த உள்ளான மதிப்பை அவர்களுக்கு பேதுரு நினைப்பூட்டினார். 1 பேதுரு 2: 9-ல் அவர்களை இவ்விதமாய் விவரிக்கிறார், “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”
நம்முடைய பெரிய தேவன் தாமே நமக்கு அக்கறையுள்ள கடிதங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் - ஏவப்பட்ட வேதாகமம் - தன்னுடைய சொந்தமாக அவர் நம்மை தெரிந்துகொண்டதை பற்றிய பதிவு நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். அவருடைய கடிதங்களை நாம் தினமும் படித்து, இயேசு அளிக்கும் நம்பிக்கையை தேவைப்படும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக.

பயத்தின் புயல்கள்
சமீபத்தில் நான் பார்த்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில், ஒரு பெண் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவரிடம் “மாற்கு, நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார், “பயத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காத என்னை நான் தேடுகிறேன்”, என்று, தொலைக்காட்சியில் அவர் என்ன பார்க்க விரும்புகிறார் என்பதை தான் அவள் கேட்கிறாள் என்பதை உணராமல், அவர் நிதானமாக பதிலளித்தார்.
ஆஹா! நான் ஆச்சரியப்பட்டேன். ஒரு தொலைக்காட்சி விளம்பரம் என்னை இவ்வளவு ஆழமாக தாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை! ஆனால் என்னால் மாற்குடன் என்னை தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது: பயம் என் வாழ்க்கையை வழிநடத்துவதைப் போல சில நேரங்களில் தோன்றும்போது, சில சமயங்களில் நானும் சங்கடப்படுகிறேன்.
இயேசுவின் சீஷர்களும் பயத்தின் பலத்த வல்லமையை அனுபவித்தார்கள். ஒருமுறை அவர்கள் கலிலேயா கடலைக் கடக்கமுற்படும்போது (மாற்கு 4:35), “பலத்த சுழல்காற்று உண்டாகி படவு நிரம்பத்தக்கதாக அலைகள் அதின்மேல் மோதிற்று” (வ. 37), பயங்கரம் அவர்களைப் பிடித்தது, (நித்திரையிலிருக்கும்) இயேசு அவர்களைப்பற்றி கவலைப்படமாட்டார் என்றெண்ணி அவருக்கே அறிவுரை கூறினர்: “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?” என்றார்கள்.
பயம் சீஷர்களின் பார்வையை மழுங்கடித்தது, அவர்களுக்கான இயேசுவின் நல்ல நோக்கங்களை காணக்கூடாதபடி அவர்களுடைய கண்களை குருடாக்கியது, அவர் காற்றையும் அலைகளையும் அதட்டிய பிறகு (வ. 39), கிறிஸ்து சீஷர்களிடம் ஊடுருவும் இரண்டு கேள்விகளை முன்வைத்தார். ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று? (வ. 40).
நம் வாழ்க்கையிலும் புயல்கள் தாக்குகிறது அல்லவா? ஆனாலும் இயேசுவின் கேள்விகள் நம் பயத்தை சரியான கண்ணோட்டத்துடன் அணுகச்செய்கிறது. அவருடைய முதல் கேள்வி நம் பயங்களை குறிப்பிட செய்கிறது. இரண்டாவது சிதைந்தபோன அந்த உணர்வுகளை அவரிடம் ஒப்படைக்க அழைக்கிறது - வாழ்க்கையின் மிக மோசமான புயல்களிலிருந்தும் அவர் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைக் கண்கள் காண அவரிடம் கேட்பது.

தேவனின் கதைப்புத்தகம்
அழகான நாளை அனுபவிக்க விரும்பிய நான், நடந்துவிட்டு வரலாம் என வெளியே புறப்பட்டேன் விரைவில் ஒரு புதிய அண்டை வீட்டாரை சந்தித்தேன். அவர் என்னை இடைநிறுத்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: “என் பெயர் ஆதியாகமம் எனக்கு ஆறரை வயது” என்றான்.
“ஆதியாகமம் ஒரு உயரிய பெயர்! இது வேதாகமத்தில் உள்ள ஒரு புத்தகம்” என்று நான் பதிலளித்தேன்.
“வேதாகமம் என்றால் என்ன?” என்று அவன் கேட்டான்.
"அவர் எப்படி உலகத்தையும் மக்களையும் எவ்வாறு சிருஷ்டித்தார் மற்றும் அவர் நம்மை எப்படி நேசிக்கிறார் என்பவற்றைப் பற்றிய தேவனின் கதைப்புத்தகம் இது."
அவனது வினோதமான மறு மொழி என்னைப் புன்னகைக்க செய்தது: “அவர் ஏன் உலகத்தையும் மக்களையும் கார்களையும் வீடுகளையும் உருவாக்கினார்? என் படம் அவருடைய புத்தகத்தில் உள்ளதா?”
என் புதிய நண்பர் ஆதியாகமம் அல்லது நம் அனைவரின் உண்மையான நிழற்படம் வேதாகமத்தில் இல்லையென்றாலும் தேவனுடைய கதைப்புத்தகத்தில் நாம் பெரும்பங்காவோம். ஆதியாகமம் 1-ல், “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்” (வ. 27) என்பதை கண்டோம். தேவன் அவர்களுடன் தோட்டத்தில் உலாவினார், பின்னர் தாங்களே தங்கள் சொந்த தேவனாக இருக்க வேண்டும் என்ற சோதனைக்குட்படுவதை குறித்து எச்சரித்தார் (அதி. 3). அவருடைய குமாரனாகிய இயேசு, அன்புள்ளவராய், எப்படி மீண்டும் நம்முடன் உலாவ வந்தார் மற்றும் நம்முடைய பாவமன்னிப்பிற்கான மற்றும் அவருடைய படைப்பின் மீட்பிற்கான திட்டத்தை எவ்வாறு கொண்டு வந்து செயல்படுத்தினார் என்பதைப் பற்றி தேவன் பின்னர் அவருடைய புத்தகத்தில் கூறியுள்ளார்.
நாம் வேதத்தைப் பார்க்கும்போது, நாம் அவரை அறிந்து கொள்ளவும், அவருடன் பேசவும், நம்முடைய கேள்விகளை அவரிடம் கேட்கவும் நம்முடைய சிருஷ்டிகர் விரும்புகிறார் என்பதை அறிகிறோம். நாம் நினைப்பதை விடவும் அவர் நம்மீது அதீத அக்கறை கொண்டுள்ளார்.

ஒவ்வொரு சுவாசமும்
டீ அண் தனது தசைகள் அனைத்தையும் பலவீனப்படுத்தி கிட்டத்தட்ட அவரைக் கொன்றுகொண்டிருந்த, ஒரு அரிய தன்னுடல் தாக்கும் நோயால் பாதிக்கப்பட்டபோது, தன்னால் சுவாசிக்க முடிவதே ஒரு பரிசு என்பதை அவர் உணர்ந்தார். அவரது சிகிச்சையின் வேதனையான பகுதியானது என்னவெனில், ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு கருவி ஒவ்வொரு சில விநாடிகளிலும் ஒருமுறை அவரது நுரையீரலில் காற்றை செலுத்த வேண்டியதாயிருந்தது.
டீ அண் அற்புதவிதமாக மீண்டார். வாழ்க்கையின் பிரச்சனைகளை குறித்து புலம்பிக்கொண்டிருக்க கூடாது என்று தனக்குத் தானே நினைப்பூட்டுகிறார். “நான் நன்றாக சுவாசித்து” அதை செய்யமுடிவதால் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்”. என்று கூறுகிறார்.
சில சமயங்களில் வாழ்க்கையின் மிகச்சிறிய காரியங்களும் மிகப் பெரிய அற்புதங்களாக இருக்கலாம் என்பதை மறந்து, நமக்குத் தேவையான அல்லது நாம் விரும்பும் காரியங்களில் கவனம் செலுத்துவது எவ்வளவு எளிதானது. எசேக்கியாவின் தரிசனத்தில்(எசேக்கியேல் 37:1-14), தன்னால் மட்டுமே உலர்ந்த எலும்புகளுக்கும் உயிரைக் கொடுக்க முடியும் என்று தேவன் தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தி காண்பித்தார். அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது (வ. 8) தேவன் அவைகளுக்கு ஆவியை கொடுத்தால் மட்டுமே அவைகளால் உயிர்பெற முடியும் (10).
இந்த தரிசனம் இஸ்ரேலை பேரழிவிலிருந்து மீட்டெடுக்க தேவன் அளித்த வாக்குத்தத்தை விளக்குகிறது. தேவன் எனக்கு சுவாசத்தை தரவில்லையெனில், பெரியதோ அல்லது சிறியதோ என்னிடம் உள்ள எதுவும் பயனற்றது என்பதை இது நினைவூட்டுகிறது.
இன்றைய வாழ்க்கையின் எளிமையான ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்வீர்களா? தினசரி போராட்டத்தின் மத்தியில், அவ்வவ்போது நின்று, ஓய்ந்து, “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக” (சங்கீதம் 150: 6).