தேவனுடைய உறுதி

அவர் சொல்லியிருக்கிறாரே... அதினாலே நாம் தைரியங் கொண்டு... எபிரெயர் 13:5-6
என் உறுதி, தேவன் எனக்கு அளித்த உறுதியில் கட்டப்படவேண்டும் தேவன் சொல்கிறார்,” நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை”,…
தைரியத்துடன் நில்லுங்கள்

பலங்கொண்டு திடமனதாயிருங்கள்…நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம். உபாகமம் 31:6, 8
அநேக ஜெர்மானிய சபை தலைவர்கள் ஹிட்லரின் அடக்குமுறைக்கு அடங்கிவிட்டனர். ஆனால் இறையியலாளரும் போதகரும் ஆன மார்டின்…
தைரியத்தை தரித்துக் கொள்ளுங்கள்

நான் தேவனுடைய மனுஷன் ஆனால் அக்கினி வானத்திலிருந்து இறங்கட்டும். 2 இராஜாக்கள் 1:10
நற்செய்திக்கு மூடப்பட்ட ஒரு நாட்டில் ஆன்ட்ரூ வாழ்கிறார். அவரிடம் உங்கள் விசுவாசத்தை எப்படி…
தைரியத்திற்கான அழைப்பு

நீ பலங்கொண்டு தைரியமாயிரு. 1 நாளாகமம் 28:20
லண்டனின் பார்லிமென்ட் ஸ்கொயரில் காட்சியில் உள்ள ஆண் சிலைகள் (நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், மகாத்மா காந்தி மற்றும்…
அசாதாரண தைரியம்

என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக் கொண்டு போம்; ராஜாவுக்கு அர்த்தத்தை தெரிவிப்பேன். தானியேல் 2:24.
1478 ல் லொரென்சோ டி. மெடிசி இத்தாலியின் புளோரன்ஸின் ஆட்சியாளர் தம் உயிருக்கு…
தைரியம் விமர்சனத்துக்கு உரியது

பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே கலங்காதே நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் (வச. 9). (யோசுவா 1:2-9)
நம்பிக்கையும் சாத்தியங்களும் உடைய இனிய பருவத்தில்…
தைரியத்துக்கான சோதனை

யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார் ! (வ.47). 1 சாமுவேல் 17 :32 -51
என் மகள் ஆழ்ந்த வலியை அனுபவித்த சில…

தேவனில் பலப்படுதல்
கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் புலிசிக், தன்னுடைய காலபந்தாட்ட வரலாற்றில் பல காயங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதின் விளைவாய் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டத்தின் வீரர்களின் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாது என்பதை அறிந்து அவர் ஏமாற்றமடைந்தார். ஆனால் தேவன் அவருக்கு தன்னை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதை விவரிக்கிறார். “எப்போதும் போல, நான் தேவனை சார்ந்திருக்கிறேன்; அவர் என்னை பெலப்படுத்துகிறார்; எப்போதும் என்னோடு ஒருவர் இருப்பதைப் போல நான் உணர்கிறேன். அந்த உணர்வில்லாமல் எந்த காரியத்தையும் என்னால் செய்ய முடியாது” என்று அவர் கூறுகிறார். ஆனால் அதே ஆட்டத்தில் மாற்றாட்டக்காரராய் களமிறங்கிய புலிசிக், அந்த ஆட்டத்தின் நாயகனாய் மாறினார். அவர் விளையாடிய அந்த ஆட்டத்தில் அவர் புத்திசாலித்தனமாய் நகர்த்திய பந்து அந்த விளையாட்டில் அவருடைய அணி வெற்றிபெறுவதற்கான முக்கிய திருப்பமாய் அமைந்து, அவரை அந்த விளையாட்டின் நாயகனாய் மாற்றியது. இந்த அனுபவமானது, நம்முடைய பலவீனங்கள் தேவன் தன்னுடைய அளவிட முடியாத வல்லமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாய் கருதலாம் என்னும் விலையேறப்பெற்ற பாடத்தை அவருக்கு கற்பித்தது.
பிரச்சனைகளை நாம் சந்திக்கும்போது, நம்முடைய சுயபெலத்தை சார்ந்துகொள்ளும்படிக்கு உலகம் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகளில் தேவனுடைய கிருபையும் வல்லமையும் நம்மை பெலப்படுத்துகிறது என்று வேதாகம ஞானம் நமக்கு போதிக்கிறது (2 கொரி. 12:9). ஆகையால் போராட்டங்களை நாம் தனித்து மேற்கொள்வதில்லை என்பதை அறிந்து விசுவாசத்தோடு முன்னேறுவோம். நம்முடைய பெலவீனங்கள் தேவனுடைய பெலனை விளங்கச்செய்யும் வாய்ப்புகளாய் தேவன் பயன்படுத்தி நம்மை பலப்படுத்துகிறார் (வச. 9-10). ஆகையால் நம்முடைய போராட்டங்களை தேவனை துதிக்கும் மற்றும் நன்றி செலுத்தும் வாய்ப்புகளாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு இந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் இந்த தெய்வீக அன்பின் மேன்மையை அனுபவிக்கக்கூடும்.