தேடி மீட்டெடு
சில நண்பர்கள் புயல் வானிலை முன்னறிவிப்பு மாறும் என்ற நம்பிக்கையில் ஆங்கிலக் கால்வாயில் படகு சவாரி செய்தனர். ஆனால் காற்று உயர்ந்தது, அலைகள் கொந்தளித்து, அவர்களின் கப்பலின் பாதுகாப்பை அச்சுறுத்தியது. எனவே அவர்கள் மீட்புக்குழுவின் (ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிடியூஷன்) உதவிக்கு வானொலி செய்தனர். சில பதட்டமான தருணங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் மீட்பவர்களை தூரத்தில் பார்த்தார்கள். அவர்கள் விரைவில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நிம்மதியுடன் உணர்ந்தனர். அதற்குப் பிறகு எனது நண்பர், “மக்கள் கடல் விதிகளை புறக்கணித்தாலும் இல்லாவிட்டாலும், மீட்புக்குழு அவர்களை காப்பாற்ற எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது” என்று பெருமையுடன் சொன்னார்.
அவர் அந்த கதையை விவரிக்கையில், தேவனுடைய தேடுதல் மற்றும் மீட்பு பணியை இயேசு எவ்வாறு வழிநடத்துகிறார் என்று நான் நினைத்தேன். நம்மில் ஒருவராக வாழ, மனிதனாக பூமிக்கு வந்தார். அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம்முடைய பாவமும் கீழ்ப்படியாமையும் தேவனிடமிருந்து நம்மைப் பிரித்தபோது அவர் நமக்கு ஒரு மீட்புத் திட்டத்தை வழங்கினார். கலாத்தியாவில் உள்ள தேவாலயத்திற்கு எழுதும் போது, பவுல் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்... அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி... நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:3-4). கலாத்தியர்களுக்கு இயேசுவின் மரணத்தின் மூலம் கிடைத்த புதிய வாழ்க்கையின் பரிசை பவுல் நினைவுபடுத்தினார். இதனால் அவர்கள் நாளுக்கு நாள் தேவனை கனப்படுத்துவார்கள்.
நம்மைக் காப்பாற்றிய இயேசு, நம்மைத் தொலைந்து போகாமல் காப்பாற்ற மனமுவந்து மரித்தார். அவர் அவ்வாறு செய்ததால், தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கு நித்திய வாழ்வு இருக்கிறது. மேலும் நன்றியுடன் நம் சமூகத்தில் உள்ளவர்களுடன் வாழ்வளிக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

பொறுப்பற்ற தன்மை மற்றும் கவனக்குறைவு
லிண்டிஸ்ஃபார்ன், பரிசுத்த தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்தில் உள்ள ஒரு அலை தீவு ஆகும். இது ஒரு குறுகிய சாலை மூலம் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை, தரைப்பாலத்தை கடல் மூடுகிறது. அதிக அலைகள் ஏற்படும்போது, அதைக் கடக்கும்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்துப் பலகைகள் பார்வையாளர்களை எச்சரிக்கின்றன. ஆயினும்கூட, சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை அலட்சியம் செய்வதால் பெரும்பாலும் நீரில் மூழ்கிய கார்களின் மேல் உட்கார்ந்து அல்லது அவர்கள் மீட்கப்படக்கூடிய உயர்ந்த பாதுகாப்பு குடிசைகளுக்கு நீந்தி தப்புகிறார்கள். சூரிய உதயத்தைக் கணிப்பதபோல, அலைகளின் வரவை கணிக்கமுடியும். எச்சரிக்கைகள் எல்லா இடங்களிலும் உள்ளன. நீங்கள் அவர்களை தவறவிட முடியாது. ஆயினும்கூட, ஒரு எழுத்தாளர் லிண்டிஸ்ஃபார்ன் “பொறுப்பற்றவர்கள் அலையை கடக்க முயற்சிக்கும் இடம்" என்று கூறுகிறார்.
“மூர்க்கங்கொண்டு துணிகரமாய்” இருப்பது மதியீனம் என்று நீதிமொழிகள் நமக்குச் சொல்கிறது (14:16). ஒரு பொறுப்பற்ற நபர் ஞானம் அல்லது புத்திசாலித்தனமான ஆலோசனையை சிறிதும் பொருட்படுத்துவதில்லை; மற்றவர்களிடம் கவனம் அல்லது விடாமுயற்சியுடன் அக்கறை காட்டுவதில்லை (வச. 7-8). எவ்வாறாயினும், ஞானம் நம்மைக் கேட்கவும் சிந்திக்கவும் தாமதப்படுத்துகிறது. இதனால் நாம் உணர்ச்சிவசப்படுவதில்லை அல்லது அரைகுறையான யோசனைகளால் (வச. 6). நல்ல கேள்விகளைக் கேட்கவும், நம் செயல்களின் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளவும் ஞானம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொறுப்பில்லாத பேதைகள் உறவுகளைப் பொருட்படுத்தாமல் சத்தியத்தை புறக்கணித்து நடக்கிறார்கள், “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” (வச. 15).
நாம் சில சமயங்களில் தீர்க்கமாகவோ அல்லது வேகமாகவோ செயல்பட வேண்டியிருக்கும் போது, நாம் பொறுப்பற்ற தன்மையை எதிர்க்கலாம். நாம் தேவனுடைய ஞானத்தைப் பெற்று பயிற்சி செய்யும்போது, நமக்கு அவசியப்படும் வேளைகளில் அவர் நம்மை வழிநடத்துவார் (வச. 15).

என்ன ஆச்சரியமான சிநேகிதன்!
எனக்கு விருப்பமான பக்கத்துவீட்டுக்காரர்களுடன் என் அம்மாவும் நட்பு போட்டியாளர்களாக வளர்ந்தனர். இருவரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போட்டியிட்டனர். அவர்கள் புதிதாகத் துவைத்த சலவைகளை முதலில் தங்கள் வெளிப்புற ஆடைகளில் தொங்கவிடுவார்கள். “அவள் என்னை மறுபடியும் ஜெயித்துவிட்டாள்!" என்று என் அம்மா சொல்வார். ஆனால் அடுத்த வாரம், எனது மாமா முதல் ஆளாய் இருந்த அவர்களின் போட்டியை ரசிப்பார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒருவருக்கொருவர் ஞானம், கதைகள் மற்றும் நம்பிக்கையை பகிர்ந்து கொண்டனர்.
அத்தகைய நட்பின் நற்பண்பைப் பற்றி பைபிள் மிகுந்த மென்மையுடன் பேசுகிறது. “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” (நீதிமொழிகள் 17:17) என்று சாலெமோன் சொல்கிறார். மேலும் அவர், “ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்” (27:9) என்கிறார்.
இயேசுவே நம்முடைய சிறந்த சிநேகிதனாய் இருக்கமுடியும். தம்முடைய சீஷர்களுக்கு அன்பின் மேன்மையை வலியுறுத்தி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று கற்றுக்கொடுத்தார். அடுத்த நாளே, அவர் சிலுவையில் அதை நிரூபித்தர். அவர் அவர்களிடம், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (வச. 15) என்றார். பின்னர் அவர், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்” (வச. 17) என்று வலியுறுத்துகிறார்.
இதுபோன்ற வார்த்தைகளின் மூலம் சாதாரண மனிதர்களை சிநேகிதர்களாய் நம்பிக்கைக்குரியவர்களாய் இயேசு “தனக்கு செவிசாய்ப்பவர்களை உயர்த்துகிறார்" என்று தத்துவஞானி நிக்கோலஸ் வோல்டர்ஸ்டார்ஃப் கூறுகிறார். கிறிஸ்துவில், நாம் மற்றவர்களுடன் நட்பு கொள்ள கற்றுக்கொள்கிறோம். அத்தகைய அன்பை நமக்குக் கற்பிக்க இயேசு ஒரு சிறந்த சிநேகிதனாய் இருக்கிறார்.

ஆச்சரியமான போதனை
சோபியா ராபர்ட்ஸ் தனது பதினொரு வயதில் முதன்முறையாக திறந்த இதய அறுவை சிகிச்சையை அனுபவித்தாள். அத்தகைய மருத்துவ முறையைப் பார்க்க ஒரு குழந்தைக்கு இது சற்று இளமையாகத் தோன்றினாலும், அவளுடைய அப்பா டாக்டர். ஹெரால்ட் ராபர்ட்ஸ் ஜூனியர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 2022 ஆம் ஆண்டில், முப்பது வயதான சோபியா, தற்போது அறுவை சிகிச்சை மருத்துவராய் தனது தந்தையுடன் இணைந்து வெற்றிகரமான பெருநாடி வால்வு மாற்ற அறுவை சிகிச்சையை வெற்றியாகச் செய்தார். ஹரோல்ட் கூறும்போது, “வேறென்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? நான் இந்த குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்... இப்போது, ஒரு மனித இதயத்தை எவ்வாறு கையாளுவது என்பதை கற்றுக்கொடுப்பது மிகுந்த சுவாரஸ்யமாயிருக்கிறது” என்று சொல்லுகிறார்.
நம்மில் சிலர் ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை திறன்களைக் கற்பிக்கலாம். சாலெமோன் அடுத்த தலைமுறைக்கு தேவனையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்த கற்றுக்கொடுக்கிறார். ஞானமுள்ள ராஜா, தேவனுடனான தனது உறவில் கற்றுக்கொண்டதை தன் குழந்தையுடன் உணர்ச்சிபொங்க பகிர்ந்துகொள்கிறார்: “என் மகனே... உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது” (நீதிமொழிகள் 3:1,5), “கர்த்தருக்கு பயப்படுங்கள்” (வச. 7), “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே” (வச. 11). அவருடைய சிட்சையையும் வழிகாட்டுதலையும் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளும் தம்முடைய பிள்ளைகளில் தேவன் “அன்பு செய்கிறார்” மற்றும் “மகிழ்ச்சியடைகிறார்” என்பதை சாலெமோன் அறிந்திருந்தார் (வச. 12).
நம் அற்புதமான, ஆச்சரியமான தேவனை நம்புவது, மதித்தல், மரியாதை செய்வது மற்றும் தாழ்மையுடன் செயல்படுவதின் அர்த்தம் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்போம். அப்படிச் செய்வதில் அவருடன் கூட்டு சேர்வது மனதைக் கவரும் ஒரு சிலாக்கியம்!

கிறிஸ்துவில் ஒன்றுபட்டவர்களாய்
அலாஸ்காவின் விட்டியரில் வசிக்கும் முந்நூறு பேரில் பெரும்பாலோர் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள். அதனால்தான் விட்டியர் “ஒரே கூரையின் கீழ் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. அதின் முன்னாள் குடியிருப்பாளரான ஆமி, “நான் எதற்கும் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை - மளிகைக் கடை, நோட்டரி பப்ளிக், பள்ளி மற்றும் தபால் அலுவலகம் எங்கள் தரை தளத்தில் இருந்தன, ஒரு லிஃப்ட் சவாரி மட்டுமே போதுமானது!" என்று கூறுகிறார்.
“வாழ்க்கை மிகவும் வசதியாக இருந்ததால், எனக்கு யாரும் தேவையில்லை என்று நினைத்து, நான் அடிக்கடி தனிமையில் இருக்க விரும்பினேன்" என்று அமி பகிர்ந்துகொள்கிறார். “ஆனால் சக குடியிருப்பாளர்கள் மிகவும் கரிசணையோடு இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நான் தேவை என்பதையும், எனக்கு அவர்கள் தேவை என்பதையும் கற்றுக்கொண்டேன்” என்கிறார்.
ஆமியைப் போலவே, நாமும் சில சமயங்களில் நம்மை நாமே தனிமைப்படுத்தி, சமூகத்தைத் தவிர்க்க விரும்பலாம். பிந்தையது குறைந்த மன அழுத்தமாகத் தெரிகிறது! ஆனால் இயேசுவை விசுவாசிக்கிறவர் தனிமையிலும் மற்ற விசுவாசிகளுடன் நல்லுறவு கொண்டவராக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. அப்போஸ்தலராகிய பவுல் விசுவாசிகளின் ஐக்கியத்தை மனித சரீரத்திற்கு ஒப்பிடுகிறார். ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் ஒரு தனித்துவமான செயல்பாடு உள்ளது போல, ஒவ்வொரு விசுவாசியும் ஒரு தனித்துவமான பாத்திரத்தை கொண்டுள்ளனர் (ரோமர் 12:4). ஒரு சரீரத்தின் உறுப்பு தனியாக இருக்க முடியாதது போல, ஒரு விசுவாசி தனிமையில் நம்பிக்கையின் வாழ்க்கையை வாழ முடியாது (வச. 5). சமூகத்தின் மத்தியில் தான் நாம் நம்முடைய வரங்களைப் பயன்படுத்தி (வச. 6-8; 1 பேதுரு 4:10) இயேசுவைப் போல வளர்கிறோம் (ரோமர் 12:9-21).
நமக்கு மற்றவரின் தேவை அவசியம்; நமது ஒற்றுமை கிறிஸ்துவில் உள்ளது (வச. 5). அவருடைய உதவியால், நாம் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதால், அவருடன் ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளலாம் மற்றும் அவருடைய அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்கலாம்.