மகிழ்ந்திருக்க காரணங்கள்
கிளென்டா திருச்சபையின் வளாகத்திற்குள் நுழையும்போதே அவளுக்குள்ளிருந்த மகிழ்ச்சி அந்த அறையையே நிரப்பிற்று. அவர் கடினமான மருத்துவச் சிகிச்சை பெற்று, மீண்டு வந்திருக்கிறார். ஆலய ஆராதனை முடிந்து, நாங்கள் வழக்கமாய் சந்திக்கும்போது, அவர் என்னோடு சேர்ந்து கண்ணீர் சிந்திய கடினமான தருணங்களுக்காகவும், அவருடைய மென்மையான கடிந்துகொள்ளுதலுக்காகவும் என்னை உற்சாகப்படுத்தியதற்காகவும் நான் தேவனுக்கு நன்றி சொன்னேன். சூழ்நிலை எதுவாயினும், என்னுடைய பிரச்சனைகளை வெளிப்படையாய் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்து, தேவனுக்கு நன்றி சொல்லும் காரணங்களை எனக்கு அவர் நினைப்பூட்டுவார்.
அவர்களை “கிளென்டா அம்மா” என்று அன்போடு அழைக்க அனுமதித்த அவர்கள், என்னை கட்டித் தழுவினார். “மகளே” என்று அணைத்துக்கொண்டார். நாங்கள் சிறிதுநேரம் பேசி ஜெபித்தோம். அதற்குப் பின், மற்றவர்களையும் உற்சாகப்படுத்தும் பொருட்டு, பாடிக்கொண்டே என்னை விட்டு நகர்ந்தார்.
சங்கீதம் 64இல், தன்னுடைய குற்றச்சாட்டுகளுடன் தாவீது தேவனை அணுகுகிறான் (வச.1). தன்னைச் சுற்றி பெருகும் அக்கிரமத்திற்கு விரோதமாய் தேவனிடத்தில் முறையிடுகிறான் (வச.2-6). ஆனால் தேவனுடைய வல்லமையின் மீதும் வாக்குத்தத்தத்தின் மீதான நம்பிக்கையை அவன் இன்னும் இழக்கவில்லை (வச.7-9). மேலும், “நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்” (சங்கீதம் 64:10) என்பதை நன்கு அறிந்திருந்தார்.
இயேசுவின் வருகைக்காய் காத்திருக்கும் தருணங்களில் நாம் கடினமான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். ஆனாலும், தேவன் படைத்த ஒவ்வொரு நாளிலும் மகிழ்ந்திருக்கும் காரணங்கள் எப்போதும் நமக்கு இருக்கும்.
துக்கித்தலும் நன்றியுணர்வும்
என்னுடைய தாயார் புற்றுநோயால் இறந்த பின்பு, அவரோடு இருந்த இன்னொரு நோயாளி என்னை அணுகினார். “உன்னுடைய அம்மா மிகவும் மென்மையானவர்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். “நான் மரிப்பதற்குப் பதிலாய் அவர் மரித்துவிட்டார்” என்று வேதனைப்பட்டார்.
“என் அம்மா உங்களை அதிகம் நேசித்தார்,” “உங்களுடைய பிள்ளைகள் வளருவதைப் பார்க்க நீங்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்” என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன். அவர்களுடைய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, தேவன் தாமே இந்த துக்கத்தினுடே சமாதானம் அருள கண்ணீரோடு வேண்டிக்கொண்டேன். அவளுடைய இந்த இக்கட்டான நோயின் மத்தியிலும் அவளுடைய கணவனையும் பிள்ளைகளையும் நேசிக்கும் இருதயத்தைக் கொடுத்ததற்காய் தேவனுக்கு நன்றி சொன்னேன்.
யோபு தன்னுடைய பிள்ளைகளையும் சேர்த்து தனக்குண்டான எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் தருவாயில், யோபுவின் சொல்லொண்ணா துயரத்தை வேதாகமம் வெளிப்படுத்துகிறது. “தரையிலே விழுந்து பணிந்து”(யோபு 1:20) தன் துக்கத்தை வெளிப்படுத்துகிறான். இருதயம் நொருங்குண்டவனாய், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்”(வச.21) என்று தன்னுடைய நன்றியுணர்வோடு கூடிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறான். அதற்குப் பின்பாக தன்னுடைய கொடிய வேதனையின் நிமித்தம் யோபு அதிகப்படியாய் புலம்பினாலும், நன்மை-தீமை மீதான தேவனுடைய அதிகாரத்தை இந்த தருணத்தில் மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்கிறான்.
நம்முடைய உணர்வுகளோடு நாம் போராடும் பல்வேறு வழிமுறைகளை தேவன் அறிந்திருக்கிறார். ஆனால் நம்முடைய துக்கத்தை அவரோடு நேர்மையோடும், நிறைவோடும் அனுசரிக்கத் தேவன் அழைக்கிறார். வாழ்க்கைப் போராட்டம் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டேயிருந்தாலும், தேவன் என்றும் மாறுவதில்லை என்று உறுதியளிக்கிறார். இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுத்து தேவன் நம்மைத் தேற்றி, அவருடைய பார்வையில் சிறந்தவர்களாய் மாற்றுகிறார்.
பரலோகில் மீண்டும் இணைதல்
எனது தாயாரின் அஞ்சலி செய்தியை எழுதுகையில், "மரித்தார்" என்ற வார்த்தை ஏதோ இறுதியானதாய் எனக்குத் தோன்றவே அதனை மாற்றி "இயேசுவின் கரங்களுக்குள் அழைக்கப்பட்டார்” என்றெழுதினேன். என் தாயாரில்லாத குடும்ப புகைப்படங்கள் சிலவற்றைப் பார்த்து சிலநேரம் வருந்தினேன். சமீபத்தில், மரித்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களைத் தத்ரூபமாய் வரையும் ஒரு ஓவியரைக் கண்டேன். புகைப்படங்களின் உதவியால் குடும்ப படத்தில் மரித்த நபர்களை இணைப்பதில் அவர் வல்லவர். எனதருகே என் தாயார் இருந்த அவ்வோவியத்தை கண்ணீர் மல்க ரசித்தேன். அவருடைய அந்தக் கலை, தேவன் வாக்களித்த பரலோக இணைப்பை எனக்கு நினைவூட்டியது.
இயேசுவின் விசுவாசிகள் "மற்றவர்களைப்போலத் துக்கிக்க" தேவையில்லை என்று உறுதியளிக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 4:13). "இயேசுவானவர் மரித்த பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்."(வ.14). பவுல், இயேசுவின் இரண்டாம் வருகையையும், இயேசுவோடு விசுவாசிகள் ஒன்று சேர்க்கப்பட்டு இணைவதையும் அறிவிக்கிறார் (வ.17).
இயேசுவை நம்பி மறித்த நம் அன்பானவர்கள் மரிக்கையில், பரலோகில் ஒன்றினைவோமென்பது தேவனின் வாக்குத்தத்தமாகும். நாம் மரிக்குமட்டுமோ அல்லது இயேசு வருமட்டுமோ, உயிர்த்த நமது ராஜாவுடன் வாழப்போகும் வாக்கு பண்ணப்பட்ட எதிர்காலத்தைக் குறித்த உறுதியான நிச்சயத்தோடு, நமது மரணத்தையும் எதிர்கொள்வோம்.
அன்பில் வேரூன்றியது
நான் அந்தப் புற்றுநோய் சிகிச்சை மையத்தை அடைந்தபோது தனிமையையும், பயத்தையும் அதிகம் உணர்ந்தேன். ஏனெனில், அங்கே எனது தாயாரை தனியொருவளாகப் பராமரிக்க வேண்டியிருந்தது. எனது குடும்பத்தையும், பரிச்சயமான சூழலையும் விட்டு சுமார் 1200 கி.மீ தூரம் கடந்து வந்துள்ளேன். ஆனால் நான் எனது சாமான்களை அவ்விடத்தில் இறக்குமுன்பே, மணி என்ற அந்த மனிதர் ஒரு பெரிய புன்னகையுடன் எனக்கு உதவ முன்வந்தார். நாங்கள் ஆறாவது தளத்திற்கு வந்தடைந்த போது, அவருடைய சிகிச்சைக்கு உறுதுணையாயிருந்த, அவரது மனைவி பாக்கியாவைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். நாங்கள் தேவனுக்குள் ஒருவரோடொருவர் சார்ந்திருந்ததால், இந்தத் தம்பதியினர் எனக்கு ஒரு குடும்பமாகவே சீக்கிரம் மாறிவிட்டனர். நாங்கள் ஒன்றாகவே சிரித்தோம், பகிர்ந்தோம், அழுதோம், ஜெபித்தோம். நாங்கள் அனைவரும் வெவ்வேறு இடத்திலிருந்து வந்திருந்தாலும், தேவனுக்குள் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருந்ததால், அன்பில் வேரூன்றப்பட்டு ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ள முடிந்தது.
தனது மாமியாகிய நகோமியை பராமரிக்க ரூத் தீர்மானித்ததால், தனக்குப் பாதுகாப்பாயிருந்த பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறினாள். "அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்;" (ரூத் 2:3). அந்த வயலின் எஜமானான போவாஸிடம் அவன் வேலைக்காரன் வந்து, "காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்” (வ.7). நகோமிக்காகத் தான் அக்கறைப்பட்டது போலவே, தனக்காக அக்கறைகொள்ளும் மனிதர்கள் உள்ள பாதுகாப்பான இடத்தை ரூத் கண்டுகொண்டாள் (வ. 8–9). போவாஸின் பெருந்தன்மையைக் கொண்டு ரூத்தையும், நகோமியையும் தேவன் போஷித்தார் (வ.14–16).
வாழ்வின் சூழல்கள் நம்மை நமது சௌகரியமான சூழலைத் தாண்டிக் கொண்டு செல்லும். நாம் தேவனுக்குள் ஒருவரோடொருவர் இணைந்திருந்தால், நம்மை அன்பில் வேரூன்றச்செய்து, ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கும்படி செய்வார்.
ஒளிரும் பரதேசிகள்
2020ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில், சான் டியாகோ கடற்கரையின் ஒளிரும் அலைகளின் மீது, மிதவைதட்டின் உதவியோடு வீரர்கள் உலா வந்தனர். இந்த ஒளிரும் அலைகள், பைட்டோபிளாங்டன் எனப்படும் நுண்ணிய உயிரிகளால் ஏற்படுத்தப்பட்டவைகள். அதற்கு கிரேக்கத்தில், “பரதேசி” அல்லது “சுற்றித் திரிபவன்” என்று பொருள். இந்த உயிரிகள் பகல் நேரத்தில், சிவப்பு அலைகளை உருவாக்கி அவற்றை இரசாயன ஆற்றலாக மாற்றும் சூரிய ஒளியை உள்வாங்குகிறது. இரவில் அவை நீல நிற மின்சார ஒளியை உருவாக்கும்.
பரலோகவாசிகளாகிய கிறிஸ்தவர்கள், பூமியில் வாழும் நாட்களில் இந்த சிவப்பு அலைகளை உருவாக்கும், பரதேசிகளாகவும் சுற்றித் திரிபவர்களாகவுமே வாழுகிறார்கள். தேவன் நமக்கு வகுத்திருக்கிற திட்டத்தை கடினமான சூழ்நிலைகள் தொந்தரவுசெய்யும்போது, உலகத்தின் ஒளியான இயேசுவைப் போல இருளில் பிரகாசிக்கும் ஒளியாய் பரிசுத்த ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். பவுல் அப்போஸ்தலரைப் பொருத்தவரையில், தேவனோடு இருக்கிற உறவு மற்றும் அவர் மூலமாய் நமக்கு உண்டாகும் நீதியைவிட மேன்மையானது வேறு இல்லை (பிலிப்பியர் 3:8-9). இயேசுவை அறிகிற அறிவும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையும், பாடுகளின் மத்தியில் நம்முடைய வாழ்க்கை முறையை பாதிக்கிறது (வச. 10-16).
தேவகுமாரனோடு நாம் அனுதினமும் நேரம் செலவிடும்போது, கிறிஸ்துவின் சுபாவத்தை பிரதிபலிக்கும் வகையில் சவால்களை சந்திக்கும் சத்தியத்தை அறிகிற அறிவிற்கு நேராய் ஆவியானவர் நம்மை வழிநடத்துவார் (வச. 17-21). நாம் பரதீசு சேரும் நாள்வரை, தேவனுடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்காய் நாம் செயல்படமுடியும்.
உக்கிராணத்துவ வாய்ப்பு
விடுமுறை நாட்களில் நானும் எனது கணவரும் எலியட் கடற்கரையோரமாய் நடந்துகொண்டிருக்கையில், அங்கே ஆமை முட்டைகள் கூடையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தோம். அதை வைத்திருந்த நபர், ஒவ்வொரு நாள் இரவும் ஒரு தன்னார்வ குழுவினர்களைக் கூட்டிக்கொண்டு, கடல் ஆமைகள் இடும் முட்டைகளை கவனமாய் சேகரிப்பதாகச் சொன்னார். முட்டையிலிருந்து வெளிவரும் கடல் ஆமைக் குஞ்சுகள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் அச்சுறுத்தலினால் உயரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. “என்னதான் நாங்கள் முயற்சி செய்தாலும்,” ஆயிரத்தில் ஒரு ஆமைதான் முதிர்ச்சி பருவத்தை எட்டுகிறது என்றும் அவர் சொன்னார். ஆனால் அதற்காக அவர் சோர்ந்துபோகவில்லை. அந்த ஆமை இனத்தைப் பாதுகாக்கும் அவரது அயராத முயற்சி, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. தற்போது நான் கடல் ஆமையின் படம் போட்ட ஒரு பேட்ஜ் அணிந்திருக்கிறேன். அது தேவனுடைய படைப்புகளை பாதுகாக்கவேண்டிய என்னுடைய பொறுப்பை எனக்கு நினைவூட்டுகிறது.
தேவன் உலகத்தை உண்டாக்கியபோது, அனைத்து உயிரினங்களும் அதில் வாழுவதற்கேதுவான ஒன்றாகவே அதை உண்டாக்கினார் (ஆதி. 1:20-25). தமது சாயலாக மனிதனை உண்டாக்கியபோது, “அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்” (வச. 26) என்று தன் நோக்கத்தை பிரதிபலித்தார். தேவனுடைய பிரம்மாண்டமான படைப்புகளை நிர்வகிக்கக்கூடிய ஓர் உக்கிராணத்துவப் பொறுப்பை தேவன் நமக்கு அருளியிருக்கிறார்.
வளைந்துகொடுக்கும் நம்பிக்கையின் தசைகள்
மிருகக்காட்சிசாலைக்கு ஒரு பயணத்தின் போது, கரடியின் (மரங்களில் வாழும் ஒரு மெதுவாக நகரும் வெப்பமண்டல அமெரிக்க பாலூட்டி) அருகில் ஓய்வெடுக்க நிறுத்தினேன். அந்த உயிரினம் தலைகீழாக தொங்கியது. அது முற்றிலும் அமைதியாக இருப்பது போல் இருந்தது. நான் பெருமூச்சு விட்டேன். எனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, நான் அமைதியாய் இருந்தேன். எதையாவது நான் செய்ய வேண்டும் என்று தீவிரமாக விரும்பினேன். என்னுடைய இயலாமையை எண்ணி வேதனையடைந்த நான், நான் மிகவும் பலவீனமானவன் என்கிற எண்ணத்தை நிறுத்த ஏங்கினேன். ஆனால் கரடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அது ஒரு கையை நீட்டி, அருகிலுள்ள கிளையைப் பிடித்து, அதில் மீண்டும் அசையாமல் நின்றிருப்பதை நான் கவனித்தேன். அசையாமல் இருப்பதற்கு ஒரு வலிமை தேவை. அங்கேயே நான் நின்றிருப்பதற்கோ அல்லது மெல்லமாய் நகர்வதற்கோ ஒரு அபார வலிமை தேவை. என் வாழ்க்கையின் ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும் தேவனை நம்புவதற்கு, எனக்கு அமானுஷ்ய சக்தி தேவைப்படுகிறது.
சங்கீதம் 46 இல், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (வச. 1) என்று சங்கீதக்காரன் எழுதுகிறான். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும், “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 7). சங்கீதக்காரன், இந்த உண்மையை உறுதியுடன் மீண்டும் கூறுகிறார் (வச. 11).
அசையாமல் நின்றிருக்கும் கரடியைப் போலவே, நமது அன்றாட சாகசங்களுக்கு மெதுவான நடைகள் மற்றும் நீடிய பொருமையும் சாத்தியமற்றது போல் தோன்றும். நாம் தேவனின் மாறாத தன்மையை நம்பியிருக்கும் போது, அவர் நமக்கு எது சரியென்று தீர்மானிக்கும் அவருடைய பலத்தை சார்ந்து இருக்க முடியும்.
நாம் துன்பங்களைத் தொடர்ந்து போராடினாலும் அல்லது காத்திருப்புடன் போராடினாலும், தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நாம் பெலனுள்ளவர்களாய் உணராவிட்டாலும், அவர் நம் நம்பிக்கையின் தசைகளை வளைக்க உதவுவார்.
பரலோக திருவிருந்து
ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11இன் ஈகிள் லூனார் மாட்யூல் முதன்முதலில் சந்திரனில் மனிதர்களை தரையிறக்கியபோது, விண்வெளி பயணிகள் சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு தங்கள் விமானத்திலிருந்து மீண்டு வர நேரம் எடுத்தனர். விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின், அப்பம் மற்றும் திராட்சை ரசத்தைக் கொண்டு வர அனுமதி பெற்றார். அங்ஙனம் அவர் கர்த்தருடைய பந்தியை ஆசரித்தார். வேதத்தைப் படித்த பிறகு, சந்திரனில் உண்ட முதல் உணவாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிப்பார். அவர் “எங்கள் தேவாலயம் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் திராட்சை ரசத்தை ஊற்றினேன்; நிலவின் ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பில் திராட்சரசம் மெதுவாகவும் அழகாகவும் கோப்பையின் பக்கமாக மிதந்தது" என்று எழுதுகிறார். ஆல்ட்ரின் இந்த பரலோக திருவிருந்தை அனுபவித்தபோது, அவரது நடவடிக்கைகள், சிலுவையில் கிறிஸ்துவின் தியாகம் மற்றும் அவரது இரண்டாவது வருகையின் மீதான அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது.
அப்போஸ்தலனாகிய பவுல், “அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்” (1 கொரிந்தியர் 11:23) தம் சீஷர்களுடன் இயேசு எப்படி அமர்ந்திருந்தார் என்பதை நினைவில் கொள்ளும்படி நம்மை ஊக்குவிக்கிறார். கிறிஸ்து விரைவில் பிட்கப்படப்போகிற தன்னுடைய சரீரத்தை அப்பத்துடன் ஒப்பிட்டார் (வச.24). அவர் சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் நமது மன்னிப்பையும் இரட்சிப்பையும் உறுதிப்படுத்திய “புதிய உடன்படிக்கையின்” அடையாளமாக திராட்சை ரசத்தை அறிவித்தார் (வச.25). எப்பொழுதும், எங்கும் நாம் திருவிருந்தை எடுத்துக்கொண்டாலும், இயேசுவின் பலியின் உண்மையின் மீதுள்ள நம்பிக்கையையும், அவருடைய வாக்குறுதியளிக்கப்பட்ட இரண்டாம் வருகையின் மீதான நம்பிக்கையையும் நாம் அறிவிக்கிறோம் (வச. 26).
நாம் எங்கிருந்தாலும் பரவாயில்லை, உயிர்த்தெழுந்தவரும் மீண்டும் வரப்போகிறவருமான ஒரே மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை கொண்டாடலாம்.
தேவனின் நிறைவான ஆசீர்வாதம்
திருச்சபையின் பலசரக்கு வாகனத்திலிருந்து மளிகைப் பொருட்களை இறக்க உதவுவதற்காக மூன்று வயது சிறுவனும் அவனது அம்மாவும் ஒவ்வொரு வாரமும் திருச்சபைக்குச் சென்றனர். பலசரக்கு வாகனம் பழுதாகிவிட்டது என்று அவனது அம்மா, பாட்டியிடம் கூறுவதை சிறுவன் கேட்டான். “ஐயோ, அவர்கள் இனி எப்படி பலசரக்குக் கொண்டு வருவார்கள்?” என்று சிறுவன் கேட்க, ஒரு புதிய வாகனம் வாங்குவதற்கு திருச்சபை பணம் திரட்ட வேண்டும் என்று அவனுடைய அம்மா விளக்கினார். சிறுவன் சிரித்தான். “என்னிடம் பணம் இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான். வண்ணமயமான ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு நாணயங்களால் நிறைந்திருந்த பிளாஸ்டிக் ஜாடியுடன் அவன் திரும்பி வந்தான். அதில் தோராயமாக 2500 ரூபாய்க்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிறுவனிடம் அதிகம் இல்லையென்றாலும், திருச்சபையின் நடவடிக்கைகள் தடைபடாமல் இருக்கும்பொருட்டு, திருச்சபையின் புதிய குளிர்பதன வாகனத்தை வாங்குவதற்கு தேவன் அந்த பணத்தையும் மற்றவர்களுடைய ஊக்கமான காணிக்கைகளோடு சேர்த்துக்கொண்டார்.
உற்சாகமாய் கொடுக்கப்படுகிற சிறிய தொகையானது, தேவனுடைய கரத்தில் வைக்கப்படும்போது, எப்போதும் தேவைக்கு அதிகமானதாய் மாறுகிறது. 2 இராஜாக்கள் 4 இல், ஒரு ஏழை விதவை எலிசா தீர்க்கதரிசியிடம் பொருளாதார உதவி கேட்கிறார். அவளிடம் என்ன இருக்கிறது என்று எலிசா தெரிந்துகொண்டு, அவளது அண்டை வீட்டாரிடத்திலிருக்கும் பாத்திரங்களை வாங்கி வரும்படி சொல்லுகிறார் (வச. 1-4). அவள் சேகரித்த ஜாடிகளில் அவளிடமிருந்த எண்ணெயை கொஞ்சமாய் வார்க்க, தேவன் அவள் வீட்டிலிருந்த அனைத்து பாத்திரங்களையும் எண்ணெயால் நிரப்புகிறார் (வச. 5-6). எலிசா அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்” (வச. 7).
நம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்தும்போது, நம்மிடம் இருப்பதைக் கொண்டு தேவன் செய்யும் பெரிய காரியங்களை நாம் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.