எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டிம் கஸ்டாப்சன்கட்டுரைகள்

நட்சத்திரங்களின் சவால்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே, இத்தாலிய கவிஞர் எப்.டி. மறிநேட்டி  வருங்காலவியல் என்ற கலை இயக்கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் கடந்த காலத்தை புறக்கணித்து, அழகை குறித்ததான பாரம்பரிய கருத்துக்களை ஏளனம் செய்தது, மாறாக இயந்திரங்களை அது உயர்வாக கருதியது. 1909ஆம் ஆண்டு மறிநேட்டி, வருங்காலவியலின்  கொள்கை விளக்கத்தை எழுதினார், அதில் அவர்: பெண்களை குறித்து இழிவாகவும், வன்முறையை உயர்வாகவும் அறிவித்திருந்தார். மேலும், "நாம் யுத்தங்களை மேன்மைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார். அவருடைய கொள்கை விளக்க உரை இவ்வாறு நிறைவடைந்தது: "உலகத்தின் உச்சியில் நின்று கொண்டு நாங்கள் மீண்டுமாக நட்சத்திரங்களுக்கு விரோதமான கொடூரமான யுத்தத்தை துவங்குகிறோம்"

மறிநேட்டி கொள்கை விளக்கத்தை அறிவித்து, ஐந்து ஆண்டுகளில் நவீன போர் மிகவும் தீவிரமாக ஆரம்பமானது. முதலாம் உலகப் போர் யாருக்கும் எந்த புகழையும் கொண்டு வரவில்லை. மறிநேட்டியே 1944-ல் மரித்தார். ஆனால் இவைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், நட்சத்திரங்கள் அதினதின் இடத்திலே நிலைத்திருந்தன.

 தாவீது ராஜா, இந்த நட்சத்திரங்களை குறைத்து கவித்துவமாக பாடியிருந்தார் ஆனால் வியப்பூட்டும் வகையில் வித்தியாசமான கண்ணோட்டத்தோடு. அவர் எழுதுகிறார்,"உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்."(சங்கீதம்) என்று. தாவீதின் இந்தக் கேள்வி அவிசுவாசத்தினால் வந்தது அல்ல ஆனால் வியப்பினால் தன்னை தாழ்த்தினார். இந்த அகண்ட அண்ட சராசரங்களை உண்டாக்கின தேவன், மெய்யாகவே நம் மீது சிந்தையாய் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் நம்முடைய ஒவ்வொரு விபரத்தையும் கவனிக்கிறார், நம்முடைய நன்மை, தீமை, தாழ்மை, கொடூரம், ஏன் அபத்தத்தை கூட கவனிக்கிறார்.

நட்சத்திரங்களுக்கு சவால் விடுவது என்பது முட்டாள்தனமானது, மாறாக அவைகள் நம்முடைய சிருஷ்டிகரை துதிக்கும்படி நமக்கு சவால் விடுகின்றன.

நமக்கு தேவையானதை பெறுதல்

ஆரோன் பர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமநிலை உடைக்கும் வாக்கெடுப்பின் முடிவிற்காக கவலையோடு காத்திருந்தார். 1800ல் தாமஸ் ஜெபர்ஸனுடனான அதிபருக்கான தேர்தல் போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில், தன்னையே அதிபராக தேர்வுக்குழு அறிவிக்கும் என்று ஆரோன் பர் நம்ப காரணமிருந்தது. எனினும் அவர் தோற்றார், கசப்பு அவரை ஆழமாய் ஊடுருவியது. அலெக்சாண்டர் ஹாமில்டன் தன்னை அதிபர் வேட்பாளராக ஆதரிக்காத காரணத்தால் அவருக்கு எதிராக மனக்கசப்பை வளர்த்துக்கொண்ட பர், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே ஹாமில்டனை துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொன்றார். இந்த கொலையால் வென்குண்டெழுந்த முழு தேசமும் அவருக்கு விரோதமாக திரும்ப, பர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட முதியவராக மரித்தார்.

அரசியல் விளையாட்டுக்கள் சரித்திரத்தில் கொடுமையான பங்காற்றியுள்ளன. தாவீது ராஜா மரிக்கும் தருவாயில் இருக்கையில், அவருடைய குமாரன் அதோனியா என்பவன் தாவீதின் தளபதியையும், மிக முக்கியமான ஆசாரியனையும் தன்னை ராஜாவாக்கும்படி தனக்கென்று பணியமர்த்திக்கொண்டான் (1 இராஜாக்கள் 1:5-8). ஆனால் தாவீது சாலொமோனையே ராஜாவாக தெரிந்து கொண்டார் (வ.17). தீர்க்கதரிசியான நாத்தானின் உதவியோடு இந்த கிளர்ச்சி முறியடிக்கப்படுகிறது (வ.11-53). அதோனியா சற்று ஓய்ந்தாலும், மீண்டும் இரண்டாம் முறை அரியணை ஏற திட்டம் தீட்டினான், எனவே சாலொமோன் அவனை கொல்ல வேண்டியிருந்தது (1 இராஜாக்கள் 2:13-25).

நம் மனுஷீக சுபாவமே நமக்கு உரிமை இல்லாதவைகளை சொந்தமாக்கிக்கொள்ள தூண்டுகிறது! நம் எவ்வளவுதான் கடினமாய் அதிகாரம், கவுரவம் அல்லது சொத்துக்களை அடைய முயன்றாலும் அது ஒரு போதும் நமக்கு நிறைவை தராது. அது எப்போதுமே நமக்கு பற்றாக்குறையாய் தான் இருக்கும். ஆனால் இயேசுவோ நம்மை போலல்லாமல் "மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:8)

இதற்கு முரணாக, சுயநலமாக நம்முடைய சொந்த விருப்பங்களையே நாம் தொடர்ந்தால் நம்முடைய ஆழமான, உண்மையான ஏக்கங்கள் தீராது. முடிவுகள் அனைத்தையும் தேவனுடைய கரங்களில் விட்டுவிடுவதே சமாதானதிற்கும், சந்தோஷத்திற்குமான ஒரே வழி.

அடிப்படைக்குச் செல்வோம்

தீர்மானங்கள் எடுப்பதே அதை உடைப்பதற்காக என்று தோன்றுகிறது. அது சாத்தியம் என்று புத்தாண்டின்போது சிலர் இதை கேலியாக சொல்வதுண்டு. அவ்வாறு சமூக ஊடகத்தில் உலா வந்த சிலவைகள்: போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது சக வாகன ஓட்டிகளைப் பார்த்து கை அசையுங்கள். மாரத்தான் ஓடுவதற்கு கையெழுத்திட்டு, ஓடாமல் இருங்கள். தள்ளிப் போடுவதை நாளைக்கு நிறுத்திக்கொள்ளலாம். சிரி செயலியின் துணையில்லாமல் தொலைந்து போகலாம். உடற்பயிற்சி பதிவுகளை பதிவிடுபவர்களை நட்பு வட்டத்திலிருந்து நீக்கிவிடவும்.  

புதிய துவக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சிறைபிடிக்கப்பட்ட யூத மக்களுக்கு ஒரு புதிய துவக்கம் அவசியமாயிருந்தது. அவர்களின் 70 ஆண்டுகள் சிறையிருப்பு பயணத்தில், இருபதாம் ஆண்டு கடந்தபோது, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம், “நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி" (எசேக்கியல் 39:26) என்று தேவன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பாக மோசேயின் மூலமாக தேவன் அவர்களுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணம் என்னும் அடிப்படைக்கு அவர்கள் மீண்டும் திரும்பவேண்டும். புத்தாண்டில் பண்டிகையை அனுசரிப்பதும் அதில் ஒன்று (45:18). தேவனுடைய குணாதிசயங்களையும் எதிர்பார்ப்புகளையும் நினைவுபடுத்துவதே பண்டிகைகளை அனுசரிப்பதின் பிரதான நோக்கம். தேவன் அதிபதிகளிடம், “நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்" (வச. 9) என்றும் உத்தமமாய் நடங்கள் என்றும் வலியுறுத்தினார் (வச. 10).

இந்த பாடம் நமக்கும் பொருந்தும். நமது விசுவாசம் கிரியைகள் இல்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும் (யாக்கோபு 2:17). இந்த புத்தாண்டில் நம்முடைய தேவைகளை தேவன் நமக்கு சந்திப்பதுபோல, அவருடைய அடிப்படைக் கற்பனைகளாகிய, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக" மற்றும் “உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத்தேயு 22:37-39) என்னும் கற்பனைகளைக் கைக்கொள்ள தீர்மானிப்போம். 

இன்றைய தலைமுறை

“முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை ஒருபோதும் நம்பவேண்டாம்” என்று 1964இல் ஜாக் வெண்பெர்க் என்ற ஓர் இளம் சுற்றுச்சூழல் ஆய்வாளர் சொன்னார். அவருடைய அந்த கருத்து அந்த தலைமுறையையே பாதித்தது குறித்து அவர் பின்னர் வருந்தினார். பின்னர் அவர், “என்னுடைய தலையின் உச்சியிலிருந்து நான் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டேன்... அது சிதைந்து முற்றிலும் தவறாய் புரிந்துகொள்ளப்பட்டது” என்று வருந்தினார். 

பல்லாயிரக்கணக்கான மக்களை இலக்காகக் கொண்ட இழிவான கருத்துக்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது அதற்கு நேர்மாறாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு தலைமுறையிலிருந்து மறுதலைமுறைக்கு தொடர்புகொள்ளப்படும் தவறான கருத்துக்கள், இருதரப்பினராலும் தவிர்க்கப்பட வேண்டும். நிச்சயமாக ஒரு சிறந்த வழி இருக்கிறது. 

எசேக்கியா ஒரு நல்ல ராஜாவாய் இருந்தபோதிலும், அடுத்த தலைமுறையைக் குறித்த அவருடைய அக்கறை குறைவாயிருந்தது. அவருடைய இளம்பிரயாத்திலேயே அவர் வியாதிகண்டான் (2 இராஜ. 20:1). அவருடைய ஜீவனுக்காய் தேவனிடத்தில் மன்றாடினார் (வச. 2-3). தேவன் அவருடைய ஆயுசுநாட்களை 15 வருடங்கள் கூட்டுகிறார் (வச. 6).

ஆனால் அவருடைய தலைமுறை சிறைபிடிக்கப்பட்டு போகும் என்னும் தகவலை கேள்விப்படும்போது அவர் அதை பொருட்படுத்தவில்லை (வச. 16-18). “என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே” என்று எண்ணுகிறார் (வச. 19). தன்னுடைய நலத்தின் மீது எசேக்கியாவுக்கு இருந்த அக்கறையை அடுத்த தலைமுறையின் மீது காண்பிக்கவில்லை. 

நமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் கோட்டைக் கடக்கும் துணிச்சலுள்ள அன்பிற்கு தேவன் நம்மை அழைக்கிறார். பழைய தலைமுறைகளுக்கு இன்றைய இளைய தலைமுறையினரின் இலட்சியமும் படைப்பாற்றலும் தேவை. அதேபோன்று, இளைய தலைமுறையினரும் மூத்தவர்களின் ஞானத்தினாலும் அனுபவத்தினாலும் பயனடையவேண்டும். இது மற்றவர்களைக் குறித்து, கருத்துக்களையும் கோபங்களையும் பரிமாறும் நேரமல்ல. நல்ல சிந்தனைகளை பரிமாறுவோம். நாம் இதில் இணைந்து செயல்படுவோம். 

இயேசுவுக்காக மற்றவர்களை சந்தித்தல்

பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்கள் இயேசுவின் நாமத்தை அறியவில்லை. பிலிப்பைன்ஸின் மைண்டானோவ் மலைப்பகுதியில் வசித்த பேண்வோன் என்ற மக்கள் கூட்டம் வெளியுலகத்தோடு அதிக தொடர்பில் இருந்ததில்லை. கரடுமுரடான அந்த மலைப்பாதையின் வழியாய் பயணித்து, அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை கொண்டுசேர்ப்பதற்கே இரண்டு நாட்கள் ஆகும். உலகம் அவர்களை கண்டுகொள்ளவில்லை. 

ஆனால் மிஷனரி குழுவினர் அவர்களை கண்டுபிடித்தனர். ஹெலிகாப்டரின் உதவியோடு அந்த இடத்திற்கு போக வர துவங்கினர். இது பேண்வோன் மக்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களையும், மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளவும், உலகம் மிகவும் பெரியது என்று பார்க்கவும் அவர்களுக்கு உதவியது. அது அவர்களுக்கு இயேசுவையும் அறிமுகப்படுத்தியது. ஆவி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அந்த மக்கள், இப்போது தங்களுடைய பாடல்களுக்கு புதிய வார்த்தைகளை ஏற்படுத்தி ஒன்றான மெய்தேவனை ஆராதிக்கிறார்கள். மிஷன் ஊழியம் ஒரு அழகான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இயேசு பரமேறிச் செல்லும்போது தன்னுடைய சீஷர்களுக்கு இந்த கட்டளையைக் கொடுக்கிறார்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து..” (மத்தேயு 28:19). அந்த கட்டளை இன்றும் செயல்பாட்டில் இருக்கிறது. 

சந்திக்கப்படாத மக்கள் கூட்டங்கள் எங்கோ மலைப்பகுதிகளில் வாழ்கிறவர்கள் மட்டுமல்ல. அவர்கள் நம் மத்தியிலும் வாழுகிறார்கள். பேண்வோன் மக்கள் கூட்டத்தை சந்திப்பதற்கு அனுகூலமான வழியும், பொருளாதாரமும் தேவைப்பட்டது. அதுபோல நம்முடைய சந்திக்கப்படாத மக்களை சந்திப்பதற்கு சாதகமான வழியை கண்டுபிடிப்போம். அது நீங்கள் கண்டுகொள்ளாத உங்களுடைய அருகாமையில் வசிக்கும் உங்களுக்கு தொடர்பில்லாத நபர்களாகக் கூட இருக்கலாம். மற்றவர்களை இயேசுவுக்காக ஆதாயப்படுத்த தேவன் உங்களை எப்படி பயன்படுத்தலாம்? 

காலங்களை மீட்டெடுத்தல்

பருவகாலத்தைமீட்பதற்கான வழியை கண்டுபிடிக்க லெய்சா விரும்பினாள். ஆகையினால் அவள் கண்காட்சியில் பார்த்த பெரும்பாலான அலங்காரங்கள் பயங்கரமான மற்றும் கொடூரமான வழிகளில் மரணத்தை கொண்டாடுவதாக காணப்பட்டது. 

அந்த மரண இருளை சுலபமான வழியில் எதிர்கொள்ள எண்ணிய லெய்சா, ஒரு பூசணிக்காயை எடுத்து அதில் அழியாத எழுதுகோலினால் எழுத ஆரம்பித்தாள். “சூரியஒளி” என்று முதலில் எழுதினாள். பார்வையாளர்கள் தொடர்ந்து அதில் எழுத ஆரம்பித்தனர். சிலர் விசித்திரமான காரியங்களையும் அதில் எழுதினர்: உதாரணத்திற்கு “கிறுக்குதல்” போன்ற வார்த்தைகள். சிலர் நடைமுறைக் காரியங்களையும் எழுதினர்: “அழகான வீடு,” “ஓடும் கார்.” மரித்த தங்களுடைய நேசத்திற்குரிய நபர்களின் பெயர்களையும் எழுதி சிலர் தங்கள் வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். அந்த பூசணிக்காயைச் சுற்றி மக்களின் நன்றியுணர்வு என்னும் சங்கிலி தொடர ஆரம்பித்தது. 

நாம் எளிதில் பார்வையிடக்கூடிய வாழ்க்கையின் காரியங்களைக் குறித்து சங்கீதம் 104 தேவனுக்கு நன்றி சொல்லுகிறது. “அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்” என்று சங்கீதக்காரன் பாடுகிறார் (வச. 10). “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்” (வச. 14). இருளையும் நன்மையாகவும் நோக்கத்தோடும் சிருஷ்டித்ததாக அறிவிக்கிறார். “நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும் ; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்” (வச. 20). அதற்கு பின்பாக, “சூரியன் உதிக்கையில்... அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்” (வச. 22-23). கடைசியாக இவைகள் எல்லாவற்றிற்காகவும், “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்” (வச. 33) என்று முடிக்கிறார். 

மரணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாத இந்த உலகத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்காக நாம் சிருஷ்டிகருக்கு நன்றி சொல்லி பழகும்போது ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

நிலைநிற்கும் விசுவாசம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாமஸ் கார்லே தன்னுடைய எழுத்துக்களை சரிபார்க்கும் பொருட்டு அதை தத்துவமேதை ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவரிடம் ஒப்படைத்தார். தெரிந்தோ தெரியாமலோ அந்த பிரதி நெருப்பில் பொசுங்கியது. அது கார்லைனிடம் இருந்த ஒரே பிரதி. சற்றும் பதறாமல், எரிந்துபோன பகுதிகளை மீண்டும் எழுத ஆரம்பித்தார். அவர் சிந்தையில் பதிந்திருந்த நிகழ்வுகளை தீயின் தழல்களால் எரிக்கமுடியவில்லை. இந்த பெரிய இழப்பின் மத்தியிலும், “பிரெஞ்சு புரட்சி” என்னும் தன்னுடைய பிரம்மாண்டமான படைப்பை கார்லைன் வெளியிட்டார். 

பண்டைய யூதேயா ராஜ்யத்தின் கடைசிநாட்களில், தேவன் எரேமியா தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ புத்தகச்சுருளை எடுத்துஉன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது” என்றார் (எரேமியா 36:2). இது தன் ஜனங்களை முழுவதுமாய் அழிக்காமல் அவர்களை மனந்திரும்புதலுக்கு அழைக்கும் தேவனுடைய மென்மையான இருதயத்தைப் பிரதிபலிக்கிறது (வச.3). 

எரேமியாவும் சொன்னபடியே செய்தான். அதைக் கைப்பற்றிய யூதேயாவின் ராஜாவாகிய யோயாக்கீன், அதை துண்டுதுண்டாக்கி, தீயிலிட்டு பொசுக்கினான் (வச.23-25). ராஜாவின் இந்த செய்கை சூழ்நிலையை இன்னும் கடினமாக்கியது. தேவன் அதே செய்தியை மீண்டும் எழுதும்படிக்கு எரேமியாவிடம் சொல்லுகிறார். மேலும் யோயாக்கீனைக் குறித்து, “தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்து விடப்பட்டுக்கிடக்கும்” (வச.30) என்றும் சொல்லுகிறார். 

கர்த்தருடைய வார்த்தையைத் தீயிலிட்டு எரிப்பது சாத்தியமே. ஆனால் அது பிரயோஜனமற்ற முயற்சி. வார்த்தைகளுக்கு பின்பாக இருக்கும் வார்த்தையானவர், என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் நித்தியமானவர். 

இக்கபோத் விலகிப் போயிற்று

“த லெஜெண்ட் ஆஃப் ஸ்லீப்பி ஹால்லோ” (ஒரு ஆங்கில நாவல்), இதில் கட்ரீனா என்ற அழகான இளம் பெண்ணை திருமணம் செய்ய இக்கபோத் க்ரேன் என்ற பள்ளி ஆசிரியர் நாடுவதைப் பற்றி நூலாசிரியர் கூறுகிறார். குடியேறிய கிராமப்புறப் பகுதிகளை வேட்டையாடும் தலையில்லாத ஒரு குதிரைவீரன் தான் கதையின் திறவுகோல். ஒரு இரவு, குதிரையின் மேல் ஒரு பூதம் போன்ற தோற்றத்தைக் கண்ட இக்கபோத், பயத்தினால் அப்பகுதியை விட்டு ஓடிப்போகிறார். இந்தக் குதிரை வீரன் கட்ரீனாவுக்கு ஒரு போட்டியான முறைமைக்காரன் என்றும் பின்னர் அவன் கட்ரீனாவை திருமணம் செய்துக்கொள்ளுகிறார் என்றும் வாசகர்களுக்கு தெளிவாகத் தெரிகிறது.

இக்கபோத் என்பது முதன்முதலில் வேதத்தில் காணப்பட்ட ஒரு பெயர் மற்றும் ஒரு இருண்ட பின்னணியைக் கொண்டுள்ளது. பெலிஸ்தியரோடு யுத்தம் பண்ணும்போது இஸ்ரவேலர் தேவனுடையப் பெட்டியயைப் போர்க்களத்திற்கு கொண்டு வந்தனர். இது ஒரு தவறான நடவடிக்கை. இஸ்ரவேல் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு தேவனுடைய பெட்டி சிறைப்பிடிக்கப்பட்டது. பிரதான ஆசாரியரான ஏலியின் குமாரர் ஓப்னி மற்றும் பினகாஸ் கொல்லப்பட்டனர் (1 சாமுவேல் 4:17). ஏலியும் இறந்து விடுகிறார் (வச. 18). கர்ப்பமாயிருந்த பினகாஸின் மனைவி இந்தச் செய்திகளைக் கேட்டபோது, “அவள் குனிந்துப் பிரசவித்தாள். அவள் சாகும்போது “மகிமை இஸ்ரவேலரை விட்டுப் போயிற்று என்று சொல்லி தன் மகனுக்கு இக்கபோத் (மகிமை புறப்பட்டது) என்று பெயரிட்டாள்” (வச. 22).

அதிர்ஷ்டவசமாக, தேவன் ஒரு பெரிய கதையை வெளிப்படுத்துகிறார். அவருடைய மகிமை கடைசியாக இயேசுவிடம் வெளிப்படுத்தப்படும் என்று அவர் தம்முடைய சீஷர்களிடம் “நாம் ஒன்றாயிருக்கிறதைப் போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் (பிதா) எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று தம்முடைய சீஷர்களைப் பற்றி கூறினார் (யோவான் 17:22).

இன்றைக்கு தேவனுடையப் பெட்டி எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பரவாயில்லை. இக்கபோத் ஓடிவிட்டது. இயேசுவின் மூலம் தேவன் தம்முடைய மகிமையை நமக்குத் தந்திருக்கிறார். 

பாளயத்துக்குப் புறம்பே

நான் வளர்ந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை சந்தை நாள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நான் ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரை நினைவுகூறுகிறேன். ஹேன்சன்ஸ் நோயினால் (தொழுநோய்) விரல்களும், கால்விரல்களும் அரித்து விட்ட நிலையில், அவள் தன்னுடைய பாயின் மீது குனிந்து ஒரு சுரைக்காயைக் கொண்டு தன்னுடைய விளைச்சலை எடுத்துக்கொண்டு இருப்பாள். சிலர் அவளைத் தவிர்த்தனர். அவளிடம் தவறாமல் வாங்குவதை என் தாயார் ஒரு முக்கிய விஷயமாகக் கருதினார். நான் அவளை சந்தை நாட்களில் மட்டும் பார்ப்பேன். பின்னர் அவள் ஊருக்கு வெளியே மறைந்து விடுவாள். 

பழங்கால இஸ்ரவேலர் காலத்தில், தொழுநோய் உள்ளவர்கள் பாளயத்துக்கு புறம்பே வாழ வேண்டும். இது ஒரு கேவலமான வாழ்க்கை. இப்படிப்பட்டவர்களைக் குறித்து “அவர்கள் தனியே குடியிருக்க வேண்டும்” (லேவியராகமம் 13:46) என்று இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட சட்டம் கூறுகிறது. பாளயத்துக்குப் புறம்பே பலியிடப்பட்ட காளைகளின் சடலங்கள் எரிக்கப்பட்டன (4:12). நீங்கள் இருக்கவேண்டிய இடம் பாளயத்துக்குப் புறம்பே அல்ல.

இந்தக் கடினமான உண்மை எபிரெயர் 13ல் இயேசுவைக் குறித்து சொல்லப்படும் கூற்றுக்கு உயிர் கொடுக்கிறது. “ஆகையால் நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் போகக்கடவோம்” (வச. 13) நாம் எபிரெயருடைய பலி செலுத்தும் முறையை ஆராயும்போது, இயேசு நகர வாசலுக்குப் புறம்பே சிலுவையில் அறையப்பட்டது ஒரு முக்கியமான அம்சமாகும். 

நாம் பிரபலமாக இருக்கவும், கௌரவப்படவும், வசதியான வாழ்க்கை வாழவும் விரும்புகிறோம். ஆனால் “பாளயத்துக்குப் புறம்பே” அவமானம் இருக்கும் இடத்திற்குச் செல்ல தேவன் அழைக்கிறார். அங்கு தான் ஹேன்சன்ஸ் நோய் கொண்டிருக்கும் விற்பனையாளர்களை நாம் பார்க்கமுடியும். அங்குதான் உலகத்தால் நிராகரிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியும். அங்கு தான் இயேசுவையும் சந்திக்க முடியும்.