எதிர்மறையான காரியத்தைச் செய்தல்
வனாந்திரமான இடத்தில் நடைபயணமாக சுற்றுலா செல்வது, அச்சத்தை தரக்கூடியதாகக் காணப்படலாம். ஆனால், வெளி ஊர்களை சுற்றிப் பார்க்கும் ஆவலர்களுக்கு, இது மேலும் ஆவலைத் தூண்டுவதாகவே உள்ளது. வனாந்தரமான இடத்தில் நடந்து செல்லும் பயணிகளுக்கு அவர்கள் உடன் எடுத்துச் செல்லும் தண்ணீரை விட அதிக தண்ணீர் தேவைப்படும். ஆகவே வடிகட்டிகள் இணைக்கப்பட்டுள்ள தண்ணீர் புட்டிகளை அவர்கள் வாங்குகிறார்கள். புட்டிகளில் வடிகட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் போகும் வழியிலுள்ள நீர் நிலைகளில் புட்டிகளை நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், அப்புட்டிகளிலுருந்து நீரை அருந்தும் முறை நாம் நினைப்பதற்கு எதிர்மறையானது. புட்டிகளை சாய்ப்பதால் தண்ணீர் வெளியே வராது. தாகத்துடன் இருக்கும் நடை பயணி, வடிகட்டி வழியாக நீர் வெளியே வருவதற்கு புட்டிக்குள் மிகவேகமாக ஊத வேண்டும். இயற்கையாக நடைபெறும் காரியத்திற்கு பதிலாக உண்மையில் நடக்கும் செயல் எதிர்மறையாக உள்ளது.
நாம் இயேசுவைப் பின்பற்றும் பொழுது உண்மைக்கு எதிர்மறையான காரியத்தையே பார்க்கிறோம். உதாரணமாக உலகக் கட்டளைகளை கைக்கொள்வதின் மூலம் நாம் தேவனை நெருங்கிச் செல்ல இயலாது என்று பவுல் தெளிவுபடுத்துகிறார். “இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள் போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும், போதனைகளின்படியும் நடந்து, தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?” (கொலோ. 2:20-21) என்று பவுல் கேட்கிறார்.
அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? “நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால் மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோ. 3:1). மேலும் உயிரோடிருக்கும் மக்களிடம் “நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது” (கொலோ. 3:3) என்று பவுல் மேற்சொன்ன கேள்விக்கு பதில் அளித்தார்.
இந்த உலகக்காரியங்களுக்கு நாம் “மரித்தவர்களாகவும்,” கிறிஸ்துவுக்கென ஜீவிக்கிறவர்களாகவும் நம்மை கருதவேண்டும். “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக் கடவன்” (மத். 20:26) என்று கூறினதை வாழ்ந்து காண்பித்த இயேசுவின் வழியில் நடக்க நாம் இப்பொழுது விரும்புகிறோம்.
ஒருவரும் அந்நியரல்லை!
கானாவில் நான் சிறுவனாக ஓர் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்ந்து வந்தேன். அங்கு வாழ்ந்து வந்த மக்கள் மத்தியில் “உணவு வேளை, சிநேகிதர்கள் வரவேண்டாம்” என்ற முதுமொழி மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனென்றால் அங்கு உணவு கிடைப்பதில் மிகவும் கஷ்டமான காலமது. ஆகவே உணவு உண்ணும் வேளையில் ஒருவரது வீட்டிற்குச் செல்வது மரியாதை அற்ற செயல் என்று கருதினார்கள். அந்த முதுமொழி அயலகத்தாருக்கும், அந்நியருக்கும் பொருந்தும்.
சிறிதுகாலம் நான் பிலிப்பைன்ஸிலும் வாழ்ந்து வந்தேன். அங்கு உணவு வேளையில், முன்னறிவிப்பு எதுவுமின்றி நீங்கள் சென்றுவிட்டாலும், விருந்தளிப்பவருக்கு போதுமான அளவு உணவு இல்லாதபொழுதும், அவர்களுக்குள்ள உணவை நீங்களும் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்துவார்கள். சில காரணங்களால் கலாச்சாரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டபொழுது, அவர்களது கலாச்சாரத்தை காத்துக்கொள்வதற்காக தேவன் சில சிறப்பான கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் கட்டளைகள் - தேவனுடைய கட்டளைகளாக இருந்தாலும், மனிதர்களது உள்ளத்தை ஒருக்காலும் மாற்ற இயலாது. ஆகவே மோசே, “உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்” (உபா. 10:16) என்று கூறினார். அந்த சவாலை மோசே, இஸ்ரவேல் மக்களின் முன்வைத்தவுடன், அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த அந்நிய தேசத்தாரை அவர்கள் நடத்தி வந்த விதத்தைப்பற்றிக் கூறினார். “அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரை சிநேகிப்பீர்களாக” (உபா. 10:18–19) என்று கூறினார்.
இஸ்ரவேல் மக்கள் “தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமான” (உபா. 10:17) தேவனை சேவித்து வந்தார்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த இஸ்ரவேலரின் கலாச்சாரத்திற்கு வேறு அந்நியர்களை நேசிப்பதின் மூலம் மட்டும் தேவனோடு அவர்களுக்குள்ள உறவை வெளிக்காண்பிக்க வேண்டும்.
தேவனுடைய இந்த குணாதிசயத்தை சித்தரிக்கும் இந்தக்காரியம், இன்று நமக்கு என்ன கற்பிக்கிறது? நமது உலகில் ஒதுக்கப்பட்டவர்கள், தேவை உள்ளவர்களுக்கு நாம் தேவனுடைய அன்பை எவ்வாறு காண்பிக்க முடியும்?
நல்ல விசுவாசம், கெட்ட விசுவாசம்
“உனக்கு விசுவாசம் தேவை” என மனுஷர்கள் சொல்லுவார்கள். ஆனால், அதன் அர்த்தம் என்ன? எந்த விசுவாசமானாலும் அது நல்ல விசுவாசமா?
“உன்னிலும், உன்னிலிருக்கிற அனைத்தின் மேலும் விசுவாசம் வை” என ஒரு நூற்றாண்டு முன்பு சிந்தனையாளர் ஒருவர் எழுதினார். “எப்பேர்பட்ட தடையைக் காட்டிலும் மகத்தான ஒன்று உனக்குள் இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்.” இது கேட்க நன்றாக இருந்தாலும், நடைமுறை வாழ்வை எதிர்கொண்டு மோதும் பொழுது, இக்கூற்று சுக்குநூறாகிவிடும்.
தேவன் ஆபிரகாமைப் பார்த்து உன் சந்ததியார் எண்ணற்றவர்களாயிருப்பார்கள் என வாக்குத்தத்தம் பண்ணினார் (ஆதி. 15:4-5). ஆனால்,…
முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகள்
நமது அனுதின மன்னாவின் ஆசிரியராக வேலைபார்த்த ஆரம்ப நாட்களில், ஒவ்வொரு முறையும் மாதாந்திர தியான நூலின் அட்டையில் போடப்படும் வசனத்தை நானே தேர்வு செய்தேன். ஆனால் பின்பு, “இதினால் ஏதாவது பயன் உண்டோ?” என சிந்திக்க ஆரம்பித்தேன்.
கொஞ்சக்காலத்திற்கு பிறகு, இயேசுவை அறவே ஒதுக்கித்தள்ளிய தன் மகனுக்காக எப்படியெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜெபித்து வந்தார் என்பதை ஒரு வாசகர் தன் கடிதத்திலே விவரித்திருந்தார். பின்பு அவரை சந்திக்க வந்த அவருடைய மகன், அவர்கள் மேஜையின் மேலிருந்த தியான நூலின் அட்டையிலே இருந்த வசனத்தை…
இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்
சார்லட்டின் (Charlotte) தனது நண்பர்கள் சமூக ஊடகத்தில், பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அஜாக்கிரதையான அல்லது இகழ்வான காரியங்களை பதிவேற்றும் பொழுது, சார்லட் அவர்களின் கருத்துகளுக்கு உடன்படமாட்டாள். ஆனால் கனிவாக எதிர்ப்பை பதிவு செய்வாள். பிறருடைய கண்ணியத்திற்கு எப்பொழுதும் மதிப்பளித்து, எப்பொழுதும் ஊக்கமான நல்வார்த்தைகளையே பேசுவாள்.
கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பை வளர்த்து வந்த ஒரு நபரிடம், பேஸ்புக் (facebook) மூலம் சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. அவன் சார்லட்டின் அரிய நேர்மையையும், கண்ணியத்தையும் பாராட்டினான். காலப்போக்கில் அவனுக்குள் இருந்த பகைமை உணர்வு கரைந்தது. பின்பு…
தேவனுக்குப் பெயரிடுதல்
கிறிஸ்டோபர் ரெட் எழுதிய ‘நான் புரிந்து கொள்ள இயலாத கடவுள்’ என்ற புத்தகத்தில், எதிர்பாராத நபர்தான் முதல்முதலாக தேவனுக்கு பெயர் சூட்டியுள்ளார். அதுதான் ஆகார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகாரின் கதை மனித வரலாற்றைப் பற்றி மிக உண்மையான பார்வையைத் தருகிறது. தேவன், ஆபிராம், சாராயிடம் அவர்களுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்று சொல்லி ஆண்டுகள் பல கடந்து விட்டன. சாராய் வயது முதிர்ந்தவளாகி பொறுமையை இழந்து விட்டாள். தேவனுக்கு “உதவி செய்யத்தக்கதாக”, அக்காலத்து வழக்கத்தின்படி மோசமான ஒரு காரியத்தைச் செய்தாள். அவளது அடிமைப் பெண்ணாகிய…
நீங்கள் செய்யும் அந்தக் காரியம்
வாகனங்களின் அணிவகுப்பு புறப்படக் காத்திருந்த பொழுது, ஓர் இளம் கடற்படை வீரன் அவனது அதிகாரியின் வாகனத்தின் ஜன்னலை வேகமாகத் தட்டினான். எரிச்சலடைந்த அந்த அதிகாரி அவனது வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி ‘என்ன’? என்று கேட்டான்.
“நீங்கள் செய்ய வேண்டிய அந்தக் காரியத்தை செய்ய வேண்டும்” என்று அந்த கடற்படை வீரன் கூறினான். “என்ன காரியம்”? என்று அந்த அதிகாரி கேட்டான். “நீங்கள் எப்பொழுதும் செய்வீர்களல்லவா அந்தக் காரியம்” என்று அந்த கடற்படைவீரன் கூறினான்.
அந்த அதிகாரிக்கு அப்பொழுதுதான் மனதில் தோன்றியது, அதாவது அவன்…
யாரைத் தற்காக்கிறீர்கள்?
இலக்கண ஆசிரியர் இலக்கண வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வகுப்பிற்கு முன் வந்து நின்று, ஒரு வாக்கியத்தை இலக்கண ரீதியில் விளக்கும்படி கேத்தலீனிடம் கூறினார். அவள் மிகவும் பயந்து விட்டாள். அவள் சமீப காலத்தில் தான் அந்தப் பள்ளியில் வந்து சேர்ந்திருந்தாள். ஆகவே மேற்கூறப்பட்ட இலக்கணத்தை கற்றது கிடையாது. அந்த வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.
உடனே, அவளைத் தற்காக்க ஆசிரியர் முன் வந்தார். “விரைவில் எதிர்காலத்தில் அவள் உங்கள் எல்லாரையும்விட மிகவும் தலைசிறந்தவளாகி விடுவாள்” என்று விளக்கினார். அநேக ஆண்டுகளுக்குப்…
தாராளமாகக் கொடுக்கும் கரம்
1891ம் ஆண்டு பிட்டி மேசன் அடையாளம் கண்டுகொள்ள முடியாத கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாள். அடிமையாகப் பிறந்த ஓர் பெண்ணிற்கு இவ்வாறு நடப்பது ஓர் அசாதாரணமான காரியம் அல்ல. ஆனால் பிட்டியைப் போல பல சிறந்த சாதனைகளைப் புரிந்த பெண்ணிற்கு இவ்வாறு நடந்தது சற்று சிந்திக்க வேண்டிய ஒரு காரியமே. 1856ம் ஆண்டு நீதிமன்றத்தில் போராடி தனக்கு சுதந்தரத்தை வெற்றிகரமாகப் பெற்றபின், வியாபாரத்தில் சிறந்த தீர்மானங்களை எடுக்கும் திறமையுடன் சிறந்த செவிலியாகப் பணிபுரியும் திறமையும் சேர்ந்ததால் நன்கு உழைத்து செல்வத்தைத் திரட்டினாள். தங்கள் நாட்டை விட்டு,…