எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டிம் கஸ்டாப்சன்கட்டுரைகள்

சகோதரனுக்கு சகோதரன் இடையே

எனக்கும் என் இளைய சகோதரனுக்கும் ஒரு வயதிற்குள்ளாகத்தான் இடைவெளி இருந்தது. ஆனால், நாங்கள் வளரும் பொழுது இருவருக்கும் இடையே கடுமையான போட்டி (சண்டை) இருந்தபடியினால், எங்களது தகப்பனார் நிலையை நன்கு புரிந்துகொண்டார். ஆனால், எனது தயார் எங்களைப் பற்றி அவ்வளவாக புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் தகப்பனாருக்கு சகோதரர்கள் இருந்தார்கள், தாய்க்கு இல்லை.

உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையே போராட்டம் என்ற தலைப்பின் கீழே ஆதியாகமத்தில் உள்ள நிகழ்ச்சிகளோடு எங்களது கதை ஒத்துப்போவதாக இருந்தது. காயீன், ஆபேல் (ஆதி. 4). ஈசாக்கு, இஸ்மவேல் (ஆதி. 21:8-10 பென்யமீனைத் தவிர யோசேப்பும் அவனது மற்ற சகோதரர்களில் உறவு (ஆதி. 37). ஆனால், சகோதரனுக்கு சகோதரர் இடையே இருந்த கடுமையான பகைக்கு ஏசா, யாக்கோபு சிறந்த உதாரணம்.

ஏசாவின் இரட்டைச் சகோதரனான யாக்போபு, ஏசாவை இருமுறை ஏமாற்றி விட்டான். ஆகவே, ஏசா யாக்கோபைக் கொல்லத் தீர்மானித்தான் (ஆதி. 27:41) அநேக ஆண்டுகளுக்குப் பின் ஏசாவும், யாக்கோபும் சமரசமானார்கள் (ஆதி. 33). ஆனால், அவர்களுக்கு இடையே இருந்தபோட்டி மனப்பான்மை, அவர்களது பின் சந்ததியாரிடமும் பரவி ஏதோம், இஸ்ரவேல் என்ற இரு பகைமை நாடானார்கள். இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க ஆயத்தமான பொழுது, ஏதோமியர் ஒரு சேனையோடு வந்து அவர்களுக்கு எதிர்த்து நின்றார்கள் (எண். 20:14-21). அநேக காலம் கழித்து, எருசலேம் குடிகள் அவர்களுக்கு எதிராக வந்த படைக்கு பயந்து ஓடினபொழுது ஏதோமியர் அவர்களைக் கொன்று குவித்தார்கள் (ஒபதி. 1:10-14).

வேதாகமம் நமது உடைந்துபோன நிலைமைகளைப் பற்றி மட்டும் கூறாமல், தேவனுடைய மீட்பின் செய்தியைப் பற்றியும் கூறுவது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன் (யோவா. 13:34) என்று இயேசு தமது சீடர்களிடம் கூறி, அனைத்தையும் மாற்றியமைத்துவிட்டார். அதன் மூலம் அவர் நமக்காக மரிப்பதின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக் காண்பித்துள்ளார்.

நானும் என் சகோதரனும் வளர்ந்த பின்பு, நாங்கள் ஒருவரையொருவர் அதிகம் நேசிப்பவர்களானோம். அதுதான் தேவனுடைய செயல். அவர் அருளும் மன்னிப்பை நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது, அவரது கிருபை, சகோதரர்கள் மத்தியில் உள்ள பகைமையை சகோதர சிநேகமாக மாற்றிவிடும்.

கிறிஸ்துவுக்குள் உருவாக்கப்படல்

மாற்கின் தகப்பனார் அவரது குடும்பத்தை> குடும்ப கூடுகைக்கு அழைத்திருந்த பொழுது, மாற்கு அவனது குழந்தை பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தான். அவனது குடும்பத்தின் கார் பழுதடைந்துவிட்டது. மாத இறுதியானவுடன் அவனது குடும்பத்தின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிடும். மாற்கின் தந்தை மனம் பதறாமல் ஜெபம் பண்ணினார். பின்பு அவரது குடும்ப அங்கத்தினரிடம் தேனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கும்படி கூறினார். தேவனுடைய உதவி ஆச்சரியப்படத்தக்க பல்வேறு வழிகளில் வந்ததை மாற்கு இன்று நினைவு கூறுகிறான். அவர்களது நண்பர் ஒருவர் அவர்களது காரை பழுதுபார்த்து கொடுத்தார். எதிர்பாராத நபரிடமிருந்து காசோலைகள் வந்தன. அநேகர் அவர்களுக்கு தேவையான உணவை வீட்டிலே வந்து கொடுத்தார்கள். நன்றியுள்ள இருதயங்களோடு குடும்பத்தினர் தேவனை துதிப்பது இலகுவாக இருந்தது. ஆனால், அவர்களது குடும்பத்தின் நன்றியுணர்வு ஒரு நெருக்கமான சுழ்நிலையினால் உண்டானது.

சங்கீதம் 57 ஆராதனைப் பாடல்களுக்கான உணர்ச்சி பூர்வமான தூண்டுதலை உண்டாக்குகிறது. “தேவனே வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்” (வச. 11) என்று தாவீது அறிவித்த பொழுது மத்திய கிழக்கு நாட்டில் மகிமை பொருந்திய இரவு நேர ஆகாயத்தை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்திருப்பான். அல்லது ஒருவேளை ஒரு கூடாரத்தில் நடந்த ஒரு ஆராதனையில் அவன் பாடிக்கொண்டிருப்பான் என்று நாம் கற்பனை பண்ணலாம். ஆனால், உண்மையில் தாவீது அவனது உயிருக்குப் பயந்து ஒரு குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது அந்தபாடலைப் பாடியுள்ளான்.

இந்த சங்கீதத்தில் தாவீது “சிங்கங்களின் நடுவாக இருக்கிறேன்” என்று கூறுகிறான். “தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும் அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.” சங்கீதம் 57:4 என்றும் தாவீது கூறியுள்ளார். தாவீதின் நெருக்கங்களில் இந்த துதி சங்கீதம் உருவானது. அவனை கொல்லுவதற்கு அவனைத் தொடர்ந்த அவனது எதிராளிகள் நெருக்கினாலும் கவலைப்படாமல் “என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது. தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்” (வச. 7) என்ற இந்த ஆச்சரியமான வார்த்தைகளை தாவீதினால் எழுத முடிந்தது.

இன்று நாம் எப்படிப்பட்ட நெருக்கங்களை சந்தித்தாலும், நமக்கு உதவி செய்ய ஆயத்தமாகவுள்ள தேவனண்டைஓடிவிடலாம். அப்பொழுது அவரது மாறாத நித்திய கரிசனை நம்மேல் உள்ளது என்ற நம்பிக்யோடு தேவனை துதித்து போற்றலாம்.

பாம்பும் மூன்று சக்கர சைக்கிளும்!

கானா நாட்டில் நானும் எனது சகோதரனும் சிறு குழந்தைகளாயிருந்த போது நடந்த ஒரு கதையை நான் பல முறை கூறிவந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தபடி எனது சகோதரன் ஒரு நல்ல பாம்பின் மேல் தனது பழைய, இரும்பாலான மூன்று சக்கர சைக்கிளை நிறுத்திவிட்டான். மிகவும் கனமான அந்த சைக்கிளின் முன் சக்ககரத்தில் அந்தப் பாம்பு சிக்கிக்கொண்டது.

எனது தாயாரும் சித்தியும் மரித்தபின், இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட எனது தாயாரின் கடிதத்தை நாங்கள் கண்டெடுத்தோம். உண்மையில், அந்தப் பாம்பின் மேல் சைக்கிளை நிறுத்தியது நான்தான் என்றும், அதை என் தாயாருக்கு என் சகோதரன் அறிவிக்க ஓடினான் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை நேரடியாக கண்ணால் பார்த்த என் தாயாரின் வார்த்தைகள் உண்மையை வெளிப்படுத்தின.

துல்லியமான பதிவுகளின் முக்கியத்துவத்தை லூக்கா அறிந்திருந்தார். எவ்வாறு இயேசுவின் சரிதை “ ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தார்கள்” (லூக். 1:2) என்றும், “அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று” (வச. 4) என்றும் லூக்கா விளக்கமளிக்கிறார். தேயோப்பிலுவுக்கு அவர் எழுதுகையில், “…உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும்” (வச. 3) என்று கூறுகிறார். இவ்வாறாக உருவானதுதான் லூக்கா சுவிஷேம். பின்பாக, அப்போஸ்தலர் நடபடிகளின் முகவுரையை எழுதும் லூக்கா, “அவர் பாடுபட்ட பின்பு, இயேசுவானவர் அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” (அப். 1:3) என எழுதியுள்ளார்.

நமது விசுவாசமானது மற்றவர்கள் நமக்குச் சொன்னதைச் சார்ந்தோ, மற்றவரது விருப்பநிலை சார்ந்தோ கிடையாது. அது தேவனோடு மனிதருக்குச்  சமாதானம் உண்டாக்க வந்த இயேசுவானவரின் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இயேசுவானவரின் கதை நிலைத்து நிற்கிறது!

திருப்பம்!

இராணுவத்தில் திறம்பட பணியாற்றிய ஒரு முதியவரின் அடக்க ஆராதனையில் பிரசங்கித்த போதகர், மரித்தவர் எங்கிருப்பார் என்ற கேள்வியை எழுப்பினார். பின்னர் எப்படி மனிதர்கள் கடவுளை அறியலாமென கூறாமல் வேதாகமத்தில் எங்கும் எழுதப்படாத காரியங்களைக் குறித்து யூகங்களை அறிவித்தார். நம்பிக்கை எங்கே போனது என நான் சிந்திக்கலானேன்.

இறுதியாக முடிவுப் பாடலை பாடும்படி அவர் கூறினார். “ தேவனே நீர் எவ்வளவு பெரியவர்” என்ற பாடலைப் பாட நாங்கள் எழுந்தபோது, தேவனை கூடியிருந்த யாவரும் தங்கள் உள்ளத்திலிருந்து துதிக்க ஆரம்பித்தனர். சில நொடிகளுக்குள், எங்களது அறையின் ஆவிக்குரிய நிலை முற்றிலும் மாறியது. திடீரென ஆச்சரியப்படும் வண்ணம், மூன்றாவது சரணத்தை நான் பாடுகையில் உணர்ச்சிகள் எனது குரலை முற்றிலும் அடக்கிற்று!

                    தேவன் தமது குமாரனை மறைத்துவைக்காமல்

                    மரிக்க அனுப்பியதை நான் எண்ணி துதிக்கிறேன்

                    சிலுவையில் என் பாவத்தை மகிழ்வுடன் சுமந்தார்

                    இரத்தம் சிந்தி என் பாவத்திற்காய் அவர் மரித்தார். (How great Thou art)

அந்தப் பாடலைப் பாடி முடிக்கும் வரையிலும் தேவன் அந்த அடக்க ஆராதனைக்கு வருவாரா, மாட்டாரா என்று சிந்தித்தேன். அவர் ஒருபோதும் விலகிச் செல்லார். எஸ்தர் புத்தகம் இவ்வுண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்நிய நாட்டில் வசித்த யூதர்களை பலம் பொருந்திய மக்கள் அழிக்க முயன்றனர். அந்த மிக இருளான வேளையிலும் அடிமைகளாய் வாழ்ந்த இஸ்ரவேலர் தங்களது உரிமையைக் காத்துக்கொள்ள ஒரு தேவனை அறியாத ராஜா அவர்களுக்கு உதவி செய்தான் (எஸ். 8:11-13). வெற்றிகரமாக இஸ்ரவேலர் தங்களைக் காத்துக் கொண்டனர். கொண்டாட்டம் தொடங்கியது (9:17-19).

அடக்க ஆராதனையில் பாடப்பட்ட ஒரு பாடலில் தேவன் வெளிப்பட்டார் என்பது வியப்பான ஒரு காரியமல்ல. ஆண்டவர் ஒரு மனுக்குல அழிவை கொண்டாட்டமாக மாற்றினார், சிலுவையிலறையப்படுவதை உயிர்த்தெழுதலாகவும் இரட்சிப்பாகவும் மாற்றினார்!

பேராசிரியரின் பாவ அறிக்கை

தனது மாணவர்களின் தரமற்ற எழுதும் பழக்கங்களினால் மிகவும் அதிர்ச்சியடைந்த எழுத்தாளரும் கல்லூரி பேராசிரியருமான டேவிட் ஃபோஸ்டர் வாலஸ், மாணவர்களது திறமையைத் தான் எவ்வாறு மேம்படுத்தக்கூடும் என யோசித்தார். அப்போதுதான் ஒரு திடுக்கிடும் கேள்வி அவர் முன் எழுந்தது. “ஆரவாரமிக்க, குறுகிய மனதுடைய, சுயநீதிமிக்க, கீழ்த்தரமான” தம்மைப் போன்ற ஒருவரிடம் கற்றுக்கொள்வதை எப்படி மாணவர்கள் விரும்புவார்கள் என்ற கேள்வியை அவர் தனக்குத் தானே கேட்க வேண்டியதாயிருந்தது. பெருமை என்னும் பிரச்சனை இருப்பதை அவர் அறிந்தார்.

அந்தப் பேராசிரியர் மாற முடியும், மாறினார். எனினும் தன்னுடைய மாணவரில் ஒருவராக அவர் மாற முடியாது. இயேசுவானவர் பூவுலகிற்கு வந்தபோது, நம்மில் ஒருவராக அவர் மாறியதன் மூலம் தாழ்மை இன்னதென்று அவர் நமக்குக் காண்பித்ததை அனைத்துவித எல்லைக் கோடுகளையும் தாண்டிய இயேசுவானவர், பிறருக்கு சேவை செய்வதிலும், போதிப்பதிலும், தமது பிதாவின் சித்தத்தைச் செய்வதிலும் மும்முரமாயிருந்தார்.

தாம் சிலுவையில் அறையப்பட்ட வேளையிலும், தம்மைக் கொலை செய்தவர்களை மன்னிக்குமாறு இயேசு ஜெபித்தார் (லூக். 23:34). வேதனையின் மத்தியிலும் தம்மோடு மரித்துக் கொண்டிருந்த குற்றவாளிக்கு அவர் நித்திய ஜீவனை அளித்தார் (வச. 42,43).

இயேசுவானவர் ஏன் அப்படி நடந்து கொண்டார்?  நம்மைப் போன்ற மக்களுக்குத் தமது வாழ்நாள் இறுதி மட்டும் அவர் ஏன் சேவை செய்தார்? அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார். அன்பினால் அவர் அப்படிச் செய்தார்! மேலும், “ அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” பின்பும் அவர் “நாமும் சகோதரருக்காக ஜீவனை கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவா. 3:16) என்றும் கூறுகிறார்.

அவரது அன்பு நமது பெருமை, ஆரவார மற்றும் கீழ்த்தரமான குணம் முற்றிலும் அகற்றுகிறது. அதை மிகவும் வல்லமையான விதத்தில் அவர் செய்தார். தமது ஜீவனையே அவர் கொடுத்தார்!

அதிலிருந்து தப்பித்தல்

2004 ஜூன் மாதத்தில் வேன்கூவரிலுள்ள கலைக் கூடத்தில், கனடாவைச் சேர்ந்த வீரர் பெக்கிஸ்கார்டுக்கு திறந்த வெளிய பனிச் சறுக்கு போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.

அச்செயல் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. ஏனென்றால் 2002ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி உட்டாவில் நடந்தது. அதில் ஒருவர் தங்கப் பதக்கமும், மற்றொருவர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஸ்காட் வெண்கல பதக்கம் வென்றாள். தங்கப்பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற இருவரும் தடைபண்ணப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே அவர்கள் இருவரும் பதக்கப் பட்டியலிருந்து நீக்கப்பட்டார்கள்.

அதன் விளைவாக, பெக்கிஸ்கார்ட் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். ஆனால், ஒலிம்பிக் பதக்கம் அணிவிக்கப்படும் மேடையில் நிற்கும் பொழுது, அவளது தேசத்தின் தேசீய கீதத்தை கேட்கக்கூடிய தருணத்தை அவள் இழந்துவிட்டாள். அவளுக்கு நடந்த அந்த அநீதி சரிசெய்யப்படக் கூடாதாக இருந்தது.

எந்த விதமான அநீதியும் நமக்கு சஞ்சலத்தை அளிக்கிறது. கடினப்பட்டு உழைத்து பெற்ற பதக்கம் மறுக்கப்பட்ட அநீதியைவிட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அநேக தவறுகள் நடை பெறுகின்றன. காயீன், ஆபேல்பற்றிய கதை, அநீதியின் உச்சகட்டத்தை விளக்குகிறது (ஆதி. 4:8). முதல் பார்வையில், காயீன் அவனது சகோதரனை கொலை செய்ததிலிருந்து தப்பிவிட்டதுபோலக் காணப்பட்டது. எப்படியெனில் அவன் நீண்ட ஆயுள் உள்ளவனாக வாழ்ந்து ஒரு பட்டணத்தைக் கூட கட்டினான் (வச. 17).

ஆனால், தேவனோ காயீனுக்கு எதிர்த்து நின்றார். “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது” என்றார் (வச. 10). பிற்காலத்தில் புதிய ஏற்பாட்டில் பொல்லாங்கானவனான காயீனைப்போல இருக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது (1 யோவா. 3:12; யூதா 11). ஆனால், ஆபேலைக் குறித்தோ “அவன் மரித்தும் இன்னமும்; பேசுகிறான்” என்று (எபி. 11:4) நாம் வாசிக்கிறோம்.

தேவன் நீதியைக் குறித்தும், தவறுகளை திருத்திக் கொள்வதைக் குறித்தும், பெலனற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பது குறித்தும், மிகவும் கரிசனையுடனும், அக்கறையுடனும் இருக்கிறார். அநீதியான செயல் செய்த எவரும் ஒருகாலும் தப்ப இயலாது. அதைப் போலவே தேவனுக்காக நாம் விசுவாசத்துடன் செய்யும் பணிகளுக்குத்தக்கதான பலனை, அவர் நமக்கு அருளாமல் இருக்கமாட்டார்.

குறுக்கு வழிகளில் செல்லுதல்

நான்சி, அவளது கரத்திலிருந்த தேனீர் கோப்பையிலிருந்து தேனீரை மெதுவாக குடித்துக் கொண்டே, அவளது சினேகிதியின் வீட்டிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்து பெருமூச்சு விட்டாள். இளவேனிற் காலத்து மழையினாலும், இதமான சூரிய ஒளியினாலும், ஏற்கனவே அவளது சினேகிதியினால் நன்கு பராமரிக்கப்பட்டிருந்த பூ பாத்திகளில் லில்லி, ப்ளாக்ஸ், ஐரிஸ், பிரிம் ரோஸ் போன்ற பல வண்ணப் பூக்கள் பூத்து குலுங்கின.

“நான் எந்த ஒருவேலையும் செய்யாமல் அந்த அழகிய காட்சியை காண விரும்புகிறேன்”, என்று ஏக்கத்துடன் நான்சி தனக்குள் கூறிக்கொண்டாள்.

சில குறுக்கு வழிகள் நன்றாகவும், எளிதில் செயல்படக் கூடியதாகவும் இருக்கும். வேறு சில குறுக்கு வழிகள் நமது ஆவியை அவித்துப்போட்டு நம்முடைய வாழ்க்கையை அழித்து விடுகின்றன. நம்மை விட முற்றிலும் மாறுபட்ட தன்மையுள்ள மக்களோடு நாம் ஈடுபாடு கொள்ளும் பொழுது எந்தவிதமான இடர்பாடோ கஷ்டங்களோ இன்றி, புத்துணர்ச்சியுடன் அவருடன் பழக வேண்டுமென்று விரும்புகிறோம். உண்மையில் நமது வாழ்க்கையின் ஓட்டத்தில் ஏற்படக் கூடிய ஆபத்தான சூழ்நிலைகளையோ தோல்விகளையோ சந்திக்காமல் உன்னதமான வாழ்க்கை வாழ நாம் விரும்புகிறோம். நாம் தேவனை பிரியப்படுத்த விரும்புகிறோம். ஆனால், நமக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாத சூழ்நிலைகளில்தான் அவ்வாறு விரும்புகிறோம்.

நமது வாழ்க்கையை முற்றிலுமாக இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க உறுதியான முடிவு எடுக்காமல் எந்த ஒரு குறுக்கு வழியிலும் அவரை அடையமுடியாது என்று இயேசு அவருடைய சீஷர்களுக்கு தெளிவாக கற்பித்தார்.

“கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று” (லூக். 9:62)  ராஜ்ஜியத்தை பெற்றுக் கொள்வது சாத்தியம் என்று எண்ணின ஒரு சீஷனை இயேசு எச்சரித்தார். இயேசுவை பின்பற்றுவதற்கு நமது அடிப்படை நம்பிக்கைகளை முழுவதுமாக மாற்றுவது அவசியமாக உள்ளது.

இயேசுவில் நமது விசுவாசத்தை வைக்கும்பொழுதுதான் விசுவாசம் செயல்பட ஆரம்பிக்கிறது. “என் நிமித்தமாகவும், சுவிசேஷத்தின் நிமித்தமாகவும், வீட்டையாவது…விட்டவன் எவனும் இம்மையிலே துன்பங்களோடே கூட… அடைவதோடு மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்” (மாற். 10:29-30) என்று கூறினார். இது எவ்வளவு சிறப்பானகாரியம் ஆனால் அவர் அவரது பரிசுத்தாவியை நமக்கு அருளியுள்ளார். ஆதனால் நமக்கு பரிபூரணமான, மகிழ்ச்சியான வாழ்க்கை நித்திய நித்தியமாகக் கிடைக்கிறது.

மௌனம்

நிவாரணப்பொருட்களை ஏற்றி வந்த வண்டிகள், கடகடவென்ற சத்தத்தோடு, அக்கிராமத்தின் பழைய குடிசைகளை கடந்து சென்றபோது, அங்கிருந்த கோழிகளெல்லாம் பயந்து சிதறியோடின. காலணிகள் ஏதுமின்றி வெளியே இருந்த பிள்ளைகள் வண்டிகள் செல்வதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தனர். மழையினால் சேதமடைந்த “இச்சாலையில்” வண்டிகள் செல்வது மிக அரிது.

திடீரென இவ்வண்டிகளுக்கு முன்பாக ஓரு பிரமாண்ட மாளிகை தென்பட்டது. அது அவ்வூர் மேயரின் வீடு. ஆனால் அவர் இப்பொழுது அங்கு குடியிருக்கவில்லை. தன் ஜனங்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்துக்கொண்டிருக்கையில், அம்மேயர் வேறு ஊரில் ஆடம்பரமான சுகஜீவியத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.

இதுபோன்ற அநியாயங்கள் நம்மை கோபமடைய செய்கிறது. தேவனுடைய தீர்க்கத்தரிசிகளும் இவ்வாறு கோபம்கொண்டார்கள். ஆபகூக், மிகுந்த அநீதியையும் அட்டூழியத்தையும் கண்டபோது, “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே!” என தேவனை நோக்கி முறையிட்டான் (ஆப:1:2). ஆனால், கர்த்தரோ இதை ஏற்கனவே அறிந்திருந்தபடியினால், “தன்னுடையதல்லாததை தனக்காக சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ...  தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தை தேடுகிறவனுக்கு ஐயோ!” எனக் கூறினார் (2:6,9). நியாயத்தீர்ப்பு வந்துகொண்டிருந்தது!

தேவனுடைய நியாயத்தீர்ப்பு பிறர் மேல் வருவதை நாம் வரவேற்கிறோம். ஆனால் ஆபகூக் புத்தகத்தில் உள்ள ஒரு முக்கிய செய்தி நம்மை நிதானிக்க செய்யும். “கர்த்தரோவென்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மவுனமாயிருக் கக்கடவது,” (2:2௦) என்னும் வசனத்தில் “பூமி எல்லாம்” எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒடுக்குகிறவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும். சில சமயம், மௌனமாய் இருக்கிற தேவனுக்கு முன்பாக நாமும் மௌனமாய் இருப்பதே ஏற்றதாயிருக்கும்!

ஏன் மௌனம்? ஏனென்றால் நாம் மிக எளிதாக நம்முடைய ஆவிக்குரிய வறுமையை காணத் தவறிவிடுகிறோம். ஆனால், தேவனுடைய பரிசுத்த சமூகத்தில் நாம் மௌனமாய் காத்திருக்கும் போது நம்முடைய பாவ சுபாவத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

தேவன் மீது நம்பிக்கை வைக்க ஆபகூக் கற்றுகொண்டது போல, நாமும் கற்றுக்கொள்வோமாக. அவருடைய வழிகளையெல்லாம் நாம் அறியாதிருப்பினும், அவர் நல்லவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோமே. அவருடைய அதிகாரத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டு எதுவுமில்லை.

நமக்கு எண்ண வேண்டும்

“மாட்டுவண்டி ஓடின காலகட்டம் முதல் மனிதன் நிலவில் கால் பதித்த காலகட்டத்தையும் நான் கடந்துவந்துள்ளேன். ஆனால் அந்நீண்ட காலக்கட்டம் இவ்வளவு குறுகியதாய் இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கவே இல்லை”, என்று தன் பேத்தியிடம் ஒரு முதியவர் கூறினார். அதை அப்பெண் என்னிடம் பகிர்ந்து கொண்டாள்.

இவ்வாழ்க்கை குறுகியதுதான். ஆகவே நம்மில் அநேகர் என்றென்றும் வாழ விரும்பி இயேசுவண்டை செல்கிறோம். அதில் தவறேதுமில்லை, ஆனால், நித்திய ஜீவனைக் குறித்த உண்மையான புரிதலை நாம் அறிந்துகொள்ள தவறிவிடுகிறோம். நாம் தவறான காரியங்களைக் குறித்து விரும்பி ஏங்குகிறவர்களாகவே காணப்படுகிறோம். நம்மிடம் இருப்பதை விட  மேலானதைக் குறித்து வாஞ்சிக்கிறோம். அது நம் கைகள் எட்டும் துரத்தில்தான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதை அடைந்துவிட ஏங்குகிறோம். உதாரணத்திற்கு, ‘நான் பள்ளிப்படிப்பை முடித்து விட்டால் எவ்வளவு நலமாயிருக்கும்?, ‘எனக்கு அந்த வேலை கிடைத்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்?’, ‘நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றால் எவ்வளவு நலமாயிருக்கும்?, என்று அநேக எதிர்பார்ப்புகள். ஆனால் ஒரு நாள், அம்முதியவரைப் போன்று, ‘காலம் எப்படி இவ்வளவு வேகமாய் கடந்து விட்டது’ என்று அவருடைய வார்த்தைகளை நாமும் எதிரொலிப்போம்.

உண்மை என்னவெனில், இப்பொழுது’ நாம் நித்திய வாழ்வை உடையவர்களாய் இருக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல், “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே”, என்று கூறுகிறார் (ரோம. 8:2). மேலும், “மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக் குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்” (வச. 5) எனவும் கூறியுள்ளார். அதாவது, கிறிஸ்துவண்டை நாம் வரும்பொழுது, நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் மாறிவிடும். விளைவு, நாம் விரும்புவதை பெற்றுக்கொள்கிறோம். “மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமும்” (வச. 6).

நாம் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால், ‘வேறொரு’ நபரை திருமணம் செய்து கொண்டு, ‘வேறு’ இடத்தில், ‘வேறு’ நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்பது வாழ்வின் மிகப்பெரிய பொய்களில் ஒன்று. நம்முடைய வாழ்வை, நாம் கிறிஸ்துவுக்குள் காணும்பொழுது, அவ்வாழ்வின் குறுகிய காலக்கட்டத்தையும் அதன் வருத்தங்களையும் குறித்து சிந்திப்பதை விடுத்து, இன்றைக்கும், என்றென்றைக்கும் அவரோடு நாம் முழமையாய் வாழக் கூடிய வாழ்வோடு  நாம் பரிமாற்றிக்கொள்வோமாக.