மலைமுகடுகளின் பாதை
ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.
தேவனுக்கு வேறு திட்டங்கள் இருந்தன
அவர்களின் துல்லியமான வயது தெரியவில்லை. தேவாலயத்தின் படிகளில் ஒருத்தி கண்டெடுக்கப்பட்டாள்; மற்றவளுக்கோ அவள் கன்னியாஸ்திரீகளால் வளர்க்கப்பட்டவள் என்பது மட்டுமே தெரியும். இரண்டாம் உலகப் போரின்போது போலந்தில் பிறந்து, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாக ஹலினா அல்லது கிறிஸ்டினா ஒருவரையொருவர் பற்றி அறிந்திருக்கவில்லை. பின்னர் மரபணு பரிசோதனை முடிவுகள் அவர்கள் சகோதரிகள் என்பதை வெளிப்படுத்தியது, மற்றும் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைவதற்கு வழிவகுத்தது. இது அவர்களின் யூத பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தியது அவர்கள் ஏன் கைவிடப்பட்டனர் என்பதை விளக்குகிறது. தீயவர்கள் சிறுமிகளை அவர்களின் அடையாளத்தின் காரணமாகக் கொல்ல முயன்றிருந்தனர்..
பயந்துபோன ஒரு தாய், சாகப்போகும் தன் குழந்தைகளை அவர்கள் மீட்கப்படக்கூடிய இடத்தில் விட்டுவிடுவது என்பதைக் கற்பனை செய்தால், மோசேயின் கதையை நினைவுபடுத்துகிறது. ஒரு எபிரேய ஆண் குழந்தையாக, அவர் இனப்படுகொலைக்காகக் குறிக்கப்பட்டார் (யாத்திராகமம் 1:22 ஐப் பார்க்கவும்). அவரது தாயார் தந்திரமாக அவரை நைல் நதியில் விட்டுவிட்டார் (2:3), அவருக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். மோசேயின் மூலம் தம்முடைய மக்களை மீட்பதற்கு அவள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு திட்டத்தைத் தேவன் வைத்திருந்தார்.
தேவனில் ஞானமான கட்டுப்பாடு
1863 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில் தெற்குப் படைகளின் பேரழிவுகரமான இழப்பைத் தொடர்ந்து, தோற்கடிக்கப்பட்ட தளபதி ராபர்ட் ஈ. லீ தனது தாக்கப்பட்ட துருப்புக்களை அவர்களின் சொந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தளபதி ஜார்ஜ் மீட் தலைமையிலான தனது படைகளைத் தாக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அவரது ஆட்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு, மாறாக மீட் தனது படைகளுக்கு ஓய்வளித்தார்.
அவரது வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என்று கோபமடைந்த லிங்கன், தனது இறகு மைக்கோலை எடுத்து, தனது நியாயமான கோபத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து, ஒரு குறிப்பை எழுதினார். மாற்றாக, அதின் உறையின் மேலும் அவர்: "தளபதி மீட் அவர்களுக்கு, ஒருபோதும் அனுப்பப்படவும் இல்லை அல்லது கையொப்பம் இடப்படவுமில்லை" என்றெழுதினார், உண்மையாகவே, அது ஒருபோதும் பெறப்படவில்லை.
லிங்கனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மற்றொரு சிறந்த தலைவர் நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார். எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், கோபம் என்பது ஆபத்தான ஆற்றல் வாய்ந்தது. சாலொமோன் ராஜா, "தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்" (நீதிமொழிகள் 29:20) என்றார். சாலொமோன் "நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்" (வ.4) என்பதை அறிந்திருந்தார். "மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்" (வ.11) என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.
இறுதியில், அந்த கடிதத்தை அனுப்பாதது, லிங்கனை அவரது உயர்மட்ட தளபதியை மனச்சோர்வடைய செய்வதிலிருந்து தடுத்தது, தேவையான போரை வெல்ல உதவியது மற்றும் ஒரு தேசத்தின் குணமாகுதலுக்கும் பங்களித்தது. அவருடைய கனமான கட்டுப்பாடு போன்ற உதாரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வது நமக்கும் நல்லது.
செவிட்டு இதயம்
தனது சைகை மொழி திறனை மேம்படுத்த, லீசா காது கேளாதோரோடு நெருங்கிப் பழகினாள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரைவில் புரிந்துகொண்டாள். காது கேளாதவர்கள் செவித்திறனுள்ள நபர்களால் மோசமாக ஒதுக்கப்படுகின்றனர், உதடு அசைவுகளை நன்றாகப் புரிந்துகொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள், மேலும் பணியிடத்தில் பதவி உயர்வுக்காக வழக்கமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளும் இவர்களுக்கு விளக்கப்படாமலேயே நடக்கின்றன.
செவித்திறனற்றவர்களுடன் இயல்பாக ஒன்றும் அளவிற்கு லீசாவின் செய்கை மொழி சீராக மேம்பட்டது. ஒரு விருந்தின்போது, காது கேளாத நபர் ஒருவர் லீசாவால் கேட்க முடியும் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். லீசா பதிலளிக்கும் முன், மற்றொரு நண்பர், "அவள் மனதளவில் செவிடு" என்று செய்கை காட்டினார். அவர்களின் உலகில் வாழ லீசாவின் விருப்பமே இங்குக் காரியம்.
காது கேளாதவர்களுடன் பழக லீசா தன்னை "தாழ்த்திக்கொள்ளவில்லை". அவளுடைய செவிப்புலன் தவிர, அவளும் அவர்களைப் போல ஒருத்தியே. ஆனால், நம் உலகில் வாழும்படிக்கும், நம் அனைவரையும் சந்திக்கும்படிக்கும், இயேசு "கீழே இறங்கி" வந்தார் . அவர் "தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்(தார்)த" (எபிரெயர் 2:9). கிறிஸ்து "மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்" (வ.14) மாம்சமானார். அவ்வாறு செய்வதன் மூலம், "ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்" (வ.15). மேலும், அவர் "தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்கு" (வ.17) முழுமனிதரானார்.
நாம் எதனை எதிர்கொண்டாலும், இயேசு அதை அறிகிறார், புரிகிறார். அவர் நம் இதயகுரலை கேட்கிறார். எல்லா வகையிலும் நம்முடன் இருக்கிறார்.
பிரமிப்பிற்கான ஜன்னல்
புகைப்படக் கலைஞர் ரான் முர்ரே குளிர் காலநிலையை விரும்புகிறார். "குளிர் என்றால் தெளிவான வானம், அது பிரமிப்பிற்கான ஒரு ஜன்னலைத் திறக்கும்!" என்று அவர் விளக்குகிறார்.
அலாஸ்கா பகுதியில் பூமியின் மிகவும் கண்கவர் ஒளி நிகழ்ச்சியான அரோரா பொரியாலிஸ் (வடக்கு விளக்குகள்)-ஐ பிரேத்யேகமாக படம்பிடிக்க வழிகாட்டும் சுற்றுலா சேவையை ரான் வழங்குகிறார். முர்ரே, இந்த அனுபவத்தை "தெய்வீகமானது" என்று விளக்குகிறார். நீங்கள் எப்போதாவது வானத்தில் வெவ்வேறு ஒளிகளிலும் வெவ்வேறாகத் தோன்றும் முனைப்பான பல வண்ணங்களை வெளிப்படுத்துகிற இந்த மாறுபட்ட காட்சியைப் பார்த்திருந்தால், அது ஏன் தெய்வீகமானது என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
ஆனால் இந்த ஒளிவிளக்கு தோற்றங்கள் வடக்கு பகுதியில் மட்டுமல்ல. அதே வகையான ஒளிவிளக்குகளான அரோரா ஆஸ்ட்ராலிஸ், ஏறக்குறைய பொரியாலிஸைப் போன்றவை, தெற்கில் அதே நேரத்தில் நிகழ்கிறது.
கிறிஸ்துமஸ் நிகழ்வைப் பற்றி சீஷன் யோவான் கூறுவதில், அவர் தொழுவத்தையும் மேய்ப்பர்களையும் தவிர்த்துவிட்டு, நேரடியாக "மனுஷருக்கு ஒளியாயிருந்(த)தது" (யோவான் 1:4) ஒருவரைக் குறிப்பிடுகிறார். யோவான் பின்னர் ஒரு பரலோக நகரத்தைப் பற்றி எழுதுகையில், அதன் ஒளியின் ஆதாரத்தை விவரிக்கிறார். இந்த "நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு" (வெளிப்படுத்துதல் 21:23). இந்த ஒளியின் ஆதாரம் இயேசு; யோவான் 1ல் குறிப்பிடப்பட்ட அதே ஆதாரம். மேலும் இந்த வருங்கால இருப்பிடத்தில் வசிப்பவர்களுக்கு, “இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார்” (22: 5).
அரோரா பொரியாலிஸ் மற்றும் ஆஸ்ட்ராலிஸை உருவாக்கிய உலகின் ஒளியானவரை வாழ்க்கை பிரதிபலிக்கும் போது, உண்மையிலேயே ஒரு பிரமிப்பான வாசலைத் திறக்கிறோம்.
ஜீவன் வெளிப்பட்டபோது
1986 இல், உக்ரைனில் செர்னோபில் அணுசக்தி விபத்து, உலகின் கவனத்தை மிகவும் ஈா்த்தது. பேரழிவின் ஆற்றல் அப்பட்டமாகத் தெரிந்ததால், கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் முக்கியமான அத்தியாவசியப் பணியில் அதிகாரிகள் விரைந்து பணியாற்றினர். அதிக கதிரியக்க குப்பைகளிலிருந்து வரும் ஆபத்தான காமா கதிர்கள், குப்பைகளைச் சுத்தம் செய்த ரோபோக்களை அழித்துக்கொண்டே இருந்ததது.
ஆகையால் அவர்கள் மனிதர்களை ”மனிதா்களை இயந்திரங்களாக" பயன்படுத்த வேண்டியிருந்தது! தொண்ணூறு வினாடிகள் அல்லது அதற்கும் குறைவான வேலை நேரத்தில், அபாயகரமான பொருட்களை அகற்றி, ஆயிரக்கணக்கான வீரமிக்க தனிநபர்கள் "செர்னோபில் அணுமின் நிலைய கலைப்பாளர்களாக" மாறினார்கள். தொழில்நுட்பம் செய்ய முடியாததை, தனிப்பட்ட துணிவுடன் மக்கள் செய்தனர்.
நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுக்கு எதிரான நமது கலகமும் ஒரு பேரழிவை உண்டாக்கியது, அது மற்ற எல்லா பேரழிவுகளுக்கும் வழிவகுத்தது (ஆதியாகமம் 3 ஐப் பார்க்கவும்). ஆதாம் மற்றும் ஏவாள் மூலம், நாம் நமது சிருஷ்டிகரைப் பிரிந்திடத் தெரிந்துகொண்டோம், மேலும் அந்த செயல்முறையில், நம் உலகையே ஒரு நச்சுக் குப்பைகூளமாக மாற்றினோம். அதை நாமே சுத்தம் செய்ய முடியவே முடியாது.
அதுதான் கிறிஸ்துமஸின் முழு கருத்தே. அப்போஸ்தலன் யோவான் இயேசுவைப் பற்றி, “அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்திமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவான் 1:2) என்றெழுதினார். பின்னர் யோவான், “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (வ. 7) என்று அறிவித்தார்.
தம்முடைய சிருஷ்டிகளால் இயலாததை, இயேசு அருளியுள்ளார். நாம் அவரை விசுவாசிக்கும்போது, அவர் நம்மை தம்முடைய பிதாவுடன் சரியான உறவிற்கு மீட்டெடுக்கிறார். அவர் மரணத்தையே கலைத்துவிட்டார். ஜீவன் தோன்றியது.
நம் சத்துருவை நேசித்தல்
இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கக் கடற்படையின் மருத்துவப் படை வீரர் லின் வெஸ்டன், எதிரிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தீவுகளைத் தாக்கியபோது கடற்படையினருடன் கரைக்குச் சென்றார். தவிர்க்க முடியாமல், பயங்கர உயிரிழப்புகள் ஏற்பட்டன. காயமுற்ற வீரர்களை வெளியேற்ற, அவர் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். ஒரு சந்தர்ப்பத்தில், அவரது படையினர் மோசமான வயிற்றுக் காயத்துடன் இருந்த எதிரி வீரனைச் சந்திக்க நேர்ந்தது. காயத்தின் தன்மை காரணமாக, அவனுக்குத் தண்ணீர் கொடுக்க இயலவில்லை. அவனை உயிருடன் காப்பாற்ற, சிறிய அதிகாரியான வெஸ்டன், நரம்பு வழியாக பிளாஸ்மாவை (இரத்தத் திரவம்) செலுத்தினார்.
"அந்த பிளாஸ்மாவை நம் ஆட்களுக்குச் சேமித்து வை, ஸ்வாபி(மாலுமி)!" என்று கடற்படை வீரர்களில் ஒருவன் கத்தினான். கடைநிலை அதிகாரி வெஸ்டன் அவனைப் புறக்கணித்தார். இயேசு என்ன செய்வார் என்பதை அவர் அறிந்திருந்தார்: "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்" (மத்தேயு 5:44). இயேசு, அந்த சவாலான வார்த்தைகளில் சொன்னதைக் காட்டிலும் அதிகம் செய்தார்; அவர் அதனை வாழ்ந்து காட்டினார். அவரை பகைத்த கூட்டம், அவரைப் பிடித்து, பிரதான ஆசாரியனிடம் அழைத்துச் சென்றபோது, "இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்(தனர்)து" (லூக்கா 22:63). போலியான நியாயவிசாரணைகள் மற்றும் மரணதண்டனை மூலம் அவர்களின் துஷ்பிரயோகம் தொடர்ந்தது. இயேசு அதைச் சகிக்க மட்டும் செய்யவில்லை, ரோமானிய வீரர்கள் அவரை சிலுவையில் அறைந்தபோது, அவர்களின் மன்னிப்புக்காக ஜெபித்தார் (23:34).
நம்மை உண்மையாகக் கொல்ல முயலும் எதிரியை நாம் சந்திக்காமலிருந் திருக்கலாம். ஆனால் ஏளனத்தையும், பரியாசத்தையும் சகிப்பது எப்படிப்பட்டதென்று அனைவரும் அறிவோம். கோபத்தில் பதிலளிப்பதே நமது இயல்பான எதிர்வினை. ஆனால், "உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44) என்று இயேசு மாற்றியமைத்தார்.
இன்று, இயேசு செய்ததைப் போல, நம் எதிரிகளிடமும் கருணை காட்டி, அத்தகைய அன்போடு வாழ்வோம்.
மிகபெரிய பிளவு
புகழ்பெற்ற "பீனட்ஸ்" என்ற நகைச்சுவை இதழில், தி கிரேட் பம்ப்கின் மீதான நம்பிக்கைக்காக 'லினஸ்' என்பவரின் நண்பர் அவரைத் திட்டுகிறார். விரக்தியுடன் விலகிச் சென்று, லினஸ் கூறுகிறார், “பிறருடன் ஒருபோதும் விவாதிக்கக் கூடாத மூன்று விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்; மதம், அரசியல் மற்றும் தி கிரேட் பம்ப்கின்!"
தி கிரேட் பும்ப்கின் என்பது லினஸின் கற்பனையில் மட்டுமே இருந்தது, ஆனால் மற்ற இரண்டு காரியங்கள் மிகவும் உண்மையானவை. அவை நாடுகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களைப் பிரிக்கிறது. இயேசுவின் காலத்திலும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. பரிசேயர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்களாகப் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தை அப்படியே பின்பற்ற முயன்றனர். ஏரோதியர்கள் மிகவும் அரசியல் ரீதியானவர்கள், இருப்பினும் இரு பிரிவினரும் யூத மக்களை ரோமானிய அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்பினர். இயேசுவுக்கோ அந்த நோக்கமில்லை, எனவே அவர்கள் அவரை அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டக் குறுக்குக் கேள்வியுடன் அணுகினர்: இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? (மாற்கு 12:14-15). இயேசு ஆம் என்று சொன்னால், மக்கள் அவரை வெறுப்பார்கள். அவர் இல்லை என்று சொன்னால், ரோமர்கள் அவரை கிளர்ச்சிக்காகக் கைது செய்யலாம்.
இயேசு ஒரு நாணயம் கேட்டார். "இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?" என்று கேட்டார் (வ. 16). அது இராயனுடையது என்பது அனைவருக்கும் தெரியும். இயேசுவின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: "இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்" (வ. 17). அவருடைய முக்கியத்துவங்களைச் சீராக வைத்திருந்தார், இயேசு அவர்களின் பொறியைத் மேற்கொண்டார்.
இயேசு தம் பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார். அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றி, நாமும் தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தேடலாம், எல்லா கருத்து வேறுபாடுகளிலிருந்தும் விலகி, சத்தியமானவரை நோக்கி கவனத்தைத் திருப்பலாம்.
பிரதிபலன்
1921 ஆம் ஆண்டில், கலைஞர் சாம் ரோடியா தனது வாட்ஸ் டவர்ஸ் கட்டுமானத்தைத் தொடங்கினார். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸில் பதினேழு சிற்பங்கள் முப்பது மீட்டர் உயரம் எழுப்பப்பட்டன. இசைக்கலைஞர் ஜெர்ரி கார்சியா ரோடியாவின் தலைசிறந்த படைப்பை நிராகரித்தார். ""நீங்கள் மரித்த பிறகும் இருக்கும் விஷயம் இது. அதுதான் இதன் பலன்" என்றார் கார்சியா. பிறகு, "ஆனால் இது எனக்கானதல்ல" என்றார்.
அதனால் அவருக்கு கிடைத்த பலன் என்ன? அவரது இசைக்குழு உறுப்பினர் பாப் வீா், இவ்விருவரின் கருத்தைச் சுருக்கமாகக் கூறினார்: “நித்தியத்தில், உங்களைப் பற்றி எதுவும் நினைவில் கொள்ளப்படாது. எனவே ஏன் வேடிக்கைகாக இருக்கக்கூடாது?"
ஒரு ஐசுவரியமான ஞானி ஒருமுறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து "அதற்கான பலனை" கண்டுகொள்ள முயன்றான். அவர் , "வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்" (பிரசங்கி 2:1) என்று எழுதினார். ஆனால் அவர், " மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை" (வச. 16) என்றும் குறிப்பிட்டார். அவர், "சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது" (வ. 17) என்று முடித்தார்.
இயேசுவின் வாழ்க்கையும் செய்தியும், அத்தகைய குறுகிய மனப்பான்மையான வாழ்க்கையைக் கடுமையாக எதிர்க்கிறது. இயேசு நமக்கு "பரிபூரண ஜீவனை " கொடுக்க வந்தார் (யோவான் 10:10) மேலும் இந்த வாழ்க்கையை நித்தியத்தின் கண்ணோட்டத்திலும் வாழக் கற்றுக் கொடுத்தார். "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்.. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்" (மத்தேயு 6:19-20) என்று அவர் கூறினார். பின்னர் அவர் அதைச் சுருக்கமாக: "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (வ. 33) என்றார்.
அதுதான் சூரியனுக்குக் கீழும், அதற்கு அப்பாலும் நீடிக்கும் பலன் .