எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

பால் முதலில் வருகிறது

ஏழாம் நூற்றாண்டில், இப்போது ஐக்கிய இராஜ்ஜியம் என்று அழைக்கப்படும் நாடு பல ராஜ்யங்களாக பிரிந்து அடிக்கடி போர் புரிந்து கொண்டிருந்தது. நார்த்தம்ப்ரியாவின் ஓஸ்வால்ட் ராஜா இயேசுவின் விசுவாசியாக மாறினபோது, அவர் தனது பகுதியில் சுவிசேஷம் அறுவிக்க ஒரு மிஷினெரியை அழைத்தார். கோர்மன் என்னும் பெயருடைய மனிதர் அனுப்பப்பட்டார், ஆனால் சரியான பலன் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் “பிடிவாதமாக,” “காட்டுமிராண்டித்தனமாக,” இருப்பதை மற்றும் அவரது பிரசங்கத்தில் அக்கறை இல்லாததையும் கண்டு, அவர் விரக்தியுடன் வீடு திரும்பினார்.

ஐடான் என்ற ஒரு துறவி கோர்மனிடம், “கற்றுக் கொள்ளாதவர்களிடம் நீங்கள் இருந்ததை விட நீங்கள் மிகவும் கடுமையாக இருந்தீர்கள்” என்று கூறினார். நார்த்ம்பிரியர்களுக்கு " பாலை போல் மிகவும் எளிதான கோட்பாட்டை" கொடுப்பதற்கு பதிலாக, புரிந்துகொள்ள முடியாதவற்றை கோர்மன் பிரசங்கித்திருந்தார்.  ஐடன் நார்தம்பிரியாவுக்குச் சென்று , தனது பிரசங்கத்தை மக்களின் புரிதலுக்கு ஏற்றவாறு மாற்றினார் , ஆயிரக்கணக்கானோர் இயேசுவை விசுவாசித்தார்கள்.

ஐடனுக்கு இந்த முக்கியமான அணுகுமுறை வேதத்திலிருந்து கிடைத்தது. பவுல் கொரிந்தியரிடம், “நீங்கள் பெலனில்லாதவர்களானதால் உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்” (1 கொரிந்தியர் 3:2). சரியான வாழ்க்கை மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதற்கு முன்பு, இயேசுவைப் பற்றிய அடிப்படை போதனை, மனந்திரும்புதல் மற்றும் ஞானஸ்நானம் ஆகியவற்றைப் மக்கள் புரிந்திருக்க வேண்டும் (எபிரெயர் 5: 13–6: 2). முதிர்ச்சி பின்பற்றப்பட வேண்டும் (5:14), வரிசையை தவறவிடக்கூடாது. இறைச்சிக்கு முன் பால் வருகிறது. மக்களால் புரிந்து கொள்ளாத போதனைகளுக்குக் கீழ்ப்படிய இயலாது. 

நார்த்ம்பிரியர்களின் நம்பிக்கை இறுதியில் தங்கள் நாட்டிற்கு அப்பால் பல நாடுகளுக்கு  பரவியது. ஐடனைப் போலவே, மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​அவர்கள் இருக்கும் நிலையிலேயே நாம் அவர்களை சந்திக்கிறோம்.

கடினமான மக்கள்

லூசி வோர்ஸ்லி ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். பெரும்பாலான மக்களிடையே பிரசித்திபெற்ற மனிதர்களைப் போல, அவருக்கு சில நேரங்களில் மோசமான மின்னஞ்சல்கள் வரும் – அவருடைய விஷயத்தில், அவருடைய பேச்சின் தடையால் அவளுடைய r-உச்சரிப்பு w-உச்சரிப்பாக ஒலித்தது. ஒருவர் இவ்வாறு எழுதினார்: "லூசி, நான் மழுங்கி இருப்பேன்: உங்கள் சோம்பேறித்தனமான பேச்சை சரி செய்ய கடினமாக முயற்சியுங்கள் அல்லது உங்கள் பேச்சுக் குறிப்புகளிலிருந்து r-ஐ நீக்குங்கள். ஏனெனில் உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமர்ந்து என்னால் பார்க்க முடியவில்லை அது என்னை கோபமூட்டுகிறது. அன்புடன், டேரன். ”

சிலருக்கு, இது போன்ற ஒரு உணர்ச்சியற்ற கருத்து அதற்கு சமமான முரட்டுத்தனமான பதிலைத் தருவதற்கு தூண்டக்கூடும். ஆனால் லூசி இவ்விதமாக பதிலளித்தார்: “ஓ டேரன், நீங்கள் என் முகத்திற்கு நேராக சொல்ல துணியாத ஒன்றைச் சொல்ல இணையத்தின் அநாமதேயத்தைப் பயன்படுத்தினீர்கள் என்று நினைக்கிறேன். தயவுசெய்து உங்கள் தயவற்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்! லூசி. ”

லூசியின் அந்த மெதுவான பிரதியுத்திரம் வேலை செய்தது. டேரன் மன்னிப்பு கேட்டு, அத்தகைய மின்னஞ்சலை மீண்டும் யாருக்கும் அனுப்ப மாட்டேன் என்று உறுதியளித்தார்..

“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும், ஆனால் கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (15:1). கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (வச.. 18). சக ஊழியரிடமிருந்து ஒரு விமர்சனக் கருத்து, குடும்ப உறுப்பினரிடமிருந்து ஒரு மோசமான கருத்து அல்லது தெரியாத நபரிடமிருந்து ஒரு மோசமான பதில் ஆகியவற்றைப் பெறும்போது, நம்முடைய தேர்வு இவ்வாறு இருக்கிறது: தீப்பிழம்புகளைத் தூண்டும் கோபமான வார்த்தைகளைப் பேச அல்லது அதை அணைக்கும் மென்மையான சொற்களைப் பேச. 

கோபத்தை  மாற்றும் வார்த்தைகளைப் பேச தேவன் நமக்கு உதவுவாராக - மற்றும் கடினமான நபர்களை மாற்றவும் உதவுவாராக. 

சேரி பாடல்கள்

தென் அமெரிக்காவின் பராகுவேயில் உள்ள ஒரு சிறிய சேரியில் மிகவும் ஏழ்மையான அதன் கிராமவாசிகள் அதன் குப்பைத் தொட்டிகளில் இருந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிழைக்கிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கையற்ற நிலைமைகளிலிருந்து அழகான ஒன்று வெளிப்பட்டுள்ளது - ஒரு இசைக்குழு.

இந்த சேரியில் ஒரு வீட்டை விட ஒரு
பிடில் (வயலின்) விலை அதிகமாக இருப்பதால் இசைக்குழு படைப்பாற்றலைப் பயன்படுத்தவேண்டியதாயிருந்தது மற்றும் அவர்களின் சொந்தக் கருவிகளை, அவர்களின் குப்பைகளிலிருந்தே வடிவமைக்க வேண்டியதாயிருந்தது. எண்ணெய்க் கலன்களில் வளைந்த முட்கரண்டியை வால்பகுதியாக கொண்டு பிடில் (வயலின்) தயாரிக்கப்படுகிறது. குப்பியின் மூடியை விசையாகக் கொண்டு வடிநீர் குழாய்களிலிருந்து கூடிசைக்குழுமக் கருவி (சாக்ஸபோன்கள்) உருவாக்கப்பட்டது. கழுதிப்பகுதியிலுள்ள நரம்பை ஒத்திசைவு செய்ய உருளை வடிவ தகர பாத்திரத்தில் மர சுருள்கிரிகரண்டியை கொண்டு நான்கு நரம்பு வாத்தியக்கருவி உருவாக்கப்பட்டது. இந்த முரண்பாடுகளில் மொஸார்ட் டின் இசையை ஒலிக்கச் செய்துகேட்பது ஒரு அழகான விஷயம். அந்த இசைக்குழு பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் இளம் உறுப்பினர்களின் மீதான பார்வையை உயர்த்தியது.

கீழே கிடந்தவைகளிலிருந்து பிடில் (வயலின்). சேரிகளில் இருந்து இசை. இது தேவன் என்ன செய்கிறார் என்பதின் முன்மாதிரி தான் அது. ஏசாயா தீர்க்கதரிசி தேவனின் புதிய சிருஷ்டிப்பை உருவகப்படுத்திக் காணும்போது, ​​வறுமையிலிருந்து-சிங்காரம்-வெளிப்படும் படத்திற்கு இணையானது, வறண்ட நிலம் வெடித்து பூக்கள் பூப்பது (ஏசாயா 35: 1-2); நீரோடைகள் பாயும் வனாந்தரம் (வச. 6-7); தூக்கி எறியப்பட்ட போர்க்கருவிகள் தோட்டக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டது (2:4); வறுமையிலுள்ள மக்கள் சந்தோஷ கீதங்களால் முழுமையாவது (35: 5–6, 10) போன்ற படங்கள் வெளிப்படுகிறது.

"உலகம் எங்களுக்கு குப்பைகளை அனுப்புகிறது; நாங்கள் இசையை திருப்பி அனுப்புகிறோம்." என்று இசைக்குழு இயக்குனர் கூறுகிறார். அப்படி அவர்கள் செய்யும்போது, அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உலகுக்குத் தருகிறார்கள், அப்போது தேவன் ஒவ்வொரு கண்ணின் கண்ணீரையும் துடைப்பார், வறுமை இனி இருக்காது.

பயத்தை எதிர்கொள்வது

ஒரு தேவாலயத்தில் ஆயராக பணிபுரிய வாரன் ஒரு சிறிய நகரத்திற்கு சென்றார். அவரது ஊழியம் ஆரம்ப வெற்றியைப் பெற்ற பிறகு, உள்ளூர்வாசிகள் ஒருவர் அவரைத் எதிர்த்தார். வாரன் மீது கொடூரமான செயல்களைக் குற்றம் சாட்டிய ஒரு கதையை உருவாக்கி, அந்த நபர் அந்தக் கதையை உள்ளூர் செய்தித்தாளுக்கு எடுத்துச் சென்று, உள்ளூர்வாசிகளுக்கு அஞ்சல் மூலம் விநியோகிக்க துண்டுப்பிரசுரங்களில் தனது குற்றச்சாட்டுகளை அச்சிட்டார். வாரனும் அவரது மனைவியும் கடுமையாக ஜெபிக்க ஆரம்பித்தார்கள். பொய் நம்பப்பட்டால், அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடும்.

தாவீது ராஜா ஒருமுறை இதேபோன்ற ஒன்றை அனுபவித்தார். அவர் ஒரு எதிரியால் அவதூறு தாக்குதலை எதிர்கொண்டார். “நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.” (சங்கீதம் 56: 5). இந்த தொடர்ச்சியான தாக்குதல் அவருக்கு அச்சத்தையும் கண்ணீரையும் ஏற்படுத்தியது (வச. 8). ஆனால் போருக்கு நடுவே, அவர் இந்த சக்திவாய்ந்த ஜெபத்தை ஜெபித்தார்: “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” (வச. 3-4).

தாவீது பிரார்த்தனை இன்று நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கலாம். “நான் பயப்படுகிற நாளில்” - பயம் அல்லது குற்றச்சாட்டு காலங்களில், நாம் தேவனிடம் திரும்புவோம். “உம்மை நம்புவேன்” - நாங்கள் எங்கள் போரை தேவனின் சக்திவாய்ந்த கைகளில் வைக்கிறோம். “மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?” - அவருடனான நிலைமையைக் கருத்தில் கொண்டு, நமக்கு எதிரான சக்திகள் உண்மையில் எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை நினைவில் கொள்கிறோம்.

வாரன் பற்றிய கதையை செய்தித்தாள் புறக்கணித்தது. சில காரணங்களால், துண்டுப்பிரசுரங்கள் ஒருபோதும் விநியோகிக்கப்படவில்லை. இன்று நீங்கள் என்ன போருக்கு அஞ்சுகிறீர்கள்? தேவனிடம் பேசுங்கள். அவர் உங்களோடு கூட சேர்ந்து போராட தயாராக இருக்கிறார்.

மூச்சுத் திணறல்

எனது வீட்டின் அருகே உள்ள வீட்டு மேம்பாட்டு கடையில் ஒரு பெரிய பச்சை நிற பொத்தான் ஒன்று உண்டு. வாடிக்கையாளர்கள் ஏதேனும் உதவி வேண்டுமானால் அதை அழுத்தவும் அழுத்திய ஒரு நிமிடத்துக்குள் உதவுவதற்கு யாரும் வரவில்லையென்றால் வாங்கும் பொருட்களில் ஒரு தள்ளுபடி கிடைக்கும்.

இதை போன்ற சூழ்நிலையில் வேகமாக கவனிக்கப்படும் வாடிக்கையாளராக இருக்க நமக்கு பிடிக்கும். ஆனால் சேவை செய்ய வேண்டியது நாமாக இருந்தால் அது நமக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும். நம்மில் அநேகர் நம் வேலைகளை மிகவும் விரைந்து அதிக மணி நேரம் வேலை செய்து மிகவும் சுருக்கமான நேரத்திற்குள் அதிக வேலையை முடிக்கும் கட்டாயத்திற்குள்ளாக அழுதப்படுகிறோம். ஒரு அவசரமான வாழ்க்கை முறைக்குள்ளாக அது செல்கிறது.

தேவன் இஸ்ரவேலருக்கு ஓய்வு நாளை கடைபிடிக்க கட்டளையிட்ட போது ஒரு முக்கிய காரணத்தை அறிவித்தார். “எகிப்தில் அடிமையாய் இருந்ததை மறந்து விடாதீர்கள்” (யாத் 5:15). அடிமைகளாக பார்வோன் நியமித்த குறுகிய காலத்துக்குள் வேலைகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது விடுதலை பெற்றதால், தாங்களும் தாங்கள் சேவை செய்தவர்களும் ஓய்வு எடுக்க ஒரு முழுநாளை ஆண்டவர் கட்டளையிட்டார். தேவனுடைய ஆட்சியில் சோர்வடைந்து வேலையினால் மூச்சுத்திணறும் யாரும் இருக்க கூடாது.

எந்நேரங்களில் சோர்வடையும் வரை அல்லது உங்களை காத்திருக்க செய்யும் மக்களிடம் எப்பொழுதெல்லாம் வேலை செய்து இருக்கிறீர்கள் ? நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேலை இடைவெளி கொடுப்போம். விரைந்து வேலை செய்யும் கலாச்சாரம் பார்வோனுடையது, நம் தேவனுடையது அல்ல.

அறியப்படாத நீரோட்டம்

நள்ளிரவு மணி சரியாக 12 அடிக்கும்போது,  நியூயார்க் நகரத்தின் டைம் ஸ்குவேர்-ல்  மக்கள் கூடியிருப்பார்கள். லண்டனின் பிக்பென் மணிக்கூண்டில் மணியடிக்கும் போது கூடியிருக்கும்  மக்களும் அதனோடு சேர்ந்து பின்னோக்கி எண்ணுவார்கள் (கவுண்ட்  டவுன் ) சிட்னி துறைமுகம் வாணவேடிக்கைகளால் அலங்கரிக்கப்படும். ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதத்தில் புதிய ஆண்டையும் அதனோடு சேர்ந்து வரும் ஊதிய துவக்கத்தையும்  வரவேற்கிறது. புதிய நட்புகளும் புதிய வாய்ப்புகளும் கண்டுபிடிக்கும்படியாக  புத்தாண்டின் முதல் நாளில்  நாம் புதிய நீரோட்டத்திற்குள் கடந்து செல்கிறோம்.

புத்தாண்டு எவ்வளவு விசேஷமாக இருந்தாலும் நமக்கு வரும் நாட்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எப்படிப்பட்ட புயல்களை நாம்கடந்து போக போகிறோம் என்று நமக்கு தெரியாது. வாணவேடிக்கைகள் சீனாவில் அசுத்த ஆவிகளை துரத்தி அந்த காலத்தை செழிப்பாக மாற்றுவதற்கு கண்டுபிடிக்கப்பட்டவை என்பது புத்தாண்டுகளை  பற்றிய ஒரு சீன மரபு.

பாபிலோனில் பழங்காலத்து பழக்கவழக்கமாக புத்தாண்டு பிறக்கும்போது தங்கள் தேவர்களுடன் சமாதானம் படுத்துவதற்கு புது தீர்மானங்கள் எடுக்கப்படும். இப்படியாக தங்கள் முன் வரும் எதிராக்காலத்தை பாதுகாக்க முடிவுகள் எடுக்கப்பட்டன.

தங்கள் தேவர்களுக்கு சத்தியங்கள் செய்யாத நேரத்தில் பாபிலோனியர்கள் இஸ்ரவேலர் முதற்கொண்டு மற்ற தேசங்களையும் கைப்பற்றிக்கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் தேவனுடைய வார்த்தை அடிமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்கு வந்தது: “பயப்படாதே… நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்” (ஏசாயா 43:1-2). இதே போன்றுதான் புயலில் மாட்டிக்கொண்ட சீஷர்களை பார்த்து “ஏன் பயப்படுகிறீர்கள்” என்றார் இயேசு (மத்தேயு 8:23-27).

இதே போன்று இன்றும் அறியப்படாத நீரோட்டத்திற்குள்ளாக தள்ளப்படலாம்.ஆனால் எப்பேர்ப்பட்ட அலைகளையும் அமர்த்த அதிகாரம்  கொண்ட தேவன் எப்பொழுதும் நம் பக்கத்தில் இருக்கிறார்.

உண்மையான வெற்றி

என்னுடைய நேர்காணல் விருந்தினர் எனது கேள்விகளுக்கு பணிவுடன் பதிலளித்தார். சம்பாஷணைக்குள் அடியில் ஏதோ பதுங்கியிருப்பதாக எனக்கு ஒரு உணர்வு. தற்செயலாக சொல்லப்பட்ட கருத்து அதை வெளியே கொண்டு வந்தது.

'நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்" என்றேன். “ஆயிரக்கணக்கானவர்கள் அல்ல. கோடிக்கணக்கானவர்கள்" என்று அவர் முணுமுணுத்தார்.

எனது அறியாமையைப் பரிதாபப்படுத்துவதுப் போல எனது விருந்தினர் அவருடைய நற்சான்றிதழ்களை நினைவூட்டினார் - அவர் வகித்திருந்த பதவிகள், அவர் சாதித்த விஷயங்கள், அவர் அருளிய பத்திரிக்கை. அது ஒரு தடுமாற்றமான தருணம்.

அந்த அனுபவத்திலிருந்து, தேவன் சீனாய் மலையில் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தியதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன் (யாத். 34:5-7). இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர், மனுகுலத்தின் நியாயாதிபதி இங்கே தன்னுடைய பதவிகளை பயன்படுத்தவில்லை. 100 கோடி விண்மீன் திரள்களை உருவாக்கியவர் அவர், ஆனால் அந்த சாதனைகள் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக தேவன் தன்னை இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ளவர் (வச. 6) என அறிமுகப்படுத்துகிறார். அவர் யார் என்பதை அவர் வெளிப்படுத்தும்போது, அவருடைய பட்டங்களையோ அல்லது சாததைனகளையோ அல்ல, மாறாக தன்னுடைய குணத்தை பட்டியலிடுகிறார்.

தேவனுடைய சாயலாய் படைக்கப்பட்ட மக்களாகவும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற அழைக்கப்பட்ட நமக்கு இது ஆழமான ஒன்று (ஆதி. 1:27, எபே. 5:1-2). சாதனைகள் நல்லது தான், பட்டங்களுக்கு அவைகளுக்குள்ள இடம் உண்டு, ஆனால் நாம் எவ்வளவு இரக்கம், கிருபை, அன்புள்ளவர் களாயிருக்கிறோம் என்பது தான் முக்கியம். அந்த நேர்காணல் விருந்தினரைப் போல, நாமும் நம்முடைய சாதனைகளை அடிப்படையாக முக்கியப்படுத்தலாம், ஆனால் உண்மையான வெற்றி எது என்பதற்கு தேவன் முன்மாதிரியானவர் - நம்முடைய தொழில் அட்டைகளில் அல்லது நம்முடைய தற்குறிப்பில் எழுதப்பட்டவைகள் அல்ல மாறாக நாம் அவரைப்போல எப்படி மாறுகிறோம் என்பதே.

கிறிஸ்துமஸ் பிரமிப்பு

ஒரு கூட்டத்திற்காக நான் ஒரு இரவு லண்டனில் இருந்தேன். மழை பெய்துக்கொண்டிருந்தது. நான் தாமதமாக போய்க்கொண்டிருந்தேன். நான் தெருக்களில் விரைந்து, ஒரு மூலையில் திருப்பி, பின்பு அசையாமல் நிறுத்தினேன். டஜன் கணக்கான தூதர்கள் ரீஜென்ட் ஸ்ட்ரீட்டுக்கு மேலே சென்றனர். அவர்களின் பிரம்மாண்டமான இரக்கைகள் போக்குவரத்து முழுவதின் மேலும் விரிக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துடிப்பு விளக்குகளால் ஆன அது நான் பார்த்த மிக அற்புதமான கிறிஸ்மஸ் காட்சி. நான் மட்டும் வசீகரப்படவில்லை நூற்றுக்கணக்கானவர்கள் வீதியில் வரிசையாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

கிறிஸ்மஸ் கதைக்கு பிரமிப்பு மையமானது. தேவதூதன் மரியாளுக்கு தோன்றி அவர் அற்புதமாக கருத்தரிப்பார் என்று விளக்கியப் போதும்

(லூக். 1:26-38), மேய்ப்பர்களுக்கு இயேசுவின் பிறப்பைக் குறித்து அறிவித்தப் போதும் (2:8-20) ஒவ்வொருவரும் பயம், ஆச்சரியம் மற்றும் பிரமிப்படைந்தனர். ஆந்த ரீஜென்ட் ஸ்ட்ரீட் கூட்டத்தைப் சுற்றிப் பார்க்கும்போது முதலில் தேவதூதர்களின் சந்திப்பின் ஒரு பகுதியை காண்பதாக நினைத்து ஆச்சரியப்பட்டேன்.

ஒரு கணம் கழித்து நான் வேறு ஒன்றை கவனித்தேன். சில தேவதூதர்கள் தங்கள் கைகளை உயர்த்தி அவர்களும் எதையோ பார்த்துக்கொண்டிருப்பது போல இருந்தது. இயேசு என்ற பெயரைக் கேட்டவுடனே (வச. 13-14)

தேவதூதர்களின் பாடகற் குழு வெடிப்பது போல் தூதர்களும் இயேசுவைப் பார்ப்கும்போது பிரமிப்பில் சிக்கிக்கொள்ளுகின்றனர் என்று தோன்றுகிறது.

இவர் தேவனுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருக்கிறார் (எபி. 1:3). பிரகாசமான மற்றும் ஒளிரும் ஒவ்வொரு தேவதூதரின் பார்வையிலும் இயேசுவே மையமாக இருக்கிறார் (வச. 6). தேவதூதரை மையமாகக்கொண்ட கிறிஸ்மஸ் காட்சி பரபரப்பான லண்டன் வாசிகளையே தங்களுடைய தடங்களில் நிறுத்த முடியுமானால், நாம் அவரை முகமுகமாய் பார்க்கும் தருணத்தை கற்பனை செய்து பார்க்கவும்.

எதிர்கொள்ளும் சவால்கள்

சமீபத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு நாள் சந்தித்து  பேசிக்கொண்டிருக்கையில் அவரவர் தாங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களையும் பாடுகளையும் குறித்து பகிர்ந்து கொண்டோம். பார்க்கப்போனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சவால்களை எதிர் கொண்டிருந்தார்கள். நானும் இன்னொரு நண்பனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எங்கள் பெற்றோர்களை கவனித்துக் கொண்டிருந்தோம், மற்றவரின் குழந்தை ஒன்று ஆகாரம் கட்டுப்பாடு இல்லாமையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது, ஒருவர் நீண்ட கால உடல் வலியால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார், கடைசியாக ஒருவருக்கு அறுவை சிகுச்சை ஒன்று நடைபெற இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் எங்கள் சவால்களை சந்தித்து கொண்டு வந்தோம்.

தாவீதின் ஊராகிய எருசலேமிலே தேவனுடைய பெட்டி கொண்டுவரப்பட்டதை 1 நாளாகமம் 16ஆம் அதிகாரம் விவரிக்கிறது. போர்களின் மத்தியில் நடந்த சமாதான உடன்படிக்கை என்று  இச்சம்பவம் சாமுவேல் குறிப்பிடுகிறார் (2 சாமு. 7:1). அப்போது தாவீது மக்களை ஒரு பாடலின் மூலம் வழிநடத்தினார் (16 :8-36). ஒன்றிணைந்து தேவனுடைய வல்லமையையும், நிறைவேற்றின வாக்குத்தத்தங்களுக்காகவும், கடந்த நாட்கள் முழுவதும் காத்த அவர் தயவுக்காகவும் நன்றி செலுத்தி பாடினார்கள் (வச. 12-22). "கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்"(வ.16) என்று அழுதார்கள். ஏனெனில் வரப்போகும் அநேக யுத்தங்களுக்கு அவர் சமூகம் மிகவும் அவசியமாக இருந்தது.

“கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.” குடும்ப பிரச்சனைகளோ, வியாதியோ, பாடுகளோ நமக்கு நேரிடும்போது இதுவே நமக்கு  சரியான ஆலோசனையாக இருக்கிறது. நம்மை அவர் தனியாக போராட விடவில்லை. எப்போதும் நம்மோடு இருந்து நம்மை தொடர்ந்து பாதுகாப்பார். 

நம் தேவன் நம்மை கடக்க செய்வார்.