எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Ruth Wanகட்டுரைகள்

தேவனால் உருவாக்கப்பட்ட கருவிகள்

இதுவரைக்கும் இல்லாத அளவு, மிகப்பெரிய வீடியோ விளையாட்டு என்று கணிக்கப்பட்ட நின்டென்டோவின் “தி லெஜெண்ட் ஆஃப் செல்டா: ஓக்கரீனா ஆஃப் டைம்ஸ்” உலகம் முழுவதும் ஏழு மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன. இது உருளைக்கிழங்கைப் போல வடிவத்தில், களிமண்ணினால் செய்யப்பட்ட மிகச்சிறிய, பழங்காலத்து, ஒக்கரீனோ என்னப்பட்ட கருவியை பிரபலப்படுத்தியது. 

ஓக்கரீனா ஒரு இசைக்கருவியைப்போல தோற்றமளிக்காது. ஆனால் அது இசைக்கப்படும்போது, சரியான வடிவமில்லாத அதன் பல்வேறு துளைகளை மூடி, ஊதுகுழல் மூலம் ஊதப்படும்போது, அமைதியான ஆனால் சில நேரங்களில் ஆக்ரோஷமாக நம்பிக்கையூட்டும் ஒலியை உருவாக்குகிறது. 

ஓக்கரினாவைச் செய்தவர் ஒரு பெரிய அளவு களிமண்ணை எடுத்து, அதற்கு அழுத்தத்தையும் வெப்பத்தையும் கொடுத்து, அதை ஒரு அற்புதமான இசைக்கருவியாக மாற்றுகிறார். நான் இந்தப் படத்தில் தேவனையும் நம்மையும் காண்கிறேன். ஏசாயா 64:6, “நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்…. இப்போதும் கர்த்தாவே நீர் எங்களுடைய பிதா. நாங்கள் களிமண். நீர் எங்களை உருவாக்குகிறவர். நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை… அதிகமாய் கோபம் கொள்ளாமலும்… இருப்பீராக” என்று ஏசாயா 64:6, 8-9ல் ஏசாயா கூறுகிறார். “தேவனே நீரே அதிகாரத்திலுள்ளவர். நாங்கள் எல்லோரும் பாவிகள். எங்களை ஒரு அழகான கருவியாக உமக்காக உருவாக்கும்” என்று தீர்க்கதரிசி கூறினார். 

அதைத்தான் தேவன் செய்கிறார்! அவருடைய கிருபையினால், அவர் தம்முடைய குமாரன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரிக்க அனுப்பி, நாம் பரிசுத்த ஆவியானவரோடு ஒவ்வொரு நாளும் நடக்கும்போது, நம்மை வடிவமைத்து மாற்றுகிறார். எப்படி அழகான இசையை உருவாக்குவதற்கு, ஒக்கரினாவை உருவாக்கினவர் தன்னுடைய சுவாசத்தை அந்தக் கருவிக்குள் ஊதுகிறாரோ, அப்படியே, நாமும் அதிகமதிகமாக இயேசுவைப் போல மாற (ரோமர் 8:29) அவருடைய கரத்தின் கிரியையான நம்மை, தம்முடைய அழகான சித்தத்தை நிறைவேற்ற, தேவனும் நமக்குள் கிரியை செய்கிறார். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பட்டணத்தில் மகிழ்ச்சி

2024 உலக டி20 கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகளில் ஒன்று என்று பலர் அழைக்கும் நம்பமுடியாத போட்டியாக இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் இரண்டாவது டி 20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, நாடே கொண்டாட்டத்தில் வெடித்தது. மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். பல நகரங்கள் மூவர்ணக் கொடிகளால் நிறைந்த காட்சியை ஒரு விண்ணிலிருந்து கானும்போது அது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்து வதாயிருந்தது.. மகிழ்ச்சியின் வெடிப்பில் நகரமே அதிர்ந்தது போல் இருந்தது

மகிழ்ச்சி எப்போதும் ஓர் அற்புதமான பரிசு. ஒரு நகரமும் அதிலுள்ள மக்களும் நீடித்த மகிழ்ச்சியை எவ்விதம் அனுபவிக்கக்கூடும் என்று நீதிமொழிகள் விவரிக்கிறது. “நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்” (நீதிமொழிகள் 11:10) என்று நீதிமொழிகள் கூறுகிறது. மனுஷீகத்தைக் குறித்த தேவனுடைய தெய்வீகத் திட்டத்தின்படி வாழ்கிறவர்கள், சமூகத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது தேவனுடைய நீதி ஆளுகை செய்கிறது என்கிற நற்செய்தியை மக்கள் பெறுகின்றனர். பேராசை குறைகிறது. ஏழைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் தேவனுடைய திட்டத்திற்கேற்ற வாழ்க்கைமுறை செழித்தோங்குகிறதோ, அப்போது நகரத்தில் மகிழ்ச்சியும் “ஆசீர்வாதமும்” தங்கும் (வச. 11).

நாம் தேவனுடைய வழிகளை உண்மையாக பின்பற்றினால், அதன் விளைவு அனைவருக்கும் நன்மை அளிப்பதாய் இருக்கும். நாம் வாழும் முறை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை சிறப்பாகவும், முழுமையாகவும் மாற்றும். உலகை பண்படுத்துவதற்கான தெய்வீக முயற்சியில் ஓர் அங்கத்தினராய் செயல்படுவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். நகரத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் நம்மை அழைக்கிறார். 

ஐந்து நற்காரியங்கள்

தங்களிடம் இருப்பவைகளுக்காக நன்றிசொல்லும் குணம்கொண்டவர்கள் நல்ல தூக்கம், குறைவான நோயின் அறிகுறிகள், மற்றும் அதிக மகிழ்ச்சியை சுதந்தரிக்கின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஈர்க்கக்கூடியவைகள். உளவியலாளர்கள் நமது நல்வாழ்வை மேம்படுத்த ஒவ்வொரு வாரமும் நாம் நன்றி செலுத்தவேண்டிய ஐந்து காரியங்களை ஒரு “நன்றி செலுத்தும் குறிப்பில்” எழுதும்படிக்கு பரிந்துரைக்கின்றனர்.

வேதம் நீண்ட காலமாக நன்றியுணர்வு நடைமுறையை ஊக்குவித்துள்ளது. உணவு மற்றும் திருமணம் முதல் (1 தீமோத்தேயு 4:3-5) படைப்பின் அழகுகள் (சங்கீதம் 104) வரை, இதுபோன்ற விஷயங்களை வரமாகப் பார்க்கவும், அவற்றை நமக்கு அருளும் தேவனுக்கு நன்றி செலுத்தவும் வேதம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சங்கீதம் 107, நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடிய ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறது: வனாந்திரத்திலிருந்து அவர்களை மீட்டதற்காய் (வச. 4-9), சிறையிருப்பிலிருந்து விடுவித்ததற்காய் (வச. 10-16), நோயிலிருந்து குணப்படுத்தியதற்காய் (வச. 18-22), செங்கடலிலிருந்து பாதுகாத்ததற்காய் (வச. 23-32), மற்றும் வறண்ட நிலத்தில் அவர்களை செழிப்பாய் வாழச்செய்ததற்காய் (வச. 33-42). “கர்த்தரைத் துதியுங்கள்” என்று சங்கீதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இவை அனைத்தும் தேவனுடைய “மாறாத அன்பின்” அடையாளங்கள் (வச. 8, 15, 21, 31).

உங்கள் கைகளில் சிறிய நோட்டு கைவசம் இருக்கிறதா? இப்போது நீங்கள் நன்றி செலுத்த விரும்பும் ஐந்து நல்ல விஷயங்களை ஏன் எழுதக்கூடாது? அவை நீங்கள் இப்போது சாப்பிட்ட உணவாக இருக்கலாம், உங்கள் திருமணமாக இருக்கலாம் அல்லது இஸ்ரேலைப்போல் இன்றுவரை உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய மீட்பு கிரியைகளாய் இருக்கலாம். வெளியே பாடும் பறவைகளுக்கும், உங்கள் சமையலறையிலிருந்து வரும் வாசனைக்கும், உங்கள் நாற்காலியின் வசதிக்கும், அன்புக்குரியவர்களின் முணுமுணுப்புகளுக்கும் நன்றி சொல்லுங்கள். அவைகள் ஒவ்வொன்றும் நமக்கருளப்பட்ட வரங்கள்; தேவனுடைய மாறாத அன்பின் அடையாளங்கள். 

 

கிறிஸ்துவில் நம்முடைய புதிய சுபாவம்

எங்கள் வெள்ளை நிற, பொமரேனியன் நாய் எல்லா இடங்களிலும் முடியை உதிர்த்துக் கொண்டிருக்க காரணம் என்ன என்றேன். டாக்டர் அதை ஒரு பார்வை பார்த்து பிரச்சனையை விளக்கினார். "அது ஒரு நாயாக இருக்கிறது," என்றாார். அவர் வேறு ஏதாவது புதிய தீர்வைக் கொடுப்பாார் என்று நாான் எதிிர்பாார்த்தேன். ஆனால் அவர் மீண்டும், "அது ஒரு நாயாக இருக்கிறது" என்றாா். இயற்கையாகவே நாய்கள் முடி உதிர்க்கும். அதனை யாாராலும் மாாற்றியமைக்க முடியாாது.
அதிர்ஷ்டவசமாக, நமது ஆவிக்குரிய வாழ்க்கையானது மாற்றவே முடியாத செயல்கள் அல்லது அணுகுமுறைகளால் வரையறுக்கப்படவில்லை. எபேசுவில் புதிய விசுவாசிகளுக்கு இந்த விடுதலையான உண்மையை பவுல் வலியுறுத்தினார். புறஜாதி மக்கள் தங்கள் “புத்தியில் அந்தகாரப்பட்டு” இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவனுக்கு அந்நியராய் இருக்கிறார்கள் என்றும் “சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:18-19). ஆனால் இயேசுவையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டறிந்த பின்னர், “பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோடுங்கள்” (வச. 22) என்று வலியுறுத்துகிறார். நம்முடைய பழைய வாழ்க்கையானது இச்சையினாலும் காமவிகாரங்களினாலும் எவ்விதம் பாதிக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிடுகிறார். மேலும் “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிடுகிறார் (வச. 22-24).

பின்னர் அவர் வாழ்வதற்கான புதிய வழிகளைப் பட்டியலிடுகிறார். பொய் சொல்லாதிருங்கள். கோபத்தை வெறுத்திடுங்கள். சபிப்பதை நிறுத்துங்கள். திருடுவதை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக, “குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்” (வச. 28) என்று வலியுறுத்துகிறார். கிறிஸ்துவில் உருவான நம்முடைய புதிய சுபாவம், நம்முடைய இரட்சகருக்கு விருப்பமான, நமது அழைப்பிற்கு தகுதியான ஓர் வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது.