எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பாட்ரிசியா ரேபோன்கட்டுரைகள்

காலத்தின் வேகத்தைக் குறைத்துக்கொள்ளல்

1840 ஆம் ஆண்டு, மின்சாரக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அநேக மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. நாம் இப்பொழுது, ஸ்மார்ட் கைக்கடிகாரங்களிலும், ஸ்மார்ட் அலைபேசிகளிலும், மடிக்கணினிகளிலும் நேரத்தைப் பார்க்கின்றோம். வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது, நம்முடைய “ஓய்வு நேர” நடையின் வேகம் கூட அதிகரித்து விட்டது, முக்கியமாக, பட்டணங்களில் இந்நிலையைக் காணலாம். இது நம்முடைய உடல் நிலையை பெரிதும் பாதிக்கும் என அறிவாளிகள் சொல்கின்றார்கள். “நாம் வேக வேகமாக பயணம் செய்கின்றோம், நம்மால் இயன்ற மட்டும், சீக்கிரமாக மக்களைச் சந்திக்கின்றோம். எல்லா காரியங்களும் இப்பொழுதே நடந்து விட வேண்டுமென, நம்மை நினைக்கத் தூண்டுகின்றது” என்கின்றார், ஓர் அமெரிக்க பேராசிரியர்.

வேதாகமத்திலுள்ள மிகப்பழமையான சங்கீதங்களில் ஒன்றினை எழுதிய மோசே, நேரத்தைக் குறித்து சி ந்திக்கிறார். வாழ்க்கையின் வேகத்தை தேவன் கட்டுப்படுத்துகிறார், என அவர் கூறுகின்றார். “உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள் போலவும், இராச்சாமம் போலவும் இருக்கிறது” என எழுதுகிறார் (சங்.90:4).

காலத்தைக் கையாளுதலின் இரகசியம், வேகமாகச் செல்வதிலோ அல்லது மெதுவாகச் செல்வதிலோ இல்லை. அது எப்பொழுதும் தேவனோடிருத்தலாகும். அவரோடு அதிக நேரம் செலவிடுதலாகும். அப்படியாகும் போது, நாம் தேவனோடும், நம்மை உருவாக்கியவரோடும், (139:13) நாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தையும், திட்டங்களையும் அறிந்திருக்கிறவரோடும் ஒருமித்து செயல் பட ஆரம்பிப்போம். (வ.16)

இப்பூமியில், நாம் நிரந்தரமாக வாழப்போவதில்லை. ஆனாலும் நம்முடைய நாட்களை, நாம் ஞானத்தோடு திட்டமிடலாம். வெறுமனே கடிகாரத்தை கவனித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளையும் தேவனுடைய கரத்தில் கொடுத்து விடலாம். மோசே சொல்வது போல, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் (90:12) அப்பொழுது நாம் இப்பொழுதும், எப்பொழுதும் சதாகாலங்களிலும் தேவனோடு இருப்போம்.

அவருடைய வார்த்தையால் வழி நடத்தப்படுதல்

பால் ஆர்னால்ட் லண்டன் பிபிசி (BBC) வானொலி நிலையத்தில், முதன் முறையாகச் சேர்ந்த போது, அவருடைய  முதல் வேலை, ரேடியோ நாடகங்கள் ஒலி பரப்பப் படும் போது, “நடக்கும் ஒலியை” ஏற்படுத்துவதாகும். நடிகர்கள் நடப்பது போன்ற காட்சிகள் வரும் போது, அவர்கள் தங்களுடைய வசனங்களை வாசிக்கும் போது, மேடை மேலாளரான பால், அதற்குத் தகுந்த, நடக்கும் ஒலியைத் தன்னுடைய பாதங்களைக் கொண்டு ஏற்படுத்துவார். நடிகரின் பேச்சுக்கும், வாசிக்கும் வரிகளுக்கும் ஏற்றாற் போல், தன்னுடைய ஒலியைக் கொடுப்பார். இதிலுள்ள சவால் என்னவெனின், அந்த கதையில் வரும் நடிகனோடு ஒத்துப் போக வேண்டும், எனவே,  “நாங்கள்  இருவரும் இணைந்து வேலை செய்வோம்” என்றார்.

இத்தகைய ஒரு தெய்வீக ஒன்றிணைப்பைப் பற்றி சங்கீதக்காரன் சங்கீதம் 119ல் கூறுவதைக் காண்கின்றோம். இது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றாற் போல் ஒத்து வாழ்தலை வலியுறுத்துகின்றது.  “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் என சங்கீதம் 119:1 கூறுகின்றது. தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழி நடக்கும் போது, நாம் நம்முடைய வழிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.(வ.9) நமக்குள்ளே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளாமலும் (வச. 23), பொருளாசைக்குத் தப்பிக்கொள்ளவும் (வச. 36), பாவத்திற்கு எதிர்த்து நிற்கவும் (வச. 61), தேவனுக்கு பயப்படுகின்ற நண்பர்களைப் பெற்றுக்கொள்ளவும் (வ.63), மகிழ்ச்சியோடு வாழவும் (வச. 111) முடியும்.

வேத அறிஞர் சார்ல்ஸ் பிரிட்ஜஸ் வசனம் 133 ஐக் குறித்து விளக்கம் அளிக்கும் போது, “நான், இவ்வுலகில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், இது தேவனுடைய வார்த்தையின் படி உள்ளதா, நான் கிறிஸ்துவை மாதிரியாகக் காட்டுகின்றேனா?” என்பதாகக் கேட்கும்படி கூறுகிறார். 

இவ்வாறு நாம் நடக்கும் போது, இவ்வுலகிற்கு நாம் இயேசுவைக் காட்டுகிறோம். நாம் அவரோடு நெருங்கி நடக்கும் போது, நம்மைக் காண்கின்ற மக்கள், நம்மில் தலைவராக, நண்பராக, இரட்சகராக, இயேசுவைக் காண தேவன் நமக்கு உதவுவாராக.

தேவனிடம் கேட்டல்

என்னுடைய கணவன் டான், புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரென மருத்துவ அறிக்கை தெரிவித்த போது, சுகம் தரும்படி,  தேவனிடம் எப்படி கேட்பது சரியாக இருக்கும் என குழம்பிப் போயிருந்தேன். என்னுடைய குறுகிய பார்வையில், இவ்வுலகில் அநேகம் பேர் யுத்தம், பஞ்சம், வறுமை, இயற்கை பேரழிவுகள் என பல்வேறு கொடுமையான துன்பங்களினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் போன்று நாங்களும் உள்ளோம் எனக் கருதினேன். ஒரு நாள் காலை ஜெபத்தில், என்னுடைய கணவன் மிகவும் தாழ்மையாக ஜெபிப்பதைக் கேட்டேன்,” அன்புள்ள தேவனே, தயவாய் என்னுடைய  வியாதியை குணமாக்கும்“ என்றார்.

அது மிகவும் எளிமையாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கப்பட்ட ஜெபம். அது, நான் செய்யும் சிக்கலான, நீண்ட ஜெப விண்ணப்பங்களை மாற்றிக்கொள்ளும்படி செய்தது, ஏனெனில் நம் தேவன், உதவி கேட்டு நாம் கெஞ்சும் அழுகையை நன்கு கேட்கிறார். தாவீது கேட்பதைப் போன்று, “திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.” (சங். 6:4) என்போம்.

தாவீதின் ஆத்துமா குழப்பத்திலும், விரக்தியிலும் இருக்கும் போது, இத்தகைய ஜெபத்தையே ஏறெடுக்கின்றார். அவர் எத்தகைய சூழலில் இருக்கின்றார் என்பது இச்சங்கீதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவருடைய உண்மையான கதறல், தேவனிடமிருந்து உதவியையும், மீட்பையும் பெற, அவருடைய உள்ளம் வாஞ்சிப்பதைக் காட்டுகின்றது. “என் பெருமூச்சினால் இளைத்துப் போனேன்” என்று எழுதுகின்றார். (வச. 6).

தாவீது, தன்னுடைய தேவைகளை தேவனிடம் எடுத்துச் செல்வதற்கு,  தன்னுடைய குறைகளையும், பாவத்தையும் ஒரு தடையாகக் கருதவில்லை. தேவன் ஜெபங்களுக்கு பதில் தரும் முன்பே, அவரால் மகிழ்ச்சியாயிருக்க முடிந்தது. “கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்; கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.” (வச. 8-9) என்கின்றார்.

நம்முடைய குழப்பம், உறுதியற்றத் தன்மையின் மத்தியில், தேவன் அவருடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்கின்றார், விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்கின்றார். அவருடைய உதவி மிகவும் தேவையான போது, அவர் நம்மைக் கேட்க ஆயத்தமாயிருக்கின்றார்.

அந்நியரைச் சிநேகித்தல்

எங்களுடைய குடும்பத்தின் நபர் ஒருவர், வேறு மதத்திற்கு மாறியதால், என்னுடைய கிறிஸ்தவ நண்பர்கள், அவளை மீண்டும் இயேசுவிடம் திரும்புமாறு செய்ய, என்னை வற்புறுத்தினர். கிறிஸ்து நம்மை நேசிப்பதைப் போன்று, அவளை நேசிக்க கற்றுக் கொண்டேன், பொது இடங்களில், சிலர் அவள் அணிந்துள்ள அந்நிய உடையின் நிமித்தம், அவள் மீது எரிச்சலைக் காட்டினர், சிலர் அவளைக் கடின வார்த்தைகளால் சாடினர், தன்னுடைய வாகனத்தில் இருந்தபடியே, ஒரு மனிதன், அவளை “உன்னுடைய வீட்டிற்குப் போ! “என்று விரட்டினான், அவள் தன்னுடைய வீட்டில் தான் இருக்கின்றாள் என்பதை அறியாத சிலர் இவ்வாறு செய்தனர்.

வேற்று உடையும், நம்பிக்கையும் கொண்டுள்ள புறஜாதியினரிடம் எப்படி கனிவாக நடந்து கொள்ள வேண்டுமென மோசே தன் ஜனங்களுக்கு கற்றுக்கொடுத்தார். நீதியும், கருணையும் நிறைந்த சட்டங்களை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தார். “அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாய் இரு ந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே” (யாத். 23:9). தேவன் புறஜாதியினரின் மேல் கொண்டுள்ள கரிசனையை, இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. தூண்டப்பட்டவர்களாய், பிறரை காயப்படுத்துபவர்களுக்காகவே இந்த வார்த்தைகள் யாத்திராகமம் 22:21, லேவியராகமம் 19:33 ஆகிய இரு இடங்களில் வருகின்றது.

எனவே, நான் அந்த நபரோடு, சிறிது நேரம் செலவிட்டேன், சிற்றுண்டிச் சாலையில், பூங்காவில், நடைப்பயிற்சியின் போது, எங்கள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தும், வெவ்வேறு இடங்களிலும் அவளோடு பேசி, நான் எந்த அன்பையும், மரியாதையையும் பெற விரும்புகிறேனோ, அதை அவளிடம் காட்டினேன். இயேசு நம் மீது வைத்திருக்கும் இனிமையான அன்பை, அவளுக்கு நினைவு படுத்துவதற்கு இதுவே சிறந்த வழி. இயேசுவை அவள் தள்ளி விட்டதால், அவளை அவமானப்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் வியத்தகு கிருபையோடு நம் அனைவரையும் நேசிப்பது போல, அவள் மீது அன்பு செலுத்துவதே சாலச் சிறந்தது.

பாடல் மூலம் பெலப்படல்

இரண்டாம் உலகப்போரின் போது, நாசி படைகளுக்குத் தப்பி வந்த யூத அகதிகளை ஒளித்து வைத்துக்கொள்ள, பிரான்ஸ் தேசத்தின் கிராமத்தினர் பெரிதும் உதவினர். அவர்களுடைய ஊரைச் சுற்றியுள்ள காடுகளில், சிலர் பாடல்களைப் பாடினர். அது, அகதிகள் தங்கள் மறைந்திருக்கும் இடங்களிலிருந்து வெளிவர பாதுகாப்பானது என்பதை அவர்களுக்குத் தெரிவித்தது. லீ சேம்பான் சர்லிக்னன் என்ற ஊரின் ஜனங்கள், தங்கள் போதகர் ஆன்ட்ரூ ட்ரோக்மே, அவரது மனைவி மேக்டா ஆகியோர் விடுத்த அழைப்பிற்குச் செவிகொடுத்து, யுத்த காலத்தில் தாங்களிருக்கும் பகுதியில் அடைக்கலம் தேடி வந்த யூதர்களுக்கு தைரியமாக பாதுகாப்பளித்தனர். அந்த இடம் “லா மான்டேக்ன் பிராடஸ்ட்டன்ஸ்” என்றழைக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த இசைவழி குறிப்பு, அந்த கிராமத்து மக்களின் தைரியமான செயலுக்கு ஓர் அடையாளம். இதன் மூலம் கிட்டத்தட்ட 3,000 யூதர்கள் மரணத்தினின்று காக்கப்பட்டனர்.

மற்றொரு பயங்கரமான நேரத்தில், சவுல் தாவீதைக் கொலை செய்யும் படி எதிரிகளை, இரவு நேரத்தில் தாவீதின் வீட்டிற்கு அனுப்பியபோது தாவீது பாடினான். அவனுடைய இசை ஓர் அடையாளமாக இசைக்கப்படவில்லை. அது, தனக்கு அடைக்கலமாயிருந்த தேவனுக்கு அவன் செலுத்திய நன்றி காணிக்கை. தாவீது, “நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கம் உண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும், உயர்ந்த அடைக்கலமுமானீர் (சங். 59:16).

தாவீதின் பாடல் இருளின் பயங்கரத்தில் பாடப்பட்ட பாடலல்ல. அது சர்வவல்ல தேவன் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்திய பாடல். “தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுமுள்ள என் தேவனுமாயிருக்கிறார் (வச. 17) என்று பாடினான். 

தாவீதின் துதியும், லீ சேம்பான் கிராமத்தினரின் பாடல்களும், நம்மையும் துதித்துப் பாட அழைக்கின்றது. நம் வாழ்வின் கவலைகளின் மத்தியில் நாம் அவருக்கு இசையை எழுப்புவோம் அவர் அன்போடு நமக்கு பதிலளித்து நம் இருதயங்களைப் பெலப்படுத்துவார். 

 

வழிகாட்டும் வெளிச்சம்!

அந்த உணவகம் அருமையாயிருந்தது. ஆனால் இருளாயிருந்தது. ஒவ்வொரு மேசையிலும் ஒரேயொரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தங்களுடைய அலை பேசியின் வெளிச்சத்தைப் பயன் படுத்தியே உணவருந்த வந்தவர்கள் உணவு அட்டவணையை வாசிக்கவும், தங்கள் மேசையில் அமர்ந்திருப்பவர்களைக் காணவும், தாங்கள் சாப்பிடும் உணவைப் பார்க்கவும் முடிந்தது.

கடைசியாக, அனைவரின் சார்பாகவும் ஒருவர் தன்னுடைய இருக்கையை நகர்த்தி, எழுந்து, அங்கிருந்த பொறுப்பாளரை அணுகி, “விளக்குகள் எரியும்படி சுவிட்சை உன்னால் இயக்க முடியுமா?” எனக் கேட்டார். சற்று நேரத்தில் மேற்கூரை விளக்கு எரிய ஆரம்பித்தது. அந்த அறையிலிருந்த அனைவரும் கரகோஷமிட்டனர், சிரித்தனர், மகிழ்ச்சியான குரலெழுப்பினர், நன்றி தெரிவித்தனர். என்னுடைய சிநேகிதியின் கணவன் தன்னுடைய அலைபேசி விளக்கை அணைத்தார். சாப்பிடுவதற்கான கருவிகளைக் கையிலெடுத்தார். அனைவர் சார்பாகவும் பேசினார். “வெளிச்சம் உண்டாகக் கடவது; இப்பொழுது அனைவரும் சாப்பிடலாம்” என்றார்.

ஒரு சுவிட்ச் இயக்கப்பட்ட போது, ஒரு இருண்ட மாலைப் பொழுது மகிழ்ச்சிகரமாக மாறியது. ஆனால் மெய்யான ஒளியின் காரணரைத் தெரிந்து கொள்வது இதைவிட எத்தனை முக்கியமானது! தேவன் தாமே இத்தகைய ஆச்சரியமான வார்த்தைகளைப் பேசினார். அவர் இந்த உலகத்தைப் படைத்த போது முதல் நாளில் “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றார். “வெளிச்சம் உண்டாயிற்று” (ஆதி. 1:3) “வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்” (வச. 4)

தேவன் நம்மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பினை ஒளி காட்டுகின்றது. இந்த ஒளி நம்மை இயேசுவுக்கு நேராக வழி நடத்துகின்றது. “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவா. 8:12) என்று இயேசு கூறினார். அவர் நம்மை பாவமாகிய இருளிலிருந்து ஒளிக்குள் வழி நடத்துகின்றார். அவருடைய ஒளியில் நாம் நடக்கும் போது, குமாரன் மகிமைப்படும்படியான  ஒரு வாழ்விற்குள் நாம் வழி நடத்தப் படுவோம். அவரே இவ்வுலகிற்குக் கொடுக்கப்பட்ட பிரகாசமான ஈவு. அவர் ஒளியாயிருந்து காட்டும் பாதையில் நாம் நடப்போமாக.

மற்றொரு வாய்ப்பு

பழைய இருசக்கர வாகனங்களின் கடையானது எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கிறது. அதில் சில தன்னார்வலர்கள், பழைய சைக்கிள்களைப் புதுப்பித்து அவைகளைத் தேவையுள்ளவர்களுக்கு வழங்குவார்கள். இந்த கடையின் உரிமையாளரான எர்னி கிளார்க் அவர்களும் பழைய இருசக்கர வாகனங்களை பழுது நீக்கி பல பெரியவர்களுக்கு இலவசமாக வழங்குவார். அதில் தங்கள் வாழ்க்கையை நடத்த கஷ்டப்படும் வீடற்றோர், ஊனமுற்றோர், இராணுவ ஓய்வுபெற்ற வீரர்களும் அடங்குவர். இருசக்கர வாகனங்கள் மட்டுமல்ல, பல சமயங்களில் அவைகளைப் பயன்படுத்துகிறவர்களும் இரண்டாவது வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஒரு சமயம் ஒரு வீரன் தன்னுடைய நேர்முகத்தேர்விற்கு செல்ல அத்தகைய ஒரு வாகனத்தை பயன்படுத்தினார்.

இரண்டாவது வாய்ப்புகள் அதுவும் தேவனிடத்திலிருந்து வரும்பொழுது ஒரு மனிதனை முற்றிலும் மாற்றக்கூடிய வலிமையுடையது. இஸ்ரவேல் தேசமானது, லஞ்சம் மோசடி மற்றும் பல வகையான பெரும் பாவங்களில் நிறைந்திருக்கும்பொழுது, தேவன் கொடுத்த கிருபையினை மீகா கண்டு கொள்ளுகிறார். மீகா, 'தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை", எனப் புலம்புகிறார் (மீகா 7:2).

தேவன் தீமையை சரியான வகையில் நியாயம் தீர்ப்பார். என்பது மீகாவிற்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவருடைய அன்பின் நிமித்தமாக, மனந்திரும்புகிற எல்லாருக்கும் அவர் மறு வாய்ப்பினை அளிக்கிறார். அந்த அன்பினாலே ஆட்கொள்ளப்பட்டவராய், மீகா, 'தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பானவர் யார்?"(வச. 18).

நாம் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டால், நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் ஒதுக்கப்படாதபடி, தேவனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கக்கூடும். மீகா கூறின விதமாக, 'அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிட்டார்" (வச. 19). அவரைத் தேடுகிற யாவருக்கும் தேவனுடைய அன்பானது இரண்டாவது வாய்ப்பினை அருளுகிறது.

பயனற்றவையிலிருந்து பொக்கிஷத்திற்கு

இடத்தில் இருந்தது. அதில் காணப்பட்ட எந்த ஒரு காரியமும் சிறப்பானதாகக் காணப்படவில்லை. ஆனாலும் ஜோஸ் ஆல்பர்ட்டோ கட்டிரஸ் என்பவர் எழைப்பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படியாக சேகரிக்கப்பட்ட 25,000 புத்தகங்கள், கொலம்பியாவின் தலைநகரிலுள்ள அந்த பழைய புத்தக வியாபாரியின் வீட்டில் இருந்தது.

உள்ளூர் பிள்ளைகள் அங்கிருந்த அந்த நூலகத்திற்கு வார இறுதியில் சென்று வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு அறையாக தேடிச் சென்று, பல புத்தகங்களைக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பிள்ளைகள் அந்த எளிமையான வீட்டினை, ஜோஸ் என்ற பெரியவர் வீட்டை விட பெரிதாக நினைத்தார்கள்.  அது விலைமதிப்பு மிக்க ஒரு பொக்கிஷம். இது கிறிஸ்துவைப் பின்தொடரும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாகும். நாம் சாதாரணமாக களிமண்ணினால் உண்டாக்கப்பட்டிருகிறோம்.  பல விதமான விரிசல்களோடு எளிதில் உடைந்துபோகக்கூடிய வகையில் இருக்கிறோம். ஆனால், நாம் உடைந்துபோன உலகத்திற்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல நமக்கு உதவி செய்யும் பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்க்கையில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பினை தேவன் நம்மிடம் கொடுத்திருக்கிறார். இது சாதாரண மற்றும் பலனற்ற மக்களுக்கான மிகப் பெரிய வேலையாகும். 'இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களில் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி இந்த பொக்கிஷங்களை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்"
(2 கொரி. 4:7) என்று அப்போஸ்தலனாகிய பவுல் பழைய பட்டணமான கொரிந்துவிலுள்ள தன்னுடைய சபையாருக்கு எழுதுகிறார். அவர்கள் அந்த பிராந்தியத்திலுள்ள பலதரப்பட்ட வர்க்கத்தை சேர்ந்தவர்களானபடியால், பவுல், 'நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்" (2 கொரி. 4:5) என்று அவர்களுக்கு எழுதுகிறார்.

அதற்கு பதிலாக, நமக்குள்ளாக வசிக்கும் விலைமதிப்பில்லாத ஒருவரை பிரசங்கியுங்கள் எனக் கூறுகிறார். அது அவரும், அவருடைய எல்லா சக்திக்கும் மேலான வல்லமையும் நம்முடைய சாதாரண வாழ்வினை விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றும் என்பதாகும்.

பயனற்றவையிலிருந்து பொக்கிஷத்திற்கு

இடத்தில் இருந்தது. அதில் காணப்பட்ட எந்த ஒரு காரியமும் சிறப்பானதாகக் காணப்படவில்லை. ஆனாலும் ஜோஸ் ஆல்பர்ட்டோ கட்டிரஸ் என்பவர் எழைப்பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படியாக சேகரிக்கப்பட்ட 25,000 புத்தகங்கள், கொலம்பியாவின் தலைநகரிலுள்ள அந்த பழைய புத்தக வியாபாரியின் வீட்டில் இருந்தது.

உள்ளூர் பிள்ளைகள் அங்கிருந்த அந்த நூலகத்திற்கு வார இறுதியில் சென்று வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு அறையாக தேடிச் சென்று, பல புத்தகங்களைக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பிள்ளைகள் அந்த எளிமையான வீட்டினை, ஜோஸ் என்ற பெரியவர் வீட்டை விட பெரிதாக நினைத்தார்கள்.  அது விலைமதிப்பு மிக்க ஒரு பொக்கிஷம். இது கிறிஸ்துவைப் பின்தொடரும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாகும். நாம் சாதாரணமாக களிமண்ணினால் உண்டாக்கப்பட்டிருகிறோம்.  பல விதமான விரிசல்களோடு எளிதில் உடைந்துபோகக்கூடிய வகையில் இருக்கிறோம். ஆனால், நாம் உடைந்துபோன உலகத்திற்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல நமக்கு உதவி செய்யும் பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்க்கையில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பினை தேவன் நம்மிடம் கொடுத்திருக்கிறார். இது சாதாரண மற்றும் பலனற்ற மக்களுக்கான மிகப் பெரிய வேலையாகும். 'இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களில் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி இந்த பொக்கிஷங்களை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்"
(2 கொரி. 4:7) என்று அப்போஸ்தலனாகிய பவுல் பழைய பட்டணமான கொரிந்துவிலுள்ள தன்னுடைய சபையாருக்கு எழுதுகிறார். அவர்கள் அந்த பிராந்தியத்திலுள்ள பலதரப்பட்ட வர்க்கத்தை சேர்ந்தவர்களானபடியால், பவுல், 'நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்" (2 கொரி. 4:5) என்று அவர்களுக்கு எழுதுகிறார்.

அதற்கு பதிலாக, நமக்குள்ளாக வசிக்கும் விலைமதிப்பில்லாத ஒருவரை பிரசங்கியுங்கள் எனக் கூறுகிறார். அது அவரும், அவருடைய எல்லா சக்திக்கும் மேலான வல்லமையும் நம்முடைய சாதாரண வாழ்வினை விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றும் என்பதாகும்.