எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

இயேசுவின் வருகையை எதிர்பார்த்து வாழ்

பாடகர் டிம் மெக்ரா எழுதிய “நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழ்” என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய சாவு நெருங்கி விட்டது எனத் தெரிந்து கொண்ட போது, அவன் செய்த நீண்ட வரிசையான காரியங்களை அப்பாடல் விளக்குகிறது. அவன் பிறரை எளிதாக நேசிக்கவும், மன்னிக்கவும் தெரிந்து கொண்டான், பிறரிடம் கனிவாகப் பேசக்கற்றுக் கொண்டான். நம்முடைய வாழ்வும் சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று தெரிந்து கொண்டு வாழ்ந்தால் நாமும் நன்றாக வாழ முடியும் என்பதை அப்பாடல் விவரிக்கின்றது.

நம்முடைய காலம் மிகவும் குறுகியது என்பதை இப்பாடல்  நமக்கு நினைப்பூட்டுகிறது. இன்றைக்கு செய்யக் கூடியவற்றை, நாளை என்று தள்ளி  போடாமல் இன்றே செய்வது அவசியம், ஏனெனில்  நாளை நமக்கு கிடைக்காமல் போகலாமே. இயேசுவின் வருகை எந்நேரமும் இருக்கலாம் என நாம் விசுவாசிக்கின்றோம்.(ஒரு வேளை இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட) மணவாளன் வரும் போது ஆயத்தமில்லாமலிருந்த ஐந்து “புத்தியில்லாத” கன்னிகைகளைப் போன்று அல்லாமல் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் படி தேவன் நம்மைத் தூண்டு கின்றார் (மத்தேயு 25;6-10)

மெக்ராவின் பாடல் முழுமையான கதையை நமக்கு வெளிப்படுத்த வில்லை. இயேசுவை நேசிப்பவர்களாகிய நாம் நாளை நமக்கு கிடைக்கவில்லையேயெனத் தவிப்பவர்கள் அல்ல. “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25-26) என இயேசு கூறியுள்ளார். அவருக்குள் நம்முடைய வாழ்வு ஒருபோதும் முடிவதில்லை.

எனவே, நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழாதே. ஏனெனில் நம்முடைய வாழ்வு முடிவதில்லை. ஆனால் இயேசுவின் வருகையை எதிர் நோக்கி வாழ். அவர் சீக்கிரம் வருகின்றார்.

இறுக்கமான வட்டங்கள்

என்னுடைய வகுப்புத்தோழன் ஒருவன் எங்கள் குடும்பத்திற்கு, ஒரு சடைநிறைந்த வயதான நாயைப் பரிசளித்தார். அது குட்டிகள் போடமுடியாத அளவிற்கு வயதானதாக இருந்தது. ஆனால், வெகுவிரைவில் நாங்கள் கண்டுபிடித்த உண்மை என்னவெனில், அந்த நாயானது, ஒரு கூண்டுக்குள்ளேயே தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தது என்பதேயாகும். அது தன்னுடைய இறுக்கமான வட்டங்களுக்குள்ளே மட்டும் தான் நடக்கும். அது நீளமான பாதையில் ஓடமுடியாது. ஒரு பெரிய விளையாட்டு ஸ்தலத்தில்கூட அது தன்னை வேலியடைத்ததாகவே நினைத்துக்கொள்ளும்.

ஆதிக்கிறிஸ்தவர்களில் பல யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமானங்களினாலே வேலியடிக்கப்பட்டிருந்தனர். நியாயப்பிரமானமானது நல்லதாக இருந்தாலும், பாவத்திலிருந்து அவர்களை உணர்வடையச்செய்து இயேசுவுக்கு நேராகத் திருப்புவதாக இருந்தாலும் (கலா. 3:19-25), இப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் சுயாதீனத்தினாலும், கர்த்தருடைய கிருபையினாலும் உண்டான புதிய விசுவாசத்தின்படியே வாழவேண்டிய அவசியத்தில் இருந்தார்கள். அவர்கள் தயங்கினார்கள். இந்த எல்லா நேரங்களிலும் அவர்கள் உண்மையாகவே விடுதலையாக்கப்பட்டிருந்தனரா?

நமக்கும் இவ்விதமான பிரச்சனை இருக்கலாம். ஒருவேளை நாம் கடுமையான சட்டத்திட்டங்களுள்ள திருச்சபையில் வளர்ந்து இருக்கலாம். அல்லது நாம் கடுமையான ஒழுக்கமுள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு இருக்கலாம். எப்படியிருந்தாலும், இப்பொழுது நாம் கிறிஸ்துவினால் நமக்குக் கொடுக்கப்படுகிற சுதந்திரத்தை தழுவிக்கொள்ளவேண்டிய நேரமாகும் (கலா. 5:1). இயேசுவானர் நம்மை விடுதலையாக்கி, அவருக்கு நாம் அன்பினாலே கீழ்ப்படிய வேண்டுமென விரும்புகிறார் (யோவா. 14:21). மற்றவர்களுக்கு அன்பினாலே சேவை செய்ய வேண்டுமென விரும்புகிறார் (கலா. 5:13). மிகப்பெரிய சந்தோஷமும், அன்பும், 'குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்" (யோவா. 8:36) என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

லிங்கனின் பாக்கெட்

1865ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஃபோர்ட்; தியேட்டரில் சுடப்பட்ட இரவு, அவருடைய பாக்கெட்டில் கீழ்க்கண்டவைகள் இருந்தன. இரண்டு மூக்குக் கண்ணாடிகள், லென்ஸ்ஸை சுத்தம் செய்யும் திரவம், ஒரு பாக்கெட் கத்தி, ஒரு கடிகாரம், ஒரு கைக்குட்டை, ஒரு தோல் பர்ஸ் அதனுள்ளே 5 டாலர்கள். சங்கத்தின் பணம், 8 செய்தித்தாள்களின் கத்தரிப்புகள். அதோடு அவரையும் அவர் கொள்கைகளையும் பாராட்டுகிற பல பாராட்டுதல்களும் இருந்தன.

தலைவருடைய பாக்கெட்டிலுள்ள சங்கப்பணம் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால், அவரைக்குறித்த நல்ல செய்திகளைக் குறித்து நான் அறிந்தவனாதலால் சந்தேகப்படவில்லை. எல்லாருக்கும் உற்சாகப்படுத்துதல் அவசியம், அதுவும் ஆபிரகாம் லிங்கன் போன்ற பெருந்தலைவர்களுக்கும். ஒரு வேளை தன்னுடைய மரணத்திற்கு சற்று முன்பு அந்த பாராட்டு செய்திகளைத் தன் மனைவிக்கு அவர் வாசித்துக் காண்பித்திருக்கக் கூடும்.

யாருக்கெல்லாம் உற்சாகம் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எல்லாருக்குமே! உங்களைச் சுற்றிப்பாருங்கள். உங்கள் கண்ணுக்கெட்டும் வரை உள்ளவர்கள் அவர்கள் தோற்றத்திலிருப்பதை விட நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றார்கள். நாம் எல்லாருமே தோற்றுப்போனவர்கள், பல குறைபாடுகளைக் கொண்டவர்கள்.

நாம் எல்லாரும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, 'நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்" (ரோம. 15:2) என்ற வசனத்தைப் போலவும் நல்ல வார்த்தைகளை பேசதீர்மானித்து, 'இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்." (நீதி. 16:24) என்ற வசனத்தைப் போலவும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட வசனங்களை ஒரு தாளிலோ அல்லது கைப்பேசியிலோ மற்றவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளும்படி நாம் முயல்வோமா? அவ்வாறு செய்வோமாயின், நாம் இயேசுவைப்போல மாறி தன்னைத்தானே பிரியப்படுத்திக்கொள்ளாமல் மற்றவர்களுக்காக வாழ்பவராக மாறிவிடுவோம் (ரோம. 15:3).

எல்லாம் எதற்கும் பிரயோஜனமில்லை

ஹெராயின் போதை வஸ்துக்கு அடிமைப்படுவது வருத்தகரமானது, துயர்தரக்கூடியது. ஹெராயினின் அளவுக்கேற்ப உடலும் பழகிவிடுவதால், அதேயளவு போதை கிடைப்பதற்கு ஹெராயினின் அளவை அதிகரிக்கவேண்டிய அவசியம் உண்டாகிவிடுகிறது. ஓரளவுக்கு மேல் அதிகமாக உட்கொள்ளும்போது, அது உயிரைப் பறித்துவிடுகிறது. அளவுக்கதிகமாக ஹெராயின் உட்கொண்டு யாராவது மரித்துவிட்டதாக ஹெராயின் அடிமைகள் கேள்விப்படும்போது, உடனே அவர்களுக்கு பயம் உண்டாவதில்லை; மாறாக “அது எங்கே கிடைக்கிறது?” என்று விசாரிப்பார்கள்.

இந்தக் கீழ்த்தரமான போக்குபற்றி ஸ்குரூடேப் லெட்டர்ஸ் எனும் புத்தகத்தில் சி.எஸ்.லூயிஸ்  எச்சரித்திருக் கிறார். பாவச்சோதனையை சாமர்த்தியமாகக் கொடுப்பது எப்படியென ஒரு பிசாசு விளக்கம் கொடுப்பதுபோல அந்தப் புத்தகத்தில் கற்பனைசெய்து எழுதியிருப்பார். இன்பம் தருகிற ஏதாவது விஷயத்தில் முதலில் ஈடுபட வேண்டும், தேவன் அனுமதித்திருக்கிற நல்ல இன்பங்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தேவன் தடைசெய்திருக்கும் விதத்தில் அதை அனுபவிக்கும்படித் தூண்டவேண்டும். தூண்டுதலுக்கு மனிதன் இணங்கினதுமே, அந்த இன்பம் அவனுக்குக் கிடைக்காமல் செய்து, அதற்காக அவன் அதிகம் ஏங்கும்படி அவனை வசியப்படுத்தவேண்டும். “அந்த இன்பத்தை கொஞ்சம்கொஞ்சமாகக் குறைத்து, அதைப் பெறுவதற்கான ஆசையை அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும். இறுதியில், “அந்த மனிதனின் ஆத்துமாவைச் சிறைப்படுத்தி, அவனுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்யவேண்டும்” என்று அந்தப் பிசாசு சொல்லுவதாக எழுதியிருப்பார்.

 இந்த நாசகரமான சுழற்சியை பாலின்ப பாவச்சோதனையை வைத்து நீதிமொழிகள் 7 விவரிக்கிறது. பாலுணர்வு என்பது தேவன் தந்திருக்கிற நல்லதொரு ஈவு. ஆனால் பாலுணர்வு நுகர்வை திருமண பந்தத்திற்கு வெளியே அனுபவிக்க முயலும்போது, ‘ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வது’ போலாகும்
(வச. 22). நம்மைவிட பலசாலிகளான மனிதர்கள் எல்லாம் தீங்கான விஷயங்களை அனுபவிக்க முயன்று, தங்களையே அழித்திருக்கிறார்கள். எனவே, “செவிகொடுங்கள்,” “உன் இருதயம் (தவறான) வழியிலே சாயவேண்டாம்” (வச. 24-25). பாவம் நம்மை மயக்கலாம், அடிமைப்படுத்தலாம், ஆனால் எப்படியானாலும் முடிவு மரணம்தான். வசனம் 27. தேவனுடைய பெலத்தால், பாவச்சோதனையை மேற்கொள்ளும்போது, அவருக்குள் மெய்யான சந்தோஷத்தையும் மனதிருப்தியையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஞானமாக உதவுதல்

சாலையின் சிவப்பு விளக்கு எரியவே சிக்னலில் வண்டியை நிறுத்தினேன். ஏற்கனே நான் பார்த்திருந்த அதே நபர் அப்போதும் சாலையோரம் நின்றிருந்தார்.  “உணவுவாங்க பணம் இல்லை. எந்த உதவியானாலும் சரி” என்று கையில் ஓர் அட்டையை வைத்திருந்தார். அவருக்கு உதவுவதா வேண்டாமா என்று தெரியவில்லை, பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

உதவி தேவைப்படுவதுபோல நடிக்கிறவர்கள் இருக்கிறார்கள். வேறு சிலருக்கு உண்மையிலேயே உதவி தேவையிருக்கும், ஆனால் தவறான பழக்கங்களுக்கு அடிமைப்பட்டிருப்பார்கள். நம் நகரத்தின் சேவை பணிகளுக்கு பணம்கொடுப்பதுதான் சிறந்தது என்று சமூகப்பணியாளர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். மனப்பாரத்தோடு அங்கிருந்து கிளம்பினேன்.  அன்று நான் ஞானமாகச் செயல்பட்டிருந்தாலும்கூட, மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

“ஒழுங்கில்லாதவர்களையும் உழைக்காதவர்களையும் எச்சரியுங்கள், பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள், எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள்” என்றுதான் மூலபாஷையில் (1 தெச. 5:14) சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நபர்களை அடையாளங்கண்டால்தான் சரியாக நாம் நடந்துகொள்ள முடியும். பலவீனமான அல்லது மனமுறிவுள்ள ஒருவரை எச்சரித்தால், அவர்களுடைய ஆவியை மேலும் சோர்வடையச் செய்துவிடுவோம். உழைக்காத ஒருவருக்கு உதவினால், அவரை மேலும் சோம்பலாக்க ஊக்கப்படுத்திவிடுவோம். எனவே, நமக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு, உண்மையில் உதவி தேவைப்படுகிறதென நாம் அறிந்தவர்களுக்கு உதவுவதுதான் சிறந்தது.

யாருக்காவது உதவும்படி தேவன் உங்களுடைய உள்ளத்தில் ஏவுகிறாரா? நல்லது! இப்போதே உதவிசெய்யத் துவங்குங்கள். அவருக்கு இன்ன தேவைகள்தாம் இருக்கிறதென நீங்களே ஏதாவது கற்பனைசெய்யாதீர்கள். அவருடைய பிரச்சனைகள் என்னவென்று கேளுங்கள், சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். ஜெபித்துவிட்டு, ஞானமாக உதவிசெய்யுங்கள், உங்களுடைய மனது சொல்கிறபடி உதவிசெய்ய நினைக்காதீர்கள். மற்றவர்களுக்கு “நன்மைசெய்கிற” நோக்கத்துடன் உதவும்போதுதான், அவர்கள் தடுமாறினாலும்கூட “எல்லாரிடமும் நீடிய சாந்தமாக இருப்போம்” (வச. 14-15).

உங்களுடைய புகழ்ச்சி

உண்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணுடைய அடக்க ஆராதனைக்குச் சென்றிருந்தேன். ஏதோ மனதில் ஒரு நிறைவு. அந்தப் பெண் பிரபலமான நபர் அல்ல. சபையார், அக்கம்பக்கத்தார், நண்பர்கள் என்கிற வட்டத்திற்குள் வாழ்ந்தவர், அதைத் தாண்டி வேறு யாருக்கும் அவரைத் தெரியாது. ஆனால் இயேசுவையும், தன்னுடைய ஏழு பிள்ளைகளையும், இருபத்தைந்து பேரப்பிள்ளைகளையும் மிகவும் நேசித்தார். எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பார், எல்லாரையும் அன்பாக விசாரிப்பார், உடல் திடகாத்திராமா இருந்தார்.

“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்” என்று பிரசங்கி சொல்கிறது. பிர 7:2. “ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்,” ஏனென்றால், வாழ்க்கையில் எது முக்கிய மென்பதை அங்கே அறிந்துகொள்ளலாம் (7:4). நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கட்டுரையாளரான டேவிட் புரூக்ஸ், இரண்டுவித நல்லதன்மைகள் இருப்பதாகக் கூறுகிறார். ஒன்று, சுயவிபரப் பட்டியலில் சொல்லப்படுவது, இரண்டாவது, ஒருவருடைய அடக்க ஆராதனையின்போது சொல்லப்படுவது. சிலசமயங்களில் சுயவிபரப்பட்டியலில் உள்ளதுபோலவே அடக்கஆராதனையில் சொல்லப்படும், சில சமயங்களில் எங்காவது ஓரிடத்தில்தான் அவ்வாறு சொல்லப்படும் சந்தேகப்படும் நேரத்தில். புகழைத்தருகிற நல்ல குணங்களைத்தான் தேர்ந்தெடுங்கள்.

அந்தப் பெண்ணுக்கு சுயவிபரப் பட்டியலெல்லாம் கிடையாது.  ஆனால் அவர் “நீதிமொழிகள் 31ன் ஸ்திரிபோல வாழ்ந்தவர்” என்று அவருடைய பிள்ளைகள் கூறினார்கள். தேவ பக்தியுள்ள ஒரு ஸ்திரியைப் பற்றி அங்கு சொல்லப்பட்டுள்ளது. பிள்ளைகள் இயேசுவிடம் அன்புகூரவும், மற்றவர்களை நேசிக்கவும் அவர் ஓர் ஊக்கசக்தியாக இருந்தார். “நான் கிறிஸ்துவைப்
பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று பவுல் சொன்னதுபோல, தங்களுடைய அம்மாவைப் போல ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்று சொன்னார்கள்.

உங்களுடைய அடக்க ஆராதனையில் என்ன சொல்லுவார்கள்? என்ன சொல்லப்பட விரும்புகிறீர்கள்? புகழ்தருகிற தன்மைகளை வளர்க்க காலம் பிந்தவில்லை. இயேசுவில் இளைப்பாறுங்கள். அவர் நமக்கு இலவசமாக இரட்சிப்பைத் தந்து நாம் எவ்வாறு வாழவேண்டும் என்று காட்டுகிறார்..

தனிமையைக் கண்காணிக்கும் மந்திரி

வந்து பெற்றுக் கொள்ளுங்கள்

மிகச் மிகச் சிறியோருக்கு சேவை செய்தல்

அந்த  வீடியோ காட்சியில் ஒரு மனிதன் ஒரு கூட்டம் நிறைந்த ஒரு சாலையோரம் முழங்காலில் நின்றபடியே அருகிலுள்ள முட்புதரில் பற்றியெரிந்து கொண்டிருந்த நெருப்பினூடே கைகளைத்தட்டியும், கெஞ்சியும் ஏதோ ஒன்றினை வெளியே வரும்படி கேட்டுக் கொண்டிருந்தான். அது என்ன? ஒரு நாயாக இருக்குமோ? சில மணித்துளிகளில் முயலொன்று குதித்து வெளியே வந்தது. அந்த மனிதன், பயந்துகொண்டு வெளியே வந்த அந்த முயலை அள்ளி அணைத்தவாறு வேகமாகப் பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தார்.

எப்படி ஒரு சிறிய உயிரினத்தைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சி அந்த நாட்டின் மிகப்பெரிய செய்தியாக வெளிவந்தது? ஏதோ ஒன்று, இந்த சிறிய உயிரினத்தையும் அருமையாகக் கருதி இரக்கம் காட்டும்படிச் செய்தது. இத்தனை சிறிய உயிரினத்திற்கு இருதயத்தில் இத்தனை பெரிய இடம் கொடுப்பதென்பது எத்தனை பெரியது!

ஒரு மனுஷன் பெரிய விருந்து ஆயத்தம் பண்ணி விருப்பமுள்ள அனைவரையும் அழைத்ததைப் போன்று தேவனுடைய இராஜ்ஜியம் உள்ளது என்று இயேசு கூறினார். அந்த விருந்துக்கு மிகப் பெரிய முக்கியஸ்தர்களை மட்டுமல்ல, “ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக் கொண்டுவா” என்றார் (லூக். 14:21). நல்லவேளை, தேவன் பெலவீனரையும் சமுதாயத்தில் யாரும் கவனிக்காதவர்களையும் அழைத்து விருந்து சாலையை நிரப்பினார். இல்லையெனில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும் அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1 கொரி. 1:27-29).

என்னைப் போன்ற சிறிய மனிதனையும் இரட்சிக்கும்படி தேவன் எத்தனை பெரிய இருதயம் கொண்டுள்ளார்! இதற்குப் பிரதிபலனாக நான் எத்தனை பெரிய இருதயம் கொண்டிருக்க வேண்டும்? மிக எளிதாகச் சொல்ல முடியும், சமுதாயத்தில் மிகப் பெரியவர்களாகக் கருதப்படுகின்றவர்களை மனம் மகிழச் செய்வதன் மூலமாக அல்ல, சமுதாயம் மிகவும் அற்பமாகக் கருதும் நபர்களுக்குப் பணி செய்வதன் மூலமே, நான் பெரிய இருதயத்தைப் பெற முடியும்.

நீ தேர்ந்தெடுக்கப்படாதபோது

என்னுடைய நண்பனின் முகநூல் பதிவு, அவன் தன்னுடைய செயல் திட்டத்தை முடித்துவிட்டதைத் தெரிவித்தது. அநேகர் அவனுக்குப் பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அவனுடைய இந்த பதிப்பு என் இருதயத்தை நெருடியது. அந்த செயல்திட்டம் என்னுடையது. ஏன் நான் அதனை நழுவவிட்டேனெனப் புரியவில்லை.

யோசேப்பின் நிலையும் இப்படித்தான் இருந்தது. தேவன் அவனை கவனிக்கத் தவறிவிட்டார். அது அவனுக்கு நன்றாகத் தெரியும். யூதாஸின் இடத்தைப் பிடிக்க ஓடிய இருவரில் ஒருவன் தான் யோசேப்பு. சீடர்கள் ஜெபித்தனர். "எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே... இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்து கொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும்" (அப். 1:24-25). ஆனால், தேவன் மற்றவனாகிய மத்தியாவைத் தெரிந்து கொண்டார். 'சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது. தேவன் தமது சித்தத்தைக் கூட்டத்தினருக்கு அறிவித்தார் (வச. 26).

எல்லா சீடர்களும் மத்தியாவிற்குப் பாராட்டு தெரிவித்தனர். நான் யோசேப்பைக் குறித்து ஆச்சரியப்பட்டேன். அவர், தான் நிராகரிக்கப்பட்டதை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்? கைவிடப்பட்டதாக எண்ணி அவர் அதிர்ந்து போனாரா? சுய அனுதாபத்தால் துவண்டு போனாரா? சீடர்களை விட்டுத் தன்னைப் பிரித்துக் கொண்டாரா? அல்லது தேவன் மீதுள்ள விசுவாசத்தில் சோர்ந்துபோகாமல் மற்றவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு தேவ பணியில் ஆதரவாக இருந்தாரா?

இதில் எது சிறந்ததென எனக்குத் தெரியும். நானாக இருந்திருந்தால் இதில் எதைச் செய்திருப்பேனெனவும் எனக்குத் தெரியும். எத்தனை சங்கடமான சூழ்நிலை! உங்களுக்கு நான் தேவையில்லை. நல்லது நானில்லாமல் நீங்கள் எப்படிச் செய்கிறீர்களெனப் பார்ப்போம். இந்த முடிவு ஒரு வேளை நல்லதாகத் தோன்றலாம். ஆனால், அது தன்னலமான முடிவு.

இதற்குப் பின்னர் வேதாகமத்தில் யோசேப்பைக் குறித்து எங்குமே குறிப்பிடப்படவில்லை. அதனால், அவர் எவ்வாறு செயல்பட்டாரெனத் தெரியவில்லை. நாம் தேர்ந்தெடுக்கப்படாமாலிருக்கும் போதும் நாம் எவ்வாறு செயல்படுகிறோமென்பதே மிக முக்கியமானது. நமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் நாம் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறோமென்பதைவிட எவ்வாறு மகிழ்ச்சியொடு பணி செய்கிறோமென்பதையே இயேசுவின் இராஜ்ஜியம் எதிர்பார்க்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.