நாம் தனியாக இல்லை
ஃபிரெட்ரிக் பிரவுன் என்பவரின் விறுவிறுப்பான சிறுகதையான "நாக்" இல், அவர் எழுதினார், "பூமியின் கடைசி மனிதன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது”. ஐயோ! அது யாராக இருக்கலாம், அவர்களுக்கு என்ன வேண்டும்? என்ன மர்மமான ஜந்து வந்தது? மனிதன் தனியாக இல்லையே.
நாமும் இல்லை. லவோதிக்கேயாவில் உள்ள சபையினர், கதவு தட்டப்படுவதைக் கேட்டனர் (வெளி.3:20). இயற்கைக்கு அப்பாற்பட்டவராக அவர்களிடம் வந்தது யார்? அவருடைய பெயர் இயேசு. முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிவர் (1:17). அவருடைய கண்கள் நெருப்பைப் போல ஜுவாலித்தது, “அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" (வச.16). அவருடைய நெருங்கிய நண்பனான யோவான், அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தார் (வச.17). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது தேவனுக்குப் பயப்படுவதிலிருந்து தொடங்குகிறது.
நாம் தனியாக இல்லை, இது ஆறுதல் அளிக்கிறது. இயேசு, அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபிரெயர் 1:3) இருக்கிறார். ஆனாலும் கிறிஸ்து தம்முடைய வலிமையை நம்மை அழிக்க அல்ல, நம்மை நேசிக்கவே பயன்படுத்துகிறார். அவருடைய அழைப்பைக் கேளுங்கள், "ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே பிரவேசித்து அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னுடன் போஜனம்பண்ணுவான்" (வெளி.3:20). வாசலில் நிற்பது யாரோ? என்கிற பயத்துடன் நமது விசுவாசம் துவங்கி, அது வரவேற்பிலும் ஆற தழுவுவதிலும் முடிகிறது. நாம் பூமியில் கடைசி நபராக இருந்தாலும், எப்பொழுதும் நம்முடன் இருப்பேன் என்று இயேசு உறுதியளிக்கிறார். தேவனுக்கு நன்றி, நாம் தனியாக இல்லை.
இயேசு நம் சமாதானம்
கவிதாவின் சமூக ஊடகப் பதிவைக் கண்டு ஆனந்தி குமுறினாள். அந்த புகைப்படத்தில் அவர்களுடைய பத்து சபை நண்பர்கள் ஒரு உணவக மேசையைச் சுற்றிலும் சிரித்துக்கொண்டிருந்தனர். இந்த மாதம் இரண்டாவது முறையாக, அவள் இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனந்தி கண்ணீர் விட்டாள். அவள் எப்போதும் பிறருடன் சகஜமாகப் பழகியதில்லை, இருந்தபோதும் அவளை ஒதுக்குபவர்களுடன் சபைக்குச் செல்வது எவ்வளவு வினோதமானது!
முதல் நூற்றாண்டு எவ்வளவு விசித்திரமாய் இருந்திருக்க வேண்டும்! ஆனால், இயேசுவானவர் ஐக்கியத்தை நேசித்து நம் பிரிவினையை அகற்றிட வந்தார். ஆதி சபை தொட்டே, சகஜமாகப் பழக இயலாதவர்கள், அவரில் பொதுவான ஐக்கியம் பெறுவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காததற்காக யூதர்கள் புறஜாதிகளை இழிவாகப் பார்த்தனர், மேலும் தாங்களே சிறந்தவர்கள் என்று நினைத்த யூதர்களை புறஜாதியினர் வெறுத்தனர். பின்னர் இயேசு "சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்(தார்)து" (எபேசியர் 2:14-15). நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள இனி வேண்டியதில்லை. வேண்டியதெல்லாம் இயேசு மட்டுமே. யூதரும் புறஜாதியாரும் அவரில் ஐக்கியப்படுவார்களா?
அது அவர்களின் பதிலைப் பொறுத்தேயிருந்தது. இயேசு "தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்" (வ.17). ஒரே செய்தி, வெவ்வேறு பயன்பாடு. சுயநீதியுள்ள யூதர்கள் தாங்கள் சிறந்தவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும், அதே சமயம் புறக்கணிக்கப்பட்ட புறஜாதியினர் தாங்கள் மோசமானவர்கள் அல்ல என்று நம்ப வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் பற்றி எரிச்சலாவதை விட்டு, கிறிஸ்துவின் மீதே கவனம் செலுத்த வேண்டும், அவர் "இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி(னார்)" (வ.15).
ஒதுக்கப்பட்டவராக உணர்கிறீர்களா? அது காயப்படுத்தும். அது சரியன்று. ஆனால், நீங்கள் இயேசுவில் இளைப்பாறும்போது நீங்களே சமாதானம் செய்பவராக இருக்க முடியும். அவரே இன்றும் நமது சமாதானம்.
இலகுவானதும், கடினமானதும்
மார்க் ஒரு உற்சாகமான இளம் போதகர். ஒரு காலை வேளையில், தனது மகன் ஓவனுடன் பந்து விளையாடுகையில், ஓவன் தடுமாறி விழுந்து மரித்தான். நிலைகுலைந்து போன மார்க், இன்றும் அதற்காக வேதனைப்படுகிறார். ஆனால், அந்த வலியினூடே மிகுந்த மனதுருக்கமுடைய போதகரா க மாறியுள்ளார். மார்க்கின் துயரத்தில் பங்கேற்ற நான், “தேவன் ஒருவனை ஆழமாக காயப்படுத்துமட்டும், அவன் அவரால் அபிரிதமாக ஆசிர்வதிக்கபடுது சந்தேகமே " என்று ஏ.டபல்யு.டோசர் குறிப்பிட்டிருந்த தனது புரிதலுக்கு, மார்க்கின் சோதனையும் ஒரு சான்றோ என்று வியக்கிறேன்.
ஆனால், அது உண்மையில் அவ்வளவு எளிதல்ல. இஸ்ரவேலர்களின் பயணத்தை கவனித்தால், தேவனின் அறிவதர்கரிய வழிமுறைகளில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். புதிதாய் தோன்றிய தேசத்திற்குத் தேவன், “ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி" (யாத்திராகமம் 13:17) எகிப்திலிருந்து எளிதான பாதையில் அழைத்து வந்தார். எனினும் சில வசனங்கள் தள்ளி, தேவன் மோசேயிடம் பார்வோன் தனது இராணுவத்தோடு இவர்களை பின்தொடரும்படிக்கு பாளயமிறங்க சொன்னார் (14:1-4). பார்வோன் இந்த பொறியில் வீழ்ந்தான். இஸ்ரவேலர்கள் மிகவும் பயந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் (வ.10). “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (வ.14) என்று மோசே அவர்களைத் திடப்படுத்தினான்.
தேவன் தமது ஜனங்களை வளர்க்கவும், தமக்கு மகிமையுண்டாக்கவும்; கடினம் மற்றும் எளிதுமான இரண்டு பாதைகளையும் உபயோகிக்கிறார். தேவன், "நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்" (வ.4) என்று வாக்குரைத்தார். இஸ்ரவேலர் அவ்வாறே செய்தனர். நாமும் அவ்வாறே செய்யலாம். எளிதோ, கடிதோ ஒவ்வொரு சோதனையினூடே தேவன் நமது விசுவாசத்தைக் கட்டுவிக்கிறார். வாழ்க்கையின் எளிதான காலத்தில், அவரில் இளைப்பாறுங்கள். வாழ்க்கையின் கடினமான நேரத்தில், அவர் உங்களைச் சுமக்கட்டும்.
இயேசுவுக்கென இடம்
பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு குவார்ட்டரில் எனது வார இறுதியை இராணுவ அணிவகுப்பு, அருங்காட்சியகத்தைப் பார்வையிடல் மற்றும் பொறித்த மீன்களைச் சுவைப்பது என்று செலவிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எனது நண்பரின் அறையில் நான் தூங்கியபோது, என் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ஏங்கினேன். பிற நகரங்களில் பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளை நான் மகிழ்ந்து அனுபவிக்கிறேன், ஆனால் வீட்டில் இருப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும்.
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு அம்சம் சில சமயங்களில் கவனிக்கப்படாமல் இருக்கும்; அவருடைய மிக முக்கியமான எத்தனையோ நிகழ்வுகள் சாலையில்தான் நிகழ்ந்தன என்பதே. பெத்லகேமில் தேவனுடைய குமாரன் நம் உலகில் பிறந்தார், அவருடைய பரலோக வீட்டிலிருந்து கணக்கிட முடியாத தூரம் மற்றும் அவரது குடும்பத்தின் சொந்த ஊரான நாசரேத்திலிருந்து வெகு தொலைவில் இது உள்ளது. பெத்லகேம் நகரம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக நிரம்பி வழிய, விரிவாக்கப்பட்ட இக்குடும்பமும் வருகிறது, எனவே ஒரு உதிரி கெடாலிமா (கிரேக்க வார்த்தை) அல்லது "விருந்தினர் அறை" கூட கிடைக்கவில்லை என்று லூக்கா கூறுகிறார் (லூக்கா 2:7).
இயேசுவின் பிறப்பில் இல்லாத ஒன்று, அவருடைய மரணத்திலிருந்தது. இயேசு தம் சீடர்களை எருசலேமுக்கு அழைத்துச் சென்றபோது, பேதுருவையும் யோவானையும் பஸ்கா விருந்துக்குத் தயார் செய்யும்படி கூறினார். அவர்கள் ஒரு குடத்தை எடுத்துச் செல்லும் மனிதனை அவரது வீட்டிற்குப் பின்தொடர்ந்து, கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் இறுதி இராபோஜனத்தை புசிக்கக்கூடிய விருந்தினர் அறையான "கெடாலிமா"வை அதன் உரிமையாளரிடம் கேட்க வேண்டும் (22:10-12). அங்கு, இரவல் வாங்கிய இடத்தில், இயேசு இப்போது ஐக்கிய பந்தி என்று அழைக்கப்படுவதை ஏற்படுத்தினார். அவர் கொடூரமாகச் சிலுவையில் அறையப்படுவதை இது முன்னறிவித்தது (வ.17-20).
நாம் வீட்டை நேசிக்கிறோம், ஆனால் நாம் இயேசுவின் ஆவியானவருடன் பயணித்தால், ஒரு விருந்தினர் அறை கூட அவருடன் ஐக்கியம் கொள்ளும் இடமாக மாறும்.
சுபாவ மாற்றம்
மரண தருவாயிலிருந்த, பதினேழாம் நூற்றாண்டின் இலக்கண அறிஞர் டொமினிக் பௌஹர்ஸின் படுக்கையைச் சுற்றி, அவர் குடும்பம் கூடியிருந்தது. அவர் இறுதியாக சுவாசித்து கொண்டிருக்கையில், “நான் சாகப்போகிறேன் அல்லது நான் மரிக்க போகிறேன்; இரண்டு வாக்கியங்களுமே சரியானது" என்றாராம். மரணப் படுக்கையில் இலக்கணத்தைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்? வாழ்நாள் முழுவதும் இலக்கணத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவரால் மட்டுமே சாத்தியம்.
நாம் முதுமையை அடையும் நேரத்தில், நாம் பெரும்பாலும் நம் விருப்பங்களில் வாழ்ந்திருப்போம். நல்லதோ கெட்டதோ, நமது விருப்பங்கள் பழக்கங்களாக உருமாறி, பின்னர் குணாதிசயமாக வடிவெடுக்கும் நீண்ட ஆயுட்காலம் நமக்கு இருந்தது. நாம் எப்படிப்பட்டவர்களாக வேண்டுமென்று தெரிவு செய்தோமோ, அப்படியே ஆனோம்
நம் குணம் இளமையாகவும், நெகிழ்வாகவும் இருக்கும்போது பக்திவிருத்திக் கேதுவான பழக்கங்களை வளர்ப்பது எளிது. “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” (2 பேதுரு 1:5-7) என்று பேதுரு வலியுறுத்துகிறார். இந்த நற்பண்புகளை நடைமுறைப்படுத்துங்கள், மேலும் "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்" (வ.11).
பேதுருவின் பட்டியலில் உள்ள எந்த குணாதிசயங்கள் உங்களில் அதிகமாக உள்ளன? எந்த குணங்களுக்கு இன்னும் கவனம் தேவை? நாம் யாராகிவிட்டோம் என்பதை நாம் உண்மையில் மாற்ற முடியாது, ஆனால் இயேசுவால் முடியும். உங்களை மாற்றவும், பெலப்படுத்தவும் அவரிடம் கேளுங்கள். இது மெதுவான, கடினமான பயணமாக இருக்கலாம், ஆனால் நமக்குத் தேவையானதைச் சரியாக வழங்குவதில் இயேசு நிபுணர். உங்கள் குணத்தை மாற்றும்படி அவரிடம் கேளுங்கள், அதனால் நீங்கள் மேலும் மேலும் அவரைப் போல் ஆகுவீர்கள்.
பொறுமையில் படிப்பினைகள்
பாப் சலம் தனது மூக்கின் மூலம் (அல்லது ஒரு கரண்டியைத் தனது முகத்தில் இணைத்துக்கொண்டு) ஒரு வேர்க்கடலையை 'பைக்' சிகரத்தின் மேலே நகர்த்திய வேகச் சாதனையைப் படைத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் இடையூறு ஏற்படாமல் இருக்க, இரவில் உழைத்து ஏழு நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த விதையை முடிக்கும் நான்காவது நபர் பாப், அதாவது இன்னும் மூன்று பேர் இதைப் பொறுமையாகச் செய்திருக்கிறார்கள்
அவர்களின் பொறுமைக்கான தேவை சுயமாக ஏற்படுத்தப்பட்டது என்று நாம் கூறலாம், ஆனால் வாழ்க்கையில் பெரும்பாலும் அவ்வாறு இருக்காது. நமக்குப் பொறுமை வேண்டும். இது ஆவியின் கனியாகும் (கலாத்தியர் 5:22) மேலும் "ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி" (யாக்கோபு 1:4) ஆக இதுவே அத்தியாவசியமான நற்பண்பு. சுற்றியுள்ள அனைவரும் முழு பீதியில் இருக்கும்போது பொறுமைசாலிகளோ அமைதி காப்பர் . அவர்களும் நிலைமை சீராக விரும்புவர், அது சீராகாவிடினும் அவர்களுக்குக் கவலையில்லை. விவேகமாய் செயல்பட ஞானத்திற்காகத் தேவனை நம்பி, அவர்கள் நிலையான போக்கில் பயணிப்பர் (வ. 5).
பொறுமையிலுள்ள பிரச்சனை என்னவென்றால், அதைக் கற்றுக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உண்டு. யாக்கோபு கூறுகிறார் "உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று" (வ. 3). இத்தகைய பரீட்சையானது பெரிய மற்றும் சிறிய வழிகளில் வருகிறது. விமான நிலையத்திலிருந்து இதை எழுதுகிறேன். எனது இரவு 11:00 மணி விமானம் 2:00 மணி வரை தாமதமானது, பின்னர் ரத்து செய்யப்பட்டது. ஒரு இரவு தூக்கம் இல்லாமல், நான் காபி குடித்துக்கொண்டிருக்கிறேன், எப்போதாவது வீட்டிற்கு வருவேன் என்று நம்புகிறேன். விமான நிலையத்தில் ஒரு நாள் முழுவதையும் தூக்கத்தில் கழிப்பது எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் என் அன்பான தகப்பன் எனக்குப் பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறார்.
இன்றைய நாளுக்கான எனது படிப்பினை முடிந்திட ஜெபிக்கிறேன், ஆனால் யார் அறிவார்? அடுத்த விமானத்திற்கான காத்திருப்புப் பட்டியலைச் சரிபார்க்கும் நேரம் இது.
கும்பத்திற்கு மேலானதாக
செல்வா ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் முழுநேர பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது மூத்த சகோதரன் மோகன் மகிழ்ச்சியடைந்தார், ஆனால், சகோதரர்களாக, சிறுவயதில் செல்வாவை அவர் எவ்வாறு புழுதியில் தள்ளி சண்டையில் வெல்வார் என்பதைச் சொல்லி அவரையறியாமலேயே கிண்டல் செய்தார். செல்வா வாழ்க்கையில் வெகுதூரம் முன்னேறிவிட்டார், எனினும் அவர் எப்போதும் மோகனின் சிறிய தம்பியாகவே இருப்பார்.
நீங்கள் மேசியாவாகவே இருந்தாலும் குடும்பத்தால் மதிக்கப்படுவது கடினம். இயேசு நாசரேத்தின் மக்களிடையே வளர்ந்தார், எனவே அவர் விசேஷித்தவர் என்று நம்புவதற்கு அவர்கள் சிரமப்பட்டனர். ஆனாலும் அவர்கள் அவரை கண்டு வியந்தனர். "இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா?" (மாற்கு 6:2-3). இயேசு, "தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்" (வ. 4) என்று குறிப்பிட்டார். இவர்கள் இயேசுவை நன்கு அறிந்திருந்தனர், ஆனால் அவர் தேவனின் குமாரன் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.
ஒருவேளை நீங்கள் ஒரு ஆவிக்குரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம். உங்கள் ஆரம்பக்கால நினைவுகளில் சபைக்குச் செல்வதும், பாடல்களைப் பாடுவதும் நிறைந்திருக்கலாம். இயேசு எப்போதும் ஒரு குடும்பத்தாரைப் போலவே உணர்ந்தார். நீங்கள் அவரை விசுவாசித்துப் பின்பற்றினால், இயேசு உங்கள் குடும்பத்தினர். அவர் "(நம்மை) சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்" (எபிரெயர் 2:11). தேவனின் குடும்பத்தில் இயேசு நம் மூத்த சகோதரர் (ரோமர் 8:29) இது ஒரு பெரிய பாக்கியம், ஆனால் நம்மிடையேயான நெருக்கம் அவரை சாதாரணமானவராகக் காட்டலாம். ஒருவர் குடும்பத்தினராக இருப்பதால் அவர்கள் விசேஷித்தவர் அல்ல என்று அர்த்தமல்ல.
இயேசு நமது குடும்பத்தினரும், குடும்பத்தினரை விட மேலானவர் என்பதிலும் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இன்று நீங்கள் அவரைப் பின்தொடரும்போது, அவர் மேலும் நெருக்கமானவராகவும், மேலும் விசேஷித்தவராகவும் உங்களுக்கு மாறுவாராக.
நான் சேர்ந்தவனா?
நடிகை சாலி ஃபீல்ட், இறுதியாக நாம் அனைவரும் விரும்புவதை உணர்ந்தார். 1985இல் அவர் இரண்டாவது ஆஸ்கார் விருதை வென்றபோது, அவர் தனது ஏற்பு உரையில், “உங்கள் மரியாதையைப் பெற நான் எல்லாவற்றையும் விட அதிகமாக விரும்பினேன். முதல் முறையாக நான் அதை உணரவில்லை. ஆனால் இந்த முறை நான் அதை உணர்கிறேன். நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்பதை என்னால் மறுக்க முடியாது, இப்போதே, அதை நான் நம்புகிறேன்” என்று சொன்னார்.
ஒரு எத்தியோப்பியன் மந்திரியும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து வியப்படைந்தார். ஒரு புறஜாதியும், அண்ணகருமான அவர், ஆலயத்தின் உள் பிரகாரங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டார் (எபேசியர் 2:11-12; உபாகமம் 23:1 ஐப் பார்க்கவும்). ஆனாலும் சேர்த்துக்கொள்ளப்பட ஆசைப்பட்டார். அவர் எருசலேமுக்கு மற்றொரு திருப்தியற்ற யாத்திரையிலிருந்து திரும்பி வருவதை பிலிப்பு கண்டார் (அப்போஸ்தலர் 8:27).
எத்தியோப்பிய மனிதன் ஏசாயா புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான். அதில் தேவனுடைய உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர், “நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும்... இடத்தையும்... என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்” (ஏசாயா 56:4-5) என்று சொல்லுகிறார். இது எப்படி சாத்தியமாகும்? அப்போது பிலிப்பு, “இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.” அதற்கு அந்த மனிதன், “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்” (அப்போஸ்தலர் 8:35-36).
அவன், நான் இதற்குள் அனுமதிக்கப்படுவேனா? நான் இதற்கு பாத்திரனா? என்று கேட்கிறான். அவனுக்கு இருந்த தடைகள் எல்லாவற்றையும் இயேசு அகற்றிவிட்டார் என்பதற்கு அடையாளமாய் பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார் (எபேசியர் 2:14). பாவத்திலிருந்து விலகி, தம்மீது நம்பிக்கை வைக்கும் அனைவரையும் இயேசு அரவணைத்து, ஒன்றிணைக்கிறார். அந்த மனிதன் “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” (அப்போஸ்தலர் 8:39). அவர் இறுதியாகவும் முழுமையாகவும் தேவனண்டை சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
பரலோகத் தகப்பனை அழைத்தல்
இரண்டாம் உலகப் போரின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, மிசோரியின் கிராண்ட்வியூவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ஒரு தொலைபேசி ஒலித்தது. தன்னுடைய விருந்தினர்களிடம் ஒப்புதல் கேட்டு, ஒரு தொண்ணூற்று இரண்டு வயதான பெண்மணி அழைப்பை எடுத்தார். அவர் பேசுவதை விருந்தினர் கேட்க நேரிட்டது, “ஹலோ... ஆம், நான் நன்றாக இருக்கிறேன். ஆம், நான் ரேடியயோவைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்... இப்போது உன்னால் முடிந்தால் என்னை வந்து பாருங்கள்... மீண்டும் சந்திக்கலாம்." வயதான பெண் தனது விருந்தினரிடம் திரும்பி, “அது என் மகன் ஹாரி. ஹாரி ஒரு அற்புதமான மனிதன்... அவன் அழைப்பார் என்று எனக்குத் தெரியும். ஏதாவது நடந்த பிறகு அவன் எப்போதும் என்னை அழைப்பான்” என்று சொன்னார்களாம்.
எவ்வளவு சாதித்தாலும், எவ்வளவு வயதானாலும், நம் பெற்றோரை அழைக்க ஏங்குகிறோம். “நன்றாகச் செய்தாய்” என்னும் அவர்களின் உறுதியான பாராட்டைப் பெறுவதற்காய். நாங்கள் பெரிதளவில் சாதித்தவர்களாய் இருக்கலாம்; ஆனால் நாம் எப்போதும் நம் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் என்பதை மறப்பதில்லை.
துரதிர்ஷ்டவசமாக, அனைவருக்கும் தங்கள் பூமிக்குரிய பெற்றோருடன் இந்த வகையான நல்ல உறவு இருப்பதில்லை. ஆனால் இயேசுவின் மூலம் நாம் அனைவரும் தேவனை நம் தகப்பனாக பெற்று;ககொள்ள முடியும். கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் தேவனுடைய குடும்பத்திற்குள் கொண்டு வரப்படுகிறோம். ஏனென்றால் நீங்கள் “அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15). நாம் இப்போது “தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே” (வச. 17). நாம் தேவனிடத்தில் அடிமையாகப் பேசவில்லை, மாறாக, இயேசு தன்னுடைய இக்கட்டான தருணத்தில் தேவனை அழைத்த “அப்பா பிதாவே” (மாற்கு 14:36) என்னும் அந்தரங்கப் பெயரைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.
உங்களிடம் செய்தி இருக்கிறதா? உங்களுக்கு தேவைகள் உள்ளதா? உங்கள் நித்திய வீடாய் இருப்பவரை அழையுங்கள்.