நம்பிக்கையோடு காத்திருப்பது
ஹச்சி: எ டாக்ஸ் டேல் (Hachi: A Dog's Tale) என்ற ஆங்கில திரைப்படத்தில், கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஹச்சி என்ற தெரு நாய்க்குட்டியுடன் நட்பு கொண்டிருந்தார். பேராசிரியர் வேலையிலிருந்து திரும்புவதற்காக ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் காத்திருந்து நாய் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது. ஒரு நாள், பேராசிரியருக்கு ஆபத்தான பக்கவாதம் ஏற்பட்டது. ஹச்சி ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தது. அடுத்த பத்து வருடங்களுக்கு ஒவ்வொரு நாளும் அது திரும்பத் திரும்ப வந்தது. அதனுடைய அன்பான எஜமானருக்காக காத்திருந்தது.
தன் எஜமானரின் வருகைக்காக பொறுமையாகக் காத்திருந்த சிமியோன் என்ற மனிதனின் கதையை லூக்கா சொல்கிறார் (லூக்கா 2:25). மேசியாவைக் காணும் வரை அவர் மரணத்தைக் காணமாட்டார் என்று பரிசுத்த ஆவியானவர் சிமியோனுக்கு வெளிப்படுத்தினார் (வச. 26). இதன் விளைவாக, கடவுளின் மக்களுக்கு “இரட்சிப்பை” அளிப்பவருக்காக சிமியோன் காத்திருந்தார் (வச. 30). மரியாளும் யோசேப்பும் இயேசுவோடு ஆலயத்திற்குள் நுழைந்தபோது, பரிசுத்த ஆவியானவர் சிமியோனிடம் இவர்தான் அவர் என்று கிசுகிசுத்தார்! காத்திருப்பு இறுதியாக முடிந்தது! சிமியோன் எல்லா மக்களுக்கும் நம்பிக்கை, இரட்சிப்பு மற்றும் ஆறுதலுமான கிறிஸ்துவை தன் கைகளில் வைத்திருந்தார் (வச. 28-32).
காத்திருக்கும் பருவத்தில் நாம் நம்மைக் கண்டால், ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை புதிய காதுகளால் கேட்கலாம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31). இயேசுவின் வருகைக்காக நாம் காத்திருக்கும்போது, ஒவ்வொரு புதிய நாளுக்கும் நமக்குத் தேவையான நம்பிக்கையையும் பலத்தையும் அவர் அளிக்கிறார்.
தேவனின் வழிகாட்டுதல்
அவர்களது வங்கி தற்செயலாக 90 லட்சம் ரூபாயை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்த போது, அந்த தம்பதியினர் பொருட்கள் வாங்குவதற்கு தீவிரமாகிவிட்டனர். அவர்கள் கடன்களை அடைத்தது மட்டுமல்லாமல் ஒரு சொகுசு கார், ஒரு புதிய வீடு, இரண்டு நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கினர். டெபாசிட் பிழையைக் கண்டறிந்த வங்கி, தம்பதியரிடம் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர். துரதிர்ஷ்;டவசமாக அந்த கணவனும் மனைவியும் ஏற்கனவே பணத்தை செலவழித்து விட்டனர். பின்னர் அவர்கள் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தம்பதியினர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு வந்தபோது ஒரு நிருபரிடம் 'நாங்கள் சில மோசமான சட்ட ஆலோசனைகளை எடுத்தோம்" என்று கூறினார். மோசமான ஆலோசனைகளை பின்பற்றுவதும் (தங்களுடையது அல்லாதவைகளை செலவிடுவதும்) தங்களுடைய வாழ்க்கையில் குழப்பத்தை உண்டுபண்ணும் என்று கற்றுக்கொண்டனர்.
இதற்கு நேர்மாறாக, சங்கீதக்காரன், வாழ்க்கையில் குழப்பத்தை தவிர்க்க உதவும் புத்திசாலித்தனமான ஆலோசனைகளை பகிர்ந்துக்கொண்டார். நேர்மையான நிறைவேற்றத்தைக் கண்டவர்கள் - ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்- தேவனை சேவிக்காத மக்களின் ஆலோசனைகளின்படி செல்ல மறுக்கின்றனர் (சங்கீதம் 1:1). விவேகமற்ற, தேவபக்தியற்ற ஆலோசனைகள் நாம் எதிர்பாராத ஆபத்துகளையும் மிகப்பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அறிவார்கள். மேலும், அவர்கள் வேதாகமத்தின் மாறாத மற்றும் அசைக்கமுடியாத சத்தியத்தில் பிரியமாயிருப்பதும், ஆர்வமாய் தியானிப்பதிலும் உந்தப்படுகிறார்கள் (வச. 2). தேவனுடைய வழிகாட்டுதலுக்கு ஒப்புக்கொடுப்பது ஸ்திரத்தன்மை மற்றும் பலனளிப்பதற்கு வழிவகுக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் (வச. 3).
நம்முடைய தொழில், பணம், உறவுகள், மற்றும் அனேக காரியங்களில், சிறிதாயிருந்தாலும் பெரிதாயிருந்தாலும் நாம் முடிவுகளை எடுக்கும்போது, வேதாகமத்திலுள்ள தேவனுடைய ஞானத்தையும், தெய்வீக ஆலோசனைகளையும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையும் நாடுவோமாக. நாம் குழப்பமில்லாமல், நிறைவான வாழ்க்கை வாழ அவருடைய வழிநடத்துதல் நமக்கு அவசியமும், நம்பகமானதுமாயிருக்கிறது.
திரும்பும் இனிமை
ரஷ்ய நாட்டு திருமணங்கள் மிகவும் அழகுள்ளதாய் தனித்துவம் வாய்ந்ததாய் நடைபெறும். அதிலும் குறிப்பிட்ட ஒரு வழக்கமுறை என்னவென்றால் - நலம் பாராட்டுபவர் எழுந்திருந்து தம்பதியினரின் நலன்களை கூறி முடித்த பின்பு அனைவரும் தங்கள் கையில் இருக்கும் பானத்தை குடித்து "கசப்பு!! கசப்பு !!" என்று கூறுவார்கள். புது தம்பதியினர் எழுந்து ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அந்த பானத்தை மறுபடியும் இனிமையாக்குவார்கள்.
ஏசாயா 24ல் தீர்க்கதரிசனம் உரைத்தது போல் கசப்பு நிறைந்த இப்பூமியில் மேல் விழுந்த சாபமும், அழிவும் இனி நமக்கு வரவிருக்கும் இனிமையுள்ள நம்பிக்கையான புதிய வானமும் புதிய பூமிக்கும் வழி திறக்கிறது (அதி 25). தேவன் நமக்கு அருமையான விருந்தையும், இனிமையான பானத்தையும் ஆயத்தம் பண்ணி கொண்டிருக்கிறார். அவருடைய இராஜ்ஜியத்தில் இடைவிடாத ஆசிர்வாதங்களும், கனி நிறைந்த வாழ்க்கையும் குறைவில்லாமல் எல்லோர்க்கும் வழங்கப்படும். சேனைகளின் கர்த்தரின் அரசாட்சியில் மரணம் ஜெயிக்கப்படும், கண்ணீர் துடைக்கப்படும், நிந்தைகள் நீக்கப்படும் (வ. 7-8). அவர் பிள்ளைகளோ "இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்" என்று களிகூறுவார்கள் (வச. 9).
ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் தேவனோடு நாம் ஒரு நாள் வாசம்பண்ணுவோம். சபையாகிய மணவாட்டியை அவர் சேர்த்துக் கொள்ளும்போது ஏசாயா 25 நிறைவேறுகிறது. கசப்பு நிறைந்த நம் வாழ்வும் மதுரமாகும்.
அவர் நம்மை விடமாட்டார்
ஜூலியோ என்ற மனிதன் ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தின்மேல் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பாலம் நியூயார்க் நகரத்தையும் நியூஜெர்ஸி மாகாணத்தையும் இணைக்கும் ஒரு பாலம்; போக்குவரத்து நெரிசல் அதிகம். அப்போது அங்கே வாழ்வா சாவா என்கிற நிலையில் இருந்த ஒரு மனிதனை பார்த்தான். அந்த மனிதன் பாலத்திலிருந்து நதிக்குள் குதிக்க தயாராக இருந்தான். போலீஸ் வருவதற்கு நேரம் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஜூலியோ தன்னுடைய சைக்கிளிலிருந்து விரைவாக இறங்கி, கைகளை விரித்துக்கொண்டு அந்த மனிதனை அணுகி “நீ குதிக்காதே, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” என்று சொல்லி கலக்கத்தில் இருந்த அவனை இறுகப் பிடித்துக் கொண்டு அப்பாதையில் சென்றுகொண்டிருந்த இன்னொரு மனிதனோடு சேர்ந்து அவனை பாதுகாப்பாக கொண்டுவந்தான். அபாயம் கடந்த போதும் கூட ஜூலியோ அந்த மனிதனை விடவில்லை.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இதே விதமாக, வாழ்வு அல்லது மரணம் என்ற நிலையில் மனித வர்க்கம் இருக்கும்போதுதான் நல்ல மேய்ப்பராகிய இயேசு தம்முடைய ஜீவனையே பலியாக கொடுத்து தம்மேல் நம்பிக்கை வைத்தவர்களை ஒருபோதும் விட்டு விடுவதில்லை என்றார். தம்மில் நம்பிக்கை வைத்த ஆடுகளை இவ்விதமாக ஆசீர்வதிப்பேன் என்றும் சொன்னார்: “அவர்கள் அவரை சொந்தமாக அறிந்திருப்பார்கள், அவர்களுக்கு என்றும் அழியாத நித்திய ஜீவனை கொடுப்பார், அவருடைய கவனிப்பில் பாதுகாப்பாக இருப்பார்கள்”. இந்த பாதுகாப்பு அந்த பலவீனமான, வலிமையற்ற ஆடுகளினால் அல்ல; அந்த வலிமை மிக்க மேய்ப்பருடைய போதுமான தன்மையில் அது காணப்பட்டது. “அவர்களை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:28-29).
நாம் நம்பிக்கையற்று பரிதாபமாக இருக்கும் போது, இயேசு நம்மை மீட்டுக்கொண்டார். நாம் இப்பொழுது பாதுகாப்பாக அவருடைய சொந்தத்தில் இருக்கலாம். அவர் நம்மை நேசிக்கிறார், தேடிக் கண்டுபிடிக்கிறார் இரட்சிக்கிறார், எப்பொழுதும் நம்மை கைவிடார் என்று வாக்களிக்கிறார்.
அதிசயிக்கச் செய்யும் தனித்துவம்
கோணலான கோபுரத்தின் உச்சப்பகுதி
மனக்கறை நீக்கும் தினம்
2006 ஆம் ஆண்டிலிருந்து ஒரு கூட்ட மக்கள் புதிய வருடத்தையொட்டி ஒரு நாளில் ஒரு வித்தியாசமான நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். அது தான் மனதின் கறைகளை நீக்கும் தினம். லத்தீன்-அமெரிக்க கலாச்சாரத்தைத் தழுவி, கடந்த ஆண்டில் மக்கள் தங்கள் மனதில் படிந்துள்ள மனவருத்தங்கள், விரும்பத்தகாத நினைவுகள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை காகிதத்தில் எழுதி துண்டுகளாக்கி குப்பையில் சேர்த்து விடுவர், அல்லது ஒரு கனமான சுத்தியலால் அடித்துச் சிதைத்து விடுவர்.
சங்கீதம் 103ல் சங்கீதக்காரன், மக்கள் தங்கள் மனதிலுள்ள விரும்பத்தகாத எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிடும்படி வலியுறுத்துகின்றார். தேவன் நம்முடைய பாவங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றார் என நினைவுபடுத்துகின்றார். தேவன் தம் ஜனங்களின் மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பினை விளக்க, சில காட்சிகளை வார்த்தைகளில் கொண்டு வருகின்றார். அவர் தேவனுடைய பரந்த அன்பினை விளக்க, பூமிக்கும் வானத்திற்குமுள்ளத் தூரத்தை ஒப்பிடுகின்றார் (வச. 11). சங்கீதக்காரன் தேவனுடைய மன்னிக்கும் சிந்தையை வளிமண்டல பொருட்களோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். சூரியன் உதிக்கும் இடத்திற்கும், சூரியன் மறையும் இடத்திற்குமுள்ள தொலைவில் முழு பாவங்களையும் அகற்றிவிட்டார் (வச. 12) என்கின்றார். தேவன் தம் ஜனங்களின் மீது கொண்டுள்ள அன்பும், அவருடைய மன்னிக்கும் சிந்தையும் முழுமையானது, முடிவில்லாதது என்கின்றார். தேவன் தம் ஜனங்களை அவர்களின் மீறுதல்களின் வல்லமையிலிருந்து முற்றிலும் மீட்டு அவர்களை முழுமையாக மன்னிக்கின்றார்.
என்ன ஒரு நல்ல செய்தி! நாம் நம் பாவக்கறைகளை அகற்றிட புதிய வருடம் வரும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தோடு, நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவத்திலிருந்து மனம் திரும்புவோமாகில் அவர் நம் பாவங்களை அகற்றி, அவற்றைக் கடலின் ஆழங்களில் போட்டுவிடுகி;றார். இன்றே நமது கறைநீக்கும் தினம்.
நம்முடைய பாரத்தைச் சுமந்தார்
தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கான பயன்பாட்டு கட்டணங்கள் சில சமயங்களில் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக அதிகமாக இருக்கும். ஆனால் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த கியரன் ஹீலிக்கு வந்த தண்ணீர் கட்டணம் இதயத்துடிப்பே நின்றுவிடும்படி இருந்தது. அவர் 1,000 கோடி டாலர் செலுத்த வேண்டும் என்று அவருக்கு வந்த செய்தி கூறியது! அந்த அளவிற்கு தண்ணீரை முந்திய மாதத்தில் பயன்படுத்தவில்லை என்பதை ஹீலி அறிந்ததால், கட்டணத்தைத் தவணை முறையில் கட்டலாமா என்று விளையாட்டாகக் கேட்டார்.
1,000 கோடி டாலர் கடன் என்பது தாங்க முடியாத பாரம். ஆனால் நம் பாவங்களினால் நாம் சுமக்கவேண்டிய உண்மையான, அளவுக்கதிகமான பாரங்களோடு ஒப்பிடும்போது அது மிகவும் சாதாரணமானது. நமது பாவத்தின் பாரங்களையும், அவற்றின் பின் விளைவுகளையும் நாமே சுமக்க முயற்சிக்கும்போது, அது நமக்கு சோர்வை ஏற்படுத்தி, நம்மை குற்ற உணர்வாலும், அவமானத்தாலும் நிறைக்கிறது. நம்மால் அந்த பாரத்தை சுமக்க முடியாது என்பதே உண்மை.
நாமே அந்த பாரங்களை சுமக்க வேண்டியதில்லை. பேதுரு விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தியதுபோல, கடவுளின் குமாரனாகிய குற்றமில்லாத இயேசு மட்டுமே நமது பாவங்களின் பாரங்களையும் அதன் பின் விளைவுகளையும் சுமக்க முடியும் (1 பேதுரு 2:24). இயேசு சிலுவையில் மரித்தபோது, நமது தவறுகளை தன்மீது ஏற்றுக்கொண்டு, நமக்கு மன்னிப்பை அருளினார். அவர் நமது பாரங்களை சுமந்ததினால், நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளைப் பெறவேண்டியதில்லை.
“முன்னோர்களால் பாரம்பரியமாய் அனுசரித்து வந்த வீணான நடத்தையில்” (1:18), பயத்தோடும், குற்ற உணர்வோடும் வாழ்வதைத் தவிர்த்து, அன்பும், சுதந்திரமும் கொண்ட புது வாழ்வை நாம் வாழ முடியும் (வச. 22-23).
உதவிக்கோர் அழைப்பு
2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின் தூக்கி (LIFT) விபத்தில் ஐந்து பேர் மரணமடைந்தனர், ஐம்பத்தொன்று பேர் காயமடைந்தனர். நியூயார்க் பட்டணத்தில் ஒரு பிரச்சாரத்தைக் குறித்து விளம்பரம் பண்ணப்பட்டது. ஏதோவொரு மோசமான விளைவு ஏற்படும் போது, மக்கள் எவ்வாறு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஏதோவொரு தவறு ஏற்படும் போது மக்கள் தங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் போதுதான் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மிகச் சிறந்த செயல் என்னவெனில் “தெரிவி, அமைதியாகக் காத்திரு” என்பதே அதிகாரிகளின் ஆலோசனை. மக்களை காயத்திலிருந்தும், அவர்களின் இக்கட்டிலிருந்தும் உடனடியாக விடுவிக்க, நியூயார்க் நகர கட்டட அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்படுவர்.
அப்போஸ்தலர் புத்தகத்தில் பேதுரு, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதைப் பற்றி பிரசங்கம் செய்கின்றார். இப்புத்தகத்தை எழுதிய லூக்கா சில முக்கியமான நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். அதில் இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் தங்களுக்குத் தெரியாத பாஷைகளில் பேசுவதைக் குறிப்பிடுகின்றார் (அப். 2:1-2) பேதுரு எழுந்து தன்னுடைய யூத சகோதர, சகோதரிகளுக்கு அதனை விளக்குகின்றார். அவர்கள் காண்பது முந்நாளில் உரைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறல் என்பதை விளக்குகின்றார் (யோவேல் 2:28-32) பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதையும், இரட்சிப்பின் நாளையும் சுட்டிக் காண்பிக்கின்றார். பாவத்திலிருந்தும், அதன் விளைவுகளிலிருந்தும் தங்களை விடுவிக்குமாறு இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம் ஊற்றப்பட்டதை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். அப்பொழுது பேதுரு கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்கும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் இந்த இரட்சிப்பு கொடுக்கப்படும் என விளக்குகின்றார் (அப். 2:21) இவ்வாறு நாம் தேவனண்டை கிட்டிச் சேர்வது நாம் சட்டங்களைக் கைக்கொண்டதால் கிடைத்ததல்ல, இயேசுவை ஆண்டவர், மேசியா என ஏற்றுக் கொண்டதாலேயே கிடைத்தது.
நாம் பாவத்தில் சிக்குண்டிருந்தால் நம்மால் நம்மை விடுவித்துக் கொள்ள முடியாது. நாம் விடுதலை பெற ஒரே நம்பிக்கையென்னவெனில், இயேசுவே நமது தேவனும் மேசியாவுமானவர் என ஏற்றுக் கொள்வதேயாகும்.
முற்றத்தில் ஓர் தணிவு
மிக வெப்பமான ஒரு நாளில் 8 வயது சிறுவன் கார்மன் மக்டேனியல் தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சல்காரருக்கு தாகம் தீர்க்க எதையாகிலும் செய்யவேண்டும் என்று நினைத்தான். குளிர்சாதன பெட்டி ஒன்றில் வைத்த தண்ணீர் பாட்டில்களையும், குளிர் பானத்தையும் வீட்டு வாசற்படியில் வைத்தான். அதனை கண்ட அஞ்சல்காரரின் முகமலர்ச்சியை பாதுகாப்பு கேமரா படம்பிடித்தது. “அடேங்கப்பா! தண்ணீரும், குளிர்பானமும். நன்றி ஆண்டவரே; நன்றி!” என்று அவன் குதூகலித்தான்.
“தான் வீட்டில் இல்லாதுபோனாலும் அஞ்சல்காரருக்கு குளிர்பானத்தை கொடுப்பது தன் கடமை என்று டேனியேல் நினைக்கிறான்” என்றாள் அச்சிறுவனின் தாய்.
இக்கதை நம் உள்ளத்தை உருக்குவதோடு, அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னது போல், “நம்முடைய தேவைகளை எல்லாம் சந்திக்கும் ஒருவர் உண்டு” என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. தன் எதிர்காலத்தை குறித்த நிச்சயமில்லாதவராக பவுல் சிறையில் வாடினாலும், பிலிப்பு பட்டணத்து கிறிஸ்தவர்கள் அனுப்பின பொருளுதவிக்காக சந்தோஷமடைந்தார். பிலிப்பி ஒரு செழிப்பான சபை அல்ல. ஆனாலும் அவர்கள் உதாரகுணம் கொண்டவராய் தங்களுடைய குறைவிலே பவுலுக்கு கொடுத்தார்கள் (2 கொரி. 8:1-14). பிலிப்பு சபையினர் பவுலினுடைய தேவையை சந்தித்ததுபோலவே, தேவனும் அவர்களுடைய தேவைகளை “கிறிஸ்து இயேசுவுக்குள், அவருடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே… சந்திப்பார், (பிலி. 4:19).”
பெரும்பாலும் பரலோக உதவியை தேவன் பிறர் மூலமாகவே அனுப்புகிறார். அதாவது, நம்முடைய தேவைகளை தேவன் மற்றவர்களைக் கொண்டு சந்திக்கிறார். நம்முடைய தேவைகளுக்காக நாம் தேவனை சார்ந்திருக்கும்போது, பவுலைப் போல், நாமும் உண்மையான மனநிறைவின் இரகசியத்தைக் கற்றுக்கொள்வோம் (வச. 11-13).