எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

சுதந்திரத்தோடு அலைவது

மூன்றாம் தலைமுறை விவசாயியான பாலா, “என் நாமத்துக்கு பயந்திருக்கும்... நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய் கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள்” (மல்கியா 4:2), என்பதை வாசிக்கும்போது மிகவும் உற்சாகமடைந்து, தேவன் அளிக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஜெபித்தார். தொழுவத்திலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட கன்றுகள் துள்ளி குதித்து அதி வேகமாக, உற்சாகத்தோடு வெளியேறுவதை தெளிவாக நினைவுக்கூர்ந்த பாலா தேவன் வாக்குப் பண்ணின உண்மையான சுதந்திரத்தைக் குறித்து புரிந்துகொண்டார். 

தேவனுடைய நமத்துக்குப் பயந்தவர்கள் மற்றும் அவருக்கு உண்மையாயிருக்கிறவர்களுக்கும், தங்களை மட்டுமே நம்பியிருக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி தீர்க்கதரிசி, மல்கியா 4ல் கொடுக்கப்பட்டுள்ள கற்பனைகளைப் பற்றி நானும் பாலாவின் மகளும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும்போது, அவள் இந்தக் கதையைப் பற்றி என்னிடம் கூறினாள் (4:1-2). மத போதகர்கள் உட்பட பலர் தேவனையும் அவருடைய நம்பிக்கையுள்ள வாழ்க்கைத் தரங்களையும் புறக்கணித்த நேரத்தில், இந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலர்களை தேவனைப் பின்பற்றுமாறு ஊக்குவித்தார் (1:12-14; 3:5-9). இந்த இரண்டு விதமான மக்களிடையே தேவன் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் நாள் வருமென்று சொல்லி மக்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ மல்கியா அழைத்தார். சுதந்திரமான கன்றைப் போல, விசுவாசமுள்ளவர்கள் “நீதியின் சூரியன், செட்டைகளின் கீழ் ஆரோக்கியத்தோடு உதிக்கும்போது” அனுபவிக்கும் சொல்லிமுடியாத மகிழ்ச்சியை எதிர்பாராத விதத்தில் இந்தப் பகுதியில் மல்கியா ஒப்பிட்டுக் காட்டுகிறார் (4:2).

உண்மையுள்ள சுதந்திரம் எல்லா மக்களுக்கும் கிடைக்கப்பெறும் நல்லச் செய்தியைக் கொண்டுவரும் இயேசுவே இந்த வாக்குத்தத்தத்தை இறுதியாக நிறைவேற்றுபவர் (லூக்கா 4:16-21). ஒரு நாள் தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட கிரியைகளாய், இந்த சுதந்திரத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். அங்கே சுதந்திரமாய் இருப்பது விவரிக்கமுடியாத மகிழ்ச்சியாய் இருக்கும்!

மீண்டும் எழு

ரயன் ஹால் என்னும் அமெரிக்காவின் ஒலிம்பிக் ஓட்டக்காரர், மாரத்தானின் பாதி ஓட்டத்தில் சாதனை படைத்துள்ளார். 13.1 மைல் தூரத்தை (21 கி.மி.) 59 நிமிடங்கள் 43 விநாடிகளில் கடந்து, அமெரிக்க தடகள வரலாற்றில் ஒரு மணி நேரத்திற்குள் இவ்வளவு தூரத்தைக் கடந்தவர் என்று சாதனைப் படைத்தார். ஆனாலும் அந்த ஓட்டத்தை அவரால் சரியாய் முடிக்கமுடியவில்லை. 

வெற்றியையும் தோல்வியையும் ருசிபார்த்தபோதிலும், அவரைப் பாதுகாத்தது இயேசுவின் மீதான விசுவாசம் என்று சொல்லுகிறார். நீதிமொழிகள் புத்தகத்தில் அவருக்கு பிடித்த வார்த்தை, “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும், திரும்பவும் எழுந்திருப்பான்” (24:16) என்பதே. தேவன் மீது நம்பிக்கை வைத்து, தேவனோடு சரியான உறவில் இருக்கும் நீதிமானுக்கும் பாடுகளும் துன்பங்களும் உண்டு என்பதை இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது. ஆனாலும் அந்த துன்பத்தின் மத்தியிலும் தொடர்ந்து தேவனை பற்றிக்கொள்ளும்போது மீண்டும் எழுந்து நிற்க தேவன் பெலன் தருவார். 

நீங்கள் சமீபத்தில் பாதிக்கக்கூடிய மனச் சோர்வுக்கும் தோல்விக்கும் ஆளாகி, மீளுவது சாத்தியமேயில்லை என்று எண்ணியதுண்டா? வேதாகமம் நம்முடைய பலத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், தேவன் மீதும் அவர் வாக்குத்தத்தத்தின் மீதும் நம்பிக்கை வைக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது. அவரை நம்பும்போது வாழ்க்கையில் நேரிடுகிற பிரச்சனையிலிருந்து கடினமான பிரச்சனைகள் வரை அனைத்தையும் மேற்கொள்ள தேவனுடைய ஆவியினாலே நாம் பெலப்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:9). 

வாழ்க்கையின் புயல்களை திசைதிருப்புதல்

ஜான் கென்னடி ஜூனியர் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் மகன்), 1999 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி, சிறிய விமானத்தில் பறக்கும்போது, விபத்து நேரிட்டு, விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. விபத்திற்கு காரணம், பாதை சரியாய் தெரியவில்லை என்ற வழக்கமான குறைபாடுதான் என்று கண்டறிப்பட்டது. அதாவது, விமானத்தைத் தரையிறக்கும்போது, பாதை தெளிவாய் தெரியாத பட்சத்தில் கருவிகளை நம்புவதை விட்டுவிட்டு, விமானத்தை திசைதிருப்பி தரையிறக்க முயற்சிப்பார்கள். 

வாழ்க்கையின் காரியங்கள் நம்மை அடிக்கடி மேற்கொள்ளும்போது, நாம் திசைதிருப்பப்பட்டதாக உணருகிறோம். புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுதல், நேசிக்கிறவர்களின் மரணம், வேலை இழப்பு, நண்பனின் துரோகம் போன்ற வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை தோற்கடிக்கவும் குழப்பவும் செய்கிறது. 

இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் கடந்துசெல்லும்போது சங்கீதம் 43ஐ ஜெபமாக ஏறெடுக்கலாம். இந்த சங்கீதத்தில், சங்கீதக்காரன் தீமையினாலும் அநீதியினாலும் சூழப்பட்டவராய் தோல்வியின் பாதையில் தொலைந்துபோனவராய் உணருகிறார். விரக்தியில் சங்கீதக்காரன் தேவனுடைய வழிநடத்துதலைச் சார்ந்து, தான் அதிகம் விரும்பும் தேவனுடைய சமுகத்திற்கு பத்திரமாய் தன்னை திசைதிருப்பும்படி விண்ணப்பிக்கிறான் (வச. 3-4). தேவ சமுகத்தில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் புதுப்பிக்கப்படுவதை சங்கீதக்காரன் அறிந்திருக்கிறான். 

வழிநடத்துதலுக்கு சங்கீதக்காரனுக்கு தேவைப்பட்ட கருவிகள் யாவை? சத்தியத்தின் வெளிச்சமும், பரிசுத்த ஆவியின் மூலம் உறுதியளிக்கப்பட்ட தேவனுடைய சமுகமுமே. 

நீங்கள் திசைமாறி தொலைந்துபோனவர்களாய் உணரும்போது, தேவன் தன்னுடைய ஆவியின் மூலமாகவும் சமுகத்தின் மூலமாகவும் உங்களை வழிநடத்தி, உங்களை தேற்றவும் உங்கள் பாதைக்கு வெளிச்சத்தைக் காட்டவும் முடியும். 

விசுவாசப் பாதை

உலகக்கோப்பை கால்பந்தின் 2017ஆம் ஆண்டின் தகுதிச் சுற்றில், அமெரிக்காவுடன் டிரினிடாட் மற்றும் டொபாகோ மோதியது. பெயர் அறியப்படாத இந்த சிறிய தீவு நாடுகள், அமெரிக்காவை அபாரமாக வீழ்த்தி, உலகத்தையே ஆச்சரியப்படுத்தியது. தகுதி வரிசை பட்டியலில் 56 தேசங்களைக் கடந்து முன்னிலைப் பெற்றது. 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 2018ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் பெயர் இடம்பெற முடியாத அளவிற்கு அதை பின்னுக்குத் தள்ளியது.

டிரினிடாட் மற்றும் டொபாகோவின் இந்த வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அமெரிக்காவோடு ஒப்பிடும்போது, இந்த சிறிய கரீபியன் தீவு நாடுகள் ஒன்றுமில்லை. ஆனால் எவ்வளவு பெரிய தேசமானாலும் வாஞ்சையோடு விளையாடும் குழுவை தோற்கடிப்பது சாத்தியமில்லை.

மீதியானுக்கு விரோதமாக கிதியோனின் யுத்தமும் இதைப்போன்றதே. ஒரு பெரிய இராணுவத்திடம் ஒரு சிறு கூட்டம் மோதியது. இஸ்ரவேலில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கையை வைத்தோ, பொருளாதாரத்தை வைத்தோ, அல்லது திறமையான தலைவர்களை வைத்தோ யுத்தத்தில் வெற்றியடைந்தால் மகிமை தேவனுக்கு போகாது என்பதினால், அவர்களின் இராணுவத்தை முந்நூறாகக் குறைக்கிறார் (நியாய. 7:1-8).

நம்மால் பார்க்க, அளவிட முடிந்த காரியங்களில் மட்டுமே நம்பிக்கை வைக்க தூண்டப்படுகிறோம். ஆனால் அது விசுவாச பாதையல்ல. கடினமான சூழ்நிலை நமக்கு அனுமதிக்கப்பட்டாலும் தேவனைச் சார்ந்து “கர்த்தரிலும் அவரின் சத்துவத்தின் வல்லமையிலும்” பலப்படும்போது (எபேசியர் 6:10), நம்மால் சமாளிக்கமுடியாத பிரச்சனைகளையும் நாம் துணிச்சலோடும் நம்பிக்கையோடும் மேற்கொள்ளமுடியும். அவருடைய பிரசன்னமும் வல்லமையும் நமக்குள் பெரிய காரியங்களைச் செய்யும்.

வெகுசிறப்பான வாழ்க்கை

ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த மருத்துவ நிபுணரான கேத்ரீன் ஹம்லினைக் குறித்து பத்திரிக்கையில் வெளியான அவருடைய இரங்கல் செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன். குழந்தைப் பிறப்பின்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படும் பெண்களைத் தாக்கும் ஒருவகையான மகப்பேறு வியாதிக்கு சிகிச்சையளிக்கும் உலகின் முதல் மருத்துவமனையை எத்தியோப்பியாவில் நிறுவியவர்களே இந்த கேத்ரீனும் அவருடைய கணவரும். அதில் 60,000க்கும் அதிகமான பெண்களுக்கு சிகிச்சையளித்த பெருமை இவரைச் சேரும்.

மருத்துவசேவை புரிந்துகொண்டிருந்த தன்னுடைய 92ஆம் வயதிலும், தன்னுடைய ஒவ்வொரு நாளையும் தேனீர் கோப்பையுடனும் வேதபாடத்துடனும் துவங்குவது கேத்ரீனின் வழக்கம். அவரை பேட்டியெடுத்தவர்களிடம், தான் தேவன் கொடுத்த வேலையைச் செய்யும் ஒரு சாதாரண விசுவாசி என்று பதிலளித்தார்.

அவருடைய சிறப்பான வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில், தேவனை மறுதலிப்பவர்களும் நம்முடைய “நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம்... தேவனை மகிமைப்படுத்தும்படி” (1 பேதுரு 2:12), என்று வேதம் விசுவாசிகளை வாழத் தூண்டும் வெகுச் சிறப்பான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.

நம்மை அந்தகார இருளிலிருந்து அழைத்து அவருக்கு சொந்தமாக்கிக் கொண்ட தேவனுடைய ஆவியின் வல்லமையினால், நம்முடைய சேவைகளையெல்லாம் வல்லமையுள்ள விசுவாச சாட்சிகளாக மாற்றமுடியும். தேவன் நமக்கு கொடுத்துள்ள வாஞ்சையையும் திறமைகளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றக்கூடிய வகையில், தேவ ஜனத்தை அவரண்டை திருப்புவதற்கு அவைகளை நேர்த்தியாய் பயன்படுத்துவோம்.

அன்பால் தொடரப்பட்டது

“இரவும் பகலும் நான் அவரை விட்டு ஓடினேன்” என்னும் வரிகள் ஆங்கிலக் கவிஞர் பிரான்சிஸ் தாம்சனின் “தி ஹவுண்ட் ஆஃப் ஹெவன்” என்ற புகழ்பெற்ற கவிதையின் துவக்க வரிகள். தேவனிடமிருந்து மறைக்க அல்லது ஓட முயற்சித்தபோதிலும், இயேசுவின் தொடர்ச்சியான தேடலை தாம்சன் விவரிக்கிறார். “அவர் என்னைத் தான் தேடுகிறார்!" என்று கவிஞர் முடிக்கிறார். 

தேவனின் தேடிவரும் அன்பே யோனா புத்தகத்தின் மையக் கருப்பொருள். நினிவே மக்களுக்கு (இஸ்ரவேல் ஜனங்களின் மோசமான எதிரிகள்) தேவனிடம் திரும்ப வேண்டிய அவசியம் குறித்து சொல்லும்படியான ஒரு பணியை தீர்க்கதரிசி பெற்றார். ஆனால் அதற்கு பதிலாக “யோனா கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி” (யோனா 1:3), நினிவேயின் எதிர்திசையில் பயணிக்கும் ஒரு கப்பலில் பயணம் செய்கிறார். ஆனால் கப்பல் பெருங்காற்றில் சிக்கியது. கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக, பெரிய மீனினால் விழுங்கப்படுவதற்காக, யோனா கடலில் வீசப்பட்டான் (1:15-17).

தேவனிடமிருந்து ஓடுவதற்கு பல முயற்சிகள் எடுத்தபோதிலும், தேவன் அவனை பின்தொடர்ந்தார் என்று யோனா தனது அழகான கவிதையில் விவரிக்கிறார். மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட யோனாவுக்கு மீட்பு அவசியப்படும்போது, அவன் ஜெபத்தில் தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய அன்பை நோக்கி திரும்புகிறார் (2:2,8). தேவன் யோனாவுக்கு மட்டுமல்லாது அவனுடைய அசீரிய எதிரிகளுக்கும் மீட்பை கட்டளையிட்டார் (3:10).

இரண்டு கவிதைகளிலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, நாம் தேவனிடமிருந்து ஓட முயற்சிக்கும் பல பருவங்கள் நம் வாழ்வில் இருக்கலாம். எனினும் இயேசு நம்மை நேசிக்கிறார், அவருடனான மீட்டெடுக்கப்பட்ட உறவுக்கு நேராக நம்மை வழிநடத்துகிறார் (1 யோவான் 1:9).

சத்தியத்தில் நங்கூரமிட்டது

என் குடும்பம் கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான, அற்புதமாக கடினமான அரைசாந்து பூசப்பட்ட சுவர்கள் உட்பட நிறைய பண்புக்கூறுகளைக் கொண்ட வீட்டில் வசிக்கிறது. இந்த சுவர்களில், ஒரு படத்தைத் தொங்கவிட, நான் ஒரு மர ஆதரவுக்குள் ஆணியைத் துளைக்க வேண்டும் அல்லது ஆதரவுக்காக ஒரு அரைசாந்து நங்கூரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடு கட்டுபவர் எனக்கு எச்சரித்தார். இல்லையெனில், ஒரு அசிங்கமான துளையை ஏற்படுத்தி, படம் தரையில் விழக்கூடிய அபாயத்தை நான் கொண்டிருக்கிறேன்.

ஏசாயா தீர்க்கதரிசி எலியாக்கிம் என்ற சிறிய வேதாகம கதாபாத்திரத்தை விவரிக்க ஒரு சுவரில் உறுதியாக அறையப்பட்ட ஆணியின் உருவத்தை பயன்படுத்தினார். ஊழல் அதிகாரியான செப்னாவைப் (ஏசாயா 22: 15–19) போலவும், தங்களைத் தாங்களே பலப்படுத்திக்கொள்ளப் பார்த்த இஸ்ரவேல் மக்களை போலவுமல்லாமல் (வச. 8–11) - எலியாக்கிம் தேவன்மீது நம்பிக்கை வைத்திருந்தார். எசேக்கியா ராஜாவுக்கு அரண்மனை நிர்வாகியாக எலியாக்கிமின் பதவி உயர்வு குறித்து தீர்க்கதரிசனம் கூறி, எலியாக்கிம் ஒரு “உறுதியான இடத்தில் ஆணியாக கடாவப்படுவார்” என்று ஏசாயா தீர்க்கதரிசனமாக எழுதினார் (வச. 23). தேவனின் சத்தியத்திலும் கிருபையிலும் பாதுகாப்பாக நங்கூரமிட்டிருப்பது எலியாக்கிம் தனது குடும்பத்திற்கும் அவரது மக்களுக்கும் ஒரு ஆதரவாக இருக்க அனுமதிக்கும் (வச. 22-24).

ஆயினும், ஏசாயா இந்த தீர்க்கதரிசனத்தை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு எந்தவொரு நபரும் உயர் நிலையான பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை ஒரு தெளிவான நினைவூட்டலுடன் முடித்தார் - நாம் அனைவரும் தோல்வியடைகிறோம் (வச. 25). நம்முடைய வாழ்க்கையில் முற்றிலும் நம்பகமான நங்கூரம் இயேசு மட்டுமே (சங்கீதம் 62: 5–6; மத்தேயு 7:24). நாம் மற்றவர்களைக் கவனித்து, அவர்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, ஒருபோதும் தோல்வியடையாத நங்கூரமான அவரிடமும் அவர்களை சுட்டிக்காட்டுவோம்.

இதுதான் இயேசு!

பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி திறமைக்கான போட்டியான America’s Got Talent நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், ​​ஐந்து வயது சிறுமி ஒருவர் மிகவும் உற்சாகத்துடன் பாடினார். நடுவர்களில் ஒருவர் ஒரு 1930 ல் இருந்த பிரபல குழந்தை பாடகர் மற்றும் நடனக் கலைஞருடன் இந்த குழந்தையை ஒப்பிட்டார். ஷெர்லி டெம்பல் உங்களுக்குள் எங்கேயோ வாழ்கிறார் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கு அவளுடைய எதிர்பாராத பதில்: “ஷெர்லி டெம்பல் அல்ல. இயேசு!”

அந்த சிறுமியின் ஆழ்ந்த புரிதலைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், அவளுடைய சந்தோஷம் அவளுக்குள் வாழ்ந்த இயேசுவிடமிருந்து வந்தது. அவரை விசுவாசிக்கிற அனைவருமே தேவனோடு நித்திய ஜீவனுக்கான வாக்குத்தத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் இயேசு தம்முடைய ஆவியினூடாக அவர்களில் வாழ்கிறார் என்பதையும் வேதவசனங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. எங்கள்    இருதயங்கள் இயேசுவின் வாசஸ்தலமாகின்றன (கொலோசெயர் 1:27; எபேசியர் 3:17).

நம்முடைய இருதயங்களிலுள்ள இயேசுவின் பிரசன்னம் நன்றியுணர்வுக்கான எண்ணற்ற காரணங்களால் நம்மை நிரப்புகிறது (கொலோசெயர் 2: 6-7). நோக்கம் மற்றும் ஆற்றலுடன் வாழும் திறனை அவர் கொண்டுவருகிறார் (1:28-29). கொண்டாட்டம் மற்றும் போராட்ட காலங்கள் இரண்டிலும், எல்லா சூழ்நிலைகளின்  மத்தியிலும் அவர் நம் இதயங்களில் மகிழ்ச்சியை வளர்க்கிறார் (பிலிப்பியர் 4:12-13). நாம் அனைத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் கூட தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடப்பிக்கிறார் என்ற நம்பிக்கையை கிறிஸ்துவின் ஆவி நம் இருதயங்களுக்கு அளிக்கிறது (ரோமர் 8:28). நம்மைச் சுற்றியுள்ள குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் அதன் மத்தியில் ஆவியானவர் சமாதானத்தைத் தருகிறார் (கொலோசெயர் 3:15).

நம்முடைய இருதயங்களில் வாழும் இயேசுவிடமிருந்து வரும் நம்பிக்கையுடன் அவருடைய பிரசன்னத்தை பிரகாசிக்க நம்மால் அனுமதிக்க முடியும் இதனால் மற்றவர்களால் கவனிக்காமல் இருக்க முடியாது.

ஒருபோதும் தனியாக இல்லை

"இது வீடற்ற தன்மை, பசி அல்லது நோயைக் காட்டிலும் மிகவும் துன்பகரமானதாக இருக்கலாம்" என்று தி எகனாமிஸ்ட்டின் 1843 இதழில் மேகி ஃபெர்குசன் எழுதினார். அவளுடைய பொருள்? தனிமை. ஒருவரின் சமூக அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், தனிமையின் அதிகரித்துவரும் விகிதங்களை ஃபெர்குசன் விவரித்தார், தனிமையாக இருப்பதைப் போன்றவற்றின் இதயத்தை பறிக்கிற எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துகிறார்.

தனிமையின் காயம் நமக்கு புதிதல்ல. உண்மையில், தனிமைப்படுத்தலின் வலி பண்டைய பிரசங்கி புத்தகத்தின் பக்கங்களை எதிரொலிக்கிறது. சாலமன் ராஜாவை போல், எந்தவொரு அர்த்தமுள்ள உறவுகளும் இல்லாததைக் கண்டவர்களின் துக்கங்களை புத்தகம் பிடிக்கிறது (4: 7–8). குறிப்பிடத்தக்க செல்வத்தைப் பெற முடியும் என்றும், அதிலிருந்து எந்த மதிப்பையும் அனுபவிக்க முடியாது என்றும் அப்புத்தகத்தின் ஆக்கியோன் புலம்பினார், ஏனெனில் அதைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை.

 ஆனால் ஆக்கியோன் தோழமையின் அழகையும் அங்கீகரித்தார், நீங்கள் சொந்தமாக அடையக்கூடியதை விட அதிகமாக சாதிக்க நண்பர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள் என்று எழுதுகிறார் (வச. 9). தேவைப்படும் நேரத்தில் தோழர்கள் உதவுகிறார்கள் (வச. 10), கூட்டாளர்கள் ஆறுதல் தருகிறார்கள் (வச. 11); மற்றும் கடினமான சூழ்நிலைகளில் நண்பர்கள் பாதுகாப்பை வழங்க முடியும் (வச. 12).

தனிமை என்பது ஒரு குறிப்பிடத்தக்க போராட்டம்-நட்பு மற்றும் சமூகத்தின் நன்மைகளை வழங்கவும் பெறவும் தேவன் நம்மைப் படைத்தார். நீங்கள் தனியாக உணர்கிறீர்கள் என்றால், மற்றவர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்க தேவன் உங்களுக்கு உதவ பிரார்த்தனை செய்யுங்கள். இதற்கிடையில், இயேசுவின் ஆவி எப்போதும் நம்முடன் இருப்பதால் விசுவாசி ஒருபோதும் உண்மையிலேயே தனியாக இல்லை என்ற யதார்த்தத்தில் ஊக்கத்தைக் காணுங்கள் (மத்தேயு 28:20).