Lisa M. Samra | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

தேவனின் வல்லமையுள்ள பிரசன்னம்.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் பெண்கள் ஓட்டளிப்பதற்கான வாக்குரிமை கொடுக்கப்பட்ட நூறாவது வருஷ நினைவாண்டு கொண்டாடப்பட்டது. அதற்காகப் பேரணியில் சென்றவர்கள் "ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி" (சங்கீதம் 68:11) என்று எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்துச் செல்வது பழைய புகைப்படங்களில் காண முடிந்தது.

சங்கீதம் 68இல் தாவீது, தேவன் கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் (வ.6), சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணி; இளைத்துப்போன அவரது  சுதந்தரத்தைத் திடப்படுத்தி,  தம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறார் (வ.9,10) என்றும் குறிப்பிடுகிறார். முப்பத்தியைந்து வசனங்கள் கொண்ட இச்சங்கீதத்தில் 'தேவன்' என்ற சொல் நாற்பத்திரண்டு முறை கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் எப்போதும் அவர்களோடிருப்பார், அவர்களை அநீதியிலிருந்தும், பாடுகளிலிருந்தும் மீட்க உதவி செய்கிறார் என்பதற்காகவும் அப்படி உபயோகிக்கப்பட்டுள்ளது. அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி (வ. 11‌).             

ஓட்டுரிமை கிடைத்ததற்காகப் பேரணி சென்ற பெண்கள் சங்கீதம் 68ல் உள்ள வசனத்தைப் புரிந்திருந்தார்களா என்பதை‌விட, பதாகைகளிலிருந்த வசனங்கள் காலத்தை வென்ற தேவனுடைய உண்மையை வெளிக்காட்டியது. திக்கற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் தகப்பனாகிய தேவன் (வ.5‌) அவர்களுக்கு முன்னே சென்று, அவர்களை வழிநடத்தி ஆசீர்வாதமும், நிம்மதியும், சந்தோஷமும் பெற்றுக்கொள்ள உதவுகிறார்.                   

தேவனுடைய பிரசன்னம் அவருடைய ஜனங்களுடன் எப்பொழுதுமிருந்து, அவர்களைச் சிறந்த வழியில் நடத்தி, ஆபத்துக்கும், துன்பங்களுக்கும் விலக்கிக் காக்கிறதென்பதை நினைக்கும் போது  இன்று நாம் ஊக்கமடைவோமாக‌. தமது ஆவியானவர் மூலமாகத் தேவன் இன்றும் நம்முடன் கடந்த காலத்தைப்போலவே வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

தேவனின் பார்வையில் ஒவ்வாதது அல்ல

வருடாந்திர தேசிய கால்பந்து போட்டிகளுக்கான தேர்வுகளின் போது, ​​தொழில்முறை கால்பந்து அணிகள் புதிய வீரர்களைத் தேர்வு செய்கின்றன. வருங்கால வீரர்களின் திறமை மற்றும் உடல் தகுதியை மதிப்பிடுவதற்குப் பயிற்சியாளர்கள் ஆயிரக்கணக்கான மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். 2022 இல், ப்ராக் பர்டி கடைசி 262வது இடத்தைப் பிடித்தார் மற்றும் "திரு. ovvvadhavar” என்று முத்திரை குத்தப்பட்டார். கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் புனைபெயர் அது. வரும் போட்டி தொடரில் அவர் விளையாடுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, பர்டி தனது அணியை இரண்டு பிளேஆஃப் (சமநிலை உடைக்கும் போட்டிகள்) வெற்றிகளுக்கு வழிநடத்தினார். உண்மை என்னவென்றால், அணியின் நிர்வாகிகள் எப்போதும் திறனைக் கண்டறியும் வேலையைத் திறம்படச் செய்வதில்லை. நாமும் அப்படிதான்.

பரீட்சயமான பழைய ஏற்பாட்டுக் கதை ஒன்றில், ஈசாயின் குமாரரிலிருந்து இஸ்ரேலின் அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுக்க சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேவன் அனுப்பினார். சாமுவேல் அந்த ஆண்மக்களைப் பார்த்தபோது, ​​அவர்களின் உடல் தோற்றத்தால் அவர் சற்றே தடுமாறினார். ஆனால் தேவன் அவரிடம், "நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்" (1 சாமுவேல் 16:7) என்றார். மாறாக, தேவன் அவரை மூத்தவனையோ அல்லது பராக்கிரமசாலியையோ தெரிந்துகொள்ளும்படி வழிநடத்தாமல்,  இளையவனும் வெளித்தோற்றத்தில் பொருத்தமற்றவனாகவும் தோன்றும் தாவீதையே தேர்ந்தெடுக்கும்படி வழிநடத்தினார். இவரே பின்னர் இஸ்ரவேலின் மிகப் பெரிய பூமிக்குரிய ராஜாவானார்.

மக்களை மதிப்பிடுவதில் அடிக்கடி நாம் ஏன் மோசமாகத் தவறுகிறோம்? " மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" (வ.7) என்பதை நமது வேதாகம பகுதி நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு பணிக்குழுவில் பணியாற்றவோ அல்லது ஒரு தன்னார்வ குழுவில் சேவைசெய்யவோ எவரையாகிலும் தேர்ந்தெடுக்கும்படி நாம் கேட்கப்படும்போது, ​​தேவனுக்குமுன்  விலையேறப்பெற்ற சுபாவங்களின் அடிப்படையில் தேர்வுகளைச் செய்வதற்கான ஞானத்தைத் தரும்படி அவரிடம் கேட்கலாம்.

 

என் ஜனங்களைப் போக விடு

ஏரன் டக்ளசின் பிரசித்திபெற்ற ஓவியம் “என் ஜனங்களைப் போக விடு”, இதில் அவர் கண்கவர் வர்ணங்களான இளஞ்சிவப்பு நீலம், பச்சை மற்றும் தங்க நிறம் ஆகியவற்றோடு பாரம்பரியமான ஆப்பிரிக்கப் பின்னணியத்தையும் பயன்படுத்தி, வேதாகமத்தின் மோசேயின் கதையோடு கருப்பு அமெரிக்கர்கள் விடுதலையும் நீதியும் பெற்றிடப் பட்ட பாடுகளை இணைத்து நமக்குச் சொல்லியிருப்பார்.

எரியும் முட்செடியில் மோசேக்குத் தேவன் வெளிப்பட்டு, எகிப்தில் இஸ்ரவேலர்கள் இடும் கூக்குரலைத் தான் கண்டதாக அவர் சொன்னதே இந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. தேவனையும், “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா” (யாத்திராகமம் 3:10) என்ற அவரது செய்தியையும் ஒரு ஒளிவட்டத்தில் இதன் ஓவியர் அடையாளப்படுத்தியிருப்பார்.

“என் ஜனங்களைப் போக விடு” எனும் ஓவியத்தில், தேவனின் அறிவுறுத்தல்களுக்கு மோசே கீழ்ப்படிதலுடன் மண்டியிட்டிருப்பார், ஆனால் அவரது கண்களோ தன்னை சூழ்ந்திருக்கும் இருளின் பேரலைகளையும், யுத்த குதிரைகளையும் பார்க்கின்றன. இது இஸ்ரவேலர்கள் எக்பித்திலிருந்து வெளியேறுவதற்கு எதிர்கொள்ளக்கூடும் போராட்டங்களைப் பார்வையாளர்களுக்கு நினைப்பூட்டுகிறது. ஆனால்,

ஒளிவட்டம் பிரகாசமாக ஒளிர்ந்து இஸ்ரவேலர்களோடே தேவன் இருப்பதையும் நினைவூட்டுகிறது. இந்த ஓவியம் உண்டாக்கிய உணர்ச்சிகளின் தாக்கம் இன்றும் எதிரொலிக்கின்றன, காரணம் அநீதிக்கு எதிரான போராட்டம் இன்றும் தொடர்கின்றது. உலகெங்கும், அநேகர் தங்கள் வலிமையை உபயோகித்து ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் ஒடுக்குகின்றனர். இவ்வாறு துன்பப்படுபவர்கள், “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்” (சங்கீதம் 9:9) என்று தேவனை நோக்கி அபயமிடுகின்றனர். தேவன் அவர்களின் கூக்குரலுக்கு உதவும்படி அவர்களுக்காக நாமும் மன்றாடலாம். மேலும், மோசேயை போல ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக விருப்பத்துடன் செயலாற்றலாம்.

 

குழந்தை இயேசுவை வரவேற்றிடுங்கள்

கர்ப்பிணிப் பெண்ணான எங்களின் அயலகத்தார் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்ற செய்திக்காக நாங்கள் நீண்டகாலம் காத்திருப்பது போல் உணர்ந்தேன். "பெண் குழந்தை!" என்று அவர்களின் வீட்டுக்கு முன்னிருந்த புல்வெளியில் ஒரு அடையாளத்தை இறுதியாக வைத்த போது, அவர்கள் மகளின் பிறப்பைக் கொண்டாடினோம். மேலும் புல்வெளி காட்சியைப் பார்க்காத நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினோம்.

ஒரு குழந்தையின் வருகைக்காக பெரும் குதூகலம் காத்திருக்கிறது. இயேசு பிறப்பதற்கு முன்பு, யூதர்கள் ஏதோ சில மாதங்கள் மட்டும் காத்திருக்கவில்லை, தலைமுறை தலைமுறையாக இஸ்ரவேல்  எதிர்பார்க்கும் மீட்பரான மேசியாவின் பிறப்புக்காக ஏங்கினார்கள். ஆண்டுகள் கடந்து செல்ல,  உண்மையுள்ள யூதர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமோவென்று சந்தேகித்திருக்கலாம் என்று நான் கற்பனை செய்கிறேன்.

ஒரு நாள் இரவு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட செய்தி வானத்தில் தோன்றியது, அப்போது ஒரு தூதன் பெத்லகேமில் மேய்ப்பர்களுக்குத் தோன்றி மேசியா இறுதியாகப் பிறந்தார் என்று அறிவித்தான். அவன் அவர்களிடம், "பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்" (லூக்கா 2:12). மேய்ப்பர்கள் இயேசுவைப் பார்த்த பிறகு, அவர்கள் தேவனைப் புகழ்ந்து, பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள் (வ.17).

இயேசுவின் பிறப்பைப் பற்றி பிறரிடம் சொல்ல, வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிள்ளை பிறந்ததை மேய்ப்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் இன்னும் அவருடைய பிறப்பைக் கொண்டாடுகிறோம், காரணம் அவரை விசுவாசிக்கிற எவருக்கும் இவ்வுலகின் மாறுபாட்டிலிருந்து அவரது ஜீவனானது மீட்பை வழங்குகிறது. நாம் சமாதானத்தை அறியவும், மகிழ்ச்சியை அனுபவிக்கவும் இனியும் காத்திருக்க வேண்டியதில்லை, இதுவே அறிவிக்க ஏற்ற நற்செய்தியாகும்.

கிறிஸ்துமஸ் உற்சாகம்

சர்வதேச விருந்தினர்களின் கலாச்சாரங்களைக் கொண்டாட எங்கள் சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் இரவு விருந்தில், மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாடல் குழுவினர், பாரம்பரியமான கிறிஸ்துமஸ் பாடலான "லைலத் அல்-மிலாத்"தை, தர்புகா (ஒரு வகை மேளம்) மற்றும் ஊட் (நரம்பு இசைக்கருவி) ஆகியவற்றின் இசையுடன் பாடிட, நான் மகிழ்ச்சியுடன் கைதட்டினேன். இசைக்குழுவின் பாடகர், பாடல் தலைப்பின் பொருள் "நேட்டிவிட்டி நைட் (இயேசுவின் பிறப்பிடத்தின் இரவு)" என்று விளக்கினார். கிறிஸ்துமஸின் உற்சாகமே தாகத்தால் வாடுபவருக்குத் தண்ணீர் வழங்குதல் அல்லது அழுகிறவருக்கு ஆறுதல் அளித்தல் போன்று பிறருக்குச் சேவை செய்வதிலேயே உள்ளதென்று இப்பாடல் வரிகள் கேட்பவர்களுக்கு நினைவூட்டுகின்றன.

அவர்: தான் பசியாயிருந்தபோது உணவளித்தது, தாகமாயிருந்தபோது தண்ணீர் கொடுத்தது, நோய்வாய்ப்பட்டு தனிமையிலிருந்தபோது தோழமையையும் பராமரிப்பையும் அளித்தது என்று, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் தமக்காகவே செய்த செயல்களென்று பாராட்டும் ஒரு உவமையிலிருந்து  (மத்தேயு 25:34-36) இந்தக் கிறிஸ்துமஸ் பாடலின் கருத்து எடுக்கப்பட்டிருக்கலாம். இயேசுவின் பாராட்டுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்த உவமையில் கூறப்பட்டவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்; அவர்கள் உண்மையில் கிறிஸ்துவுக்காக இதைச் செய்யவில்லை என்று நினைக்கிறார்கள். அவரோ, "மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (வ.40) என்று பதிலளித்தார்.

விடுமுறைக் காலத்தில், பண்டிகை மனப்பான்மையைக் கொண்டிருப்பதே  கிறிஸ்துமஸ் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக பொதுவாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் "லைலத் அல்-மிலாத்", பிறர் மீது கரிசனை கொள்வதே உண்மையான கிறிஸ்துமஸ் உற்சாகத்தைச் செயல்படுத்தும் முறை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, நாம் அவ்வாறு செய்யும்போது, ​​நாம் பிறருக்கு மட்டுமல்ல, இயேசுவுக்கும் ஊழியம் செய்கிறோம்.

தேவனால் மன்னிக்கப்படுதல்

தேசிய விடுமுறையான நன்றிசெலுத்தும் நாளையொட்டி, அமெரிக்க ஜனாதிபதி கருணை மன்னிப்பு வழங்கும் முன், இரண்டு வான்கோழிகளை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறார். நன்றியறிதல் நாளுக்கான பாரம்பரிய உணவில் பிரதானமாக வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவை தங்கள் ஆயுளெல்லாம் பாதுகாப்பாக ஒரு பண்ணையில் வளர்கின்றன. வான்கோழிகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், வித்தியாசமான இந்த வருடாந்திர பாரம்பரியமானது, மன்னிப்பிலுள்ள ஜீவனளிக்கும் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.

எருசலேமில் மீந்திருந்த இஸ்ரவேலர்களுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை எழுதியபோது, ​​மன்னிப்பின் முக்கியத்துவத்தைத் தீர்க்கதரிசி மீகா புரிந்துகொண்டார். தீமையை விரும்பி; பேராசை, அநீதி மற்றும் கொடுமையில் ஈடுபட்டதற்காக (6:10-15) ஒரு சட்டப்பூர்வமான புகாரைப் போலவே,தேவன்  தேசத்திற்கு எதிராக சாட்சியமளிப்பதை மீகா பதிவு செய்தார் (மீகா 1:2).

இத்தகைய கலகங்கள் மத்தியிலும், தேவன் என்றென்றைக்கும் கோபமாக இரார், மாறாக "அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னி(ப்பார்)க்கிற" (7:18) என்ற வாக்கில் வேரூன்றிய நம்பிக்கையுடன் மீகா முடிக்கிறார். சர்வத்திற்கும் சிருஷ்டிகரும் நியாயாதிபதியுமாக, ஆபிரகாமுக்கு அவர் அளித்த வாக்கின் பொருட்டு (வ. 20) நமக்கு எதிரிடையாக நம்முடைய செயல்களை அவர் கணக்கிட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அவராலேயே அறிவிக்க முடியும். இறுதியில், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் இது நிறைவேற்றப்பட்டது.

தேவனுடைய தரத்திற்கேற்ப வாழத் தவறிய எல்லா வழிமுறைகளிலிருந்தும் மன்னிக்கப்படுதல் என்ற பரிசுக்கு நாம் பாத்திரர் அல்லவே, எனினும் இது நமக்கு மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. அவருடைய முழுமையான மன்னிப்பின் பலன்களை நாம் மேலும் மேலும் புரிந்து கொண்டு, ​நன்றியறிதலுடன் அவரை துதிப்போமாக.

மேய்ப்பனிடமிருந்து துணிவு

2007  டீ20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால், ஜோகன்னஸ்பர்க் மைதானத்திலிருந்த சுமார் 1,00,000 பேர் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். மிஸ்பா முதலில் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் சிக்ஸர் விளாசினார். இருப்பினும், ஜோகிந்தர் ஷர்மா இன்னும் அமைதியாக அடுத்த பந்து வீசினார். இந்த முறை பந்தை ஒரு ஜோடி இந்திய கைகள் கவ்வின, ஒரு விக்கெட் விழுந்தது. மிஸ்பா ஆட்டமிழந்தார், அரங்கம் ஆர்ப்பாட்டத்தில் வெடித்தது, இந்தியா தனது முதல் டீ20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இதுபோன்ற உணா்ச்சிமிக்க தருணங்களில்தான் சங்கீதம் 23:1 போன்ற வேதாகம வசனங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்" என்று சங்கீதக்காரன் எழுதுகிறார். நமக்குப் பெலனும் உறுதிப்பாடும் தேவைப்படும்போது, தேவனை ​​ஒரு மேய்ப்பனாக உருவகப்படுத்துகையில், ஆழ்ந்த தனிப்பட்ட முறையில் அவற்றைப் பெறலாம்.

சங்கீதம் 23 ஒரு பிரியமான சங்கீதம், ஏனென்றால் நம்மை அயராமல்  பராமரிக்கும் அன்பான மற்றும் நம்பகமான மேய்ப்பன் இருப்பதால், நாம் ஆறுதலையும் அல்லது சமாதானத்தையும் பெறலாம் என்று இது நமக்கு உறுதியளிக்கிறது. தீவிரமான அல்லது கடினமான சூழ்நிலைகளில் உண்டாகும் அச்சம் மற்றும் தேவன் வழங்கும் ஆறுதல் ஆகிய இரண்டிற்கும் தாவீது சாட்சியமளித்தார் (வ. 4). "தேற்றும்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை உறுதியைக் குறிக்கிறது, அல்லது அவரது வழிநடத்தும் பிரசன்னத்தால் உண்டாகும் தொடர்ந்து முன்னேறுவதற்கான நம்பிக்கை மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது.

சவாலான சூழ்நிலைகளில், விளைவு என்னவாக இருக்கும் என்று தெரியாத நிலையில், நல்ல மேய்ப்பன் நம்முடன் நடப்பார் என்ற இதமான நினைவூட்டலைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி நாம் தைரியம் பெறலாம்.

கிளையாகிய இயேசு

சிவப்பாய் காட்சியளித்த மலைகளுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கிறது அழகிய ஹோலி கிராஸ் சிற்றாலயம். அதற்குள் நுழைந்தவுடன், சிலுவையில் இயேசுவின் வித்தியாசமான சிற்பம் உடனடியாக ஈர்த்தது. ஒரு பாரம்பரிய சிலுவைக்குப் பதிலாக, இயேசு ஒரு மரத்தின் கிளைகளில் இரண்டு தண்டுகளில் சிலுவையில் அறையப்பட்டதாகக் காட்டப்பட்டிருந்தது. கிடைமட்டமாகத்  துண்டிக்கப்பட்ட, காய்ந்த தண்டு, தேவனை நிராகரித்த பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குறிக்கிறது. மற்ற தண்டு மேல்நோக்கி வளர்ந்து கிளைகள்; யூதாவின் செழிப்பான கோத்திரத்தையும், தாவீது ராஜாவின் குடும்ப வம்சத்தையும் குறிக்கிறது.

குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலை, இயேசுவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யூதாவின் கோத்திரம் சிறையிருப்பில் வாழ்ந்தாலும், எரேமியா தீர்க்கதரிசி தேவனிடமிருந்து ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியைக் கொடுத்தார்: "நான்.. சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்" (எரேமியா 33:14) "அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (வ. 15) என்று மீட்பரை குறித்தது. அவரை ஜனங்கள் அடையாளம் காண்பதற்கான ஓர் வழி, "தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்" (வ. 15) என்பதே. அதாவது, மீட்பர் தாவீது ராஜாவின் வழித்தோன்றலாக இருப்பார்.

இயேசுவின் வம்சாவளியின் விவரங்களில், தேவன் வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்ற முக்கியமான உண்மையை இச்சிற்பம் திறமையாக வெளிக்காட்டுகிறது. அதிலும், கடந்த காலத்தில் அவருடைய உண்மைத்தன்மையானது  எதிர்காலத்தில் நமக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராக இருப்பார் என்ற உறுதியளிக்கிறது என்பதற்கான நினைவூட்டல்.

கல்லறையில் இல்லையா?

நாட்டுப்புற இசைஞானியான ஜானி கேஷ் மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோதும், தொடர்ந்து இசையமைப்பதில் உறுதியாக இருந்தார். அவரது இறுதி ஆல்பம், “அமெரிக்கன் 6: ஐன்ட் நோ கிரேவ்,” அவரது வாழ்க்கையின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்டது. காஷின் ஒரு பாடலின் தலைப்புப் பாடலானது, அவர் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையைப் பாடுவதைக் கேட்கும்போது அவரது இறுதி எண்ணங்களைப் பற்றிய நுண்ணறிவைத் தருகிறது. அவரது புகழ்பெற்ற ஆழமான குரல், அவரது உடல்நலக் குறைவால் பலவீனமடைந்தாலும், விசுவாசத்தின் சக்திவாய்ந்த சாட்சியை அறிவிக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு காலையில், ஜானியின் நம்பிக்கையானது வெறும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதில் மட்டுமில்லாமல், தன்னுடைய சரீரமும் உயிர்த்தெழும் என்பதை அவர் நம்பியிருந்தார். 

இது ஒரு முக்கியமான சத்தியம், ஏனென்றால் அப்போஸ்தலனாகிய பவுலின் நாட்களில் கூட, மக்கள் மரணத்திற்கு பின்னான உயிர்தெழுதல் என்னும் நம்பிக்கையை மறுதலித்தனர். பவுல் அவர்களின் வாதத்தை கடுமையாக விமர்சித்தார், “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15:13-14).

இயேசுவின் சரீரத்தை கல்லறையால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதுபோல், அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிற அனைவரும் ஒரு நாள் “உயிர்பிக்கப்படுவார்கள்" (வச. 22). மேலும் உயிர்த்தெழுந்த சரீரத்தோடு ஒரு புதிய பூமியில் அவருடன் நித்தியத்தை அனுபவித்து மகிழ்வோம். அதுவே நம்முடைய துதிகளுக்கான காரணம்!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சேவை செய்யும் சவால்

பதிமூன்றே வயது நிரம்பிய டேஏவியன் மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவாலை மேற்கொண்டான். கோடை விடுமுறையின் போது, தன்னுடைய ஐம்பது புல்வெளிகளை இலவசமாக வெட்டும்படி குழந்தைகளுக்கு அழைப்புக் கொடுத்த ஒரு மனிதனைப் பற்றிய கதையை அவனும் அவனது அம்மாவும் கேட்டிருக்கிறார்கள். இராணுவ வீரர்கள், ஒற்றை அம்மாக்கள், ஊனமுற்றவர்கள், அல்லது உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவதே அவர்களின் நோக்கம். அந்த புல்வெளிகளின் சொந்தக்காரர், வேலையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு நன்மை செய்வதின் அவசியத்தையும் அவர்களுக்கு விளங்கச்செய்தார். கோடையின் வெயில் சுட்டெரிக்கும் போதும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதை விரும்பிய டேஏவியன் 
அடிக்கும்போது அந்த சவாலை நேர்த்தியாய் செய்து முடித்தார். மற்றவர்களுக்குச் சேவை செய்யும் சவால் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இயேசு மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர்சீஷர்களோடு பந்தியிருந்தார் (யோவான் 13:1-2). அவர் கடந்துபோகப்போகிற உபத்திரம் மற்றும் மரணம் என்னும் பாதையைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்த போதிலும், அவர் ஒரு துண்டை எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு சீஷர்களின் பாதங்களை கழுவினார் (வச. 3-5). மேலும் "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார் 
(໙. 14). நம்முடைய தாழ்மையான மாதிரியாகிய இயேசு மக்களிடம் கரிசனை காண்பித்தார். அவர் குருடருக்குப் பார்வையும், வியாதியஸ்தருக்கு சுகமும் கொடுத்து இராஜ்யத்தின் நற்செய்தியைப் போதித்து, தன் சிநேகிதருக்காகத் தன்னுடைய ஜீவனையும் கொடுத்தார். கிறிஸ்து உங்களை நேசிப்பதால், இந்த வாரத்தில் யாருக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர்விரும்புகிறார் என்று அவரிடத்தில் கேளுங்கள். 

சிறந்த அன்பு

இயேசுவின் சிலுவை தியாகத்தை நினைவுகூரும் அந்த புனித வாரத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகமான அன்பை நினைவுகூர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலை கொண்டாடும்வேளையில், தென்மேற்கு பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கி சூடு நடத்தி  அங்கிருந்த இருவரைக் கொன்றான். பேச்சு வார்த்தைக்கு பின்னர், அவன் தன் கைவசம் பிடித்துவைத்திருந்த மக்களை விடுவித்தான்;. ஆனால் அவனுடைய பாதுகாப்புக்காக அதில் ஒரு பெண்ணை மட்டும் பினையக்கைதியாய் பிடித்து வைத்திருந்தான். ஆபத்தை அறிந்த போலீஸ் அதிகாரி அர்னாட் பெல்ட்ரேம், எதிர்பாராத ஒன்றைச் செய்தார். அவர் அவன் பிடித்து வைத்திருந்த பெண்ணுக்கு பதிலாக, தன்னை பிடித்து வைத்துக்கொள்ளும்படிக்கு முன்வந்தார். தீவிரவாதியும் அதை ஒப்புக்கொண்டு அவளை விடுவித்தான். ஆனால் அதற்கடுத்து நடந்த சண்டையில், பெல்ட்ரேம் காயமடைந்து பின்னர் இறந்துபோனார். 
அந்த போலீஸ் அதிகாரியை நன்கு அறிந்த போதகர் ஒருவர், அவருடைய அந்த துணிச்சலான செய்கையை தேவன் மீதான விசுவாசத்திற்கு ஒப்பிட்டு யோவான் 15:13ஐ மேற்கோள் காண்பிக்கிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” பூமியில் தன்னுடைய கடைசிபோஜனத்தை புசித்த இயேசு இவ்வார்த்தைகளை தன்னுடைய சீஷர்களைப் பார்த்து கூறினார். “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும்” (வச. 12) என்று போதித்த அவர், ஒருவர் தன் சிநேகிதருக்காக ஜீவனைக் கொடுக்க துணிவதே அந்த மெய்யான அன்பு என்று கூறுகிறார் (வச. 13). அதைத்தான் அடுத்த நாளில் அவர் செய்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும்பொருட்டு, அவர் சிலுவையில் தன் ஜீவனையே ஒப்புக்கொடுத்தார். 
அர்னாட் பெல்ட்ரேம் செய்த அந்த துணிச்சலான தியாகத்தை செய்வதற்கு நமக்கு அழைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கும்போது, நம்முடைய மாம்ச திட்டங்களை விட்டுவிட்டு, அவருடைய அந்த சிறந்த அன்பின் மேன்மையை மற்றவர்களுக்கு அறிவிக்க பிரயாசப்படுவோம்.  

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.