எங்கள் இதயங்களில் அச்சிடப்பட்டுள்ளது
பாடகர் குழு இயக்குனர் அரியான் அபெலா தன்னுடைய குழந்தைப் பருவத்தை, தன் கைகளை மறைக்க, அவைகளின் மேல் உட்கார்ந்து கழித்தார். விரல்கள் காணாமல் அல்லது ஒன்றோடொன்று ஒட்டின விரல்களோடு பிறந்த அவளுக்கு இடது கால் இல்லை மற்றும் வலது காலின் விரல்களும் இல்லை. ஒரு இசை விரும்பி மற்றும் சுப்ரனோ பாடகியான அவள் அரசாங்கத்தின் ஸ்மித் கல்லூரியில் இசையில் முக்கிய படிப்பைப மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாள். ஒரு நாள் அவளுடைய பாடகர் குழு ஆசிரியர் அவளை பாடகர் குழுவை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இது அவளுடைய கைகள் நன்கு தெரியும்படி இருந்தது. அந்த தருணத்தில் இருந்து அவர் ஆலயத்தின் பாடகர்களை நடத்திக்கொண்டு மற்றொரு பல்கலைக்கழகத்தில் பாடகர் குழு இயக்குனராக பணியாற்றி தன்னுடைய தொழிலைக் கண்டுக்கொண்டார். “என் ஆசிரியர்கள் என்னிடத்தில் ஏதோ ஒன்றை கண்டுபிடித்தனர்” என்று விளக்குகிறார்.
அவளுடைய எழுச்சியூட்டும் கதை “நம்முடைய பரிசுத்த ஆசிரியர் நம்முடைய வரம்புகளை பொருட்படுத்தாமல் நம்மிடத்தில் என்ன பார்க்கிறார் ?” என்று விசுவாசிகளைக் கேட்கத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தன்னையே பார்க்கிறார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27).
மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது, அவருடைய மகிமையான சாயலைத் தாங்கியவர்களான நாம், அவரை பிரதிபலிக்க வேண்டும். அபெலாவுக்கு அவளுடைய கைகள் அல்லது விரல்களின்மை அல்ல மாறாக இயேசுவே மிக முக்கியமானவராக இருந்தார். இது எல்லா விசுவாசிகளுக்கும் பொருந்தும். “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்டு அந்தச் சாயலாகத்தானே மறுரூபப்படுகிறோம்” என்று 2 கொரிந்தியர் 3:18ல் வாசிக்கிறோம்.
அபெலாவைப் போல நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மறுரூபப்படுத்தும் வல்லமையினால் நடத்தப்பட்டு (வச. 18), தேவனினை கனப்படுத்தும் வாழ்க்கை பாடலாக வாழ ஒப்புக்கொடுக்க வேண்டும்.
போட்டியாளரா? அல்லது கூட்டாளியா?
அநேக ஆண்டுகளாக, இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒருவரையொருவர் மோதிக் கொள்கின்றனர். 1947 ஆம் ஆண்டு, நிலப்பகிர்வு நடந்ததிலிருந்து இந்த மோதல் இருந்து கொண்டேயிருந்தாலும், வாகா எல்லையில், ஒவ்வொரு மாலையும், நீங்கள் பார்த்திராதவகையில், ஆடம்பரமாக, சிறப்பான வகையில், மனதைக் கவரும் வகையில், இரு தேசங்களின் ராணுவ வீரர்களும் கொடி வணக்கம் செய்து, நட்பினைத் தெரிவிக்கும் வகையில் இரு வீரர்களும் கைகளைக் குலுக்கிக் கொள்கின்றனர். பல வருட கருத்து வேறுபாடு, 3 பெரிய யுத்தங்கள் நடந்த போதிலும், அனுதினமும் நடைபெறும் இந்த உறவு, இரு நாட்டினரும் எல்லையால் பிரிக்கப் பட்டிருந்தாலும், இணக்கத்தோடு செயல்பட வழிவகுக்கின்றது.
கொரிந்து சபை விசுவாசிகள் தங்களின் முக்கிய பாதையில் எல்லைக்கோடு போட்டு பிரிக்காவிடினும், அவர்கள் பிரிந்திருக்கின்றனர். தங்களுக்கு யார் இயேசுவைக் குறித்து கற்றுக் கொடுத்தார்களோ அவர்களைச் சேர்ந்தவர்கள் என்று தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கின்றனர். சிலர் பவுலைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் அப்பொல்லோவைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் கேபாவைச் (பேதுரு) சேர்ந்தவர்களென்றும் சொல்கின்றார்கள். பவுல் அவர்களை “ஏக மனதும் ஏக யோசனையும்” (1 கொரி.1:10) உள்ளவர்களாய் இருக்கும்படி அழைக்கின்றார். கிறிஸ்துவே அவர்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார், அவர்களுடைய ஆன்மீக வழிகாட்டியல்ல என்பதை நினைவு படுத்துகின்றார்.
நாமும் இவ்வாறே செயல்படுகின்றோம் அல்லவா? நாம் கொண்டுள்ள அதே விசுவாசத்தைக் கொண்டுள்ளவர்களை- நம்முடைய தவறான செய்கைகளுக்காக, இயேசு செய்த தியாகத்தை மறுத்து அவர்களை நண்பர்களாக பாவிப்பதற்குப் பதிலாக, எதிரிகளாக்குகின்றோம். கிறிஸ்து பிரிந்திருக்கின்றாரா? இப்புவியில் அவருடைய பிரதிநிதிகளாக இருக்கும் நாம்- அவருடைய சரீரமாக இருக்கும் நாம், முக்கியமல்லாத காரியங்களின் நிமித்தம் பிரிவினைகளை ஏற்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக அவருக்குள் நாம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம்.
சாதகமாக மாற்றிக் கொள்ளாதிருத்தல்
சிறைச்சாலைக் கைதிகள் அநேகம் பேர், தங்களுடைய சிறைத் தண்டனை நாட்களைக் குறைப்பதற்காக, சாலையோரங்களில் கிடக்கும் குப்பைகளைப் பொறுக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். அந்நேரம் அவர்களின் மேற்பார்வையாளர் ஜேம்ஸ் நிலைகுலைந்து கீழேவிழுந்தார். கைதிகள் அவருக்கு உதவும்படி ஓடினர், அவருக்கு அவசரமான மருத்துவ உதவி வேண்டும் என்று உணர்ந்தனர். ஒரு கைதி ஜேம்ஸின் அலைபேசியை எடுத்து, உதவி கேட்டு பேசினார். அவர்களுடைய மேற்பார்வையாளருக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கும்படி செய்தற்காக, காவல்துறையினர், அந்தக் கைதிகளுக்கு நன்றி கூறினர், ஏனெனில், அவருக்கு ஏற்பட்டுள்ள அந்த இருதய நோயில், அவர் சாகட்டும் என்று அவரை நிராகரித்திருக்கலாம், அல்லது அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவர்கள் தப்பித்திருக்கலாம்.
அந்தக் கைதிகளின் இரக்கச் செயல், பவுல் சீலா என்பவர்கள் சிறைச் சாலையில் இருந்தபோது நடைபெற்ற காரியத்தைப் போல் உள்ளது. அவர்களின் உடைகளைக் களைந்து, அடித்து, சிறைச்சாலையில் தள்ளிய பின்னர், ஒரு பூமியதிர்ச்சி மிகவும் வன்மையாகத் தாக்கி, அவர்களின் சங்கிலிகளைத் தளர்த்தி, சிறைச்சாலை கதவுகளைத் திறந்தது (அப்.16:23-26). சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்த போது, கட்டில் இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று எண்ணி, தன்னுடைய வாழ்வை முடித்துக் கொள்ளத் தயாரானான். (சிறைக் கைதிகள் தப்பித்துவிட்டால், அவனுக்குக் கிடைக்கும் கொடிய தண்டனையை அவன் அறிந்திருந்தபடியால்) அப்பொழுது பவுல், “நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்” என்று கத்தினான் (வ.28). அவர்களின் இச்செயலால், அந்த சிறைச்சாலைக்காரன் அசைக்கப் பட்டான். சிறைச்சாலையில் இத்தகைய ஒரு காரியத்தை அவர்கள் கேட்டதே இல்லை. எனவே அவன், அவர்கள் ஆராதிக்கும் தேவனைக் குறித்து அறிய ஆவலானான், அவனும் தேவனை விசுவாசித்தான் (வ.29-34).
நாம் பிறரை நடத்தும் விதம், நம்முடைய நம்பிக்கையையும் நாம் பெற்றுள்ள மதிப்பீடுகளையும் வெளிப்படுத்தும். பிறரைக் காயப் படுத்துவதற்குப் பதிலாக, நன்மை செய்ய நாம் தெரிந்து கொள்ளும் போது, நம்முடைய செயலைப் பார்க்கும் மற்றவர்களை, நாம் ஆராதிக்கும் தேவனைப் பற்றியும் அவருடைய அன்பினைப் பற்றியும் அதிசயிக்கும் படி, அவர்களைத் தூண்டும்.
2டி இருக்கையில் இருந்த மனிதன்
பிரீத்தி தன்னுடைய 11 மாத குழந்தை லில்லியோடும், லில்லியின் ஆக்ஸிஜன் கருவியோடும் விமானத்தினுள்ளே, நடுப் பாதையில் சென்று கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய குழந்தையின் நுரையீரல் சம்மந்தமான நோய்க்கு மருத்துவ சிகிச்சையளிக்க சென்று கொண்டிருந்தனர். அவள் தனது இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில், விமான பணியாளர் பிரீத்தியை அணுகி, முதல் வகுப்பில் இருக்கும் ஒரு பிரயாணி, தன்னுடைய இருக்கையை அவளுடைய இருக்கைக்கு மாற்றிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். நன்றியறிதலோடு, கண்ணீர் முகத்தில் வழிய, பிரீத்தி இன்னும் அதிக வசதிகள் கொண்ட ஒரு இருக்கைக்கு நடந்து சென்றாள், அவளுக்கு உதவிசெய்த அந்த அந்நியன் அவளுடைய இருக்கைக்கு வந்தான்.
தீமோத்தேயுவுக்கு, பவுல் எழுதின கடிதத்தில், பவுல் குறிப்பிட்டுள்ள தாராள குணத்தை பிரீத்திக்கு உதவியவர் காட்டினார். தீமோத்தேயுவின் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு பவுல், “நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்” (1 தீமோ.6:18) கட்டளையிடு என்று எழுதுகின்றார். நீங்கள் கடுமையானவர்களும், உங்கள் நம்பிக்கையை இவ்வுலகத்தின் செல்வத்தின் மேல் வைப்பவர்களுமாக இருங்கள் என்று பவுல் கூறமாட்டாரா என்பது எதிர்பார்ப்பு. ஆனால், அவரோ தாராள குணமுடைய ஒரு வாழ்வையும், பிறருக்குப் பணிசெய்வதையுமே முக்கியப் படுத்துகின்றார். கெல்சி விமானத்தின், 2டி இருக்கையிலிருந்த அந்த மனிதனைப் போன்று, நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாயிருங்கள் என்கின்றார்.
நாம் மிக செழிப்பாக இருக்கின்றோமா அல்லது தேவையில் இருக்கின்றோமா என்பதல்ல, நாம் நம்மிடம் உள்ளவற்றை, மற்றவர்களோடு தாராளமாகப் பகிர்ந்து கொள்வதில் ஐசுவரியவானாக இருக்கின்றோமா என்பதே முக்கியம். நாம் அப்படி செய்யும் போது, பவுல் சொல்வதைப் போன்று, நாமும், “நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி” (வ.19) செயல்படுகின்றவர்களாக இருப்போம்.
பரிசுத்த கூடுகை
ஒரு வார இறுதி நீண்ட விடுமுறையின் போது, என்னுடைய பள்ளிப் பருவ நண்பர்கள் குழு, ஓர் ஏரியின் அருகில் கூடினோம். பகல் பொழுதை, தண்ணீரில் விளையாடுவதிலும், உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் செலவழித்தோம். ஆனால், மாலையில் நடைபெற்ற உரையாடலை நான் ஒரு பொக்கிஷமாக இருதயத்தில் வைத்துள்ளேன். இரவு கடந்து வந்த போது, உள்ளத்தின் ஆழத்தில் இருந்த பாதிப்புகளையும், தடுமாறும் திருமண உறவுகளையும், சில அதிர்ச்சிகளின் பின்விளைவை சகிக்கும் குழந்தைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். எங்களின், ஒளிவு மறைவற்ற உடைந்த உண்மைகளையும் அத்தகைய மிகக் கஷ்டமான சூழல்களில் தேவன் உண்மையுள்ளவராய் இருந்தததையும் ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொண்டு, மற்றவரை தேவனுக்கு நேராகத் திருப்பினோம். அந்த மாலைப் பொழுதுகளை பரிசுத்த கூடுகைகளாகக் கருதுகின்றேன்.
தேவன் தன் ஜனங்களை கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படி அழைத்த அந்த இரவு பொழுதும், இத்தகைய ஒரு நோக்கதோடு தான் இருந்திருக்கும் என நான் நினைக்கின்றேன். மற்ற பண்டிகைகளைப் போல, இந்த பண்டிகையையும் ஆசரிக்க ஜனங்கள் எருசலேமிற்கு பிரயாணம் செய்ய வேண்டும். அங்கு வந்த பின்னர், அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆராதனை செய்ய வேண்டும், அவர்கள் அந்த பண்டிகை நாட்களில், ஒரு வாரத்திற்கு “எந்த ஒரு வேலையையும் செய்யக் கூடாது!” (லேவி. 23:35). இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு புறப்பட்ட பின்பு, செய்த வனாந்தர பயணத்தையும், தேவன் அவர்களை போஷித்ததையும் நினைவு கூரும்படி இந்த பண்டிகை ஆசரிக்கப் பட்டது (வ.42-43).
அவர்கள் அனைவரும் தேவனுடைய ஜனங்கள் என்ற ஒரே எண்ணம், அவர்களை இந்தக் கூடுகையின் மூலம் ஒன்று சேர்த்ததோடு, அவர்கள் தனித்தும் குழுவாகவும் கடின வேளைகளை சந்தித்தபோது, தேவன் அவர்களுக்குச் செய்த நன்மைகளை பிரகடனப்படுத்தவும் உதவியாயிருந்தது. நாம் நேசிக்கின்றவர்களோடு, நாம் ஒன்று சேரும் போது, தேவன் நம் வாழ்வில் தந்துள்ளவற்றையும் அவருடைய பிரசன்னம் நம்முடைய வாழ்வில் இருப்பதையும் நாம் ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ளும் போது, நம்முடைய விசுவாசமும் பலப்படும்.
பேசும் மேசைகள்
தனிமை என்ற உணர்வு, நம்முடைய நலமான உணர்வுகளை அச்சுறுத்தக் கூடிய மிகப் பெரிய தீமையாகும். இது, சமுதாய ஊடகங்களில் நம்முடைய நடத்தை, நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் இது போன்றவற்றைப் பாதிப்பதின் மூலம் நம் உடல் நலத்தைப் பாதிக்கின்றது. உலக மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர், வயது, பாலினத்தைச் சாராமல், ஏதாவது சில நேரங்களிலாவது தனிமையை உணர்கின்றனர். பிரிட்டனிலுள்ள ஒரு பெரிய அங்காடியில் “பேசும் மேசைகளை”, அவர்களின் சிற்றுண்டிச் சாலைகளில், மக்களிடையே உறவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கியுள்ளனர். மனிதர்களோடு உறவாட விரும்புகின்றவர்கள், இத்தகைய நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள மேசைகளில் அமர்ந்திருப்பவரோடு இணைந்து கொள்வர் அல்லது அங்கு அமர்வதன் மூலம், தங்களின் விருப்பத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பர். உரையாடல்கள், அவர்களுக்கு மற்றவர்களோடு தொடர்பையும் சமுதாய உணர்வையும் தருகின்றது.
ஆதி திருச்சபைகள், மக்களுக்கு பிறரோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. விசுவாச வாழ்க்கையைப் புதியதாகப் பார்க்கும் உலகில், ஒருவரோடொருவர் தொடர்பற்று வாழும் போது, தங்களின் விசுவாச வாழ்க்கையில் ஒரு தனிமையை உணர்கின்றனர். “அவர்கள் அபோஸ்தலருடைய உபதேசத்திலும்” பங்கு பெற்று, இயேசுவைப் பின்பற்ற தேவையான காரியங்களைக் கற்றுக் கொண்டனர், அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திரு ந்து, வீடுகள் தோறும் அப்பம் பிட்டு” ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, ஐக்கியத்தில் நிலைத்திருந்தார்கள் (அப். 2:42,46).
நம் அனைவருக்குமே மனிதர்களின் தொடர்பு தேவை. தேவன் அதற்கென்றே நம்மை உருவாக்கினார்! வேதனை நிறைந்த தனிமை, நம்மைத் இத்தேவைக்கு நேராக வழிநடத்துகின்றது. ஆதி திருச்சபை மக்களைப் போல நாமும் நல்லெண்ணமுடன், மனித தோழமையை ஏற்படுத்துவோம், இத்தேவையோடு இருக்கும் நம் சுற்றத்தாருக்கும் வழங்குவோம்.
சுகம் தரும் வார்த்தைகள்
சுகாதார பாதுகாப்பு வழங்குனர் தரும் உற்சாகமளிக்கும் வார்த்தைகள், நோயாளிகள் வேகமாக குணமடைய உதவியாயிருக்கின்றது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது சம்பந்தமான ஆய்வு நடத்திய தன்னார்வ நபர்கள், தோல் அலர்ஜியினால் ஏற்படும் ஊரல் கொண்டிருந்த நோயாளிகளின் விளைவுகளைக் குறித்து கண்டறிந்தனர். தங்கள் மருத்துவரிடமிருந்து ஊக்கம் தரும் வார்த்தைகளைப் பெற்ற நோயாளிகள், மற்றவர்களைக் காட்டிலும் குறைவான அளவே ஊரலையும், வேதனையையும் பெற்றிருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிமொழிகளை எழுதியவர், ஊக்கம் தரும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். “இனிய சொற்கள் தேன் கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதி. 16:24) என எழுதுகின்றார். நேர் முகச்சிந்தனையுள்ள வார்த்தைகள் நமது உடல் நலத்திற்கு உதவுவது மட்டுமல்ல, ஞானமுள்ள வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும் போது, அது காரியங்களை வாய்க்கப்பண்ணும் (வச. 20) என்கின்றார். நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க, அவை ஊக்கமளிப்பதோடு, நம் எதிர்காலத்தையும் சந்திக்க உதவியாயிருக்கும்.
ஏன், எப்படி ஞானமுள்ள வார்த்தைகள் நம் அனுதின வாழ்விற்கு பெலனையும், சுகத்தையும் கொண்டு வருகின்றது என்பதை நாம் முற்றிலும் அறியோம். ஆயினும், நம்முடைய பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் நம்முடன் பணிபுரிபவர்கள் தரும் ஊக்கமும், வழிகாட்டலும் சோதனைகளைச் சகிக்க பெலன் தருவதோடு, நம்மையும் வெற்றிக்கு நேராக வழிநடத்தும். நாம் சோதனைகளைச் சந்திக்கும் போது, வேத வார்த்தைகள் நமக்கு ஊக்கம் அழிப்பதோடு, சோதனைகளைச் சகிக்கவும், நாம் நினைக்க முடியாத சூழல்களையும் கூட கடந்து செல்லவும் நமக்கு பெலனளிக்கின்றன. தேவனே, உம்முடைய ஞானத்தினால் எங்களைப் பெலப் படுத்தியருளும், எங்களுடைய இனிய வார்த்தையினால் சுகத்தையும், நம்பிக்கையையும், நாங்கள் சந்திக்கின்றவர்களுக்கு வழங்கவும் எங்களுக்கு உதவியருளும்.
மகிழ்ச்சிகரமாக
கடற்காகம் (sea gull) ஒன்று, தன்னுடைய உடைந்து போன காலைச் சுகப்படுத்த உதவிய மனிதனை, பன்னிரண்டு ஆண்டுகளாக அனுதினமும் சந்தித்து வருகின்றது. காலுடைந்த அந்தப் பறவைக்கு நாய் பிஸ்கெட்டுகளைக் கொடுத்து, தன்னிடம் வரவழைத்து, சிகிச்சையளித்து, அதன் காலைச் சரியாக்கினார், அதனைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார், ஜாண். இந்தப் பட்டணத்தின் சிறிய கடற்கரைக்கு, இப்பறவை கோடைகாலத்தில் மட்டுமே வந்தாலும், அது ஜாணை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடும். ஒவ்வொரு நாளும் ஜாண் கடற்கரைக்கு வந்ததும், அப்பறவை அவனிடம் வந்துவிடும், சாதாரணமாக அது வேறு எவரிடமும் செல்வதில்லை. அது ஒரு வினோதமான உறவை ஜாணிடம் காட்டியது.
இந்த கடற்பறவைக்கும் ஜாணுக்கும் இருந்த இந்த உறவு, மனிதனுக்கும் பறவைக்கும் இடையேயிருந்த மற்றொரு விசித்திர உறவை எனக்கு நினைவுபடுத்துகின்றது. தேவனுடைய தீர்க்கதரிசியான எலியா, ஒரு பஞ்சத்தின் போது, வனாந்தரத்தில், கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிருந்த போது, தேவன் அவனிடம், “அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன்” (1 இரா. 17:3-4). என்றார். கடினமான சுற்றுப் புறமும், சூழல்களும் இருந்தபோதும் எலியாவிற்குத் தேவையான தண்ணீரையும் ஆகாரத்தையும் தேவன் கொடுத்தார். காகங்களுக்கு உணவைக் கொடுக்கக் கூடிய பழக்கம் கிடையாது, அவை தனக்குக் கிடைத்தவற்றை ஒளித்து வைத்து தின்னக்கூடியன, ஆயினும் அவை எலியாவிற்கு முழு உணவைக் கொண்டு வந்து கொடுத்தன.
ஒரு மனிதன் பறவைக்கு உதவியது நம்மை ஆச்சரியப்படுத்த மாட்டாது. ஆனால் பறவைகள் ஒரு மனிதனுக்கு “விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது” எனின், அது தேவனுடைய வல்லமையாலும் பாதுகாப்பால் மட்டுமே முடியும் (வ.6). எலியாவை போல நாமும் நம்முடைய அனுதின தேவைகளுக்கு தேவனையே நம்பி வாழக் கற்றுக் கொள்வோம்.
அண்டைவீட்டார்
அநேக வசிப்பிடங்களைப்போன்று, நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலுள்ளவர்களும் ஒரு வலைதளத்தை உருவாக்கி, அண்டைவீட்டார் அனைவரையும் இணைத்து பயன் படுத்திவருகின்றனர். எங்கள் சமுதாயத்தினர், எங்கள் பகுதியில் தென்படும் காட்டுச் சிங்கங்களைக் குறித்தும், காட்டுத் தீ காரணமாக இடத்தைக் காலி செய்யும்படியான கட்டளை போன்றவற்றை ஒருவருக்கொருவர் தெரிவித்தனர். குழந்தை பராமரிப்பு தேவைபட்டபோது, ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளவும் பயன் படுத்தினர். காணாமல் போன செல்லப் பிராணிகளை கண்டுபிடிப்பதற்கும், இது முக்கியமான மூலமாகச் செயல்படுகிறது. வலைதளத்தின் ஆற்றலால் எங்கள் பகுதியிலுள்ள அனைவரும் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்சமயம், உலகக் காரியங்களில் வேகமாக ஈடுபட்டு வரும் காரணத்தினால், இந்த பயன்பாடும் வெகுவாகக் குறைந்து வருகிறது.
அநேக ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாலமோன் அரசன் காலத்திலும் அருகிலுள்ள ஜனங்களோடு நல்ல உறவு வைத்துக்கொள்வதை முக்கியமாகக் கருதினர். குடும்பங்களோடு நல் உறவு வைத்துக்கொள்வது என்பது ஒருவரையொருவர் தாங்கிப் கொள்ளும் முக்கிய மூலமாகக் கருதப்பட்டது. “ஆபத்துக்காலத்தில்” ஒரு நண்பனின் முக்கியமான பங்கினைக் குறித்து சாலமோன் ராஜா விளக்குகிறார் (நீதி. 27:10). உறவினர்கள் தங்கள் குடும்ப நபர்களின் மீது மிகுந்த கரிசனை கொண்டு, அப்படிப்பட்ட சூழல்களில் உண்மையாய் உதவும்படி எண்ணுவர். ஆனால் அவர்கள் தூரத்தில் இருந்தால், ஆபத்து நேரிடும் காலத்தில் அவர்களால் உதவ முடியாது. சமீபத்திலிருக்கும் அயலானே, அந்நேரத்தின் தேவை என்ன என்பதை வேகமாக உணர்ந்து, உடனடியாக உதவ முடியும்.
உலகெங்கும் பரம்பியிருக்கும் நம்முடைய நேச உறவினர்களோடு தொடர்பு கொள்வதை, நவீன தொழில் நுட்பம் இலகுவாக்கிவிட்ட காரணத்தால் அருகிலிருப்பவர்களோடுள்ள தொடர்பை நாம் தவிர்க்கும்படி தோன்றலாம். இயேசுவே, எங்களுக்கு அருகிலிருக்கும் படி நீர் தந்துள்ள மக்களோடு நாங்கள் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்கு உதவியருளும்.