Kirsten Holmberg | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிரிஸ்டன் ஹொம்பெர்க்கட்டுரைகள்

நாம் செய்யும் அனைத்தும்

 கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் புலிசிக், தன்னுடைய காலபந்தாட்ட வரலாற்றில் பல காயங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதின் விளைவாய் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டத்தின் வீரர்களின் அதிகாரப்பூர்வ பெயர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாது என்பதை அறிந்து அவர் ஏமாற்றமடைந்தார். ஆனால் தேவன் அவருக்கு தன்னை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதை விவரிக்கிறார். “எப்போதும் போல, நான் தேவனை சார்ந்திருக்கிறேன்; அவர் என்னை பெலப்படுத்துகிறார்; எப்போதும் என்னோடு ஒருவர் இருப்பதைப் போல நான் உணர்கிறேன். அந்த உணர்வில்லாமல் எந்த காரியத்தையும் என்னால் செய்ய முடியாது” என்று அவர் கூறுகிறார். ஆனால் அதே ஆட்டத்தில் மாற்றாட்டக்காரராய் களமிறங்கிய புலிசிக், அந்த ஆட்டத்தின் நாயகனாய் மாறினார். அவர் விளையாடிய அந்த ஆட்டத்தில் அவர் புத்திசாலித்தனமாய் நகர்த்திய பந்து அந்த விளையாட்டில் அவருடைய அணி வெற்றிபெறுவதற்கான முக்கிய திருப்பமாய் அமைந்து, அவரை அந்த விளையாட்டின் நாயகனாய் மாற்றியது. இந்த அனுபவமானது, நம்முடைய பலவீனங்கள் தேவன் தன்னுடைய அளவிட முடியாத வல்லமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாய் கருதலாம் என்னும் விலையேறப்பெற்ற பாடத்தை அவருக்கு கற்பித்தது.   
பிரச்சனைகளை நாம் சந்திக்கும்போது, நம்முடைய சுயபெலத்தை சார்ந்துகொள்ளும்படிக்கு உலகம் நமக்குக் கற்பிக்கிறது. ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகளில் தேவனுடைய கிருபையும் வல்லமையும் நம்மை பெலப்படுத்துகிறது என்று வேதாகம ஞானம் நமக்கு போதிக்கிறது  (2 கொரி. 12:9). ஆகையால் போராட்டங்களை நாம் தனித்து மேற்கொள்வதில்லை என்பதை அறிந்து விசுவாசத்தோடு முன்னேறுவோம். நம்முடைய பெலவீனங்கள் தேவனுடைய பெலனை விளங்கச்செய்யும் வாய்ப்புகளாய் தேவன் பயன்படுத்தி நம்மை பலப்படுத்துகிறார் (வச. 9-10). ஆகையால் நம்முடைய போராட்டங்களை தேவனை துதிக்கும் மற்றும் நன்றி செலுத்தும் வாய்ப்புகளாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு இந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் இந்த தெய்வீக அன்பின் மேன்மையை அனுபவிக்கக்கூடும்.

இசை மருந்து

அமெரிக்காவில் வடக்கு டகோட்டாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது பெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சையின் ஒரு பகுதியாக இசை சிகிச்சையைப் பெற்றாள். ஏன் என்று புரிந்து கொள்ளாமல், பலர் மனதளவில் இசையின் சக்திவாய்ந்த விளைவை அனுபவித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இசையின் ஒரு மருத்துவ நன்மையை ஆவணப்படுத்தியுள்ளனர். பெல்லா போன்ற புற்றுநோய் நோயாளிகளுக்கும், நடுக்குவாத நோய், மறதி நோய் மற்றும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இசை இப்போது பரிந்துரைக்கப்படுகிறது.

சவுல் மன்னன் அவதியுற்றபோது ஒரு இசை மருந்தை அணுகினான். அவனுடைய உதவியாளர்கள் அவனுடைய அமைதியின்மையைக் கண்டு, அவனுக்காகக் கின்னரம் வாசிக்கிற ஒருவரைக் கண்டுபிடித்து, அவனுக்கு “சவுக்கியமுண்டாகும்" (1 சாமுவேல் 16:16) என்ற நம்பிக்கையில் பரிந்துரைத்தனர். அவர்கள் ஈசாயின் மகன் தாவீதை வரவழைத்தனர். சவுல், அவனது இசையால் மகிழ்ந்து, தனக்கு “முன்பாக நிற்கட்டும்" என்று கேட்டான் (வச. 22). தாவீது, சவுலின் அமைதியற்ற தருணங்களில் இசை இசைத்து, அவனுடைய வேதனையிலிருந்து அவனுக்கு நிவாரணம் அளித்தான்.

நம்மில் இசை ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து தேவன் அறிந்திருப்பதை நாம் விஞ்ஞான ரீதியாக கண்டுகொள்ள ஆரம்பித்து மட்டுமேயுள்ளோம். நமது உடல்களுக்கும், இசைக்கும் சிருஷ்டிகரும் காரணருமான தேவன் நமக்கு அளித்த, சுலபமாக கிடைக்கக்கூடிய ஆரோக்கியத்திற்கான சிறிய மருந்து சீட்டு இசையே. நாம் எந்த காலகட்டத்தில் வாழ்ந்தாலும், நமக்கு எத்தகைய மருத்துவ வசதிகள் இருந்தாலும், நமக்கு இது ஏற்றதாகும். இசையைக் கேட்க வழி இல்லாவிட்டாலும், நம்முடைய சந்தோஷங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் நாம் தேவனைப் பாடலாம், நம்முடைய சொந்த இசையை உருவாக்கலாம் (சங்கீதம் 59:16; அப்போஸ்தலர் 16:25).

நண்பர்களைப் பிடித்தல்

ரியா, அந்த மதியத்தை ஒரு உள்ளூர் ஆற்றின் கரையில் கழித்தாள். தனது மீன்பிடிக் கம்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரில் தூண்டில் போட்டார். சமீபத்தில்தான் அந்தப் பகுதிக்குக் குடிபெயர்ந்திருந்தாள். அவள் மீன் பிடிக்கும் நோக்கில் வரவில்லை; அவள் சில புதிய நண்பர்களைத் தேடிக்கொண்டிருந்தாள். அவளது தூண்டில் கயிறு புழுக்களாலோ அல்லது வேறு எந்த வழக்கமான இரையாலோ இரை வைக்கப்படவில்லை. மாறாக, அந்த கோடை நாளில் படகுகளில் ஆற்றில் பயணிக்கும் மக்களுக்கு பிஸ்கட் பொட்டலங்களை நீட்டிக்கத் தனது கனரக மீன்பிடி கம்பியைப் பயன்படுத்தினாள். அவள் தனது புதிய அயலாரைச் சந்திக்க இந்த ஆக்கப்பூர்வமான வழியைப் பயன்படுத்தினாள், அவர்கள் அனைவரும் இனிமையான உபசரிப்பை விரும்பியதாகவே தோன்றியது!

தம்மோடு வாழ்க்கையில் நடக்க இயேசுவானவர் பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்த விதத்தை மிகவும் அப்பட்டமாக ரியா செய்து, "நண்பர்களைப் பிடிக்க" சென்றாள். அந்த இரண்டு சகோதரர்களும் கடின உழைப்பாளிகள், கலிலேயா கடலில் வலைகளை வீசிக்கொண்டிருந்தனர். இயேசு தம்மைப் பின்தொடரும்படி அழைத்து, அவர்களின் கடின உழைப்பில் குறுக்கிட்டு, மீன்களுக்குப் பதிலாக "மனுஷரை" பிடிக்க அவர்களை அனுப்புவதாகக் கூறினார் (மத்தேயு 4:19). அதன்பின் சிறிது நேரத்தில், யாக்கோபு மற்றும் யோவான் ஆகிய இரு மீனவர்களுக்கும் அவர் அதே அழைப்பை விடுத்தார். அவர்கள் அனைவரும் தங்கள் வலைகளையும் படகுகளையும் உடனே விட்டு, இயேசுவோடு பயணித்தனர்.

தம்முடைய முதல் சீடர்களான மீனவர்களைப் போலவே, கிறிஸ்து தம்மைப் பின்பற்றி, நாம் உறவாடுபவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை எனும் நித்திய காரியங்களில் கவனம் செலுத்த நம்மை அழைக்கிறார். இயேசுவோடு வாழ்வதற்கான நிலையான நம்பிக்கை (யோவான் 4:13-14) எனும் உண்மையிலேயே திருப்தியளிக்கக் கூடிய காரியத்தை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நாம் வழங்க முடியும்.

வாய்களிலிருந்து..

உங்கள் நாய் என்ன சொல்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் எப்படி இருக்கும்? ஒரு புதிய தொழில்நுட்பம், நாய்கள் குரைக்கும் போது அவற்றின் உணர்வுகளை அனுமானிக்க உதவும்படி அவற்றின் "குரைத்தலை" அடையாளம் காண்கிறது. உயர் தொழில்நுட்பம் கொண்ட   கழுத்துப் பட்டைகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குரைப்புகளின் தரவைப் பயன்படுத்தி, நாய்களின் குரைப்புகளில் அவை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை அடையாளம் காணும். இந்த பட்டைகள் வார்த்தைகளை மொழிபெயர்க்காவிடினும், அவை உரிமையாளருக்கும் செல்லப்பிராணிக்கும் இடையே அதிக புரிதலை உண்டாக்குகிறது.

பிலேயாமின் கவனத்தைத் திருப்ப, தேவனும் ஒரு விலங்கைப் பயன்படுத்தினார். பிலேயாம் தனது கழுதையில் சேணம் வைத்து, தேவன் தனக்கு "நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும்" (எண் 22:20) என்று அறிவுறுத்தியதற்கு பிரதியுத்தரமாக மோவாபுக்குப் போய்க்கொண்டிருந்தான். தேவதூதன் "உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதை" (வ.23) கண்டதும் கழுதை நின்றது, இதை பிலேயாம் பார்க்கவில்லை. பிலேயாம் தொடர்ந்து முன்செல்ல முயன்றான், அதனால் தேவன் மனுஷர் பாஷையில் பேசுவதற்குக் கழுதைக்கு உதவினார். ஆபத்தைப் பார்க்கும்படி பிலேயாமின் கண்கள் இறுதியாகத் திறக்கப்பட்டபோது, ​​" தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்" (வ.31). தேவனின் அறிவுரைகளுக்கு மாறாக வெகுமதி பெறவும்,  தேவஜனங்களை சபிக்கவும் தனக்கிருந்த உள்நோக்கத்தை ஒப்புக்கொண்டான் (வ.37-38). "நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்" (வ.34) என்றான்.

வேதாகமத்தின் பக்கங்களிலும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலிலும், பிறரின் ஞானமான ஆலோசனைகளிலும் தேவன் நமக்குக் கொடுக்கும் அறிவுரைகளுக்கு வெளிப்புறமாக மட்டுமல்ல, முழுமனதோடு நாம் செவிசாய்ப்போமாக.

 

கிறிஸ்துவின் ஒளி

நானும் என் கணவரும் எப்போதும் எங்கள் சபையில் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளின் ஆராதனையில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருமணமான புதிதில், நாங்கள் ஒரு விசேஷித்த வழக்கத்தைக் கொண்டிருந்தோம், ஆராதனைக்குப் பிறகு கதகதப்பான ஆடைகளை அணிந்துகொண்டு அருகிலுள்ள மலையில் ஏறுவோம், அங்கே  உயரமான கம்பங்களில்  350 ஒளிரும் விளக்குகள் நட்சத்திர வடிவில் கட்டி தொங்கவிடப்பிட்டிருக்கும். பெரும்பாலும் பனியிருக்கும் அங்கிருந்து நாங்கள் நகரத்தைக் கவனித்துப் பார்க்கும்போது, மெல்லிய குரலில் இயேசுவின் அற்புதப் பிறப்பைப் பற்றிய எங்கள் கருத்துக்களைப் பேசிக்கொள்வோம். இதற்கிடையில், நகரத்தில் உள்ள பலர் கீழே பள்ளத்தாக்கிலிருந்து பிரகாசமான, சரமாய் ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த நட்சத்திரம் நமது இரட்சகரின் பிறப்பை நினைவூட்டுகிறது. "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவரை" தேடி எருசலேமுக்கு "கிழக்கிலிருந்து" வந்த சாஸ்திரிகளைப் பற்றி வேதாகமம் சொல்கிறது (மத்தேயு 2:1-2). அவர்கள் வானத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள், மேலும் நட்சத்திரம் உதித்ததைக் கண்டனர் (வ. 2). அவர்களின் பயணம் அவர்களை எருசலேமிலிருந்து பெத்லகேமுக்கு அழைத்துச் சென்றது, அந்த நட்சத்திரம் "பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும்" அவர்களுக்கு முன்னால் சென்றது (வ. 9). அங்கு, அவர்கள் "சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்(டனர்)டு" (வ.11).

கிறிஸ்து நம் வாழ்வில் அடையாளப்பூர்வமாகவும் (நம்மை வழிநடத்துகிறவராக) மற்றும் உண்மையாகவே வானத்தில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைச் சிருஷ்டித்தவராகவும் என்று நமது வாழ்வின் ஒளிக்கு ஆதாரமாக இருக்கிறார் (கொலோசெயர் 1:15-16). அவருடைய நட்சத்திரத்தை (மத்தேயு 2:10) பார்த்தபோது "மகிழ்ச்சியடைந்த" சாஸ்திரிகளைப் போல, பரலோகத்திலிருந்து நம்மிடையே வசிக்க வந்த இரட்சகராக அவரை அறிந்துகொள்வதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். "அவருடைய மகிமையைக் கண்டோம்" (யோவான் 1:14).

கிறிஸ்துவிலுள்ள ஊக்கம்

ஒரு பள்ளி ஆசிரியை தனது மாணவர்கள் தங்கள் சகாக்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் உண்டாக்கும் குறிப்புகளை எழுதப் பரிந்துரைத்தார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டின் வேறொரு பகுதியில் ஒரு பள்ளியில்  துயரம் ஏற்பட்டபோது, ​​அவர்களுக்கும் ஏதாகிலும் நடக்கலாம் என்று ஏற்பட்ட பயத்தையும் வேதனையையும் அவர்கள் மேற்கொள்ள, அவர்களின் குறிப்புகள் சக மாணவர்களை உற்சாகப்படுத்தியது.

தெசலோனிக்கேயிலுள்ள விசுவாசிகளுக்கு பவுல் எழுதியபோது ஊக்கமும் பரஸ்பர அக்கறையும் இருந்தது. அவர்கள் நண்பர்களை இழந்திருந்தனர், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க இயேசுவின் வாக்களிக்கப்பட்ட வருகையில் நம்பிக்கை வைக்குமாறு பவுல் அவர்களுக்கு அறிவுறுத்தினார் (1 தெசலோனிக்கேயர் 4:14). அது எப்போது நிகழும் என்று அவர்களுக்குத் தெரியாத நிலையில்,  அவர் திரும்பி வரும்போது விசுவாசிகளாகத் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயந்து காத்திருக்க வேண்டியதில்லை என்று அவர்களுக்கு நினைவூட்டினார் (5:9). அதற்குப் பதிலாக, அவர்கள் அவருடனான தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கவும், இதற்கிடையில் "ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி" (வ. 11) செய்யலாம்.

வேதனையான இழப்புகள் அல்லது புரிந்துகொள்ள முடியா துயரங்களை நாம் அனுபவிக்கும் போது, ​​பயம் மற்றும் சோகம் நம்மை மேற்கொள்வது எளிது. பவுலின் வார்த்தைகள், எழுதப்பட்ட காலத்தில் உதவியது போலவே இன்றும் நமக்கு உதவியாக உள்ளன. கிறிஸ்து அனைத்தையும் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போமாக. இதற்கிடையில், குறிப்புகள், நல்வார்த்தைகள், சேவைகள் அல்லது எளிய அணைப்பு மூலம் நாம் ஒருவரையொருவர் ஊக்குவிக்கலாம்.

உதவியை வழங்குதல்

வீடு தேடி உணவு வழங்கும் தனது வேலையினிமித்தம் சுவாதி, சுதாகரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, ​​உணவுப் பையிலிருந்த முடிச்சை அவிழ்க்க அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சுதாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், ஆகவே முடிச்சை அவிழ்க்கும் திறன் அவரிடம்  இல்லை. சுவாதி மகிழ்ச்சியுடன் கடமையைச் செய்தாள். சுவாதி அந்த நாள் முழுவதும் சுதாகரை பற்றி அடிக்கடி நினைவு கொண்டாள், மேலும் அவருக்குத் தேவையான சில அத்தியாவசியங்களைச் சேகரிக்க அவள் தூண்டப்பட்டாள். ஊக்கமளிக்கும் குறிப்புடன் சுவாதி, தனது வீட்டு வாசலில் விட்டுச் சென்ற சூடான தேநீரையும்…

அன்போடு ஊழியஞ்செய்தல்

கீதா முதன்முதலில் சென்னையில் காபி கடையில் வேலையைத் தொடங்கியபோது, ​​​​அவள் மாலா என்ற வாடிக்கையாளருக்குச் சேவை செய்தாள். மாலா காது கேளாதவர் என்பதால், அவர் தனது தொலைப்பேசியில் தட்டச்சு செய்யப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பொருட்களை ஆர்டர் செய்தார். மாலா ஒரு வழக்கமான வாடிக்கையாளர் என்பதை கீதா அறிந்த பிறகு, போதுமான சைகை மொழியைக் கற்று, அவருக்குச் சிறப்பாகச் சேவை செய்யத் தீர்மானித்தாள், அதனால் அவர் அதை எழுதாமலேயே ஆர்டர் செய்யலாம்.

ஒரு எளிய முறையில், கீதா மாலாவுக்கு  அன்பையும் சேவையையும் காட்டினாள். இதையே பேதுரு, ஒருவருக்கொருவர் வழங்க நம் அனைவரையும் ஊக்குவிக்கிறார். சிதறடிக்கப்பட்ட மற்றும் நாடுகடத்தப்பட்ட இயேசுவின் விசுவாசிகளுக்கு எழுதிய நிருபத்தில், "ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்" என்றும், தங்கள் ஈவுகளைப் பயன்படுத்தி "ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்" (1 பேதுரு 4:8, 10) என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகிறார். தேவன் நமக்கு அளித்திருக்கும் தாலந்துகள் மற்றும் திறன்கள் எதுவாக இருந்தாலும், அவை பிறருக்கு நன்மை செய்ய நாம் பயன்படுத்தக்கூடிய ஈவுகளே. அவ்வாறு  செய்யும்போது, ​​நம் வார்த்தைகளும் செயல்களும் தேவனுக்கு கனத்தைச் சேர்க்கும்.

பேதுருவின் வார்த்தைகள், அவர் எழுதியவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, காரணம் அவர்கள் வேதனையும் தனிமையும் நிறைந்த காலத்தை அனுபவித்தனர். துன்பத்தின் போது ஒருவரையொருவர் தங்கள் சோதனைகளைச் சமாளிக்க, ஒருவருக்கொருவர் உதவுமாறு அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். மற்றொரு நபர் அனுபவிக்கும் குறிப்பிட்ட வலியை நாம் அறியாவிட்டாலும், நம்முடைய வார்த்தைகள், நம்மிடம் உள்ளவை மற்றும் நமது திறன்கள் மூலம் ஒருவரையொருவர் கருணையோடும் மகிழ்ச்சியோடும் சேவிக்கத் தேவன் நமக்கு உதவுவார். அவருடைய அன்பின் பிரதிபலிப்பாக மற்றவர்களுக்கு ஊழியம் செய்யத் தேவன் நமக்கு உதவிடுவாராக.

தேவனை விட்டு ஓடுதல்

ஜூலியும் லிஸும் கலிபோர்னியா கடற்கரையில் சிறிய படகில், கூம்பு திமிங்கிலங்களைத் தேடிச் சென்றனர். இவை மேற்பரப்புக்கு அருகில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதாக அறியப்படுகின்றன, எனவே அவற்றை அங்கே காண்பது எளிது. அந்த இரண்டு பெண்களின் படகுக்கு அடியிலே நேரடியாக ஒன்று தென்பட்டபோது, அது அவர்கள் வாழ்வில் மறக்கமுடியா ஆச்சரியமாக இருந்து. ஒரு பார்வையாளர் அவர்கள் எதிர்கொண்ட  அந்த காட்சிகளைப் படம்பிடித்தார். அது, திமிங்கிலத்தின் பெரிய வாய் முன்பு, பெண்களையும் அவர்களின் சிறு படகுகளையும் சித்திரக் குள்ளர்களைப் போலத் தோன்றச் செய்ததைக் காட்டுகிறது. சிறிது நேரம் நீருக்கடியில் சென்ற பிறகு, பெண்கள் காயமின்றி தப்பினர்.

தீர்க்கதரிசி யோனாவை "பெரிய மீன்" (யோனா 1:17) விழுங்கியது குறித்த வேதாகம சம்பவம் பற்றிய கண்ணோட்டத்தை அவர்களின் அனுபவம் வழங்குகிறது. நினிவே மக்களுக்குப் பிரசங்கிக்கும்படி தேவன் அவருக்கு கட்டளையிட்டாா், ஆனால் அவர்கள் தேவனை நிராகரித்ததால், அவர்கள் அவருடைய மன்னிப்புக்குத் தகுதியற்றவர்கள் என்று யோனாவுக்கு தோன்றியது. கீழ்ப்படிவதற்குப் பதிலாக, அவர் ஓடிப்போய் வேறுஒரு கப்பலில் ஏறினார். தேவன் ஒரு ஆபத்தான புயலை அனுப்பினார், அதனால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார்.

யோனாவை கொந்தளிக்கும் கடலில் தவிர்க்கமுடியா மரணத்திலிருந்து காப்பாற்றத் தேவன் ஒரு வழியை உண்டாக்கினார், அவருடைய செயல்களின் மிக மோசமான விளைவுகளிலிருந்து அவரைக் காத்தார். யோனா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்,  மற்றும் தேவன் உத்தரவு அருளினார் (2:2). யோனா தனது தவற்றை ஒப்புக்கொண்டு, தேவனின் நற்குணத்தைப் புகழ்ந்து அங்கீகரித்த பிறகு, தேவனுடைய கட்டளையின்படி, மீனிலிருந்து "கரையிலே" கக்கப்பட்டார் (வ. 10).

தேவனின் கிருபையால், நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, இயேசுவின் மரணத்தில் நம் விசுவாசத்தை வைக்கும்போது, ​​நாம் சந்திக்கவேண்டிய ஆவிக்குரிய மரணத்திலிருந்து விடுபட்டு, அவர் மூலம் புதிய வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.