உறுதியாய் தரித்திரு
நான் அறைக்குள் நுழைந்த பிறகு, என் உடல் தண்ணீருக்கு மேல் வசதியாக மிதந்தது, அறை இருட்டானது மற்றும் பின்னணியில் ஒலித்த மென்மையான இசை அமைதியாகிவிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த தண்ணீர்த்தொட்டிகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்ககூடியது என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் இந்த அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. உலகின் குழப்பம் நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன், என் உள் உணர்வுகளை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. நான் என்னை சமநிலைப்படுத்தி, புத்துணர்ச்சி பெற்ற நிலையில் என்னை கிடத்தினேன். மௌனமான அமைதி நிலையில் வல்லமை இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தை பெற்றுக்கொண்டு, நமது வல்லமையைப் புதுப்பித்து, தேவனுடைய பிரசன்னத்தின் அமைதியில் நாம் மிகவும் வசதியாக இளைப்பாறக்கூடும். நாம் மௌனமாய் காத்திருக்கும்வேளையில், நம் வாழ்வில் உள்ள கவனச்சிதறல்களை நீக்கி, அவர் நம்மைப் பலப்படுத்துகிறார். அதினால் அவருடைய மெல்லிய சத்தத்தை நாம் இன்னும் தெளிவாகக் கேட்க முடியும் (சங்கீதம் 37:7).
இதுபோன்று நம்முடைய புலன்களை ஆசுவாசப்படுத்தும் அறைகள் நிச்சயமாக அமைதியின் ஒரு வடிவமாக இருந்தாலும், தேவனோடு இடைவிடாமல் நேரம் செலவழிக்க தேவன் நமக்கு ஒரு எளிமையான வழியைக் கற்றுக்கொடுக்கிறார். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6) என்று சொல்லுகிறார். நாம் அவருடைய மகத்தான பிரசன்னத்தின் அமைதியில் வாழ்க்கையின் சவால்களுக்கான பதில்களைத் தேடும்போது, அவர் நம் நடைகளை ஸ்திரப்படுத்தி, அவருடைய நீதி நம் மூலம் பிரகாசமாக ஓளிரச்செய்வார் (சங்கீதம் 37:5-6).
தேவ பிரசன்னத்தின் முக்கியத்துவம்
2009 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு, இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில், திறன் மற்றும் நினைவக பயிற்சிகளுக்கு இடையில் ஏற்படும் மாறுதலைக் குறித்து ஆய்வுமேற்கொண்டனர். ஆச்சரியவிதமாக, ஒரே நேரத்தில் பல திறமைகளை வெளிப்படுத்தமுடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்களைக் காட்டிலும் ஒரே நேரத்தில் ஒரே திறனை வெளிப்படுத்துகிறவர்கள் சிறப்பானவர்களாய் செயல்பட்டுள்ளனர். பல்திறனாளிகள் தங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கும், தேவையற்ற தகவல்களை அப்புறப்படுத்துவதற்கும் சிரமப்படுகின்றனர். நம்முடைய மனது சிதறும்போது, அவற்றை ஒருமுகப்படுத்துவது என்பது சவாலாய் அமைகிறது.
இயேசு மரியாள் மற்றும் மார்த்தாள் வீட்டிற்குச் சென்றபோது, மார்த்தாள் மும்முரமாக பற்பல வேலைகளை செய்துகொண்டிருந்தாள் (லூக்கா 10:40). அவளது சகோதரியாகிய மரியாளோ, இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய போதனைகளை கேட்பதின் மூலம் என்றுமே தன்னைவிடட்டு எடுபடாத ஞானத்தையும் இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்தாள். (வச. 39-42). மார்த்தாள், மரியாளை தனக்கு உதவி செய்ய அனுப்பும்புடிக்கு இயேசுவிடம் கேட்டபோது, அவர்;, “மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்” (வச. 41:42).
நாம் தேவன் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் மார்த்தாளைப் போன்று நாம் அநேக காரியங்களைக் குறித்து சிந்தித்து திசைதிருப்பப்படுகிறோம். நமக்கு தேவையான ஞானத்தையும் நம்பிக்கையையும் தேவனால் மட்டுமே நமக்கு அருளமுடியும் என்று தெரிந்தும், தேவனுடைய பிரசன்னத்தை நாம் புறக்கணிக்கிறோம். நாம் ஜெபத்தின் மூலமாகவும் வேதவாசிப்பின் மூலமாகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்போமாகில், நாம் நம்முடைய வாழக்;கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு அவர் நமக்கு வழியையும் பெலனையும் கொடுக்கிறார்.
சத்தத்தின் வல்லமை
வரலாற்றில் பெயர்பதித்திருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் சமுதாயத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள். ஃபிரடெரிக் டக்ளஸை சிந்தித்துப் பாருங்கள். ஏற்றத் தாழ்வு ஒழிப்பு மற்றும் சுதந்திரம் பற்றிய அவரது உரைகள் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவிய ஒரு இயக்கத்தைத் தூண்டின. அவர் அமைதியாய் இருக்க தீர்மானித்திருந்தால் என்னவாகியிருக்கும்? மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் உதவுவதற்கும் நம் குரலைப் பயன்படுத்துவதற்கான திறனை நாம் அனைவரும் பெற்றுள்ளோம். ஆனால் துணிந்து பேசுவதற்கான பயம் நம்மை முடக்குகிறது. இந்த பயம் நம்மை ஆளுகை செய்யும்போது, தெய்வீக ஞானம் மற்றும் உற்சாகத்தின் பிறப்பிடமும் ஆதாரமுமான தேவனை நாம் நோக்கிப் பார்ப்போம்.
தேவன் ஏரேமியாவை தேசங்களுக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைக்க அழைப்புவிடுக்கும்போது, அவன் தன் சொந்த திறமைகளைக் குறித்து சந்தேகப்பட்டான். அவன் “இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” (எரேமியா 1:6) என்று கதறுகிறான். ஆனால் எரேமியாவின் சத்தத்தை எதிர்கால சந்ததிகள் கேட்கும் அந்த வாய்ப்பை இழக்கச்செய்யும் அவனுடைய பயம் அவனை ஆளுகைசெய்யாத வண்ணம் தேவன் அவனைப் பார்த்துக்கொண்டார். தான் சொல்லுவதை மட்டும் நீ செய்தால் போதுமானது என்று அவனுக்கு தேவன் ஆலோசனை சொல்லுகிறார் (வச. 7).
தேவன் நம்மை எப்படி பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நமக்கு காண்பிக்கும்பொருட்டு அவரிடத்தில் கேட்கும்போது, நம்முடைய வாழ்க்கையில் அவருடைய சித்தத்தை தேவன் வெளிப்படுத்துவார். அவருடைய உதவியுடன், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தைரியமாக நம் குரலை உயர்த்துவோம்.
விசுவாச அடிகள்
மழைக்காடு ஒன்றின் மிக உயரமான இடத்திலிருந்து கம்பியில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி பயணிக்க திட்டமிட்டு நான் புறப்பட தயாரானபோது எனக்குள் பயம் பரவியது. நான் அதற்கான மேடையில் இருந்து குதிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என்ற என்னுடைய அச்சம் அதிகரித்தது. ஆனால் நான் முழு தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு அதின் கயிற்று பிடிமானத்தை விடுவித்தேன். காட்டின் உச்சியில் இருந்து கீழே விழுந்து, பசுமையான மரங்கள் வழியாக நான் பயணித்தேன். காற்று என் தலைமுடியை வேகமாக வருடியது. என் கவலைகள் மெதுவாக மறைந்தன. காற்றின் புவியீர்ப்பு விசை என்னை இழுத்துச்சென்ற திசை வழியாக நான் நகர்ந்தபோது, அடுத்து நிறுத்தம் வந்துவிட்டது என்பதை என்னால் தெளிவாக பார்க்கமுடிந்தது. நான் பாதுகாப்பாக வந்துசேர்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன்.
அந்த கயிற்றின் மூலம் நான் ஏறெடுத்த அந்த அபாயகரமான பயணமானது, தேவன் நம்மை வழிநடத்திக் கொண்டுபோகும் புதிய சவால்களை எனக்கு நினைவுபடுத்தியது. நம்முடைய குழப்பமான சூழ்நிலைகளில் நாம் நம்முடைய “சுயபுத்தியின்மேல் சாயாமல்” தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படிக்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (நீதிமொழிகள் 3:5). நம்முடைய சிந்தை பயத்தினாலும் சந்தேகத்தினால் நிறைந்திருக்கும்போது, நம்முடைய பாதைகள் தெளிவில்லாமலும், உடைக்கப்பட்டதாயும் தெரியும். ஆனால் நாம் நம்முடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்புவிக்கும் உறுதியான தீர்மானத்தை எடுக்கும்போது, “அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச. 6). ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் நாம் நேரம் செலவழிக்கும்போது, விசுவாச அடிகளை எடுக்க நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம்.
நாம் தேவனை பற்றிக்கொண்டு, நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் நம்மை வழிநடத்த அனுமதிக்கும்போது வாழ்க்கையின் சவால்களில் சுதந்திரத்தையும் அமைதியையும் காணலாம்.
சீர்படுத்தும் தேவன்
நவம்பர் 4, 1966 இல், இத்தாலியின் புளோரன்ஸ் நகரை ஒரு பேரழிவுகரமான வெள்ளம் அடித்துச் சென்றது. ஜார்ஜியோ வசாரியின் புகழ்பெற்ற கலைப் படைப்பான “தி லாஸ்ட் சப்பரை” சேறு, தண்ணீர் மற்றும் கொதி எண்ணெய் ஆகியவைகளால் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூழ்கடிக்கப்பட்டது. அதன் வண்ணப்பூச்சு கரைந்து, அதன் மரச்சட்டம் கணிசமாக சேதமடைந்ததால், அதை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்று பலர் நம்பினர். இருப்பினும், ஐம்பது வருட கடினமான முயற்சிக்குப் பிறகு, வல்லுநர்களும் தன்னார்வலர்களும் தடைகளை மீறி, மதிப்புமிக்க ஓவியத்தை மீட்டெடுத்தனர்.
பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை சிறைபிடித்தபோது, மரணத்தினாலும் அழிவினாலும் அச்சுறுத்தப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழந்து சீரமைப்பிற்காய் எதிர்பார்த்து காத்திருந்தனர் (புலம்பல் 1). இந்த சூழ்நிலையில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகள் பள்ளத்தாக்கிற்கு கொண்டுபோய், “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று கேட்கிறார். அதற்கு எசேக்கியேல் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர்” (எசேக்கியேல் 37:3) என்று பதிலளிக்கிறான். அந்த எலும்புகள் உயிரடையும்படிக்கு தீர்க்கதரிசனம் அறிவிக்கும்படிக்கு தேவன் சொல்லுகிறார். எசேக்கியேல் “தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது” (வச. 7). இந்த தரிசனத்தின் மூலம் இஸ்ரவேலின் மறுசீரமைப்பு எசேக்கியேல் தீர்க்கதரிசியினாலேயே நிகழும் என்பதை தேவன் தெரியப்படுத்துகிறார்.
வாழ்க்கையில் காரியங்கள் உடைக்கப்பட்டு, இனி ஒட்டவைக்கப்படுவது சாத்தியமேயில்லை என்றபோதில், உடைந்த காரியங்களை தேவன் ஒட்டவைப்பதாக உறுதிகொடுக்கிறார். அவர் நமக்கு புதிய சுவாசத்தையும் ஜீவியத்தையும் கொடுக்கிறார்.
ஆவிக்குரிய புதுப்பிப்பு
சீன மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்து துகள்களைச் சருமத்தில் தேய்ப்பது நடைமுறையில் உள்ளது, தோலின் மேற்புறத்தில் தங்கியிருக்கும் இறந்த திசுக்களை தேய்த்தெடுக்க தரையின் முத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ருமேனியாவில், புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சைக்கு சேற்றைப் பிரபலமாகப் பயன்படுத்துகிறார்கள். சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் வகையில் பரவலாகச் சேறை தேய்த்துக்கொள்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் பராமரிப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றனர், இது மிகவும் மந்தமான சருமத்தையும் புதுப்பிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
எவ்வாறாயினும், நமது உடல்களைப் பராமரிக்க நாம் உருவாக்கிய கருவிகள் நமக்குத் தற்காலிக திருப்தியை மட்டுமே தர முடியும். முக்கியமானது என்னவென்றால், நாம் ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமாகவும் வலிமையோடும் இருப்பதே. இயேசுவை விசுவாசிக்கும் நாம், அவர் மூலமாக ஆவிக்குரிய புத்துணர்வாகிய ஈவையும் பெற்றுள்ளோம். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், "எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" (2 கொரிந்தியர் 4:16). பயம், காயம் மற்றும் பதட்டம் போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மைச் சோர்வடையச் செய்யலாம். நாம் "காணப்படுகிறவை அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." (வச. 18) என்று நோக்கும்போது ஆவிக்குரிய புத்துணர்வு வருகிறது. நமது அன்றாட கவலைகளை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு, பரிசுத்த ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22-23 நம் வாழ்வில் புதிதாக வெளிப்பட வேண்டும் என்று ஜெபிப்பதின் மூலமாக இதை அடைகிறோம். நாம் நமது பிரச்சனைகளைத் தேவனிடம் விட்டுவிட்டு, அவருடைய ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம் மூலம் பிரகாசிக்க அனுமதிக்கும்போது, அவர் நம் ஆத்துமாக்களை மறுசீரமைக்கிறார்.
உறுதியாய் தரித்திரு
நான் அறைக்குள் நுழைந்த பிறகு, என் உடல் தண்ணீருக்கு மேல் வசதியாக மிதந்தது, அறை இருட்டானது மற்றும் பின்னணியில் ஒலித்த மென்மையான இசை அமைதியாகிவிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த தண்ணீர்த்தொட்டிகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்ககூடியது என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் இந்த அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. உலகின் குழப்பம் நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன், என் உள் உணர்வுகளை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. நான் என்னை சமநிலைப்படுத்தி, புத்துணர்ச்சி பெற்ற நிலையில் என்னை கிடத்தினேன். மௌனமான அமைதி நிலையில் வல்லமை இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தை பெற்றுக்கொண்டு, நமது வல்லமையைப் புதுப்பித்து, தேவனுடைய பிரசன்னத்தின் அமைதியில் நாம் மிகவும் வசதியாக இளைப்பாறக்கூடும். நாம் மௌனமாய் காத்திருக்கும்வேளையில், நம் வாழ்வில் உள்ள கவனச்சிதறல்களை நீக்கி, அவர் நம்மைப் பலப்படுத்துகிறார். அதினால் அவருடைய மெல்லிய சத்தத்தை நாம் இன்னும் தெளிவாகக் கேட்க முடியும் (சங்கீதம் 37:7).
இதுபோன்று நம்முடைய புலன்களை ஆசுவாசப்படுத்தும் அறைகள் நிச்சயமாக அமைதியின் ஒரு வடிவமாக இருந்தாலும், தேவனோடு இடைவிடாமல் நேரம் செலவழிக்க தேவன் நமக்கு ஒரு எளிமையான வழியைக் கற்றுக்கொடுக்கிறார். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6) என்று சொல்லுகிறார். நாம் அவருடைய மகத்தான பிரசன்னத்தின் அமைதியில் வாழ்க்கையின் சவால்களுக்கான பதில்களைத் தேடும்போது, அவர் நம் நடைகளை ஸ்திரப்படுத்தி, அவருடைய நீதி நம் மூலம் பிரகாசமாக ஓளிரச்செய்வார் (சங்கீதம் 37:5-6).
சத்தத்தின் வல்லமை
வரலாற்றில் பெயர்பதித்திருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் சமுதாயத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தவர்கள். ஃபிரடெரிக் டக்ளஸை சிந்தித்துப் பாருங்கள். ஏற்றத் தாழ்வு ஒழிப்பு மற்றும் சுதந்திரம் பற்றிய அவரது உரைகள் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவிய ஒரு இயக்கத்தைத் தூண்டின. அவர் அமைதியாய் இருக்க தீர்மானித்திருந்தால் என்னவாகியிருக்கும்? மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் உதவுவதற்கும் நம் குரலைப் பயன்படுத்துவதற்கான திறனை நாம் அனைவரும் பெற்றுள்ளோம். ஆனால் துணிந்து பேசுவதற்கான பயம் நம்மை முடக்குகிறது. இந்த பயம் நம்மை ஆளுகை செய்யும்போது, தெய்வீக ஞானம் மற்றும் உற்சாகத்தின் பிறப்பிடமும் ஆதாரமுமான தேவனை நாம் நோக்கிப் பார்ப்போம்.
தேவன் ஏரேமியாவை தேசங்களுக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைக்க அழைப்புவிடுக்கும்போது, அவன் தன் சொந்த திறமைகளைக் குறித்து சந்தேகப்பட்டான். அவன் “இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” (எரேமியா 1:6) என்று கதறுகிறான். ஆனால் எரேமியாவின் சத்தத்தை எதிர்கால சந்ததிகள் கேட்கும் அந்த வாய்ப்பை இழக்கச்செய்யும் அவனுடைய பயம் அவனை ஆளுகைசெய்யாத வண்ணம் தேவன் அவனைப் பார்த்துக்கொண்டார். தான் சொல்லுவதை மட்டும் நீ செய்தால் போதுமானது என்று அவனுக்கு தேவன் ஆலோசனை சொல்லுகிறார் (வச. 7).
தேவன் நம்மை எப்படி பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நமக்கு காண்பிக்கும்பொருட்டு அவரிடத்தில் கேட்கும்போது, நம்முடைய வாழ்க்கையில் அவருடைய சித்தத்தை தேவன் வெளிப்படுத்துவார். அவருடைய உதவியுடன், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தைரியமாக நம் குரலை உயர்த்துவோம்.
விசுவாச அடிகள்
மழைக்காடு ஒன்றின் மிக உயரமான இடத்திலிருந்து கம்பியில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி பயணிக்க திட்டமிட்டு நான் புறப்பட தயாரானபோது எனக்குள் பயம் பரவியது. நான் அதற்கான மேடையில் இருந்து குதிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என்ற என்னுடைய அச்சம் அதிகரித்தது. ஆனால் நான் முழு தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு அதின் கயிற்று பிடிமானத்தை விடுவித்தேன். காட்டின் உச்சியில் இருந்து கீழே விழுந்து, பசுமையான மரங்கள் வழியாக நான் பயணித்தேன். காற்று என் தலைமுடியை வேகமாக வருடியது. என் கவலைகள் மெதுவாக மறைந்தன. காற்றின் புவியீர்ப்பு விசை என்னை இழுத்துச்சென்ற திசை வழியாக நான் நகர்ந்தபோது, அடுத்து நிறுத்தம் வந்துவிட்டது என்பதை என்னால் தெளிவாக பார்க்கமுடிந்தது. நான் பாதுகாப்பாக வந்துசேர்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன்.
அந்த கயிற்றின் மூலம் நான் ஏறெடுத்த அந்த அபாயகரமான பயணமானது, தேவன் நம்மை வழிநடத்திக் கொண்டுபோகும் புதிய சவால்களை எனக்கு நினைவுபடுத்தியது. நம்முடைய குழப்பமான சூழ்நிலைகளில் நாம் நம்முடைய “சுயபுத்தியின்மேல் சாயாமல்” தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படிக்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (நீதிமொழிகள் 3:5). நம்முடைய சிந்தை பயத்தினாலும் சந்தேகத்தினால் நிறைந்திருக்கும்போது, நம்முடைய பாதைகள் தெளிவில்லாமலும், உடைக்கப்பட்டதாயும் தெரியும். ஆனால் நாம் நம்முடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்புவிக்கும் உறுதியான தீர்மானத்தை எடுக்கும்போது, “அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச. 6). ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் நாம் நேரம் செலவழிக்கும்போது, விசுவாச அடிகளை எடுக்க நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம்.
நாம் தேவனை பற்றிக்கொண்டு, நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் நம்மை வழிநடத்த அனுமதிக்கும்போது வாழ்க்கையின் சவால்களில் சுதந்திரத்தையும் அமைதியையும் காணலாம்.