எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜாண் பிளேஸ்கட்டுரைகள்

உற்சாகமாகக் கொடுப்பவர்கள்

பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய மனைவி வாங்கிய ஒரு பொருளுக்கான தள்ளுபடியைப் பெற்றாள். அதனை அவள் எதிர்பார்க்கவில்லை, அதனைக் குறித்து மெயில் வந்தது. அதே நேரத்தில் அவளுடைய சினேகிதியும் ஒரு நாட்டிலுள்ள பெண்கள் தொழில் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும், கல்வி மற்றும் வர்த்தகம் மூலம் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும்படி தேவையிலிருப்பதாகவும் பகிர்ந்து கொண்டாள். ஆயினும் அவர்களின் முக்கியமான தடையாக இருப்பது பொருளாதாரம்.

எனவே, என்னுடைய மனைவி, அந்தத் தள்ளுபடி தொகையோடு, ஒரு சிறிய கடனையும் பெற்று, இந்த பெண்களுக்கு உதவும் ஓர் ஊழியத்திற்குக் கொடுத்தாள். அந்த கடனைத் திருப்பிச் செலுத்திய போது, மீண்டும், மீண்டும் கடனைப் பெற்று அதற்குக் கொடுத்தாள். இதுவரை இருபத்தேழு முறை இவ்வாறு வழங்கியுள்ளாள். இதுவரை அவள் சந்தித்திராத, அந்த பெண்களின் வாழ்வு வளம் பெற்றுள்ளது என்ற செய்தியை அவள் கேட்கும் போது அவளின் முகத்தில் ஏற்பட்ட சிரிப்பை, அவள் அநுபவித்த வேறெந்த காரியத்திலும் நான் கண்டதில்லை.

“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7) என்ற வாக்கியத்தின் முதல் சொல்லிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதை நாம் கேட்டிருப்போம், அது சரியானதும் கூட. நம்முடைய கொடுத்தலுக்கும் ஒரு சிறப்பு பண்பு உள்ளது. ஒருவன் கொடுக்கும் போது “விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல”, நாம் பெருக விதைக்க வேண்டும் (வ.6-7), அதாவது மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாய் கொடுப்போம், ஆனால் நாம் கொடுப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியை நமது முகங்கள் காட்டும்.

கண்களால் காண்பதையும் விட அதிகம்

இயந்திரங்களை இயக்குபவர்கள், மிகவும் ஆபத்தான விபத்துக்களைச் சந்திக்க நேரிடும். தங்களின் விரல்கள் கனரக இயந்திரங்களின் சுழல் சக்கரங்களில் சிக்கிக் கொள்ளும் போது, விரல்களை இழக்க நேரிடும். அதிலும் பெரு விரலை இழந்தால், அது பெரிய துயரத்தைக் கொண்டுவரும். இவ்வாறு பெருவிரலை இழந்தவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழந்து விடவில்லை, மாறாக அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்கின்றனர். பெருவிரலை பயன் படுத்தாமல் பல் துலக்குதல், சட்டையின் பொத்தான் மாட்டுதல், தலை வாருதல், ஷூ அணிதல், சாப்பிடல் போன்றவற்றை முயற்சித்துப் பார், அந்தப் பெருவிரல் எத்தனை முக்கித்துவம் வாய்ந்தது என்பது புரியும்.

அப்போஸ்தலனாகிய பவுல் சபையில் இத்தகைய ஒரு காட்சியைப் பற்றி விளக்குகின்றார். அதிகமாக கண்களுக்குத் தென்படாதவர்கள், அதிகம் பேசாதவர்கள், “நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதாக, மற்றவர்கள் அவர்களைக் குறித்துக் கருதுவதாக உணர்வர் (1 கொரி. 12:21). இது பேசப்படாத, உணர்வு சார்ந்த கருத்து, சில வேளைகளில் அது சத்தமாகவும் தெரிவிக்கப் படலாம்.

தேவன் நம்மை, ஒருவர் மீது ஒருவர் சம கரிசனையும், சம மரியாதையும் கொடுக்கும்படி அழைக்கின்றார் (வச. 25). ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்கள் (வ.27), இது நாம் பெற்றுள்ள வரங்களைச் சார்ந்து அல்ல, நம் அனைவருக்கும் மற்றவர் தேவை, நம்மில் சிலர் கண்களாயும், செவிகளாயும் உள்ளனர், அவர்கள் பேச வேண்டும், சிலர் பெருவிரலாயுள்ளனர். ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது. சில வேலைகளில் கண்களால் காண்பதையும் விட அதிக பங்கு உள்ளது.

நாம் தூசிக்குச் சமம்

அந்த இளம் தந்தை, பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டார். “ஐஸ் கிரீம்! ஐஸ் கிரீம்!” என்று கத்திக்கொண்டிருந்தான், அவருடைய சிறிய மகன். அந்த அங்காடியின் கூட்டத்திற்கு மத்தியில், அங்கு பொருட்கள் வாங்க வந்திருந்த அனைவரின் கவனமும் எங்கள் பக்கம் திரும்பியது. “நல்லது, ஆனால் முதலில் அம்மாவிற்கு தேவையானவற்றை முடித்துக்கொள்வோம், சரிதானே?” என்றார் அந்த தகப்பன். “இல்ல்ல்லை! ஐஸ் கிரீம்!” என்றான் சிறுவன். அப்பொழுது, நன்கு உடை அணிந்து, தன்னுடைய காலணிகளின் நிறத்திலேயே கைப்பையையும் வைத்திருந்த ஒரு பெண், அவ்விடத்துக்கு வந்தாள். “அவன் பிடிவாதமாக இருக்கிறான்” என்றார் தந்தை. அவள் சிரித்துக்கொண்டே, “உங்களுடைய சிறுபையனுக்கு பொருத்தமில்லாதது நடந்து கொண்டிருக்கிறது. அவன் ஒரு சிறு பையன் என்பதை மறந்து விடாதிருங்கள், நீங்கள் பொறுமையோடு அவனருகில் இருப்பதையே அவன் எதிர்பார்க்கிறான்” என்றாள். அந்த சூழ்நிலை எவ்விதத்திலும் அப்பொழுது மாறிவிடவில்லையெனினும், தந்தையும் மகனும் ஒன்றாயிருக்கும் ஒரு சந்தர்ப்பமே அந்நேரத்தில் தேவையாயிருந்தது.

அந்த புத்திசாலியான பெண் கூறிய வார்த்தைகளை சங்கீதம் 103 ல் காண்கின்றோம். தாவீது நம்முடைய தேவனைக் குறித்து, “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்… அவர் என்றைக்கும் கோபம் கொண்டிரார்” (வச. 8-9). அதனைத் தொடர்ந்து இவ்வுலகத் தந்தையின் தன்மையைக் காட்டுகின்றார், “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (வச. 13). “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (வச. 14). நாம் மிகவும் சிறியவர்கள், உடையக்கூடியவர்கள் என்பதை அவர் அறிவார்.

இந்த உலகம் நம்மைக் கையாளுகின்ற விதத்தால், நாம் மேற்கொள்ளப்பட்டு, உடைந்து போகிறோம். ஆனால் நம் தேவன் அளவற்ற அன்போடும், பொறுமையோடும் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்ற ஆச்சரியமான உறுதியைத் தருகிறார்.

முழுமையான ஜீவன்

1918 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போர் முடிவுறும் நிலையில், புகைப்படநிபுணர் எரிக் என்ஸ்ட்ராம், தான் எடுத்துக்கொண்ட அனைத்துப் படங்களையும் கோர்வையில் அடுக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஒரு முழுமையை வெளிப்படுத்திய ஒரு படத்தை, அவர் அதனோடு சேர்க்க விரும்பினார், ஆனால், அநேகர் அப்படத்தில் வெறுமையை உணர்ந்தனர். அவர் மிகவும் நேசித்த அப்படத்தில், தாடியுடன் ஒரு முதியவர், தலைகவிழ்ந்தவராய் ஒரு மேசையின் அருகில் அமர்ந்திருக்கின்றார், அவருடைய கரங்களைக் குவித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அ ந்த மேசையில் அவரின் எதிரே ஒரு புத்தகமும், மூக்கு கண்ணாடியும், ஒரு கோப்பை கஞ்சும், ஒரு துண்டு ரொட்டியும், ஒரு கத்தியும் உள்ளன. இதை விட ஒன்றும் கூடுதலாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை.

சிலர் இப்படம் பற்றாக்குறையைக் காட்டுகின்றது என்றனர். ஆனால், என்ஸ்ட்ராமின் கருத்து முற்றிலும் எதிராக இருந்தது. இங்கே வாழ்வு நிரம்பியுள்ளது, ஒருவர் நன்றியோடு வாழ்கின்றார், நாம் வாழும் சூழ்நிலைகளைத் தாண்டி, நீயும் நானும் அனுபவிக்க வேண்டிய நன்றியைக் காட்டுகின்றார், என்றார். யோவான் 10 ஆம் அதிகாரத்தில் இயேசு ஒரு நற்செய்தியைக் கூறுகின்றார். “வாழ்வு …….பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார் .பரிபூரண வாழ்வு என்பதை, அநேகப் பொருட்களால் நிறைந்த வாழ்வு என்று கருதுவோமாயின், நாம் இந்த நற்செய்தியை இழிவு படுத்துகின்றோம். இயேசு குறிப்பிடும் பரிபூரணம் என்பது இவ்வுலகத்தின் செல்வம் அல்லது நிலபுலங்களால் வருவதில்லை. மாறாக, “ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற” (வ.11), நம்மைப் பாதுகாக்கிற, நம் அனுதினத் தேவைகளை பூர்த்திசெய்கிற, அந்த நல்மேய்ப்பனுக்கு நம் இருதயமும், மனதும், ஆன்மாவும்  நம் முழு பெலத்தோடும், நன்றியால் நிறைந்து  வழிய வேண்டும். இதுவே வாழ்வின் பரிபூரணம், தேவனோடுள்ள உறவில் மகிழ்ந்து வாழ்வதே பரிபூரணம். இது நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியது.

எப்பொழுதும் அவரைப் போற்றும் வாழ்க்கைமுறை

வாலஸ் ஸ்டேக்னரின் தாயார் ஐம்பதாவது வயதில் மரித்துப் போனார். வாலஸ், தன்னுடைய எண்பதாவது வயதில், தன்னுடைய தாயாருக்கு ஒரு குறிப்பு எழுதினார். “மிகப் பிந்திய ஒரு கடிதம்” என்ற அந்த கடிதத்தில், மிக கடுமையான நாட்களில், வளர்ந்து, திருமணம் புரிந்து, இரண்டு மகன்களையும் வளர்த்த ஒரு பெண்ணின் குணங்களைப் பாராட்டியிருந்தார். அவள், ஒரு மனைவியாக, தாயாராக இருந்து, அனைவரையும், விரும்பத்தகாதவர்களையும் ஊக்கப்படுத்துவார். தன்னுடைய தாயார், தன்னுடைய குரலின் வாயிலாக வெளிப்படுத்தின வல்லமையை நினைத்துப் பார்த்தார். “நீங்கள் பாடுவதற்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் நழுவ விடவில்லை” என்று எழுதுகின்றார். அவருடைய தாயார் வாழ்ந்த நாட்களெல்லாம், சிறிதும் பெரிதுமான ஆசிர்வாதங்களுக்காக நன்றி செலுத்திப் பாடினார். 

சங்கீதக்காரனும், தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பாடினார். அவர் மகிழ்ச்சியான நாட்களிலும் பாடினார், துன்ப நாட்களிலும் பாடினார். அந்தப் பாடல்கள் எந்த கட்டாயத்தின் பேரிலும் பாடப்படவில்லை, அவை, “வானத்தையும், பூமியையும் உண்டாக்கினவரையும்” (146:6), பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறவரையும்” (வ.7), “குருடரின் கண்களைத்  திறக்கிறவரையும்” (வ.8), “திக்கற்ற பிள்ளையையும், விதவையையும் ஆதரிக்கிறவரையும்” (வ.9) போற்றிப் பாடப் பட்ட பாடல்கள். “யாக்கோபின் தேவனைத்” தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவர்களுக்கு, பெலனாக இருக்கிறவரும், “என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவரும்” ஆகிய தேவனைப் பாடுவதே உண்மையான, பாடலோடு கூடிய வாழ்க்கை முறை (வ.5-6).

நம்முடைய குரல் நன்றாயிருக்கின்றதற்காக அல்ல, நம்மை நன்மையால் நிரப்பினவரைப் போற்றிப் பாடுவதே, நம் வாழ்க்கை முறையாயிருக்கட்டும். ஒரு பழைய பாடலில் “என் உள்ளத்தில் ஒரு பாடலுண்டு” எழுதப் பட்டுள்ளதைப் போன்று, நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடல்கள் எழும்பட்டும்.

எல்லாம் தருபவரை மறந்து விடாதே

அது கிறிஸ்மஸுக்கு முந்திய நாட்கள், அவளுடைய குழந்தைகளின் இருதயத்தில் நன்றியறிதலை உருவாக்குவது, கடினமாயிருந்தது. அவளுடைய குழந்தைகளின் சிந்தனையில் அதனை எவ்வாறு எளிதாக கொண்டு வருவது என்பதனையும், அவர்களின் இருதயத்தில் அதனை எவ்வாறு ஆழமாகப் பதியச் செய்வது என்பதையும் அவள் திட்டமிட்டாள். அவள் தன்னுடைய வீட்டில் அநேக இடங்களில் சிவப்பு ரிப்பன்களைக் கட்டினாள், சுவிட்சுகள், அலமாரியின் கதவுகள், குளிர் சாதனப் பெட்டியின் கதவு, துவைக்கும் இயந்திரம், உலர்ப்பான், தண்ணீர் குழாய்கள், என பல இடங்களில் சிவப்பு ரிப்பன்களோடு, “தேவன் தந்துள்ள அநேக  ஈவுகளை நாம் எளிதாக மறந்து விடுகிறோம், எனவே நான் அவற்றில் ஒரு ரிபன் கட்டியுள்ளேன், தேவன் நம் குடும்பத்தில் எத்தனை நல்லவராய் இருக்கிறார், அவரிடத்திலிருந்து வருகின்ற ஈவுகளை நாம் மறவாதிருப்போம்” என்ற குறிப்பையும் எழுதி வைத்தேன்.

உபாகமம் 6ஆம் அதிகாரத்தில் நாம் காண்கின்றோம், இஸ்ரவேலர்கள் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடைவதற்கு முன்பாக அநேக இடங்களில் வெற்றி பெற வேண்டியிருந்தது. அவர்கள் கட்டாத வசதியான பெரிய பட்டணங்களில் பிரவேசிப்பார்கள், (வ.10) சகல நல்ல வஸ்துக்களால் நிரப்பப்பட்ட வீடுகளில் குடியேறுவார்கள், அவர்கள் வெட்டாத துரவுகளையும், நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும் அவர் உங்களுக்கு கொடுப்பார்,(வ.11) இத்தனை ஆசீர்வாதங்களையும் தருபவர் “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே”(வ.10) இவை அத்தனையும், இன்னும் அநேக நன்மைகளையும் அன்போடு தேவன் தருகின்றார் எனவே மோசே ஜனங்களிடம்,” உன் கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” (வ.12) என்கின்றார்.

நம் வாழ்வின் சில காலங்களை, நாம் எளிதாக மறந்து விடுகின்றோம். ஆனால் நம்முடைய அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் காரணராகிய தேவனையும், அவருடைய நன்மைகளையும் நம் கண்கள் காணத் தவறக்கூடாது.

தேவனுடைய அருமையான பொக்கிஷம்

ஒரு அரண்மனையை கற்பனை செய்து கொள். ஒரு பெரிய அரசன் அறியணையில் வீற்றிருக்கிறார். அவரைச் சுற்றிலும் எல்லா வகை ஊழியக்காரரும், அவரவருடைய சிறந்த ஒழுங்கு முறைப் படி நிற்கின்றனர். அந்த அரசனின் பாதத்தருகே ஒரு பெட்டி வைக்கப் பட்டுள்ளது. அந்த அரசன் அவ்வப்போது பெட்டியில் உள்ளவற்றை தடவிப் பார்க்கின்றார். அப்படி, அந்த பெட்டியினுள் என்ன இருக்கிறது? நகைகள், தங்கம், அரசன் விரும்பும் விலையேறப்பெற்ற கற்கள்? இந்த பெட்டியில், அரசனுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை தரும் அருமையான பொக்கிஷங்கள் சேகரிக்கப்பட்டு, வைக்கப் பட்டுள்ளன அது என்னவென்று உன் கற்பனையில் தெரிந்து விட்டதா?

இந்த பொக்கிஷத்தை எபிரெய மொழியிலே “செகுலா” என்பர். இதன் அர்த்தம் “சொந்த சம்பத்து” என்பது. இந்த வார்த்தையை, பழைய ஏற்பாட்டில், யாத்திராகமம் 19:5, உபாகமம் 7:6, சங்கீதம் 135:4 ஆகியவற்றில் காணலாம். இது இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கின்றது. அப்போஸ்தலனாகிய பேதுரு புதிய ஏற்பாட்டில் எழுதும் போது “தேவனுடைய இரக்கத்தைப் பெற்ற ஜனங்கள் ,“ “தேவனுடைய ஜனங்கள்” (வ.10) என்று எழுதுகின்றார். இவர்கள், இஸ்ரவேலர் அல்லாத ஒரு கூட்டத்தார். அதாவது, இயேசுவை விசுவாசிப்பவர்களைப் பற்றி இவர் எழுதுகின்றார். இதில் இஸ்ரவேலரும், புறஜாதியினரும் அடங்குவர் .“நீங்களோ..... தேவனுக்குச் சொந்த ஜனமாயும் இருக்கிறீர்கள்” (வ.9). 

பரலோகத்தின் சர்வ வல்ல ராஜா, அவருடைய அருமையான பொக்கிஷங்களில் ஒன்றாக, உன்னை கருதுகின்றார் எனின் அதனை கற்பனை செய்ய முடிகிறதா! அவர், பாவம் மற்றும் சாவின் பிடியிலிருந்து உன்னை மீட்டு எடுத்துள்ளார். அவர் உன்னை தன்னுடைய சொந்த பிள்ளையாகக் கருதுகின்றார். ராஜாவின் குரல் சொல்கின்றது, ”இந்த பிள்ளையை நான் நேசிக்கிறேன், இது என்னுடைய பிள்ளை”

அமைதியான வாழ்வைத் தேடல்

“நீ பெரியவனான பின்பு என்னவாக வேண்டுமென விரும்புகின்றாய்?” இந்தக் கேள்வியை நம்மிடம், நாம் குழந்தைகளாயிருந்தபோது அல்லது வளர்ந்த பின்பு கூட கேட்டிருக்கலாம். ஆர்வ மிகுதியால் இக்கேள்வி உருவானது. இதற்கான விடை, ஒருவருடைய எதிர் கால இலட்சியத்தை வெளிப்படுத்தும். வருடங்கள் செல்லச் செல்ல என்னுடைய விடை மாறிக் கொண்டேயிருந்தது .கால் நடைகள் பராமரிப்பவரிலிருந்து டிரக் ஓட்டுனர், இராணுவ வீரர், என மாறியது. நான் கல்லூரிக்குச் சென்று மருத்துவராக வேண்டுமெனத் தீர்மானித்தேன். ஆனால், ஒருவர் கூட “ஓர் அமைதியான வாழ்வை” அடைய விரும்புகிறேனெனக் கூறியதேயில்லை.

இதைத் தான் பவுல் தெசலோனிக்கேயருக்குச் சொல்கின்றார். முதலாவது அவர், ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவும், நாடெங்குமுள்ள தேவனுடைய குடும்பத்தினரை நேசிக்கும்படியும் கூறுகின்றார் (1 தெச. 4:9-10). அவர் மேலும் ஒரு பொதுவான அறிவுரையைக் கூறுகின்றார். அது அவர்கள் கையிட்டுச்செய்கின்ற அனைத்து வேலைகளையும் குறிப்பிடுகின்றது. “நீங்கள் அமைதலுள்ளவர்களாய் இருக்கும்படி நாடவும்” (வச. 12) என்று சொல்கின்றார். “உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும் வேண்டுமெனவும் புத்தி சொல்கின்றார்’’ (வச. 12). நாம் நம் குழந்தைகள் அடையவிரும்பும் இலட்சியங்களையும், அவர்களின் ஆவல்களையும் குறித்து ஊக்கமிழக்கச் செய்ய வேண்டாம். ஆனால் எதை அடைய விரும்பினாலும் அதை அமைதலுள்ள ஆவியோடு அடைய வேண்டுமென்பதை ஊக்கப்படுத்துவோம்.

நாம் வாழும் இன்றைய உலகில் இலட்சியத்தையும் அமைதியையும் தனித்தனியே பார்க்கமுடியாது. ஆனால் நம் வாழ்க்கையோடு தொடர்புடையதையே வேதாகமம் கூறுகின்றது. எனவே நாம் அமைதலுள்ள வாழ்க்கை வாழத்தொடங்கினால் எப்படியிருக்கும் என்பதைக் கருத்தில் கொள்வோம்.

 

உன்னுடைய ஆயுதத்தின் மேல் நம்பிக்கையாயிரு

ஓர் இளம் எழுத்தாளரான நான், எழுத்தாளர் மாநாடுகளில் இருக்கும் போது அடிக்கடி என்னுடைய திறமையின் மீது சந்தேகம் கொள்வதுண்டு. நான் அந்த அறையைச் சுற்றிப் பார்க்கும் போது அங்குள்ள மனிதர்கள் யாவரும் ராட்சதர்களைப் போல எனக்குக் காட்சித்தருகின்றனர். எனக்குப் போதிய பயிற்சியும் முன் அநுபவமும் இல்லாததால் இப்படித் தோன்றுகின்றது. எனக்கிருந்ததெல்லாம் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்ட வேதாகமத்தின் நடையும், தொனியும், மொழியுமே. அதுவே என் பேச்சும், என் எழுத்தின் நடையாகவும் அமைந்தது. அதுவே என்னுடைய ஆயுதம். அதன் ஓசை எனக்குள் மகிழ்ச்சியைத் தந்தது. அது எல்லாருக்கும் அப்படியேயிருக்குமெனவும் நம்புகின்றேன்.

இளம் மேய்ப்பனான தாவீதும் கோலியாத்துடன் யுத்தம் செய்யும்படி சவுலின் போராயுதங்களை அணியும் வரை தன்னைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை (1 சாமு. 17:38-39). அந்த போராயுதங்களை அணிந்து கொண்டு அவனால் நடக்க முடியவில்லை. ஒரு மனிதனுடைய ஆயுதங்கள் மற்றொரு மனிதனுக்குச் சிறை போன்றது என்பதை தாவீது புரிந்திருப்பான். “நான் இவைகளைப்போட்டுக் கொண்டு போகக் கூடாது” (வச. 39) என்றான். அவன் அறிந்திருந்ததை நம்பினான். அந்த நேரத்தில் அவனுக்கு எது தேவையோ அதை தேவன் அவனுக்குள் தயாரித்து வைத்திருந்தார் (வச. 34-35) கவணும், கற்களும் தான் தாவீதுக்கு பழக்கமானவை. அவையே அவனுடைய ஆயுதங்கள். அவற்றை தேவன் பயன்படுத்தி இஸ்ரவேலரின் அதிபதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார். நீயும் உன்னைக் குறித்து அறியாமல் இருந்த நேரங்களுண்டா? பிறர் பெற்றுள்ள ஏதோவொன்றை நான் பெற்றிருந்தால் என்னுடைய வாழ்க்கையும் வேறு விதமாக அமைந்திருக்குமென நினைக்கின்றாயா? 

தேவன் உனக்கென்று தந்துள்ள திறமைகளையும் அனுபவத்தையும் நினைத்துப்பார். அவர் உனக்குத் தந்துள்ள ஆயுதத்தை நம்பு.