மீண்டும் செழிக்க
போதுமான சூரிய ஒளி மற்றும் தண்ணீர் இருந்தால், கலிபோர்னியாவின் காட்டுப்பூக்கள் விளையும் பகுதிகளான ஆன்டெலோப் பள்ளத்தாக்கு மற்றும் ஃபிகியூரோவா மலை போன்றவை செழிப்பாக இருக்கும். ஆனால் வறட்சி ஏற்பட்டால் என்ன ஆகும்? விஞ்ஞானிகள் சில காட்டுப்பூக்கள் மண்ணின் வழியாக முளைத்து பூக்க அனுமதிக்காமல், அவற்றின் விதைகளை பெருமளவில் நிலத்தடியில் சேமித்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். வறட்சிக்குப் பிறகு, தாவரங்கள் தாங்கள் சேமித்த விதைகளைப் பயன்படுத்தி மீண்டும் செழிக்கத் தொடங்குகின்றன.
பண்டைய இஸ்ரவேலர் கடுமையான நிலைமைகளை மீறி எகிப்து தேசத்தில் செழித்து வளர்ந்தனர். அடிமைகளாயிருந்த இவர்களை வயல்களில் வேலை செய்யவும் செங்கற்களை தயாரிக்கவும் எகிப்தியர்கள் கட்டாயப்படுத்தினர். இரக்கமற்ற இந்த எகிப்திய கண்காணிகள், பார்வோனுக்கு முழு நகரத்தையும் கட்டுவதற்கு அவர்களை கட்டாயப்படுத்தினர். எகிப்தின் மன்னர் சிசுக்கொலையை நடைமுறைப்படுத்தினான். ஆயினும், தேவன் அவர்களை பாதுகாத்ததால், “அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்” (யாத்திராகமம் 1:12). பல வேத அறிஞர்கள் இஸ்ரவேலின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மக்கள் தொகை எகிப்தில் இருந்த காலத்தில் இரண்டு மில்லியனாக (அல்லது அதற்கு மேற்பட்டதாக) இருந்தது என்று மதிப்பிடுகின்றனர்.
அப்போது தம் மக்களைப் பாதுகாத்த தேவன், இன்றும் நம்மை ஆதரிக்கிறார். எந்த சூழலிலும் அவர் நமக்கு உதவ முடியும். இன்னொரு கடினமான சூழ்நிலையை சகித்துக்கொள்வது பற்றி நாம் ஒருவேளை கவலைப்படலாம். ஆனால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டு புல்லுக்கு” தேவன் கரிசனையுடன் இருந்தால் நம் தேவைகளை அவர் கண்டிப்பாக பூர்த்தி செய்ய முடியும் என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (மத்தேயு 6:30).
பிரகாசிக்கும் சுடர்கள்
நான் கண்களை மூடிக்கொண்டு, நான் வளர்ந்த வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியும். என் தந்தையுடன் நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவருடைய தொலை நோக்கியின் உதவியோடு, வானத்தில் புள்ளிகளாய் ஒளிரும் சுடர்களை உற்று நோக்கினோம். வெப்பத்தினாலும் நெருப்பு பிழம்பினாலும் தோன்றும் இந்த ஒளியின் கூறுகள், மென்மையான கருவானத்திற்கு முற்றிலும் நேர்மாறாக ஒளிர்ந்தது.
உங்களை ஒரு பிரகாசிக்கும் சுடராக கருதுகிறீர்களா? நான் மனித சாதனைகளின் உயரத்தை எட்டுவது பற்றி பேசவில்லை, ஆனால் உடைக்கப்பட்டு, தீமைகளின் இருண்ட பின்னணிக்கு முரணாக ஒளிர்வதைக்குறித்து பேசுகிறேன். பவுல் அப்போஸ்தலர் பிலிப்பு சபை விசுவாசிகளிடம், முறுமுறுப்பதையும் தர்க்கிப்பதையும் தவிர்த்து, “ஜீவவசனத்தை பிடித்துக்கொண்டால்,” தேவன் அவர்களினூடாகவும் பிரகாசிப்பார் என்று கூறுகிறார் (பிலிப்பியர் 2:14-16).
மற்ற விசுவாசிகளுடனான நமது ஐக்கியம் மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கை ஆகியவை நம்மை உலகத்திலிருந்து வேறுபிரித்துக் காட்டும். பிரச்சனை என்னவென்றால், இந்த விஷயங்கள் இயற்கையாக வராது. தேவனுடன் நெருங்கிய உறவில் இருக்கவேண்டும் என்பதற்காக, சோதனையை வெல்ல நாம் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் இணக்கமாக இருக்க சுயநலத்திற்கு எதிராக நாம் போராடுகிறோம்.
ஆனால் இன்னும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. உயிரோடு இருக்கிற ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் செயல்படும் தேவனின் ஆவியானவர் சுய கட்டுப்பாட்டுடனும், கனிவுடனும், உண்மையுமாயிருக்க நமக்கு அதிகாரம் கொடுக்கிறார் (கலாத்தியர் 5:22-23). நம்முடைய இயல்புக்கு அப்பாற்பட்டு நாம் அழைக்கப்பட்டதுபோலவே, தேவனும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் நமக்கு உதவுகிறார் (பிலிப்பியர் 2:13). ஒவ்வொரு விசுவாசியும் ஆவியின் சக்தியால் ஒரு “பிரகாசிக்கும் நட்சத்திரமாக” மாறினால், தேவனின் ஒளி நம்மைச் சுற்றியுள்ள இருளை எவ்வாறு விரட்டும் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள்!
நேர்த்தியற்ற திட்டங்கள்
ஒரு புதிய சமூக மையத்தின் கீழ் தளத்தில் ஒரு நூலகத்தை நான் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, மேலிருந்து ஒரு சப்தம் திடீரென அந்த அறையை அதிரச் செய்தது. சில நிமிடங்கள் கழித்து அது மீண்டும் நடந்தது,. இறுதியில் எரிச்சலடைந்த ஒரு நூலகர், நூலகத்திற்கு நேராக மேல் பகுதியில் ஒரு பளு தூக்கும் பகுதி அமைக்கப்பட்டிருப்பதாக விளக்கினார், ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் எடையைக் கீழே வைக்கும் போதெல்லாம் சத்தம் ஏற்பட்டது. கட்டிடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் இந்த அதிநவீன வசதியின் பல அம்சங்களை கவனமாக திட்டமிட்டிருந்தனர், எனினும் யாரோ ஒருவர் நூலகத்தை இந்த செயல்பாடுகள் உள்ள இடத்திலிருந்து வேறு இடதிற்கு மாற்ற மறந்துவிட்டார்.
வாழ்க்கையிலும், நமது திட்டங்கள் பெரும்பாலும் குறைபாடுள்ளதாக இருக்கிறது. முக்கியமான கருத்தாய்வுகளை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். நம் திட்டங்கள் விபத்துகளும் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளிலும் எப்போதும் கைகொடுப்பதில்லை. நிதி குறைபாடுகள், நேர நெருக்கடிகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஆகியவற்றைத் தவிர்க்க திட்டமிடுவது நமக்கு உதவுகிறது என்றாலும், மிக சிறப்பான உத்திகள் கூட நம் வாழ்க்கையிலிருந்து எல்லா பிரச்சனைளையும் அகற்ற முடியாது. நாம் ஏதேனுக்குப் பிந்தைய உலகில் வாழ்கிறோம்.
தேவனின் உதவியுடன், எதிர்காலத்தை விவேகத்துடன் எதிர் கொள்வதற்கும் (நீதிமொழிகள் 6: 6–8) சிரமங்களை கையாள்வதற்கும் இடையே உள்ள சமநிலையையும் நாம் காணலாம். பெரும்பாலும் தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கும் கஷ்டங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. நம்மிடம் பொறுமையை வளர்க்கவோ, நம்முடைய விசுவாசம் பெருகவோ அல்லது நம்மை அவரண்டையில் நெருங்கி சேரவும் அதை அனுமதிக்கலாம். வேதம் நமக்கு நினைவூட்டுகிறது, “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.” (நீதிமொழிகள் 19:21). நம்முடைய இலக்குகளையும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் நாம் இயேசுவிடம் அர்ப்பணிக்கும்போது, நம்மிடத்திலும், நம் மூலமாகவும் என்ன செய்து முடிக்க விரும்புவதை அவர் நமக்குக் காண்பிப்பார்.
ஏதோ மிகப்பெரியது
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள புத்தகக் கடையான அக்டோபர் புத்தகங்கள் கடைக்கு அதன் சரக்குகளைத் தெரு கோடியில் உள்ள முகவரிக்கு நகர்த்த இருநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவினார்கள். உதவியாளர்கள் நடைபாதையில் வரிசையாக நின்று புத்தகங்களை ஒரு “மனித சுமக்கும்தொடர் பட்டையின்” வழியே கைமாற்றி அனுப்பினர். தன்னார்வலர்கள் செயலைக் கண்ட ஊழியர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார், “மக்கள் [உதவுவதைப்] பார்ப்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் பெரிய விஷயத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர்.”
நாம் நம்மை விட மிகப் பெரியகாரியத்தில் ஒரு பகுதியாக இருக்க முடியும். தேவன் தம்முடைய அன்பின் செய்தியை இந்த உலகிற்கு கொண்டு செல்ல நம்மை பயன்படுத்துகிறார். யாரோ ஒருவர் நம்முடன் அந்த செய்தியைப் பகிர்ந்ததால் நாம் வேறொரு நபரிடம் திரும்பி அதை பகிரலாம். பவுல் இதை இவ்வாறு ஒப்பிடுகிறார்,- தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டுவது - ஒரு தோட்டத்தை வளர்ப்பது. நம்மில் சிலர் விதைகளை நடவு செய்கிறோம், நம்மில் சிலர் விதைகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். பவுல் சொன்னது போல், “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 3: 9).
ஒவ்வொரு வேலையும் முக்கியம். ஆனால் அனைத்தும் தேவஆவியின் வல்லமையால் செய்யப்படுகின்றன. தேவன் அவர்களை நேசிக்கிறார் மற்றும் அவர்கள் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி தம்முடைய குமாரனை அவர்களுடைய இடத்தில் மரிக்கும்படி அனுப்பினார் என்பதை அவர்கள் கேட்கும்போது தம்முடைய ஆவியால், ஆவிக்குரிய ரீதியில் அவர்கள் செழிக்க தேவன் உதவுகிறார் (யோவான் 3:16).
தேவன் உங்களையும் என்னையும் போன்ற 'தன்னார்வலர்கள்' மூலமாக பூமியில் தனது அனேகமான பணிகளை செய்கிறார். நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பங்களிப்பையும் விட மிகப்பெரிய ஒரு சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் இருந்தாலும், அவருடைய அன்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அதை வளர்க்க உதவலாம்.
ஏதோ புதியது
புதிய நீர் இல்லாத பகுதிகளில் விவசாயம் செய்வது கடினம். இந்த சிக்கலை தீர்க்க உதவுவதற்காக, கடல் நீர் கிரீன்ஹவுஸ் நிறுவனம் சோமாலிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் இதே போன்ற தட்பவெப்பநிலைகளைக் கொண்ட பிற நாடுகளில் “குளிரூட்டும் வீடுகளை” உருவாக்கியுள்ளது. நெளி அட்டைகளால் செய்யப்பட்ட சுவர்கள் மீது உப்புநீரைத் தூற்றுவதற்கு குளிரூட்டும் வீடுகள் சூரிய விசையியக்கக் குழாய்களைப் (solar pumps) பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பேனலுக்கும் கீழே நீர் செல்லும்போது, அதன் உப்பை பின்னால் விட்டு விடுகிறது. மீதமுள்ள நன்னீர் பெரும்பகுதி கட்டமைப்பிற்குள் ஆவியாகிறது, இது பழம் மற்றும் காய்கறி பயிர்கள் செழிக்கக்கூடிய ஈரப்பதமான இடமாக மாற்றும்.
ஏசாயா தீர்க்கதரிசி மூலம், பண்டைய இஸ்ரவேலுக்காக “அவாந்தரவெளியிலே ஆறுகளை” வழங்கியதால் தேவன் ஒரு “புதிய காரியத்தை” செய்வதாக வாக்குறுதி அளித்தார் (ஏசா. 43:19). இந்த புதிய காரியம் எகிப்திய இராணுவத்திடமிருந்து தனது மக்களை மீட்பதற்காக அவர் செய்த பழைய காரியத்திற்கு முரணானது. செங்கடல் சம்பவம் நினைவிருக்கிறதா? தம்முடைய மக்கள் கடந்த காலத்தை நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்பினார், ஆனால் அது அவர்களின் வாழ்க்கையில் அவருடைய தற்போதைய ஈடுபாட்டை மறைக்க விடக்கூடாது (வச. 18). அவர், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியை உண்டாக்குவேன்.” என்று சொன்னார் (வச. 19).
கடந்த காலத்தைப் பார்ப்பது தேவனுடைய சித்தத்தில் நம்முடைய நம்பிக்கையை உயர்த்தும் அதே வேளையில், கடந்த காலங்களில் வாழ்வது இன்று தேவனுடைய ஆவியின் அனைத்து புதிய வேலைகளுக்கும் நம்மை குருடாக்குகிறது. அவருடைய மக்களுக்கு உதவுதல், மறுபடியும் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் அவர் தற்போது எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் காட்டும்படி தேவனிடம் நாம் கேட்கலாம். இந்த விழிப்புணர்வு, அருகிலுள்ள மற்றும் தொலைதூர மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவருடன் கூட்டாளராக இருக்கும்படி நம்மைத் தூண்டட்டும்.
காகித கிரீடங்கள்
எனது பிறந்த நாள் விழாவில் எனக்கு தரப்பட்ட பரிசுகளை எனது நண்பர்களுடன் நான் திறந்து பார்க்க தொடங்கினேன். அனேக இனிப்புகளும் சிறிய விளையாட்டு பொருள்களும் அழகான கலை பொருள்களும் இருந்தன. அனைத்திலும் வித்தியாசமான ஒன்றாக காகிதத்தில் செய்யப்பட்ட கிரீடங்கள் இருந்தன. நாங்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவைகளைப் பெற்றுக் கொண்டோம். சந்தோஷத்துடன் எங்கள் நேரத்தை ராஜாவும் ராணியும் ஆக எங்கள் வீட்டு கழித்தோம் .
இதன் மூலமாக நாம் அதிகம் நினைத்துப் பார்க்காத ஒரு வாக்குத்தத்தம் ஒன்று என் நினைவிற்கு வருகிறது. பவுல் சொல்லுகிறது போல் நம் மறுவாழ்வில் நாம் இயேசுவோடு அரசாலுவோம் 1 கொரிந்தியர் 6ல் ‘உலகம் உங்களால் நியாந்தீர்க்கப்படும்’ என்று பவுல் நமக்கு இருக்கிற தான சலுகையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார். அதை விசுவாசிகள் ஆகிய நாம் மனதில் வைத்துக்கொண்டு இப்பூமியில் அனைத்தையும் சமாதானமாய் எடுத்து செல்ல வேண்டுமென்று ஊக்குவிக்கிறார்
பரிசுத்த ஆவிக்கு நாம் இடம் கொடுத்தோம் ஆனால் சமாதானத்தை உண்டு பண்ணுகிற சுயகட்டுப்பாடு பொறுமை நிதானம் ஆகியவற்றை நமக்குள் பிறப்பிக்க பண்ணுவார்.
பரிசுத்த ஆவியின் சித்தத்தை நமக்குள் நிறைவேற்றி இயேசுகிறிஸ்து பூமிக்கு திரும்பின உடன் நான் நமக்கென்று ஒப்புவிக்கப்பட்ட ராஜாக்களும் ஆசாரியர்களும் ஆய் தேவ ராஜ்யத்தில் அரசாலும் ( வெளி 5.10) தங்க கிரீடத்தில் மினுமினுக்கும் வைரலான இந்த சத்திய வசனத்தின் மேல் நம்பிக்கை வைப்போம்.
காலை மூடுபனி
ஒரு நாள் காலையில் என் வீட்டின் அருகிலுள்ள குளத்தைப் பார்வையிட்டேன். நான் ஒரு தலைகீழான படகிண்மேல் உட்கார்ந்து, ஒரு மென்மையான மேற்கு காற்று நீரின் மேற்பரப்பு முழுவதிலும் காணப்பட்ட மூடுபனியை துரத்துவதைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தேன். மூடுபனி வட்டமிட்டுச் சுழன்றது. சிறிய சூறாவளிகள் எழுந்து அடங்கின. அதற்குப் பின்னர் சூரிய ஓளி மேகங்களின் வழியாக சென்றதினால் மூடுபனி மறைந்தது.
இந்தக் காட்சி எனக்கு ஆறுதல் அளித்தது, ஏனென்றால் நான் சற்று முன் வாசித்த 'உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களை கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்" (ஏசா. 44:22) என்ற வசனத்துடன் இணைத்துப் பார்த்தேன். தொடர்ச்சியான பாவ எண்ணங்களிலிருந்து என்னை திசைதிருப்ப வேண்டி, நான் அந்த இடத்திற்கு சென்றேன். அந்த பாவங்களை நான் அறிக்கை செய்தாலும், நான் மீண்டும் அந்தப் பாவத்தை செய்யும்போது தேவன் என்னை மன்னிப்பாரா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
அன்று காலையில், ஆம் என்ற பதில் எனக்குத் தெரிந்தது. இஸ்ரவேலர் விக்கிரக ஆராதனை பிரச்சனையுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியான ஏசாயாவின் மூலம் அவர்களுக்கு கிருபை பாராட்டினார். பொய்யான தெய்வங்களை பின்பற்றி போவதை நிறுத்தும்படி கூறினபோதும், 'நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன்... நீ என்னால் மறக்கப்படுவதில்லை" (வச. 21) என்று சொல்லி தேவன் அவர்களை மீண்டும் தம்மிடம் அழைத்தார்.
நான் அப்படி முழுமையாக மன்னிப்பை புரிந்துக்கொள்ளவில்லை, ஆனால் தேவனின் கிருபை மட்டுமே நம் பாவத்தை முழுவதுமாக நீக்கி, அதிலிருந்து நம்மை குணமாக்கும் என்பதை புரிந்துக்கொண்டேன். அவருடைய கிருபை முடிவில்லாதது, அவரைப்போல தெய்வீகமானதும், நமக்கு தேவையான போதெல்லாம் அது கிடைக்கிறது. இதற்காக அவருக்கு நன்றியுள்ள வனாயிருக்கிறேன்.
யாவருக்கும், அனைவருக்கும்
எள் சேல்வடார் தேசத்தில் இயேசுவை கணப்படுத்தும்படி அவருடைய சிலையை அந்த தேசத்தின் தலை நகரத்தின் நடுவே நிறுவப்பட்டுள்ளது. அது நகரத்தின் மத்தியில் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் இடத்தில இருந்ததாலும் அங்குள்ள அனைவரும் பார்க்கும்படியாக உயரமாக இருக்கிறது. "உலக இரட்சகர்" என்று எழுதப்பட்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்க்கும்படி அவருடைய தெய்வத்துவம் வெளிப்பட்டதுகிறது.
அவரே உலக இரட்சகர் என்று 1 யோவான் 4:14 கூறியிருப்பதை அந்த வார்த்தைகள் உறுதிப்படுத்துகிறது. அவர் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கலாச்சாரமோ, வயதோ, படிப்போ, செல்வமோ தேவையில்லை. தம்மை பக்தியுடன் ஆர்வமாய் தேடுபவர்களை ஏற்றுக்கொள்கிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் அக்காலத்திலே பல தேசங்களிலே சுற்றி திரிந்து இயேசுவின் வாழ்க்கையையும், அவர் மரணத்தையும், உயிர்தெழுதலையும் பிரசங்கித்து வந்தார். இந்த நற்செய்தியை அவர் எல்லாருக்கும் பிரசங்கித்தார் மதத் தலைவர்களுக்கும், காவலாளிகளுக்கும், யூதர்களுக்கும், புறஜாதியருக்கும், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று எல்லாவித மக்களுக்கும் அறிவித்தார். ஒரு மனிதன் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று விசுவாசத்தால் அவரோடு புது ஐக்கியத்துக்குள் வரலாம் என்று பவுல் கூறுகிறார் (ரோம. 10:9). அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார். (வச.11, 13).
இயேசு தூரமாக வைக்கப்பட்டு வழிபடபடுபவர் அல்ல. விசுவாசத்தினால் இணைந்து அவரோடு உறவு கொள்ளும் படி அழைக்கிறார். அவர் நமக்கு தரும் இரட்சிப்பை உணர்ந்துகொண்டு பரிசுத்த உறவுக்குள்ளாக இன்றைக்கே செல்வோம்.
நெருப்பின் மத்தியில்
ஸ்பெயினில் ஒருமுறை ஏற்பட்ட காட்டுத்தீயானது ஐம்பதாயிரம் ஏக்கர் சுற்றுப்புறத்திலுள்ள மரங்களை பட்சித்து போட்டது. எனினும் அவைகளின் நடுவே நின்றுகொண்டிருந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட சைப்ரஸ் மரமோ தனது பிரகாசிப்பிக்கும் பச்சை நிறத்துடன் அழியாமல் நின்றுகொண்டிருந்தது. தண்ணீரை தனக்குள் தக்கவைத்துக்கொள்ளும் திறன் அந்த மரத்திற்கு இருந்ததால் அப்பேற்பட்ட தீயையும் தாங்கமுடிந்தது.
இதைபோல் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனை அரசாண்ட காலத்தில், ராஜாவின் கோபத்தினால் மூன்று நண்பர்கள் நெருப்புக்குள் போடப்பட்டும் உயிர் பிழைத்தார்கள். ராஜா உருவாக்கின சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்க மறுத்து அவரை பார்த்து "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்"(வச . 17) என்று கூறினார்கள். இதைக் கேட்ட ராஜா மிகவும் கோபத்துடன் அந்த அக்கினிச்சூளையின் சூட்டை ஏழு மடங்கு அதிகப்படுத்தக் கட்டளையிட்டார்.
ராஜாவினுடைய கட்டளையின்படி அந்த மூன்று நண்பர்களையும் அக்கினியில் போட சென்ற காவலாளிகள் அந்தநெருப்பின் அனலில் கொல்லப்பட்டார்கள். அவ்வளவாக நெருப்பின் அனல் அதிகரிக்கப்பட்டது. ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவோ நெருப்புக்குள்ளாக கட்டவிழ்க்கப்பட்டு எந்த பாதிப்புமில்லாமல் நடந்துகொண்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்த்தார்கள். அவர்களோடு நாலாவதாக ஒருவர் இருப்பதையும் கண்டார்கள். அவர் தேவபுத்திரனின் சாயலை உடையவராய் இருப்பதுபோல் கண்டார்கள் (வச. 25). இன்று பல வேதவல்லுநர்கள் அது இயேசுவின் முன் அவதாரம் என்று நம்புகிறார்கள்.
இதைபோல் அச்சுறுத்தல்களும் சோதனைகளும் நமக்கு வரும்போது இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். நம்மை அழுத்தமூட்டும் சூழ்நிலைகள் நமக்கு நேரிட்டால் நாம் பயப்படவேண்டாம். தேவன் நம்மை எப்போது, எப்படி காப்பர் என்று நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் நம் கூடவே எப்போதும் இருக்கிறார் என்பது நிச்சயம். நாம் கடந்துவரும் எல்லா நெருப்புகளிலும் அவரில் விசுவாசமாய் இருக்க நமக்கு அவர் பெலன் தருவார்.