டிக்கெட் மட்டும்
ஒரு பெண், அவளது சிறிய மகளை சிறுவருக்கான பாதுகாப்பு இருக்கை இல்லாமல், காரில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, அதைப் பார்த்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி, போக்குவரத்து விதிகளை அந்தப் பெண் மீறினதிற்காக, குற்றப் பதிவு சீட்டை தந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அந்த காவல் அதிகாரி, அந்தத் தாயையும், மகளையும் அருகிலிருந்த ஒரு கடையில் சந்திக்கும்படி கூறினார். அங்கு அச்சிறு பெண்ணிற்கான ஒரு குழந்தை இருக்கையை அவரே விலைகொடுத்து வாங்கி அப்பெண்ணிடம் கொடுத்தார். அந்தப் பெண் அந்த இருக்கையை வாங்க இயலாத…
வெளியிலிருந்து உதவி
எனது கணவர் தொழில்முறைப்பயணமாக ஒரு ஊருக்குச் சென்ற பொழுது, தங்கும் விடுதி ஒன்றில் ஓர் அறையில் தங்கினார். அப்பொழுது ஒரு அபயக் குரலைக் கேட்டார். அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அறிந்து கொள்ள, அறைக்கு வெளியே வந்தார். பக்கத்து அறையில் யாரோ கூக்குரலிட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டார். அங்கு பணிசெய்யும் பணியாளர் ஒருவரின் உதவியுடன், உள்ளே சென்று பார்த்தபொழுது அந்த அறையிலிருந்த மனிதன் குளியலறையில் சிக்கிக் கொண்டு வெளியே வரஇயலாமல் இருந்ததைக் கண்டுபிடித்தார். குளியலறையிலிருந்த பூட்டுசரியாக வேலை செய்யாததினால், குளியலறைக்குள் சிக்கிக் கொண்ட மனிதன்,…
அவருடைய கரங்களுக்குள் பாதுகாவலுடன் இருத்தல்
எனது மகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்தபின், அவள் மீண்டும் சுய நினைவு அடைவதற்காக வைக்கப்பட்டிருந்த அறையில் அவளோடு கூட அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் கண்களை மெதுவாகத் திறந்த பொழுது, அவளது உடல் நலம் இல்லாததை உணர்ந்து அழ ஆரம்பித்தாள். அவளுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக, அவளது கரத்தை மெதுவாக தட்டிக்கொடுத்தேன். ஆனால் அவள் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள். பின்பு ஒரு செவிலியரின் உதவியுடன் அவளை படுக்கையிலிருந்து மெதுவாக என் மடிக்கு மாற்றினேன். நாளடைவில் அவள் முழுமையாக சுகம் பெற்றுவிடுவாள் என்று அவளுக்கு நினைப்பூட்டினேன்.…
வேலியைத் தொடாதே!
நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது. ஒரு பண்ணைக்கு அருகில் வசித்து வந்த எனது பாட்டியின் தாயாரைப் பார்க்க எனது பெற்றோருடன் சென்றேன். அவர்களது முற்றத்தின் திறந்த வெளிக்குள் மாடுகள் வந்து புல்வெளியை மேய்ந்து விடாத படி ஒரு மின்வேலி போடப் பட்டிருந்தது. முற்றத்திற்குச் சென்று நான் விளையாடலாமா என்று எனது பெற்றோரிடம் கேட்ட பொழுது, அவர்கள் எனக்கு அனுமதி கொடுத்தார்கள், ஆனால் அந்த மின் வேலியைத் தொட்டால் மின் அதிர்ச்சி ஏற்படும் என்று விவரித்துக் கூறி அதைத் தொடாமல் விளையாடக் கூறினார்கள்.
துரதிஷ்டவசமாக…
உட்புறக் காட்சி
ஓய்வு பெற்ற இயற்பியல் வல்லுநராகிய ஏரி வான்ட் ரயட் வித்தியாசமான முறையில் கலைப் பொருட்களை செய்து வருகிறார். அவர் தாவரங்களையும், இறந்த போன விலங்குகளையும் வரிசையாக அடுக்கி அவற்றின் எக்ஸ்ரே எடுக்கிறார். பின்பு மேம்படுத்தப்பட்ட x-ரேக்களை கணிணியின் நினைவகத்தில் இடுவதற்காக அவற்றை மின் செய்தியாக மாற்றுகிறார். பின்பு அவரது படங்களின் சில பகுதிகளுக்கு வண்ணமேற்றுகிறார். அவரது கலைத்திறன், பூக்கள், மீன் பறவைகள், ஊர்வன, குரங்குகள் போன்றவற்றின் சிக்கலான உள் அமைப்பை தெளிவாக விளக்குகின்றன.
பொருட்களை வெளியே பார்க்கும் காட்சியை விட உள் அமைப்பைப் பார்க்கும்…
கவனக் குறைவான வார்த்தைகள்
நான் என் வாகனத்தை ஏறக்குறைய அரைமணி நேரம் ஓட்டிச் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென, பின் இருக்கையிலிருந்த எனது மகள் வீரிட்டுக் கத்தினாள். “என்ன நடந்தது” என்று நான் கேட்ட பொழுது அவளுடைய சகோதரன் அவளது கையைப் பிடித்து இழுத்தான் என்றாள். அவள் அவனைக் கிள்ளினதினால் அவள் கையை இறுகப்பிடித்து இழுத்ததாக அவன் கூறினான். அவன் அன்பற்ற கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசினதினால் அவன் கையைக் கிள்ளினேன் என்றாள்.
துரதிஷ்டவசமாக, சிறு பிள்ளைகள் மத்தியில் காணப்படும் இப்படிப்பட்ட தன்மை பெரியவர்களின் உறவுகள் மத்தியிலும் ஏற்படுகிறது. ஒருவர்…
தரிசனப்பள்ளத்தாக்கு
பாவியாகிய மனிதனுக்கும், பரிசுத்தராகிய தேவனுக்கும் இடையே உள்ள தூரத்தை கடும் தூய்மைவாதிக் குழு (puritan) வைச் சார்ந்த மக்களின் “தரிசனப்பள்ளத்தாக்கு” என்ற ஜெபம் விளக்குகிறது. அந்த ஜெபத்தில் “என்னை தரிசனப்பள்ளதாக்கிற்கு கொண்டுவந்தீர்... பாவமாகிய மலைகளால் சூழப்பட்ட நான் உமது மகிமையைக் கண்டேன்” என்று மனிதன் தேவனிடம் கூறுகிறான். அவனது பாவத்தன்மையை அவன் அறிந்திருந்தபொழுதும் இன்னமும் நம்பிக்கையுள்ளது. “மிகவும் ஆழமான கிணறுகளிலிருந்து நட்சத்திரங்களைக் காணலாம். ஆழம் அதிகரிக்க, உமது நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிவிடும்” என்று அந்த மனிதன் தொடர்ந்து கூறுகிறான். “எனது இருள் சூழ்ந்த நிலையில்…
ஈக்களின் நினைவூட்டல்
நான் தற்பொழுது வாடகைக்கு எடுத்துள்ள சிறிய அலுவலகத்தில் எனது வேலையை ஆரம்பித்தபொழுது, அங்கு வாழ்த்து வந்தவை ஒருசில மோப்பி இன ஈக்கள்தான். அநேக ஈக்கள் இறந்து அவற்றின் உடல்கள் தரையிலும், ஜன்னல்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றில் ஒன்றைமட்டும் என் பார்வைபடுமாறு விட்டுவிட்டு மற்ற ஈக்களை அப்புறப்படுத்திவிட்டேன்.
ஓவ்வொரு நாளையும் நான் நலமாக வாழ அந்த இறந்து போன ஈயின் உடல் எனக்கு நினைவூட்டியது. ஜீவனைப் பற்றி நினைவூட்ட மரணம் சிறந்த காரியமாகும். ஜீவன் ஒரு விலைமதிப்பற்ற பரிசு. “உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு.” (வச 4)…