ஆம், ஆம்… என்னும் தொடர் சங்கிலி
ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று, என்னுடைய பாட்டியம்மா எனக்கு ஒரு முத்து மாலையைக் கொடுத்தார்கள். அந்த அழகிய முத்துக்கள் என் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்தன. ஒரு நாள், அந்த மாலையின் கம்பி அறுந்து, அதின் முத்துக்களெல்லாம் மரத்தினாலான தரையில் சிந்தி, குதித்து, நாலாபக்கமும் சிதறின. நான் அந்த தரையில் தவழ்ந்து, ஒவ்வொரு சிறிய முத்தையும் பொறுக்கினேன். ஒவ்வொன்றும் தனித் தனியே சிறியதாக இருந்தாலும், அவையனைத்தையும் சேர்த்து கோர்த்திருந்த போது எத்தனை அழகாய் இருந்தது!
சில வேளைகளில் தேவன் கேட்கும் காரியங்களுக்கு, நான் ஆம் என்று கூறுவதும், அந்த தனி முத்தைப் போன்று முக்கியமற்றதாகக் காணப்படலாம். இயேசு கிறிஸ்துவின் தாயாராகிய மரியாளின் அற்புதமான கீழ்ப்படிதலைப் பார்க்கும் போது, நான் என்னை ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். மேசியாவை தன்னுடைய கருவில் சுமக்க வேண்டுமென தேவன் அழைத்த போது மரியாள், தன்னை உடனே அர்ப்பணிக்கின்றாள். “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றாள். (லூக். 1:38). அந்நேரத்தில் அவளிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் அவள் புரிந்து கொண்டிருந்தாளா? மேலும் தன்னுடைய மகனை, பின்னர் சிலுவையில் அறைவதற்கும், ஒப்புக்கொடுக்கப்போவதை அறிந்திருந்தாளா ?
லூக்கா 2:19 ல் காண்கின்றோம், தேவதூதர்களும், மேய்ப்பர்களும் இயேசுவைப் பணிந்து கொண்ட பின்பு,” மரியாளோ, அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள்.” அவள் நடந்த காரியங்களையெல்லாம் தன்னுடைய இருதயத்தில் “சேகரித்து” வைத்தாள், அத்தனையும் “ஒன்றாக இணைத்து”ப் பார்த்தாள். இதே வார்த்தைகளை லூக்கா 2:51 ல் மீண்டும் பார்க்கின்றோம். அவள் தன் வாழ்க்கையில் அநேகம் முறை, ஆம், ஆம்… என்றே பதிலளிக்கின்றாள்.
நம்முடைய தந்தை நமக்கு கொடுக்கின்ற ஒவ்வொரு அழைப்பிற்கும், நாமும் மரியாளைப்போன்று, கீழ்ப்படிதலோடு, ஆம் என்று சொல்வதை நம்முடைய நோக்கமாகக் கொள்வோம். நம் வாழ்க்கை முழுவதும் நாம் கூறுகின்ற ஆம் அத்தனையும் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்படும்.
அழகாக பாரங்கொண்டேன்
நடு இரவில் விழித்துக் கொண்டேன். நான் அரைமணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டேன். எனக்கு தூக்கம் வருவதாகவும் இல்லை. என்னுடைய சிநேகிதியின் கணவன் மருத்துவ மனையில் படுத்திருக்கிறார், அவரை பயப்படுத்தும் செய்தி வந்தது,” கேன்சர் மீண்டும் வந்துவிட்டது, அது, மூளையையும், முதுகுத் தண்டையும் பாதித்துள்ளது” என்பதுதான் அந்த செய்தி. என்னுடைய சிநேகிதியின் நிலை, என்னை முற்றிலும் பாதித்தது. எத்தனை பெரிய சுமை! நான் விழித்திருந்து ஜெபிக்க ஆரம்பித்தேன், என் ஆத்துமாவில் சற்று ஆறுதல் அடைந்தேன். நான் அவர்களுக்காக அழகாக பாரம் கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். இது எப்படி நடந்தது?
மத்தேயு 11:28-30 வசனங்களில், இயேசு சோர்வடைந்த நம்முடைய ஆத்துமாவிற்கு இளைப்பாறுதலை வாக்களிக்கின்றார். இது சற்று வித்தியாசமானது. நாம் குனிந்து, அவருடைய நுகத்தை ஏற்றுக் கொண்டு, அவருடைய பாரத்தை நாம் அரவணைக்கும் போது, இந்த இளைப்பாறுதல் கிடைக்கிறது (வச. 30). இதைத் தெளிவு படுத்துகின்றது. “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது “என்றார் இயேசு. நம் முதுகிலுள்ள பாரச் சுமையை இயேசு தூக்கிக் கொள்ள நாம் அனுமதித்து விட்டு, அவருடைய நுகத்தில் நம்முடைய தோளைக் கொடுக்கும் போது, அவரோடு இணைந்து, அவர் தருகின்ற சுமையைச் சுமக்கிறவர்களாகின்றோம், அவருடைய நுகத்திற்கு நாம் குனியும் போது, நாம் அவருடைய பாடுகளையும் பகிர்ந்து கொள்கின்றோம், அதன் மூலம் அவர் தரும் ஆறுதலிலும் பங்கடைகிறோம் (2 கொரி. 1:5).
என்னுடைய சிநேகிதியின் மீது கொண்டுள்ள கரிசனை, பெரிய பாரமாயிருக்கிறது. ஆனாலும், அதனை ஜெபத்தின் மூலம் தேவனிடம் கொண்டு வரும் படி, தேவன் தயை புரிந்ததால், நான் நன்றியுள்ளவளாயிருக்கிறேன். கொஞ்ச கொஞ்சமாக என் கவலை தணிந்து, நான் தூங்கி விட்டேன். காலை எழுந்த போது, அந்த அழகிய பாரம், இலகுவான நுகத்தின் அடியில் இலேசான சுமையாக மாறியது, இயேசுவோடு நடக்க ஆரம்பித்தேன்.
நிலைத்திருக்கும் பாரம்பரியம்.
தாமஸ் எடிசன் முதல் மின் விளக்கை எரியச் செய்தார். ஜோனாஸ் சாக் போலியோவிற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடித்தார். நாம் தேவனை ஆராதிக்கும்படி, பாடும் அநேக பாமாலைகளை ஏமி கார்மைக்கேல் எழுதினார். நீ என்ன செய்தாய்? இவ்வுலகிற்கு நீ ஏன் அனுப்பப் பட்டாய்? உன் வாழ்வை எப்படி பயனுள்ளதாக்கப் போகின்றாய்?
ஆதியாகமம் 4ம் அதிகாரம் சொல்லுகிறது: ஏவாள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று முதல் முறையாக காயீனைக் கையிலேந்தி, “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” (வச. 1) என்கின்றாள். முதல் குமாரனைப் பெற்றெடுத்த வினோதமான அநுபவத்தை வெளிப்படுத்தும் வாக்கியம், தேவனாகிய கர்த்தரின் உதவியை முற்றிலும் சார்ந்திருத்தலை விளக்குகின்றது. “கர்த்தரால்” என விளக்குகின்றாள். தொடர்ந்து ஏவாளின் வித்திலிருந்து தோன்றிய மற்றொரு குமாரன் மூலமாக தேவன் தம் ஜனத்திற்கு ஒரு விடுதலையை கொடுக்கின்றார் (யோவா. 3:16). என்ன அருமையாக இப் பாரம்பரியம் தொடர்கின்றது.
பெற்றோராயிருத்தலென்பது இவ்வுலகிற்கு ஜனங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் ஒரு பங்களிப்பு. உன்னுடைய பங்கு ஒருவேளை நீ அமர்ந்து எழுதுன்ற அல்லது பின்னல் வேலை செய்கின்ற அல்லது சித்திரம் வரைகின்ற அறையிலிருந்து வெளியாகலாம். தேவனுடன் தொடர்பற்றிருக்கின்ற ஒருவருக்கு உன் வாழ்வு ஒரு முன் மாதிரியாக அமையலாம் அல்லது உன்னுடைய முதலீடு ஒரு வேளை உன் இறப்பிற்குப்பின் நீ நினையாத வகையில் வெளிவரலாம். அது நீ விட்டுச் சென்ற வேலையாகவோ, உன்னுடைய தொழிலில் நீ செய்த காரியத்தின் புகழ்ச்சியாகவோ இருக்கலாம். எதுவாயினும் உன்னுடைய வார்த்தைகள் ஏவாள் தேவனைச் சார்ந்திருந்ததைப் போன்று அமையுமா? கர்த்தரால், அவருடைய நாம மகிமைக்காக நீ என்ன செய்யப் போகின்றாய்?
ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன
சம்பவங்களை அருமையாக விவரிக்கும் சிறுவர் வேதாகமத்தைத் திறந்து, என் பேரனுக்கு வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தேன். ஒரு சம்பவத்தில் தேவனுடைய அன்பையும் ஏற்பாட்டையும் பற்றி அருமையாக விவரிக்கப்பட்டிருந்தது. அதை வாசித்தபோது பூரித்தோம். பிறகு வாசிப்பதை சற்றே நிறுத்திவிட்டு, புத்தகத்தைத் திருப்பி மீண்டும் ஒருமுறை தலைப்பை வாசித்தேன்: ‘இயேசுவின் சம்பவம் சொல்லும் வேதாகமம்: ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன’ என்று எழுதப்பட்டிருந்தது.
ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன. ஒவ்வொரு சம்பவமும்.
உண்மையைச் சொன்னால், சிலசமயங்களில் வேதாகமத்தை வாசிக்கும்போது, குறிப்பாக பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது சரியாகப் புரியாது. தேவனை அறியாதவர்கள் அவருடைய மக்களைத் தோற்கடிப்பதுபோலத் தெரியும். தேவன் பரிசுத்தர், அவருடைய நோக்கங்களெல்லாம் நன்மையானவை என்றால், அவ்வளவு கொடுமையை தேவன் எவ்வாறு அனுமதித்தார்?
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, எம்மாவூருக்குச் செல்லும் வழியில் இரண்டு சீடர்களைச் சந்தித்தார். அவர்கள் இயேசுவை அடையாளங்காணவில்லை. தாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த மேசியா மரித்துப் போனாரென ஏமாற்றத்தில் இருந்தார்கள். லூக்கா 24:19-24. “அவரே இஸ்ரவேலை மீட்டுரட்சிப்பவர்” என்று நம்பியிருந்தார்கள். வச 21. இயேசு அவர்களுக்கு மறுநிச்சயத்தைக் கொடுத்தது பற்றி லூக்கா பதிவு செய்கிறார்: “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை (இயேசு) அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (வச. 27).
ஒவ்வொரு சம்பவமும் அவருடைய பெயரைச் சொல்லுகின்றன, புரியக்கடினமான சம்பவங்களும் கூட. ஏனென்றால், நம் உலகம் பெரும் சிதைவுக்கு உள்ளாகியிருப்பதையும் அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற ஒருவர் தேவை என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன. வழிவிலகிப்போன பிரியமான தம் பிள்ளைகளை மனதில்கொண்டு தேவன் ஏற்படுத்தியுள்ள மீட்பை, அதாவது அவர்களை மீண்டும் தம்மிடம் கொண்டுவருகிற வழியைத்தான் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு தலையீடும் சுட்டிக்காட்டுகின்றன.
குச்சி பொம்மை ஓவியத்தின்மூலம் பாடம்
அவள் என்னுடைய தோழி, என்னுடைய ஆலோசகரும்கூட, அவள் ஓர் ஓவியம் வரைந்தாள். குச்சி பொம்மை போன்ற ஓவியம். அந்த ஓவியத்திற்கு “தனிப்பட்ட வாழ்க்கை” என்று பெயரிட்டாள். பிறகு அந்த ஓவியத்தைச் சுற்றிலும் அரை அங்குல அளவு பெரிதாக வெளிக்கோட்டை வரைந்தாள். அந்த ஓவியத்திற்கு “வெளிப்படையான வாழ்க்கை” என்று பெயரிட்டாள். இந்த இரண்டு ஓவியங்களுக்கும் இடையேயான வித்தியாசம்தான், நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வெளிப்படையான வாழ்க்கைக்கும் இடையேயான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.
அந்த ஓவியத்தைப் பார்த்தவாறே, “வெளிப்படையான வாழ்க்கையைப் போலவே என்னுடய தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறதா? என்னிடம் நிலைப்பாடு காணப்படுகிறதா?” என்று சிந்தித்தேன்.
கொரிந்துவிலிருந்த சபைக்கு பவுல் நிருபங்களை எழுதினார். இயேசுவைப் போல் வாழும்படி அன்பையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்துகிறார். பிறகு, தன்னை எழு பலமுள்ளவன் என்றும், தோற்றத்தில் பலவீனன் என்றும் குற்றஞ்சாட்டினவர்களுக்கு (2 கொரி. 10:10) அந்த நிருபத்தின் இறுதியில் அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு விமர்சித்தவர்கள் சிறந்த பேச்சால், பணம்வாங்கி போதிப்பவர்களாக இருந்தார்கள். பவுல் கல்வித்திறனில் சிறந்து விளங்கினாலும், மக்கள் புரிந்துகொள்கிற விதத்தில், எளிமையாகப் போதித்தார். கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபத்தில் “என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது” என்று எழுதியிருந்தார் (1 கொரி. 2:4). ஆனால் இரண்டாவது நிருபத்தில் அவர் எழுதுகிற ஒரு விஷயம் அவருடைய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது: “அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்” (2 கொரி. 10:11).
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படியோ, அப்படியே தன்னுடைய வெளிப்படையான வாழ்க்கையும் இருப்பதாக பவுல் கூறினார். நாம் எப்படி இருக்கிறோம்?
கரடி பொம்மையைத் கட்டி தழுவுதல்
எல்லாவற்றையும் இழந்துபோனபோது
தேவன் பார்ப்பதென்ன?
அதிகாலை வேளையில் நான் வேகமாக எங்களது முன் அறையின் ஜன்னல் வழியே எங்கள் வீட்டின் பின்புறமிருக்கும் அவாந்தரவெளியைப் பார்த்தபடியே கடந்து சென்றேன். அடிக்கடி, நான் ஒரு பருந்தையே அல்லது ஓர் ஆந்தையையோ மரக் கிளைகளில் அமர்ந்திருக்கக் காண்பேன். அவை அந்தப் பகுதி முழுவதையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் காலைப் பொழுதில், ஒரு மொட்டைத்தலை கழுகு உயர்ந்த கிளையொன்றில் அமர்ந்திருக்கக் கண்டு வியந்தேன். அது அந்தப் பகுதி ழுழுவதையும் தன்னுடைய எல்லைப்பகுதி என்ற எண்ணத்தோடு அதனைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அது காலை உணவைத் தேடிக் கொண்டிருந்திருக்கலாம். அதனுடைய பார்வை ராஜபார்வையாயிருந்தது.
2 நாளாகமம் 16ல், ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி (தேவனுடைய தீர்க்கதரிசி) அரசனிடம், அவனுடைய செயல்களெல்லாம் ஒரு ராஜபார்வையால் கண்காணிக்கப்படுகின்றன என்கின்றார். அவன் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் “நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்து கொண்டு இருக்கிறீர் (வச. 7). மேலும், “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (வச. 9) என்றார். கர்த்தரைத் சார்ந்து கொள்ளாமல் மனிதரைச் சார்ந்து கொண்டபடியால் இது முதல் யுத்தங்கள் தொடர்ந்து வரும் என்றான்.
இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும் போது, தேவன் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு இரையின் மேல் பாய்கின்ற ஒரு பறவையைப் போல, நம்முடைய ஆபத்து நேரத்தில் அவர் நம்மீது பாய்ந்து நம்மைக் கவ்விக்கொள்வார் எனத் தவறாக உணர்ந்துவிடாதிருங்கள். அனானியின் வார்த்தைகள் நம்மை உண்மைக்கு நேராகக் கொண்டு செல்கின்றன. தேவன் நம்மைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கின்றார். நம்முடைய தேவையின் போது நாம் அவரைக் கூப்பிடும்படி அவர் காத்திருக்கின்றார் என்பதையே அனானி நமக்கு எடுத்துரைக்கின்றார்.
எங்களுடைய பின் வளாகத்தில் அமர்ந்திருந்த கழுகினைப் போல, கர்த்தருடைய கண்களும் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. உனக்குள்ளும், எனக்குள்ளும் உண்மையிருக்கிறதா எனக் கண்டறிய அவை பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. எப்படி அவரால் நமக்கு நம்பிக்கையையும், உதவியையும் கொடுக்க முடியும்?
என்னுடைய கரத்தால், உனக்காக செய்யப்பட்டது
என்னுடைய பாட்டியம்மா ஒரு மிகச்சிறந்த தையல்காரி. அவளுடைய சொந்த இடமான டெக்ஸாஸில் அநேக போட்டிகளில் வெற்றி பெற்றவர். அநேக முக்கிய கொண்டாட்டங்களின் போது தன்னுடைய கையால் தைக்கப்பட்ட உடைகளைப் பரிசாக வழங்குவது அவர்களது வழக்கம். என்னுடைய உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பின் போது, சிவப்பு நிற, உயர்ரக கம்பளி நூலால் தைக்கப்பட்ட குளிர்கால ஆடையை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். நீலம் கலந்த பச்சை நிற மெத்தையை என் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்தார்கள். ஒவ்வொரு கலை அம்சமிக்க பகுதியிலும் அவளுடைய பெயர் பொறிக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருப்பதைக் காண்பேன் 'உனக்காக, என் கரத்தால் செய்யப்பட்டது - முன்னா" என்று எழுதப்பட்டிருக்கும். தையலால் எழுதப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் பாட்டியம்மா என்மீது வைத்திருக்கும் அன்பினைக் காட்டும். மேலும் அவள் என்னுடைய எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டும் வல்லமையுள்ள வார்த்தைகளாக இருக்கும்.
எபேசு சபை மக்களுக்கு பவுல் எழுதும்போது, நாம் இவ்வுலகில் வாழும் நோக்கம் என்னவெனில், 'இயேசு கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு நற்கிரியைகளைச் செய்கிறதற்கு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்" என்கின்றார் (2:10). இங்கு செய்கை என்பது ஒரு கலைஞனின் கைவினை அல்லது மிகச்சிறந்த படைப்பு என குறிப்பிடப்படுகிறது. பவுல் இதனை விளக்கும்போது, தேவன் நம்மை அவருடைய கைவினையாகப் படைத்து, நாமும் நற்கிரியைகளைச் செய்து, இயேசுவோடு நமக்குள்ள மீட்கப்பட்ட உறவின் வெளிப்பாடாகத் திகழவேண்டும் என்கின்றார். இந்த உலகில் நாம் அவருடைய மகிமைக்கென உருவாக்கப்பட்டுள்ளோம். நம்முடைய சொந்த நற்கிரியைகளால் நம்மை இரட்சிக்க முடியாது. ஆனால், தேவனுடைய கரம், அவருடைய நோக்கத்திற்காக நம்மை உருவாக்கியுள்ளதால் நாமும் பிறரை தேவனுடைய பெரிய அன்பண்டை கொண்டுவர, அவர் நம்மை பயன்படுத்த முடியும்.
என்னுடைய முன்னா தையல் வேலையில் முனைந்து, அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பினையும் அதன் தீவிரத்தையும் எனக்குக் காட்டியபோது, நானும் இவ்வுலகில் எனக்குரிய நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. தேவனுடைய விரல்கள் என் நாட்களின் அழகினை சரிப்படுத்தி உருவாக்கினபோது தேவனுடைய கரம், அவருடைய அன்பையும், நோக்கத்தையும் என் இருதயத்தில் தைத்து வைத்தார். எனவே, நான் அவருடைய அன்பை அறிந்துகொள்ளவும் முடிகிறது. அவருடைய கைவினையை பிறருக்குக் காட்டவும் முடிகிறது.
எதிர்பாராத சந்தர்ப்பம்
நான் விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் நின்ற போது யாரோ என்னுடைய தோளைத் தட்டினார். நான் திரும்பிய போது ஒரு மலர்ந்த வாழ்த்தைப் பெற்றேன். எலைசா என்னை உனக்கு நியாபகமிருக்கின்றதா? நான் தெரிந்த வெவ்வேறு ஜோன்களை நினைவுப்படுத்தியது. ஆனாலும் இவளை என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒருவேளை இதற்கு முந்தைய அண்டை வீட்டுக் காரியோ? அல்லது கடந்த காலத்தில் கூடப் பணியாற்றியவரா? எனக்குத் தெரியவில்லை.
என்னுடைய குழப்பத்தைப் புரிந்து கொண்ட ஜோன், ''எலைசா, நாம் இருவரும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் பயின்றோம்" என்றாள். இன்னும் என் நினைவை எழுப்பும்படி சில குறிப்புகளைத் தந்தாள். வெள்ளிக்கிழமை இரவு கால்பந்து விளையாட்டு, வெற்றியின் மீது மகிழ்ந்தது, என நினைவுபடுத்தினாள். அந்தச் சந்தர்ப்பம் விளக்கப்பட்டதும் நான் அவளை அடையாளம் கண்டு கொண்டேன்.
இயேசுவின் மரணத்திற்குப் பின் மகதலேனா மரியாள் அதிகாலையில் கல்லறையினிடத்திற்கு வந்தாள். அங்கு கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள். அவருடைய உடலையும் காணவில்லை (யோவா. 20:1-2). இவள் பேதுருவையும், யோவானையும் அழைத்து வர ஒடுகின்றாள். அவர்களோடு மீண்டும் வந்து அவருடைய கல்லறை வெறுமையாயிருக்கக் காண்கின்றாள் (வச. 3-10). மரியாள் வருத்தத்தில், அதேயிடத்திற்குள் அலைகின்றாள் (வச. 11). அப்பொழுது இயேசு அங்கு தோன்றினார். 'அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்" (வச. 14). அவரைத் தோட்டக்காரரென்று எண்ணினாள் (வச. 15).
எப்படி அவளால் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை? அவருடைய உயிர்த்தெழுந்த சரீரம் அவரைக் கண்டுபிடிக்க முடியாதபடி மாறியிருந்ததா? அவளுடைய துக்கம் அவளுடைய கண்களைக் காணக்கூடாதபடி மறைத்து விட்டதா? அல்லது என்னைப் போன்று, இயேசுவும் நினைவு கூரக் கூடிய சந்தர்ப்ப்பமில்லாமல் போய்விட்டாரா? அவரை மரித்தவராக கல்லறையில் தேடிக்கொண்டிருக்க, அவர் உயிருள்ளவராகத் தோட்டத்தில் நிற்பதால் அவளால் அடையாளம் காணமுடியவில்லையா?
நம்முடைய வாழ்வில் நாம் ஜெபிக்கும் போதும், வேதம் வாசிக்கும் போதும் இயேசு நம்முடைய இருதயத்தில் மெதுவாகப் பேசுவதை, நாமும் கூட கேட்கத் தவறிவிடுகின்றோமோ?