Mark | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Markகட்டுரைகள்

ஒரு மீட்பர் இருந்தார்.

இந்த 10 நாள் ஈஸ்டர் வாசிப்புத் திட்டத்துடன் இந்த ஈஸ்டர் பருவத்தில் உங்கள் இதயத்தைத் தயார்படுத்துங்கள்.

பகுதி 10 - இயேசுவோடு வீட்டில்

நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படிஇ நான் மறுபடியூம் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். யோவான் 14:3

“வீட்டைப்போல வேறு இடம் எதுவூமில்லை." இந்த சொற்றொடரானது ஓய்வெடுப்பதற்கும்இ தங்கியிருப்பதற்கும்இ எமக்கென்று சொந்தமாகவூம் ஒரு வாசஸ்தலம் இருக்கவேண்டும் என்ற நமது ஆழமான ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இயேசுவூம் அவருடைய நண்பர்களும் ஒன்றாக தமது இறுதி இராப்போஜனத்தை உண்ட பின்னர்இ வரவிருக்கிற அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசியபோதுஇ மனதில் பதிந்திருக்கும்படி இந்த விருப்பத்தை அவர் கூறினார். தாம் சென்றாலும்இ அவர்களுக்காகத் திரும்பி வருவதாக அவர் உறுதியளித்தார். அத்துடன்…

பகுதி 9 - நமது ஜீவனுள்ள நம்பிக்கை

இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலேஇ ….தமது (தேவனுடைய) மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியூம் ஜெநிப்பித்தார். 1பேதுரு 1:4

எனது தாயார் இறந்த நாளிற்கு மறுநாள் காலைஇ நான் யோவான் 6-ம் அதிகாரத்தை வாசித்துஇ எனது துக்கத்தைக் குறித்து தேவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் 39-வது வசனத்திற்கு வந்தபோதுஇ எனது துக்கமான இருதயத்தை ஆறுதல்படுத்துமுகமாக கர்த்தர் என்னுடன் மெதுவாகப் பேசினார்: “அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையூம் நான் இழந்துபோகாமல்இ கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது." மரித்துப்போன எனது தாயாரின் ஆவியானது ஏற்கனவே தேவனுடன் இருக்கிறதுஇ…

பகுதி 8 - இன்னும் அதிகமாய்!

பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ரோமர் 5:20

ஒரு உயிர்த்த ஞாயிறு ஆராதனையின்போது நான் கேட்ட ஒரு அறிக்கையானது இன்னும் என் மனதில் இருக்கிறது: “மனிதனின் வீழ்ச்சியின்போது இழந்ததைவிட அதிகமாக இயேசுவின் உயிர்த்தெழுதலில் பெறப்பட்டது.” இழந்ததைவிட அதிகமாய்ப் பெறப்பட்டதா? அது உண்மையாக இருக்கக்கூடுமா?

பாவம் உலகத்தினுள் நுழைந்ததினால் ஏற்பட்ட பாதிப்பை ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்து வருகின்றௌம். பேராசைஇ அநீதிஇ மற்றும் கொடூரம் என்று அனைத்துமேஇ கடவூளின் வழியை விடுத்து தமது சொந்த வழியில் செல்ல ஆதாமும் ஏவாளும் முடிவூ செய்த அந்த…

பகுதி 7 - இப்போதைக்கு விடைபெறுகிறேன்

…நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்துஇ அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. 1தெசலோனிக்கேயர் 4:13

எனது பேத்தி அலிஸ்சாவூம் நானும்இ சென்றுவருவதாக விடைபெறும்போது ஒரு வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுகிறௌம். நாங்கள் ஒருவரையொருவர் கைகளால் கட்டித்தழுவிஇ சுமார் இருபது வினாடிகள் நாடகத்தனமாக விசும்பலுடன் சத்தமாக புலம்ப ஆரம்பிப்போம். பின்னர்இ நாங்கள் எம்மை விடுவித்துக்கொண்டுஇ “சந்திப்போம்" என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றுவிடுவோம். எங்களுடைய இந்த முட்டாள்த்தனமான வழக்கமானது வேடிக்கையாக இருந்தாலும்இ நாம்; மீண்டும் ஒருவரையொருவர் விரைவில் சந்திப்போமென்று எப்போதும் எதிர்பார்த்திருப்போம்.

ஆனால்இ நாம் அக்கறை கொண்டவர்களிடமிருந்து பிரிகிற வலியானது சில சமயங்களில்…

பகுதி 6 - மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்@ என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25

உயிர்த்த ஞாயிறன்று காலை ஆலயத்துக்குள்ளே நான் நுழைந்தபோது எனது நண்பியைக் கண்டுஇ “மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!” என்று வாழ்த்திவிட்டுஇ உடனடியாக என்னைத் திருத்திக்கொண்டுஇ “அதாவதுஇ மகிழ்ச்சியான உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்” என்றேன்.

“ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை” என்று அவள் புன்னகைத்தாள். அது எவ்வளவூ உண்மை! கிறிஸ்து பிறப்பு இல்லையெனில்இ உயிர்த்த ஞாயிறு என்று ஒன்று இருந்திருக்க முடியாது. மேலும்இ உயிர்த்தெழுதல் இல்லையெனில் இந்த நாள் மற்றைய நாட்களைப்போல ஒரு சாதாரண நாளாகவே இருக்கும்.…

பகுதி 5 - இராஜாவின் கிரீடம்;

முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னிஇ அவர் சிரசின்மேல் வைத்து… மத்தேயூ 27:29

நாங்கள் மேசையைச் சுற்றி அமர்ந்துஇ ஒவ்வொருவரும் நமக்கு முன்னால் இருந்த பல்குத்தும் குச்சிகளைக் குத்திவைப்பதற்கு பயன்படுத்தப்படும் பஞ்சு போன்ற வட்டவடிவ தளத்தில் ஒவ்வொரு குச்சியைக் குத்திவைத்தோம். உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு முந்திய வாரங்களில்இ ஒவ்வொரு நாளும் எங்களின் இரவூ உணவின்போதுஇ அன்றைய நாளில் நாங்கள் செய்த தவறை நினைத்து மனம்வருந்திஇ கிறிஸ்து அதற்கான கிரயத்தைச் செலுத்தினார் என்று நினைவூகூர்ந்துஇ அவற்றைக் குறிக்கும்படியாக பல்குத்தும் குச்சிகளை வைத்து நாங்கள் முட்கிரீடத்தை உருவாக்கினோம். நமது தவறான செயல்களால்…

பகுதி 4 - வெற்றி முழக்கம்

முடிந்தது! யோவான் 19:30

சில வருடங்களுக்கு முன்புஇ தொலைவிலுள்ள ஒரு பள்ளத்தாக்கின் அடிப்புறத்தில் தனியாக சிக்கிக்கொண்ட ஆரோன் ரல்ஸ்டன் என்கிற மலை ஏறும் வீரரைக் குறித்து வாசித்தேன். கண்டுபிடிக்கப்படுவேன் என்கிற அற்பமான நம்பிக்கையே இருந்த நிலையில்இ அவரின் பலம் குறைவடைந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில்இ தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுக்கவேண்டியிருந்தது. மிகுந்த கடுமையான வலியோடு கூடிய அந்தத் தருணத்தில்இ அவர் வேதனையோடும்இ அதேவேளை ஜெயத்தோடும் உரத்த சத்தமிட்டார்@ காரணம்இ அவர் தன்னை விடுவித்துக்கொண்டிருந்தார்இ மற்றும்இ இப்போது அதிலிருந்து தப்பித்து உயிரோடு வாழ ஒரு…

பகுதி 3 - பாடுகளின் பாதையில்

இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலேஇ அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறௌம். எபிரேயர் 10:10

பரிசுத்த வாரத்திலேஇ எருசலேம் வீதிகளினூடாக சிலுவையை நோக்கிய நீண்ட நடை உட்படஇ இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முந்திய இறுதி நாட்களை நாம் நினைவூகூருகின்றௌம். இன்றுஇ இந்தப் பாதையின் மிகவூம் சாத்தியமான அமைவிடமாக The Via Dolorosa அதாவது பாடுகளின் பாதை என்று இது அறியப்படுகிறது.

ஆனால் எபிரேயர் புத்தகத்தின் எழுத்தாளர்இ இயேசு சென்ற இந்தப் பாதையை துயரங்களின் பாதைக்கும் மேலான ஒன்றாகவே பார்க்கின்றார். இயேசு தாம் விரும்பி கொல்கொதா நோக்கி…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

வாலையும் நாக்கையும் அசைத்தல்

பெப் என்னும் நாய்க்குட்டி, ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான பூனையை கொன்றுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது அந்த தவறை செய்யவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்த மெத்தையை மென்று தின்றது வேண்டுமானால் அதின் குற்றமாய் இருக்கலாம்.  
பெப், 1920களில் பென்சில்வேனியாவின் கவர்னர் கிஃபோர்ட் பிஞ்சோட்டிற்குச் சொந்தமான ஒரு இளம் லாப்ரடோர் வகையை சேர்ந்த நாய். அந்த குற்றத்திற்காய் பெப், கிழக்கு மாநில சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அதின் புகைப்படம் கைதி அடையாள எண்ணுடன் எடுக்கப்பட்டது. இதைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு பத்திரிகை நிருபர், அந்த செய்தியை பத்திரிக்கையில் பிரசுரித்தார். அவரது அறிக்கை செய்தித்தாளில் வெளிவந்ததால், பெப் உண்மையில் ஒரு பூனை கொலையாளி என்று பலர் நம்பினர். 
இஸ்ரவேலின் ராஜா சாலெமோன் தவறான செய்தியின் சக்தியை நன்கு அறிந்திருந்தார். அவர் எழுதும்போது “கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்” என்று எழுதுகிறார் (நீதிமொழிகள் 18:8). சில வேளைகளில் நம்முடைய மனித இயல்பின் பிரகாரம், உண்மையல்லாத செய்திகளையும் நிஜம் என்று நம்பத் தூண்டப்படுகிறோம்.  
மற்றவர்கள் நம்மைப் பற்றிய பொய்களை நம்பினாலும், தேவனால் அதை நன்மையாய் முடியப்பண்ணக் கூடும். ஆளுநர் பெப்பை சிறைக்கு அனுப்பினார். ஆனால் பெப் அங்கிருந்த கைதிகளுக்கு சிநேகிதனாய் மாறியது. அது அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலாய் இருந்து மனரீதியான சிகிச்சை கொடுத்தது.  
மற்றவர்கள் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் நம் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தம் மாறாதது. மற்றவர்கள் நம்மைப் பற்றி கிசுகிசுக்கும்போது, அதைக் குறித்து நாம் பொருட்படுத்தாமல், தேவன் நம்மைக் குறித்து என்ன எண்ணுகிறார் என்பதையும் அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறார் என்பதையுமே நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.  

எப்போதும் நம்பக்கூடியவர்

 நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.  
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.  
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12). 
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23). 

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே!