எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Markகட்டுரைகள்

ஒரு மீட்பர் இருந்தார்.

இந்த 10 நாள் ஈஸ்டர் வாசிப்புத் திட்டத்துடன் இந்த ஈஸ்டர் பருவத்தில் உங்கள் இதயத்தைத் தயார்படுத்துங்கள்.

பகுதி 10 - இயேசுவோடு வீட்டில்

நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படிஇ நான் மறுபடியூம் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். யோவான் 14:3

“வீட்டைப்போல வேறு இடம் எதுவூமில்லை." இந்த சொற்றொடரானது ஓய்வெடுப்பதற்கும்இ தங்கியிருப்பதற்கும்இ எமக்கென்று சொந்தமாகவூம் ஒரு வாசஸ்தலம் இருக்கவேண்டும் என்ற நமது ஆழமான ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இயேசுவூம் அவருடைய நண்பர்களும் ஒன்றாக தமது இறுதி இராப்போஜனத்தை உண்ட பின்னர்இ வரவிருக்கிற அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசியபோதுஇ மனதில் பதிந்திருக்கும்படி இந்த விருப்பத்தை அவர் கூறினார். தாம் சென்றாலும்இ அவர்களுக்காகத் திரும்பி வருவதாக அவர் உறுதியளித்தார். அத்துடன்…

பகுதி 9 - நமது ஜீவனுள்ள நம்பிக்கை

இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலேஇ ….தமது (தேவனுடைய) மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியூம் ஜெநிப்பித்தார். 1பேதுரு 1:4

எனது தாயார் இறந்த நாளிற்கு மறுநாள் காலைஇ நான் யோவான் 6-ம் அதிகாரத்தை வாசித்துஇ எனது துக்கத்தைக் குறித்து தேவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் 39-வது வசனத்திற்கு வந்தபோதுஇ எனது துக்கமான இருதயத்தை ஆறுதல்படுத்துமுகமாக கர்த்தர் என்னுடன் மெதுவாகப் பேசினார்: “அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையூம் நான் இழந்துபோகாமல்இ கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது." மரித்துப்போன எனது தாயாரின் ஆவியானது ஏற்கனவே தேவனுடன் இருக்கிறதுஇ…

பகுதி 8 - இன்னும் அதிகமாய்!

பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ரோமர் 5:20

ஒரு உயிர்த்த ஞாயிறு ஆராதனையின்போது நான் கேட்ட ஒரு அறிக்கையானது இன்னும் என் மனதில் இருக்கிறது: “மனிதனின் வீழ்ச்சியின்போது இழந்ததைவிட அதிகமாக இயேசுவின் உயிர்த்தெழுதலில் பெறப்பட்டது.” இழந்ததைவிட அதிகமாய்ப் பெறப்பட்டதா? அது உண்மையாக இருக்கக்கூடுமா?

பாவம் உலகத்தினுள் நுழைந்ததினால் ஏற்பட்ட பாதிப்பை ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்து வருகின்றௌம். பேராசைஇ அநீதிஇ மற்றும் கொடூரம் என்று அனைத்துமேஇ கடவூளின் வழியை விடுத்து தமது சொந்த வழியில் செல்ல ஆதாமும் ஏவாளும் முடிவூ செய்த அந்த…

பகுதி 7 - இப்போதைக்கு விடைபெறுகிறேன்

…நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்துஇ அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. 1தெசலோனிக்கேயர் 4:13

எனது பேத்தி அலிஸ்சாவூம் நானும்இ சென்றுவருவதாக விடைபெறும்போது ஒரு வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுகிறௌம். நாங்கள் ஒருவரையொருவர் கைகளால் கட்டித்தழுவிஇ சுமார் இருபது வினாடிகள் நாடகத்தனமாக விசும்பலுடன் சத்தமாக புலம்ப ஆரம்பிப்போம். பின்னர்இ நாங்கள் எம்மை விடுவித்துக்கொண்டுஇ “சந்திப்போம்" என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றுவிடுவோம். எங்களுடைய இந்த முட்டாள்த்தனமான வழக்கமானது வேடிக்கையாக இருந்தாலும்இ நாம்; மீண்டும் ஒருவரையொருவர் விரைவில் சந்திப்போமென்று எப்போதும் எதிர்பார்த்திருப்போம்.

ஆனால்இ நாம் அக்கறை கொண்டவர்களிடமிருந்து பிரிகிற வலியானது சில சமயங்களில்…

பகுதி 6 - மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்@ என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25

உயிர்த்த ஞாயிறன்று காலை ஆலயத்துக்குள்ளே நான் நுழைந்தபோது எனது நண்பியைக் கண்டுஇ “மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!” என்று வாழ்த்திவிட்டுஇ உடனடியாக என்னைத் திருத்திக்கொண்டுஇ “அதாவதுஇ மகிழ்ச்சியான உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்” என்றேன்.

“ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை” என்று அவள் புன்னகைத்தாள். அது எவ்வளவூ உண்மை! கிறிஸ்து பிறப்பு இல்லையெனில்இ உயிர்த்த ஞாயிறு என்று ஒன்று இருந்திருக்க முடியாது. மேலும்இ உயிர்த்தெழுதல் இல்லையெனில் இந்த நாள் மற்றைய நாட்களைப்போல ஒரு சாதாரண நாளாகவே இருக்கும்.…

பகுதி 5 - இராஜாவின் கிரீடம்;

முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னிஇ அவர் சிரசின்மேல் வைத்து… மத்தேயூ 27:29

நாங்கள் மேசையைச் சுற்றி அமர்ந்துஇ ஒவ்வொருவரும் நமக்கு முன்னால் இருந்த பல்குத்தும் குச்சிகளைக் குத்திவைப்பதற்கு பயன்படுத்தப்படும் பஞ்சு போன்ற வட்டவடிவ தளத்தில் ஒவ்வொரு குச்சியைக் குத்திவைத்தோம். உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு முந்திய வாரங்களில்இ ஒவ்வொரு நாளும் எங்களின் இரவூ உணவின்போதுஇ அன்றைய நாளில் நாங்கள் செய்த தவறை நினைத்து மனம்வருந்திஇ கிறிஸ்து அதற்கான கிரயத்தைச் செலுத்தினார் என்று நினைவூகூர்ந்துஇ அவற்றைக் குறிக்கும்படியாக பல்குத்தும் குச்சிகளை வைத்து நாங்கள் முட்கிரீடத்தை உருவாக்கினோம். நமது தவறான செயல்களால்…

பகுதி 4 - வெற்றி முழக்கம்

முடிந்தது! யோவான் 19:30

சில வருடங்களுக்கு முன்புஇ தொலைவிலுள்ள ஒரு பள்ளத்தாக்கின் அடிப்புறத்தில் தனியாக சிக்கிக்கொண்ட ஆரோன் ரல்ஸ்டன் என்கிற மலை ஏறும் வீரரைக் குறித்து வாசித்தேன். கண்டுபிடிக்கப்படுவேன் என்கிற அற்பமான நம்பிக்கையே இருந்த நிலையில்இ அவரின் பலம் குறைவடைந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில்இ தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுக்கவேண்டியிருந்தது. மிகுந்த கடுமையான வலியோடு கூடிய அந்தத் தருணத்தில்இ அவர் வேதனையோடும்இ அதேவேளை ஜெயத்தோடும் உரத்த சத்தமிட்டார்@ காரணம்இ அவர் தன்னை விடுவித்துக்கொண்டிருந்தார்இ மற்றும்இ இப்போது அதிலிருந்து தப்பித்து உயிரோடு வாழ ஒரு…

பகுதி 3 - பாடுகளின் பாதையில்

இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலேஇ அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறௌம். எபிரேயர் 10:10

பரிசுத்த வாரத்திலேஇ எருசலேம் வீதிகளினூடாக சிலுவையை நோக்கிய நீண்ட நடை உட்படஇ இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முந்திய இறுதி நாட்களை நாம் நினைவூகூருகின்றௌம். இன்றுஇ இந்தப் பாதையின் மிகவூம் சாத்தியமான அமைவிடமாக The Via Dolorosa அதாவது பாடுகளின் பாதை என்று இது அறியப்படுகிறது.

ஆனால் எபிரேயர் புத்தகத்தின் எழுத்தாளர்இ இயேசு சென்ற இந்தப் பாதையை துயரங்களின் பாதைக்கும் மேலான ஒன்றாகவே பார்க்கின்றார். இயேசு தாம் விரும்பி கொல்கொதா நோக்கி…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது.

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார்.

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார். 

 

- கேரன் பிம்போ