Mark | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Markகட்டுரைகள்

ஒரு மீட்பர் இருந்தார்.

இந்த 10 நாள் ஈஸ்டர் வாசிப்புத் திட்டத்துடன் இந்த ஈஸ்டர் பருவத்தில் உங்கள் இதயத்தைத் தயார்படுத்துங்கள்.

பகுதி 10 - இயேசுவோடு வீட்டில்

நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படிஇ நான் மறுபடியூம் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். யோவான் 14:3

“வீட்டைப்போல வேறு இடம் எதுவூமில்லை." இந்த சொற்றொடரானது ஓய்வெடுப்பதற்கும்இ தங்கியிருப்பதற்கும்இ எமக்கென்று சொந்தமாகவூம் ஒரு வாசஸ்தலம் இருக்கவேண்டும் என்ற நமது ஆழமான ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இயேசுவூம் அவருடைய நண்பர்களும் ஒன்றாக தமது இறுதி இராப்போஜனத்தை உண்ட பின்னர்இ வரவிருக்கிற அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசியபோதுஇ மனதில் பதிந்திருக்கும்படி இந்த விருப்பத்தை அவர் கூறினார். தாம் சென்றாலும்இ அவர்களுக்காகத் திரும்பி வருவதாக அவர் உறுதியளித்தார். அத்துடன்…

பகுதி 9 - நமது ஜீவனுள்ள நம்பிக்கை

இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலேஇ ….தமது (தேவனுடைய) மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியூம் ஜெநிப்பித்தார். 1பேதுரு 1:4

எனது தாயார் இறந்த நாளிற்கு மறுநாள் காலைஇ நான் யோவான் 6-ம் அதிகாரத்தை வாசித்துஇ எனது துக்கத்தைக் குறித்து தேவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் 39-வது வசனத்திற்கு வந்தபோதுஇ எனது துக்கமான இருதயத்தை ஆறுதல்படுத்துமுகமாக கர்த்தர் என்னுடன் மெதுவாகப் பேசினார்: “அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையூம் நான் இழந்துபோகாமல்இ கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது." மரித்துப்போன எனது தாயாரின் ஆவியானது ஏற்கனவே தேவனுடன் இருக்கிறதுஇ…

பகுதி 8 - இன்னும் அதிகமாய்!

பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ரோமர் 5:20

ஒரு உயிர்த்த ஞாயிறு ஆராதனையின்போது நான் கேட்ட ஒரு அறிக்கையானது இன்னும் என் மனதில் இருக்கிறது: “மனிதனின் வீழ்ச்சியின்போது இழந்ததைவிட அதிகமாக இயேசுவின் உயிர்த்தெழுதலில் பெறப்பட்டது.” இழந்ததைவிட அதிகமாய்ப் பெறப்பட்டதா? அது உண்மையாக இருக்கக்கூடுமா?

பாவம் உலகத்தினுள் நுழைந்ததினால் ஏற்பட்ட பாதிப்பை ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்து வருகின்றௌம். பேராசைஇ அநீதிஇ மற்றும் கொடூரம் என்று அனைத்துமேஇ கடவூளின் வழியை விடுத்து தமது சொந்த வழியில் செல்ல ஆதாமும் ஏவாளும் முடிவூ செய்த அந்த…

பகுதி 7 - இப்போதைக்கு விடைபெறுகிறேன்

…நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்துஇ அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. 1தெசலோனிக்கேயர் 4:13

எனது பேத்தி அலிஸ்சாவூம் நானும்இ சென்றுவருவதாக விடைபெறும்போது ஒரு வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுகிறௌம். நாங்கள் ஒருவரையொருவர் கைகளால் கட்டித்தழுவிஇ சுமார் இருபது வினாடிகள் நாடகத்தனமாக விசும்பலுடன் சத்தமாக புலம்ப ஆரம்பிப்போம். பின்னர்இ நாங்கள் எம்மை விடுவித்துக்கொண்டுஇ “சந்திப்போம்" என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றுவிடுவோம். எங்களுடைய இந்த முட்டாள்த்தனமான வழக்கமானது வேடிக்கையாக இருந்தாலும்இ நாம்; மீண்டும் ஒருவரையொருவர் விரைவில் சந்திப்போமென்று எப்போதும் எதிர்பார்த்திருப்போம்.

ஆனால்இ நாம் அக்கறை கொண்டவர்களிடமிருந்து பிரிகிற வலியானது சில சமயங்களில்…

பகுதி 6 - மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்@ என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25

உயிர்த்த ஞாயிறன்று காலை ஆலயத்துக்குள்ளே நான் நுழைந்தபோது எனது நண்பியைக் கண்டுஇ “மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!” என்று வாழ்த்திவிட்டுஇ உடனடியாக என்னைத் திருத்திக்கொண்டுஇ “அதாவதுஇ மகிழ்ச்சியான உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்” என்றேன்.

“ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை” என்று அவள் புன்னகைத்தாள். அது எவ்வளவூ உண்மை! கிறிஸ்து பிறப்பு இல்லையெனில்இ உயிர்த்த ஞாயிறு என்று ஒன்று இருந்திருக்க முடியாது. மேலும்இ உயிர்த்தெழுதல் இல்லையெனில் இந்த நாள் மற்றைய நாட்களைப்போல ஒரு சாதாரண நாளாகவே இருக்கும்.…

பகுதி 5 - இராஜாவின் கிரீடம்;

முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னிஇ அவர் சிரசின்மேல் வைத்து… மத்தேயூ 27:29

நாங்கள் மேசையைச் சுற்றி அமர்ந்துஇ ஒவ்வொருவரும் நமக்கு முன்னால் இருந்த பல்குத்தும் குச்சிகளைக் குத்திவைப்பதற்கு பயன்படுத்தப்படும் பஞ்சு போன்ற வட்டவடிவ தளத்தில் ஒவ்வொரு குச்சியைக் குத்திவைத்தோம். உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு முந்திய வாரங்களில்இ ஒவ்வொரு நாளும் எங்களின் இரவூ உணவின்போதுஇ அன்றைய நாளில் நாங்கள் செய்த தவறை நினைத்து மனம்வருந்திஇ கிறிஸ்து அதற்கான கிரயத்தைச் செலுத்தினார் என்று நினைவூகூர்ந்துஇ அவற்றைக் குறிக்கும்படியாக பல்குத்தும் குச்சிகளை வைத்து நாங்கள் முட்கிரீடத்தை உருவாக்கினோம். நமது தவறான செயல்களால்…

பகுதி 4 - வெற்றி முழக்கம்

முடிந்தது! யோவான் 19:30

சில வருடங்களுக்கு முன்புஇ தொலைவிலுள்ள ஒரு பள்ளத்தாக்கின் அடிப்புறத்தில் தனியாக சிக்கிக்கொண்ட ஆரோன் ரல்ஸ்டன் என்கிற மலை ஏறும் வீரரைக் குறித்து வாசித்தேன். கண்டுபிடிக்கப்படுவேன் என்கிற அற்பமான நம்பிக்கையே இருந்த நிலையில்இ அவரின் பலம் குறைவடைந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில்இ தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுக்கவேண்டியிருந்தது. மிகுந்த கடுமையான வலியோடு கூடிய அந்தத் தருணத்தில்இ அவர் வேதனையோடும்இ அதேவேளை ஜெயத்தோடும் உரத்த சத்தமிட்டார்@ காரணம்இ அவர் தன்னை விடுவித்துக்கொண்டிருந்தார்இ மற்றும்இ இப்போது அதிலிருந்து தப்பித்து உயிரோடு வாழ ஒரு…

பகுதி 3 - பாடுகளின் பாதையில்

இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலேஇ அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறௌம். எபிரேயர் 10:10

பரிசுத்த வாரத்திலேஇ எருசலேம் வீதிகளினூடாக சிலுவையை நோக்கிய நீண்ட நடை உட்படஇ இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முந்திய இறுதி நாட்களை நாம் நினைவூகூருகின்றௌம். இன்றுஇ இந்தப் பாதையின் மிகவூம் சாத்தியமான அமைவிடமாக The Via Dolorosa அதாவது பாடுகளின் பாதை என்று இது அறியப்படுகிறது.

ஆனால் எபிரேயர் புத்தகத்தின் எழுத்தாளர்இ இயேசு சென்ற இந்தப் பாதையை துயரங்களின் பாதைக்கும் மேலான ஒன்றாகவே பார்க்கின்றார். இயேசு தாம் விரும்பி கொல்கொதா நோக்கி…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மாற்றத்தின் விளையாட்டு

1963 ஆம் ஆண்டு மார்ச் இரவில், இரண்டு கல்லூரி கூடைப்பந்து வீரர்கள் கருப்பு வெள்ளை பிரிவினைவாதத்தின் வெறுப்பை மீறிக் கைகுலுக்கி, மிசிசிப்பி மாநில வரலாற்றில் முதல் முறையாக முழு வெள்ளை ஆண்கள், ஒருங்கிணைந்த அணிக்கு எதிராக விளையாடியது. லயோலா பல்கலைக்கழகம் சிகாகோவிற்கு எதிராக  "மாற்றத்தின் விளையாட்டு" என்றழைக்கப்பட்ட அந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அவர்களின் மாநிலத்தை விட்டு வெளியேற வீரர்களைத் தடுக்க மிசிசிப்பி மாகாண குழு முயன்றது. அதேபோல லயோலாவின் கறுப்பின வீரர்கள் இதற்கிடையில், அனைத்து போட்டிகளிலும் இன அவதூறுகளை அனுபவித்தனர். நொறுக்குத்தீனிகளையும், பனிக்கட்டிகளையும் அவர்கள் மீது மற்றவர்கள் வீசினார்கள், மேலும் பயணத்தின் போது பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.

ஆனாலும் இளைஞர்கள் விளையாடினார்கள். லயோலா அணியினர், மிசிசிப்பி அணியினரை 61-51 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தனர், மேலும் லயோலா இறுதியில் தேசிய பட்டத்தையும் வென்றது. ஆனால் அந்த இரவில் உண்மையில் வென்றது எது? வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி நகர்தலே வென்றது. இயேசு போதித்தது போல், "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (லூக்கா 6:27) என்ற தேவனுடைய அறிவுரை வாழ்க்கையை மாற்றும் கருத்தாக இருந்தது.

கிறிஸ்து கற்பித்தபடி நம் எதிரிகளை நேசிக்க, மாற்றத்திற்கான அவரது புரட்சிகரமான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பவுல், "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்றது போல, நம்மில் உள்ள பழையதை அவருடைய புதிய வழி எப்படித் தோற்கடிக்கிறது? அன்பினால்தான்.  ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதின் மூலம் இறுதியாக அவரைக் காணலாம்.

மேலானவைகளுக்காக ஓடுதல்

என் தோழி இரா அலைபேசியில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து நான் நொறுங்கிப்போனேன். உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட தலைநகரான கீவிலுள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு 2022 இல், ஒரு ஓட்டபந்தயத்தை முடித்த பிறகு தனது நாட்டின் கொடியை உயர்த்தி பிடித்து அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதினார், " நாம் அனைவரும் வாழ்வென்னும் மாரத்தானில் இயன்றமட்டும் சிறப்பாக ஓடுகிறோம். இந்நாட்களில் இன்னும்கூட சிறப்பாக ஓடுவோம். நமது இதயங்களில் அணையாத ஒன்றைப் பற்றிக்கொள்வோம்”. தொடர்ந்து வந்த நாட்களில், அவள் குறிப்பிட்டுச்சொன்ன ஓட்டத்தை பல வழிமுறைகளில் ஓடுவதைக் கண்டேன்.  அவள் தன் நாட்டில் துன்பப்படுபவர்களுக்காக எப்படி ஜெபிப்பது மற்றும் ஆதரவளிப்பது என்று எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இராவின் வார்த்தைகள், எபிரெயர் 12ல் விசுவாசிகள் "பொறுமையோடே ஓடக்கடவோம்" (வ.1)  என்ற அழைப்புக்கு புதிய ஆழத்தைக் கொண்டுவந்தது. அந்த அழைப்பு அதிகாரம் 11 இன் விசுவாச வீரர்களின் பட்டியலைத் தொடர்கிறது. “மேகம் போல இத்தனை திரளான சாட்சிகளான” (12:1) அவர்கள் தைரியமாக எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்தனர். தங்கள் உயிர் போகும் ஆபத்திலும் கூட நீடியபொறுமையான விசுவாசத்தோடு (11:33-38) தங்கள் கண்களுக்குத் தூரமான, என்றும் அழியாத நித்திய காரியங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர் (வ.13).

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் அவ்வாறே வாழ அழைக்கப்பட்டுள்ளனர். விரிவடையும் வளர்ச்சியும், அமைதியுமான ஷாலோமெனும் சமாதானமான தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் எதையும் இழக்கலாம். ஏனெனில் கிறிஸ்துவின் முன்மாதிரியும் வல்லமையும் தான் நம்மைத் தாங்குகிறது (12:2-3).

நண்பர்கள் மற்றும் எதிரிகள்

அறிஞர் கென்னத்.இ.பெய்லி, சர்வதேச கூடுகையில் ஒரு வித்தியாசமான போக்கைப் பின்பற்றிய ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவரைப் பற்றிக் கூறினார். அவர் இஸ்ரேலுடனும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுடனும் நல்ல உறவை ஏற்படுத்தினார். இந்த ஆபத்தான சமநிலையை அவரது நாடு எவ்வாறு கையாள்கிறது என்று யாரோ அவரிடம் கேட்டபோது, ​​அவர் "எங்கள் நண்பர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் எதிரிகளை [எங்களுக்காக] தேர்ந்தெடுக்க எங்கள் நண்பர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை” என்று பதிலளித்தார்.

அது புத்திசாலித்தனமானது மற்றும் யதார்த்தமான நடைமுறை. அந்த ஆப்பிரிக்க நாடு சர்வதேச அளவில் முன்மாதிரியாக இருந்ததை போல, பவுல் தன் வாசகர்களும் தனிப்பட்ட விதத்தில் செய்ய ஊக்குவித்தார். கிறிஸ்துவால் மாற்றப்பட்ட வாழ்க்கையின் குணாதிசயங்களைப் பற்றிய நீண்ட விளக்கத்தின் மத்தியில், “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18” என்றார். நாம் பிறரிடம் கொண்டிருக்கும் உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி, நம் எதிரிகளை நாம் நடத்தும் விதம் கூட (வவ. 20-21) தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் சார்ந்திருப்பை வெளிப்படுத்துகிறதென வலியுறுத்துகிறார்.

எல்லோருடனும் சமாதானமாக வாழ்வது எப்போதும் சாத்தியமாகாது (ஆகையால்தான், பவுல் "கூடுமானால்" என்கிறார்). ஆனால் தேவனுடைய ஞானம் நம் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதே இயேசுவின் விசுவாசிகளாகிய நமது பொறுப்பு (யாக்கோபு 3:17-18), அதனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களோடு சமாதானம் செய்பவர்களாக நாம் உறவாடுகிறோம் (மத்தேயு 5:9). சமாதான பிரபுவைக் கௌரவிக்க இதைவிட வேறு என்ன வழி இருக்க முடியும்?