எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Markகட்டுரைகள்

ஒரு மீட்பர் இருந்தார்.

இந்த 10 நாள் ஈஸ்டர் வாசிப்புத் திட்டத்துடன் இந்த ஈஸ்டர் பருவத்தில் உங்கள் இதயத்தைத் தயார்படுத்துங்கள்.

பகுதி 10 - இயேசுவோடு வீட்டில்

நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படிஇ நான் மறுபடியூம் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். யோவான் 14:3

“வீட்டைப்போல வேறு இடம் எதுவூமில்லை." இந்த சொற்றொடரானது ஓய்வெடுப்பதற்கும்இ தங்கியிருப்பதற்கும்இ எமக்கென்று சொந்தமாகவூம் ஒரு வாசஸ்தலம் இருக்கவேண்டும் என்ற நமது ஆழமான ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இயேசுவூம் அவருடைய நண்பர்களும் ஒன்றாக தமது இறுதி இராப்போஜனத்தை உண்ட பின்னர்இ வரவிருக்கிற அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசியபோதுஇ மனதில் பதிந்திருக்கும்படி இந்த விருப்பத்தை அவர் கூறினார். தாம் சென்றாலும்இ அவர்களுக்காகத் திரும்பி வருவதாக அவர் உறுதியளித்தார். அத்துடன்…

பகுதி 9 - நமது ஜீவனுள்ள நம்பிக்கை

இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலேஇ ….தமது (தேவனுடைய) மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியூம் ஜெநிப்பித்தார். 1பேதுரு 1:4

எனது தாயார் இறந்த நாளிற்கு மறுநாள் காலைஇ நான் யோவான் 6-ம் அதிகாரத்தை வாசித்துஇ எனது துக்கத்தைக் குறித்து தேவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் 39-வது வசனத்திற்கு வந்தபோதுஇ எனது துக்கமான இருதயத்தை ஆறுதல்படுத்துமுகமாக கர்த்தர் என்னுடன் மெதுவாகப் பேசினார்: “அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையூம் நான் இழந்துபோகாமல்இ கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது." மரித்துப்போன எனது தாயாரின் ஆவியானது ஏற்கனவே தேவனுடன் இருக்கிறதுஇ…

பகுதி 8 - இன்னும் அதிகமாய்!

பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ரோமர் 5:20

ஒரு உயிர்த்த ஞாயிறு ஆராதனையின்போது நான் கேட்ட ஒரு அறிக்கையானது இன்னும் என் மனதில் இருக்கிறது: “மனிதனின் வீழ்ச்சியின்போது இழந்ததைவிட அதிகமாக இயேசுவின் உயிர்த்தெழுதலில் பெறப்பட்டது.” இழந்ததைவிட அதிகமாய்ப் பெறப்பட்டதா? அது உண்மையாக இருக்கக்கூடுமா?

பாவம் உலகத்தினுள் நுழைந்ததினால் ஏற்பட்ட பாதிப்பை ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்து வருகின்றௌம். பேராசைஇ அநீதிஇ மற்றும் கொடூரம் என்று அனைத்துமேஇ கடவூளின் வழியை விடுத்து தமது சொந்த வழியில் செல்ல ஆதாமும் ஏவாளும் முடிவூ செய்த அந்த…

பகுதி 7 - இப்போதைக்கு விடைபெறுகிறேன்

…நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்துஇ அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. 1தெசலோனிக்கேயர் 4:13

எனது பேத்தி அலிஸ்சாவூம் நானும்இ சென்றுவருவதாக விடைபெறும்போது ஒரு வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுகிறௌம். நாங்கள் ஒருவரையொருவர் கைகளால் கட்டித்தழுவிஇ சுமார் இருபது வினாடிகள் நாடகத்தனமாக விசும்பலுடன் சத்தமாக புலம்ப ஆரம்பிப்போம். பின்னர்இ நாங்கள் எம்மை விடுவித்துக்கொண்டுஇ “சந்திப்போம்" என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றுவிடுவோம். எங்களுடைய இந்த முட்டாள்த்தனமான வழக்கமானது வேடிக்கையாக இருந்தாலும்இ நாம்; மீண்டும் ஒருவரையொருவர் விரைவில் சந்திப்போமென்று எப்போதும் எதிர்பார்த்திருப்போம்.

ஆனால்இ நாம் அக்கறை கொண்டவர்களிடமிருந்து பிரிகிற வலியானது சில சமயங்களில்…

பகுதி 6 - மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்@ என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25

உயிர்த்த ஞாயிறன்று காலை ஆலயத்துக்குள்ளே நான் நுழைந்தபோது எனது நண்பியைக் கண்டுஇ “மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!” என்று வாழ்த்திவிட்டுஇ உடனடியாக என்னைத் திருத்திக்கொண்டுஇ “அதாவதுஇ மகிழ்ச்சியான உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்” என்றேன்.

“ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை” என்று அவள் புன்னகைத்தாள். அது எவ்வளவூ உண்மை! கிறிஸ்து பிறப்பு இல்லையெனில்இ உயிர்த்த ஞாயிறு என்று ஒன்று இருந்திருக்க முடியாது. மேலும்இ உயிர்த்தெழுதல் இல்லையெனில் இந்த நாள் மற்றைய நாட்களைப்போல ஒரு சாதாரண நாளாகவே இருக்கும்.…

பகுதி 5 - இராஜாவின் கிரீடம்;

முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னிஇ அவர் சிரசின்மேல் வைத்து… மத்தேயூ 27:29

நாங்கள் மேசையைச் சுற்றி அமர்ந்துஇ ஒவ்வொருவரும் நமக்கு முன்னால் இருந்த பல்குத்தும் குச்சிகளைக் குத்திவைப்பதற்கு பயன்படுத்தப்படும் பஞ்சு போன்ற வட்டவடிவ தளத்தில் ஒவ்வொரு குச்சியைக் குத்திவைத்தோம். உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு முந்திய வாரங்களில்இ ஒவ்வொரு நாளும் எங்களின் இரவூ உணவின்போதுஇ அன்றைய நாளில் நாங்கள் செய்த தவறை நினைத்து மனம்வருந்திஇ கிறிஸ்து அதற்கான கிரயத்தைச் செலுத்தினார் என்று நினைவூகூர்ந்துஇ அவற்றைக் குறிக்கும்படியாக பல்குத்தும் குச்சிகளை வைத்து நாங்கள் முட்கிரீடத்தை உருவாக்கினோம். நமது தவறான செயல்களால்…

பகுதி 4 - வெற்றி முழக்கம்

முடிந்தது! யோவான் 19:30

சில வருடங்களுக்கு முன்புஇ தொலைவிலுள்ள ஒரு பள்ளத்தாக்கின் அடிப்புறத்தில் தனியாக சிக்கிக்கொண்ட ஆரோன் ரல்ஸ்டன் என்கிற மலை ஏறும் வீரரைக் குறித்து வாசித்தேன். கண்டுபிடிக்கப்படுவேன் என்கிற அற்பமான நம்பிக்கையே இருந்த நிலையில்இ அவரின் பலம் குறைவடைந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில்இ தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுக்கவேண்டியிருந்தது. மிகுந்த கடுமையான வலியோடு கூடிய அந்தத் தருணத்தில்இ அவர் வேதனையோடும்இ அதேவேளை ஜெயத்தோடும் உரத்த சத்தமிட்டார்@ காரணம்இ அவர் தன்னை விடுவித்துக்கொண்டிருந்தார்இ மற்றும்இ இப்போது அதிலிருந்து தப்பித்து உயிரோடு வாழ ஒரு…

பகுதி 3 - பாடுகளின் பாதையில்

இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலேஇ அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறௌம். எபிரேயர் 10:10

பரிசுத்த வாரத்திலேஇ எருசலேம் வீதிகளினூடாக சிலுவையை நோக்கிய நீண்ட நடை உட்படஇ இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முந்திய இறுதி நாட்களை நாம் நினைவூகூருகின்றௌம். இன்றுஇ இந்தப் பாதையின் மிகவூம் சாத்தியமான அமைவிடமாக The Via Dolorosa அதாவது பாடுகளின் பாதை என்று இது அறியப்படுகிறது.

ஆனால் எபிரேயர் புத்தகத்தின் எழுத்தாளர்இ இயேசு சென்ற இந்தப் பாதையை துயரங்களின் பாதைக்கும் மேலான ஒன்றாகவே பார்க்கின்றார். இயேசு தாம் விரும்பி கொல்கொதா நோக்கி…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.