உங்களது பயணம்
1960ம் ஆண்டுகள் பொதுவாக ஒழுக்கநெறிகளை எதிர்க்கும் மனப்பான்மை உடைய காலமாக இருந்தது. நான் அந்தக்காலத்தில் வளர்ந்து வந்தபடியால், நானும் மதசம்பந்தமான காரியங்களை புறக்கணித்தேன். என் வாழ்நாள் முழுவதும் ஆலயத்திற்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால், நான் 20 வயது கடந்த காலகட்டத்தில், ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்த பின்புதான் விசுவாசத்திற்குள் வந்தேன். அப்பொழுதிலிருந்து எனது நடுத்தர வயதினை, மனிதராகிய நம்மிடம், இயேசு காண்பித்த அன்பினைப்பற்றி பிறருக்கு அறிவித்து வருவதில் செலவிட்டு வந்தேன். அது ஒரு பயணமாக இருந்து வருகிறது.
குறைபாடுகள் நிறைந்த இவ்வுலகில் வாழும் வாழ்க்கையை “பயணம்” என்ற சொல் குறிக்கிறது. பயணம் செய்யும்பொழுது வழியில், நாம், மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், சமவெளிகள், போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலைகள், ஆள் அரவமற்ற அமைதியான சாலைகள் - உயர்வுகள், தாழ்வுகள், மகிழ்ச்சிகள், துக்கங்கள், போராட்டங்கள், இழப்புகள், நொறுங்கின இருதயம், தனிமை ஆகியவைகளை சந்திக்கின்றோம். நமக்கு முன்னால் உள்ள பாதையை நம்மால் பார்க்க இயலாது. நாம் விரும்புகிறபடி அப்பாதை அமையாவிட்டாலும் அது இருக்கிறவண்ணமாகவே அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஒருபொழுதும் இப்பயணத்தை தனிமையாக சந்திப்பது இல்லை. தேவனுடைய பிரசன்னம் நம்மோடு கூட எப்பொழுதும் இருப்பதை வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவன் இல்லாத இடமே கிடையாது (சங். 139:7-12). அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை (உபா. 31:6; எபி. 13:5). அவர் போனபின்பு பரிசுத்தாவியை அனுப்புவேன் என்று இயேசு அவருடைய சீஷர்களுக்கு வாக்களித்து, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவா. 14:18) என்று கூறினார்.
நாம் நமது பயணத்தில் சந்திக்கும் சவால்களையும், வாய்ப்புகளையும் மன உறுதியோடு சந்திக்கலாம். ஏனெனில், நம்மை ஒருபொழுதும் கைவிடாமல், நம்மோடுகூட எப்பொழுதும் இருப்பேன் என்று தேவன் வாக்களித்துள்ளார்.
சிறைப்பட்டவர்களை விடுவித்தல்
ஜார்ஜியாவில், சாவன்னாவில் உள்ள வலிமை மிக்க எட்டாவது விமானப்படையின் தேசிய அருங்காட்சியகத்திற்கு நானும், என் மனைவியும் சென்றபொழுது, அங்கு ஜெர்மன் தேசத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட போர்க் கைதிகளின் பாசறைகளை மறுபடியும் உருவாக்கி இருந்ததைப் பார்த்தோம். அதில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த போர்க்கைதிகளின் துயரங்களை நானும், என் மனைவியும் பார்த்தபொழுது, மிகவும் அதிகமாக தொடப்பட்டோம். மார்லினின் தகப்பனார், ஜிம் வலிமைமிக்க எட்டாவது விமானப்படையில் சேவை செய்திருந்தார். இந்த “வலிமையான எட்டு” என்ற அந்த விமானப்படை, இரண்டாம் உலகப்போரின் போது அநேகமுறை ஐரோப்பாவில் பறந்து சென்றுள்ளது. அந்தப்போரில், அந்த எட்டாம் விமானப்படையைச் சேர்ந்த 47000க்கும்மேற்பட்ட வீரர்கள் காயப்பட்டார்கள். 26000க்கும் மேற்பட்ட வீரர்கள் மரித்துவிட்டார்கள். ஜிம்மும் சுடப்பட்டு போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். காட்சிப் படுத்தப்பட்டவைகளின் ஊடாக நாங்கள் நடந்து சென்றபொழுது, ஜிம்மும், அவருடன் இருந்த மற்றக்கைதிகளும் விடுதலையாக்கப்பட்ட அந்த நாளில், அவர்கள் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சியை, ஜிம் எங்களுடன் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்தோம்.
ஒடுக்கப்பட்டவர்கள், சிறைப்பட்டவர்களின் விடுதலையைக் குறித்து தேவன் கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்று சங்கீதம் 146 அறிவிக்கின்றது. “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்” என்று அவரைப்பற்றி சங்கீதக்காரன் விளக்குகிறான் (வச. 7). துதித்துப் போற்றுவதற்கு இவையே காரணமாக உள்ளது. ஆனால், விடுதலைகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த விடுதலை, நாம் நமது குற்ற உணர்விலிருந்தும், வெட்கத்திலிருந்தும் பெறும் விடுதலையேயாகும். “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு கூறியது ஆச்சரியமில்லை.
கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நாம் நமது பாவச்சிறையிலிருந்து விடுபட்டு, மன்னிப்பினால் மட்டுமே கிடைக்கக்கூடிய, தேவன் அருளும் மகிழ்ச்சி, அன்பு, விடுதலை ஆகியவற்றை அறிந்து கொள்ளுகிறோம்.
பட்சிக்கும் சோதனைகள்
மரங்களுக்கு நெருப்பு மிக மோசமான ஒரு எதிரி. ஆனால், அதுவே உபயோகமானதாகவும் திகழலாம். காட்டின் நிலப்பகுதியில் அடிக்கடி குறைந்த வீரியத்தில் பற்றியெரியும் நெருப்பு அங்கு கிடக்கும் காய்ந்த இலைகளையும், கிளைகளையும் சுட்டெரித்துவிடுகிறது. ஆனால், மரங்களுக்கோ ஒரு சேதமும் ஏற்படுவதில்லை. இதை வல்லுநர்கள் “குளிர்ந்த” நெருப்பு என கூறுகிறார்கள். இதன் விளைவாக ஏற்படும் சாம்பல், அங்கு விதைகள் வளர்வதற்கு ஏற்றதாயிருக்கிறது. ஆச்சரியம் என்னவெனில் மரங்கள் நன்கு வளர குறைந்த வீரியம் கொண்ட நெருப்பு அவசியமாயிருக்கிறது.
அதைப்போலவே, வேதத்தில் அக்கினியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சோதனைகள், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின்…
எது பிரதானமானது
வயதாக ஆக, இயேசுவின் பிரியமான சீஷனாகிய யோவானுடைய உபதேசங்களின் எல்லை குறுகிக்கொண்டே போய், அவருடைய மூன்று கடிதங்களிலும் தேவனுடைய அன்பைக் குறித்தே முழு கவனத்தையும் செலுத்தினார். ‘தேவனுடைய அன்பைக் குறித்தான உண்மையை அறிந்துகொள்ளுதல்’ (Knowing the truth of God’s love) என்கின்ற தன்னுடைய புத்தகத்தில், பீட்டர் க்ரீஃப்ட் (Peter Kreeft) ஒரு பழமையான கதையொன்றை குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒரு நாள் யோவானுடைய இளம் சீடர்களில் ஒருவன் அவரிடம் வந்து, “ஏன் நீங்கள் வேறொன்றைக்குறித்தும் பேசுவதில்லை” என முறையிட்டான். அதற்கு யோவான், “அதைத்தவிர வேறொன்றுமில்லையே”…
உண்மையான விடுதலை
ஒலௌடா யூக்கியானோ (1745–1796) 11 வயதாக இருந்தபொழுது கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்டான். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கும், வெர்ஜினியா காலனிக்கும், அங்கிருந்து இங்கிலாந்துக்குமான பயங்கரமான வேதனை நிறைந்த பயணத்தை மேற்கொண்டான். அவனது 20வது வயதில் பணம் கொடுத்து, அவன் தன் விடுதலையை வாங்கினான். மனிதாபிமானமற்ற முறையில் அவன் நடத்தப்பட்டிருந்ததினால் அவன் இன்னமும் உணர்ச்சிபூர்வமான, சரீரப்பிரகாரமான தழும்புகளை தாங்கிக் கொண்டிருந்தான்.
அவனுடன் சேர்ந்த மற்ற மக்கள் இன்னமும் அடிமைத்தனத்தில் இருந்ததால் அவன் பெற்ற விடுதலையின் நிமித்தம் அவன் மகிழ்ச்சியடைய இயலாமல், இங்கிலாந்தில் அடிமைத்தனத்தை ஒழிக்கும் இயக்கத்தில்…
நம்மால் புரிந்து கொள்ள இயலாதபொழுது
அனுதினமும் எனது வேலையைச் செய்ய தொழில் நுட்பக்கருவிகளையே சார்ந்திருந்தாலும், அவைகள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கணினியை இயக்கி வார்த்தைகளின் அட்டவணையைப் (Word Document) பெற்று எழுதும் வேலையை நான் ஆரம்பிக்கிறேன். ஆனால் கணினியிலுள்ள சிலிகான் சில்லுகள் மைக்ரோசில்லுகள் (Micro Chips), கணினியில் பயன்படுத்தும் தரவுகளை நிலையாகத் தேக்கி வைக்கும் வன்தட்டுகள் (Hard disk), வை- ஃபை இணைப்புகள் அல்லது கணினியில் தோன்றும் பலவண்ணக் காட்சிகள் காட்டும் திரை (full color display) இவைகளெல்லாம் எப்படி வேலை செய்கின்றனவென்று…
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பது ஓர் தண்டனையை அனுபவிப்பது போன்ற கடுமையானதொன்றாகும். போட்டியாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மதிய உணவு இடைவெளி, மாலை சிற்றுண்டி இடைவெளி தவிர மற்ற சமயங்களிளெல்லாம் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் கூட போட்டி நடைபெறும். இது சகிப்புத்தன்மைக்கும், திறமைக்குமான ஓர் சோதனையாகும்.
இதே காரணங்களுக்காக நம்முடைய வாழ்க்கையிலும் சில சமயங்களில் கடுமையான சோதனைகளை நாம் கடந்துவர நேரிடுகிறது. சோதனைகள் முடிவில்லாமல் தொடர்வதாகவும் உணர்கிறோம். நீண்ட காலமாக…
எதிர்பாராதது
தென் அமெரிக்காவில் கோடைகால நடுமதிய வெப்பத்தில், பயணித்துக் கொண்டிருந்த என் மனைவியும், நானும் ஐஸ்கிரீம் சாப்பிட ஓர் இடத்தில் நின்றோம். பணம் செலுத்தும் இடத்திற்கு பின்னால் உள்ள சுவற்றில் “முற்றிலும் பனி ஊர்தி கிடையாது” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தோம். இது நாங்கள் எதிர்பாராத ஒன்றாக இருந்ததால் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
சில சமயங்களில் எதிர்பாராத சொற்கள் மிகவும் வலிமை மிக்கவைகளாகக் காணப்படும். “தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் காப்பான்” (மத். 10:39) என்று இயேசு…
நிற்பதற்கு உறுதியான இடம்
ஜார்ஜியாவில் உள்ள சாவன்னா பகுதியில் வரலாற்றுப் புகழ்மிக்க நதியிம் நடைபாதைப் பகுதியின் தளங்களில் வெவ்வேறு விதமான கூழாங்கற்களால் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அட்லாண்டிக் கடல் பகுதியைக் கடக்கும் கப்பல்களை நிலைப்படுத்த பெரிய சரளைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன என்று உள்ளூர் வாசிகள் கூறுகிறார்கள். ஜார்ஜியாவில் சரக்குகளை ஏற்றியபின் இந்த சரளைக்கற்கள் தேவையில்லாததால், அவற்றை கப்பற்கட்டும் தளத்திற்கு அருகேயுள்ள வீதிகளில் தளம் அமைக்க அவை பயன்படுத்தப்பட்டன. அந்தக் கற்கள் தங்கள் முக்கியமான பணியாக ஆபத்தான நீர்களின் மத்தியில் கப்பல்கள் நிலையாக நிற்பதற்கான சீரிய பணியை செய்து…