இன்றைய வேதாகமப் பகுதி
பிறருடைய கவனத்தை ஈர்க்க கெரி (Kerri) மிகவும் சிரமப்பட்டாள். மற்றவர்கள் அவளது செயல்களை ரசித்து பாராட்ட வேண்டும் என்றும் விரும்பி, எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதுபோல தன்னைக் காட்டிக் கொண்டாள். சமுதாயத்தில் சிலருக்கு அவள் உதவுவதை பார்த்துப் பலர் பாராட்டினர். ஆனால் மனந்திறக்கும் சில சமயங்களில் “நான் தேவனை நேசிக்கிறேன், ஆனால் என் வாழ்க்கை வெறும் முன் தோற்றமே” என கெரி தன்னுடைய உண்மையான நிலையை ஒத்துக்கொள்வாள். அவளது பாதுகாப்பின்மை தான் இதற்கெல்லாம் காரணம். பிறரது பாராட்டுதலுக்காக அவள் நல்லவளாகத் தன்னை எப்போதும் காண்பித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் அப்படிச் செய்வதினால் அதிகமாக உழைத்து மனதளவில் பலவீனமடைந்து கொண்டிருந்தாள்.
இப்படித்தான் நாமும் சில நேரங்களில் செயல்படுகிறோம். ஏனெனில் எப்பொழுதும் நாம் சரியான உள் நோக்கத்துடன் செயல்படுவதில்லை. நிச்சயமாக நாம் தேவனையும், பிறரையும் நேசிக்கின்றோம். அதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் வாழும் கிறிஸ்தவ வாழ்க்கையில், நாம் செய்யும் பல காரியங்களை பிறருடைய நல் மதிப்பையும் மரியாதையையும் பெறவே செய்கிறோம்.
மற்றவர்கள் காணும்படியாக நாம் கொடுப்பது, ஜெபிப்பது, உபவாசிப்பது (மத். 6:1-6) குறித்து மலைப்பிரசங்கத்தில் இயேசு, “நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதாக”, “அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு”, “நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக” (வச. 3,6,17) என போதித்தார்.
இந்நாட்களில் உதவி செய்வதை பகிரங்கப்படுத்துகின்றனர். ஆனால் பெயரைக் கூடச் சொல்லாமல் செய்யும் வேலைகள் தேவன் நம்மைக்குறித்து வைத்திருக்கும் எண்ணத்தில் தங்கி இளைப்பாறக் கற்றுக்கொள்ள உதவும். அவரது சாயலில் நம்மை படைத்தார். நம்மை அந்த அளவிற்கு விலையேறப்பெற்றவர்களாய்க் கருதியதினால் தான் அவரது ஒரே பேறன குமாரனை நமக்களித்து அவரது அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார்.
நாம் செய்யத்தான் வேண்டுமா?
ஜோய், சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை ஜெபத்துடன் ஆரம்பித்தாள். சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பாட்டுக்களைப் பாடினாள். ஆரோன் என்பவரை அச்சிறுவர்களுக்கான ஆசிரியர் என்று ஜோய் அறிமுகப்படுத்திவிட்டு மறுபடியும் ஜெபித்தபொழுது, 6 வயது இம்மானுவேல் அவனது இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான். பின்பு ஆரோன் பேசத்துவங்கி, பேச்சை ஜெபத்தோடு ஆரம்பித்து ஜெபத்தோடு முடித்தான். உடனே இம்மானுவேல், “இத்துடன் இது நாலாவது ஜெபம். அவ்வளவு நேரம் என்னால் இருக்கையில் அமர்ந்திருக்க இயலாது” என்று புகார் செய்தான்.
இம்மானுவேலுக்கு இருந்த நிலை கடினமானதுதான் என்று நீங்கள் எண்ணினால், “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்,” என்று 1 தெசலோனிக்கேயர் 5:17ல் கூறப்பட்டதைக் கவனியுங்கள். அல்லது எப்பொழுதும் ஜெப ஆவியுடன் இருங்கள் என்பதையும் கவனியுங்கள். பெரியவர்களாகிய நம்மில் சிலருக்குக் கூட ஜெபம் சலிப்புண்டாக்கும் செயலாக இருக்கலாம். ஏனென்றால் நாம் ஜெபத்தில் கூறவேண்டிய காரியங்களை அறியாமல் இருக்கலாம். அல்லது ஜெபம் என்பது நாம் நம்முடைய பரலோகப் பிதாவுடன் உரையாடும் நிகழ்ச்சி என்று அறியாமல் கூட இருக்கலாம்.
17ம் நூற்றாண்டில், ஃபிராங்காயிஸ் ஃபெனிலோன் ஜெபத்தைப்பற்றி எழுதிய சில வார்த்தைகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. “ஒரு சிநேகிதனிடம் உங்களது இருதயத்திலுள்ள பாரங்களை அதாவது, உங்கள் உள்ளத்திலுள்ள சந்தோஷமான, வேதனையான காரியங்கள் அனைத்தையும் கூறுவதுபோல தேவனிடம் கூறுங்கள். உங்களைச் சோதிக்கும் சோதனைகளை அவரிடம் கூறுங்கள். அவர் அவைகளிலிருந்து உங்களை மறைத்துப் பாதுகாப்பார். உங்களது இருதயத்திலுள்ள காயங்களை அவரிடத்தில் காண்பியுங்கள். அவர் உங்களது காயங்களைக் குணப்படுத்துவார். இப்படியாக உங்கள் பலவீனங்கள், தேவைகள், கஷ்டங்கள் அனைத்தையும் அவரிடம் ஊற்றும்போது, ஜெபத்தில் என்ன கூறவேண்டும் என்பதற்கு குறைவே இருக்காது.”
ஒரு நீர்குமிழி இடைவேளை
நானும், என்னுடைய கணவர் கார்லும் (Carl) அட்லாண்டிக் சிட்டி (Atlantic City) மர நடைபாதையில் நடந்து கொண்டிருக்கையில் எங்களை கடந்து ஓடிய ஒரு சிறுவன் எங்கள் மேல் நீர்க்குமிழிகளை பொழிந்து சென்றான். எங்களுக்கு சிரமமான அந்நாளின் மகிழ்ச்சிகரமான இலகுவான ஒரு தருணம் அது. மருத்துவமனையில் உள்ள என் கணவருடைய மைத்துனரைக் காணவும், மருத்துவரை சந்திக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய சகோதரிக்கு உதவும் படியாகவும் நாங்கள் அப்பட்டணத்திற்கு வந்திருந்தோம். எங்களுடைய குடும்பத்தின் தேவைகளினால் சிறிது திணறியதால், சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்படியாக, கடலோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தோம்.…
மன உறுதியுடன் செயல்படுபவர்கள்
2015ம் ஆண்டு கோடைகாலத்தில் ஹண்டர் என்ற 15 வயது சிறுவன் பிரேடன் என்ற 8 வயது சகோதரனை சுமந்துகொண்டு, மூளைப்பாதிப்பு ஏற்பட்ட மக்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக 58 மைல்கள் நடந்து சென்றான். பிரேடன் 60 பவுண்டு எடை உள்ளவனாக இருந்ததால், ஹண்டர் இடை இடையே அடிக்கடி நின்று ஓய்வு எடுத்தான். அப்படி ஓய்வு எடுத்த இடங்களிலிருந்த மக்கள், அவனது சதைப்பிடிப்பை நீக்குவதற்கு உதவிசெய்தார்கள். பிரேடனின் எடையைக் குறைக்க ஹண்டர் சிறப்பான வார்ப்பட்டையை அணிந்திருந்தான். சரீரப்பிரகாரமாக ஏற்படும் உடல்வலியை குறைக்க அந்த சிறப்பு வார்ப்பட்டை…
உடன் வருதல்
மி’அஸ்யா மிகவும் நடுக்கத்துடன் மேடையை நோக்கி நடந்துசென்று, தன் முப்பது சக மாணவர்கள், அவர்கள் பெற்றோர் முன்னிலையில் ஐந்தாவது வகுப்பு பட்டமளிப்பு விழாவில் பேசப்போவதை அனைவரும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். பள்ளி முதல்வர் ஒலிப்பெருக்கியை மி’அஸ்யாவின் உயரத்திற்கு ஏற்றாற்போல் சீர்செய்து வைத்தபொழுது, ஒலிப்பெருக்கிக்கும், பார்வையாளர்களுக்கும் தன் முதுகைக்காட்டி மறுபுறம் திருப்பிக்கொண்டார். “தேன் போன்று இனிமையானவளே பயப்படாதே, உன்னால் பேசமுடியும், பேசு” என்று கூட்டத்தில் இருந்த அனைவரும் அவளை உற்சாகப்படுத்தினார்கள். ஆனால் அவளோ சிறிதும் அசையவில்லை. அப்பொழுது அவள் சகமாணவி மேலே சென்று அவளருகே நின்றுகொண்டாள். முதல்வர் ஒருபுறமும்,…
நான் சொல்வதை மறுபடியும் திரும்பச் சொல்
ரெபேக்கா ஓர் மாநாட்டின் மேடையில் ஒலிபெருக்கி முன் நின்று பேசியபொழுது, அவள் பேசியது அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. அவள் பேசிய வார்த்தைகளையே அவள் திரும்பக் கேட்டபொழுது சற்று சிரமமாக இருந்தது. இந்தத் தவறான ஒலி அமைப்பு முறையை அவள் சீர்செய்து, அந்த எதிரொலியை கவனிக்காமல் விட்டுவிட முயற்சித்தாள்.
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், திரும்பவும் நாமே கேட்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! “நான் உன்னை நேசிக்கிறேன்,” அல்லது “நான் செய்தது தவறு” அல்லது “உமக்கு நன்றி, தேவனே” அல்லது…
அவர் நல்லவரா?
‘தேவன் நல்லவர் என்று நான் எண்ணவில்லை’ என்று என் சிநேகிதி என்னிடம் கூறினாள். சில கடினமான பிரச்சனைகளுக்காக அநேக ஆண்டுகள் அவள் தொடர்ந்து ஜெபம்பண்ணி வந்தும், எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. தேவனுடைய அமைதியைக் குறித்து, அவளது கோபமும் மனக்கசப்பும் அதிகரித்தது. அவளை நான் நன்கு அறிந்திருந்தபடியினால் அவளது உள்ளத்தின் ஆழத்தில் தேவன் நல்லவர் என்பதை அவள் விசுவாசிக்கிறாள் என்பதை உணர்ந்தேன். ஆனால், அவளது உள்ளத்தில் உள்ள நீங்கா வேதனையும், அதைக்குறித்து தேவனுடைய கரிசனையற்ற தன்மையும் அவளுக்குச் சந்தேகத்தை உண்டாக்கின. அவளது வருத்தத்தை தாங்குவதைவிட, தேவன்மேல்…
கிருபையினால் ஆச்சரியப்படுதல்
மிச்சிகனில் உள்ள கிராண்ட் ராப்பிட்ஸில் வாழ்ந்து வந்த ஒரு பெண், அவளது கணவர் உறங்குவதற்காகப் படுக்கை அறைக்குச் சென்றபின். ஓய்வெடுக்கும் இருக்கையிலேயே உறங்கி விட்டாள். அந்த தம்பதியினர், அறையில் இருந்த நழுவும் கதவினைப் பூட்ட மறந்துவிட்டனர். அதன் வழியாக அழையா விருந்தாளியாக ஒரு மனிதர் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து விட்டான். கணவர் உறங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்குச் சென்று அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கினான். உறங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் விழித்துக் கொண்டான். அங்கு நின்று கொண்டிருந்த ஓர் உருவத்தைப் பார்த்து, “அன்பே படுக்கைக்கு…
நான்கு விதத்தில் பார்க்க வேண்டும்
ஜோன் ஆராதனைக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த பொழுது தன் பிள்ளைகளின் சில பிரச்சனைகளைப் பற்றிய காரியங்களைக் குறித்துப் போராடிக் கொண்டிருந்தாள். சோர்வுற்றவளாய் தன் தாய்மைப் பொறுப்பிலிருந்து விலகிவிட விரும்பினாள். விட்டுச் செல்ல வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு உற்சாகமும், ஊக்கத்தைக் கொடுக்க கூடிய செய்தியை, அன்று செய்தி கொடுத்தவர் பகிர்ந்து கொண்டார். அன்று காலை ஜோன் கேட்ட செய்தியில் அடங்கிய நான்கு சாராம்சங்கள் அவள் தொடர்ந்து தன் தாயின் ஸ்தானத்தில் தொடர்ந்து செல்ல உதவியது.
மேல் நோக்கி பார்த்து ஜெபி: ஆசாப் இரவு முழுவதும் ஜெபித்து, தேவன் இரக்கஞ்…